சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Yesterday at 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Yesterday at 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Yesterday at 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Yesterday at 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Yesterday at 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Yesterday at 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Yesterday at 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Yesterday at 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Yesterday at 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Yesterday at 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Yesterday at 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Yesterday at 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Yesterday at 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Yesterday at 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48

» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42

» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37

» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31

» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54

» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56

» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49

» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37

» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32

» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Thu 23 May 2024 - 11:25

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Thu 23 May 2024 - 9:24

குழந்தையின் முதல் ரோல் மாடல்!  Khan11

குழந்தையின் முதல் ரோல் மாடல்!

2 posters

Go down

குழந்தையின் முதல் ரோல் மாடல்!  Empty குழந்தையின் முதல் ரோல் மாடல்!

Post by ahmad78 Sun 3 Aug 2014 - 15:51

குழந்தையின் முதல் ரோல் மாடல்!  Ht2730

‘‘பனிக்குடத்தில் சிறகு விரித்து வளரத் தொடங்கும் செல்லத்தின் குணநலன்களை தாயின் நடவடிக்கைகளே கட்டமைக்கின்றன. அதுமட்டுமல்ல...  குழந்தை எவ்வளவு வளர்ந்தாலும், தாய்க்கும் பிள்ளைக்குமான உறவில் ‘தி எண்ட்’ கார்டு போடவே முடியாது. அடுத்தடுத்த தலைமுறையிலும் அது  பாட்டியை பற்றிய நினைவுகளாகத் தொடரும்’’ என்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் அருணா விண்ணரசி.

‘‘தாய்மையின் போது பெண்ணுக்குள் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் முக்கியமானவை. ‘லவ் ஹார்மோன்’ என அழைக்கப்படும் ‘ஆக்ஸிடோசின்’  குழந்தையின் மீதான பிணைப்பைப் பலப்படுத்துகிறது. ‘மதரிங் ஹார்மோன்’ என அழைக்கப்படும் ‘புரோலாக்டின்’ பால் சுரக்கும் தன்மையை  உருவாக்குகிறது... குழந்தைக்கான ஏக்கத்தை உண்டாக்குகிறது. கருவுற்றிருக்கும்போது தாய் எதிர்கொள்ளும் உணர்வுகளின் அழுத்தமும் அதற்கான  தாக்கமும் குழந்தைக்குள் பதிவாகிறது.

பால் குடிக்கத் தொடங்கும்போது பசி தீர்வதுடன், குழந்தைக்கு டென்ஷனும் குறைகிறது... பாதுகாப்பு உணர்வைப் பெறுகிறது. அள்ளிக் கொள்வது,  முத்தமிடுவது, தாலாட்டித் தூங்க வைப்பது, அழுதால் தேற்றுவது போன்ற உணர்வு ரீதியான வெளிப்பாடுகள் குழந்தைக்குள் அன்புக்கான வெளியை  விரிவுபடுத்துகிறது. மூளையின் ‘ஹிப்போ கேம்பல்’, ‘அமைடலா’ பகுதிகளை தாயின் அன்பான அணுகு முறை விரிவடையச் செய்கிறது. கருவிலேயே  மூளையின் செல்கள் உருவாகிவிட்டாலும், அதற்கான இணைப்புகளை அதிகப்படுத்துவது வெளியில் குழந்தைக்குக் கிடைக்கும் அன்பும் அரவணைப்பும் வளர்ப்பு முறையும்தான்.

முதல் வருடத்தில் தாய்ப்பால் குடித்திருந்தாலும் குடிக்காமல் இருந்தாலும் அன்பு செலுத்தும் முறையை தாயின் வழியாகவே குழந்தை தெரிந்து  கொள்கிறது. தாயின் அன்புதான் மற்ற மனிதர்களைப் புரிந்து கொள்ளவும் அவர்களுடன் பழகுவதற்குமான மனநிலையை, சமூகத்தின் மீதான நம்பகத்  தன்மையை உருவாக்குகிறது. தாயிடம் அன்பு கிடைக்காத குழந்தையால் மற்றவர்களின் அன்பைப் புரிந்து கொள்ள முடியாது. அன்பை செலுத்தவும்  வாங்கிக் கொள்ளவும் சிரமப்படும். மற்றவர்களுடன் கலந்து பழகத் தெரியாமல் கெட்ட பெயருக்கு ஆளாகும். பிடிக்காதது நடக்கும் போது  மூர்க்கத்தனமாக வன்முறையில் ஈடுபடும். சிறுவயதிலேயே போதைப் பழக்கத்துக்கு அடிமையாதல், பாலியல்ரீதியான குற்றங்களில்
ஈடுபடுதலுக்கு அன்பான குழந்தைப் பருவம் அமையாமல் போவதும் காரணம்.

அம்மாக்களில் பல வகை. ‘அத்தாரிட்டேரியன்’ வகையைச் சேர்ந்தவர்கள், தான் சொல்வதும் செய்வதுமே சரி என்பவர்கள்... குழந்தைகள் சொல்வதை  காது கொடுத்துக் கேட்க மறுக்கிறவர்கள்... குழந்தையின் உணர்வுகளை, நியாயங்களை புரிந்து கொள்ளாமல் தன் சொல்லுக்குக் கட்டுப்பட வேண்டும்  என்று நினைப்பவர்கள். இப்படி வளர்க்கப்படும் குழந்தைகள் தங்கள் விருப்பத்தையும் உணர்வையும் வெளிக்காட்ட பயப்படுவார்கள். சார்ந்து வாழும்  மனோபாவத்தைப் பெறுவார்கள். தனக்குப் பிடித்ததையோ, இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்று யோசிப்பதற்கோ கூட தயங்குவார்கள்.  முடிவெடுப்பதிலும் பிரச்னைகளை எதிர்கொள்வதிலும் மற்றவர்களின் கருத்தைக் கேட்டே நடப்பவர்களாக வளர வாய்ப்பிருக்கிறது. சுயசார்பில்லாத  குழந்தைகளால் மிகப்பெரிய சாதனைகளைச் செய்ய முடியாது.

‘அத்தாரிடேட்டிவ்’ என்பது இரண்டாவது வகை. இந்த அம்மாக்கள், குழந்தை இங்கே, இப்படித் தான் நடந்து கொள்ள வேண்டும் என்று கற்றுக்  கொடுப்பார்கள். அதே நேரம் அதில் சிரமத்தை சந்தித்தால், தன் கருத்தைச் சொல்ல குழந்தையை அனுமதிப்பார்கள். குழந்தையின் விருப்பத்தையும்  நடைமுறைச் சிக்கலையும் புரிந்து கொண்டு மனம் புண்படாத அளவில் மாற்றங்கள் செய்வார்கள். இவர்கள் கட்டுப்பாடுகளை விதித்தாலும்  திணிப்பதில்லை. இவர்களால் வளர்க்கப்படும் குழந்தைகள் நல்லது கெட்டதை வகை பிரித்து பார்க்கத் தெரிந்தவர்களாக இருப்பார்கள்.  வெளியிடங்களில் சூழலுக்கு ஏற்ப அட்ஜஸ்ட் செய்து கொண்டு சாதிப்பவர்களாக வளர்வார்கள். எப்படிப்பட்ட பிரச்னை வந்தாலும் அதை சமாளிக்கும்  பக்குவம் இவர்களுக்குக் கிடைக்கிறது. இதுவே சிறந்த குழந்தை வளர்ப்பு முறை.

மூன்றாவது வகை ‘பர்மிசிவ்’. குழந்தைக்கு அதிகபட்ச சுதந்திரம் அளிப்பார்கள். எது கேட்டாலும் வாங்கித் தருவார்கள். இந்த சூழலில்தான் குழந்தைகள்,  பெற்றோரை ஆட்டுவிப்பவர்களாக மாறுகிறார்கள். தான் சொல்வதுதான் நடக்க வேண்டும் என்ற அதிகாரத்தை வெளிப்படுத்தும் பண்பு உருவாகிறது.  இவர்கள் நீண்ட காலத்துக்கு ஒரே இடத்தில் பணியாற்ற மாட்டார்கள். தனக்காக எல்லாவற்றையும் மற்றவர்கள் செய்ய வேண்டும் என்று  எதிர்பார்ப்பார்கள். திறமை இருந்தாலும் அவற்றை சரியாக வெளிப்படுத்தி, வெற்றியை எட்டுவதற்கான வழியை இவர்கள் தேடுவதே இல்லை.  எப்போதும் பிரச்னைகளின் பின்னால் அலைவார்கள்.

‘அன் இன்வால்வ்டு பேரன்டிங்’ நான்காவது வகை. குழந்தையை வயிற்றில் சுமப்பதையே இவர்கள் பெரிய பிரச்னையாக நினைப்பார்கள். குழந்தையை  வளர்ப்பதில் அக்கறை காட்ட மாட்டார்கள். குழந்தையின் பசி, தூக்கம், துக்கத்தை  கண்டு கொள்ள மாட்டார்கள். அதனால் நம்பிக்கையின்றி, பயத்துடன்  வளர்வார்கள் குழந்தைகள். தனக்குக் கிடைக்காதது மற்றவர்களுக்கு கிடைக்கிறதே என்ற பொறாமை முளைவிடத் தொடங்கும். திருடுதல், பொய்  பேசுதல் போன்ற பழக்கங்கள் தொற்றிக் கொள்ளும். பெற்றோருக்குப் பிடிக்காத விஷயங்களைச் செய்வதை வீரம் என்று நினைப்பார்கள். சுற்றி  இருப்பவர்களிடம் பய உணர்வை ஏற்படுத்துவார்கள். பின்னாளில் சமூக விரோதச் செயல்களில் அவர்கள் ஈடுபடவும் அக்கறையற்ற வளர்ப்பு முறையே  காரணம் ஆகிறது.

குழந்தையின் முதல் ரோல் மாடல் ‘அம்மா’. அம்மாதான் உறவுகளையும் உணர்வுகளையும் அறிமுகம் செய்கிறார். தாயின் நடத்தையே குழந்தை  கற்றுக் கொள்ளும் முதல் பள்ளி. தாயின் அன்பு, நல்ல மனிதர்களை இனம் கண்டுகொள்வதற்கான வழியமைத்துக் கொடுக்கிறது. தாயின் சின்னச்  சின்ன வெளிப்பாடுகள் கூட குழந்தையை செதுக்கி உருவாக்குகின்றன. தாய்மை எனும் மந்திரம் ஒரு குழந்தையின் மனதுக்குள் இவ்வளவு மாயங்கள்  செய்கிறது.  ஒவ்வொரு தாயும் இவ்வளவு பொறுப்புகளையும் உணர்ந்து குழந்தையை வளர்க்க வேண்டும். அப்போதுதான் மழை கண்டு விரியும் மயில்  போல சக மனிதரின் வலியுணர்ந்து உதவும் மனிதர்கள் இந்த சமூகத்துக்கு கிடைப்பார்கள்!’’   

தினகரன்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

குழந்தையின் முதல் ரோல் மாடல்!  Empty Re: குழந்தையின் முதல் ரோல் மாடல்!

Post by ராகவா Mon 11 Aug 2014 - 12:07

அம்மா என்ற வார்த்தை உலகில் குழந்தைகள் கேட்கும் முதல் சொல்..அவளின் ஒவ்வொரு சொல்லும் அந்த குழந்தைக்கு தாலாட்டு.
தாயே! பார்க்கும் குழந்தை இறைவனின் திருமுகம் அவளின் பேச்சில்...


நன்றி அண்ணா இனிமையான பதிற்விக்கு....தொடருங்கள் இன்னும் பல நல்ல பதிவுகளை எங்களை ஈர்க்க...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum