Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
விவசாயம் பற்றி அறிவோம்!! வாருங்கள்!
2 posters
Page 1 of 1
விவசாயம் பற்றி அறிவோம்!! வாருங்கள்!
இயற்கை விவசாயம் என்றால் என்ன?
இயற்கை விவசாயம் என்பது சுற்றுச் சூழலுடன் ஒத்துப்போய், அதற்கு கெடுதல் விளைவிக்காத தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, நல்ல மகசூல் எடுப்பதுடன், விவசாயத் தொழிலாளிகளுக்கும் எவ்வித கேடும் வராத அளவில் செய்யும் விவசாயமாகும்.
இந்த முறையில் முக்கியமான அம்சங்கள்:
1. பயிர்களின் கழிவுகளை கம்போஸ்ட் செய்தும், பண்ணை கால்நடைகளின் கழிவுகளையும் மட்டுமே உரமாகப் பயன்படுத்துதல்.
2. சரியான நேரத்தில் பொருத்தமான பயிர்களைப் பயிரிடுதல்.
3. பயிர்ச் சுழற்சி முறையில் பயிர்களைப் பயிரிடுதல்.
4. பசுந்தாள் உரங்களும் பயறு வகைப் பயிர்களைப் பயிரிடுதலும்.
5. மண்ணிற்கு மேல் “மல்ச்சிங்க்” செய்தல். (அதாவது மண்ணின் ஈரம் ஆவியாகி வீணாகாமல் தடுக்கும் ஒரு உத்தி)
பூச்சிகள், பூஞ்சாளங்கள், களைகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துதல்:
1. சூழ்நிலைக்குப் பொருத்தமான பயிர்களைத் தேர்ந்தெடுத்தல்
2. நோய்களுக்கு எதிர்ப்பு சக்தியுள்ள பயிர்களைத் தேர்ந்தெடுத்தல்
3. நல்ல பயிர் மேலாண்மை
4. பயிற் சுழற்சியைக் கடைப்பிடித்தல்
5. பூச்சிகளைத் தின்னும் பூச்சிகளை வளர்த்தல்
6. இயற்கை பூச்சிகொல்லிகளை உபயோகித்தல்
இவை தவிர நல்ல நீர் மேலாண்மையும் நல்ல கால்நடைகளை வளர்ப்பதும் இன்றியமையாதவை.
ஒரு இயற்கை விவசாயி இயற்கையுடன் இசைந்து விவசாயம் செய்து மண்வளம், சுற்றுச் சூழ்நிலை, சுகாதாரம் ஆகியவைகளைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொடுப்பவன் ஆவான்.
நன்றி :மேலும் அறிய
இயற்கை விவசாயம் என்பது சுற்றுச் சூழலுடன் ஒத்துப்போய், அதற்கு கெடுதல் விளைவிக்காத தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, நல்ல மகசூல் எடுப்பதுடன், விவசாயத் தொழிலாளிகளுக்கும் எவ்வித கேடும் வராத அளவில் செய்யும் விவசாயமாகும்.
இந்த முறையில் முக்கியமான அம்சங்கள்:
1. பயிர்களின் கழிவுகளை கம்போஸ்ட் செய்தும், பண்ணை கால்நடைகளின் கழிவுகளையும் மட்டுமே உரமாகப் பயன்படுத்துதல்.
2. சரியான நேரத்தில் பொருத்தமான பயிர்களைப் பயிரிடுதல்.
3. பயிர்ச் சுழற்சி முறையில் பயிர்களைப் பயிரிடுதல்.
4. பசுந்தாள் உரங்களும் பயறு வகைப் பயிர்களைப் பயிரிடுதலும்.
5. மண்ணிற்கு மேல் “மல்ச்சிங்க்” செய்தல். (அதாவது மண்ணின் ஈரம் ஆவியாகி வீணாகாமல் தடுக்கும் ஒரு உத்தி)
பூச்சிகள், பூஞ்சாளங்கள், களைகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துதல்:
1. சூழ்நிலைக்குப் பொருத்தமான பயிர்களைத் தேர்ந்தெடுத்தல்
2. நோய்களுக்கு எதிர்ப்பு சக்தியுள்ள பயிர்களைத் தேர்ந்தெடுத்தல்
3. நல்ல பயிர் மேலாண்மை
4. பயிற் சுழற்சியைக் கடைப்பிடித்தல்
5. பூச்சிகளைத் தின்னும் பூச்சிகளை வளர்த்தல்
6. இயற்கை பூச்சிகொல்லிகளை உபயோகித்தல்
இவை தவிர நல்ல நீர் மேலாண்மையும் நல்ல கால்நடைகளை வளர்ப்பதும் இன்றியமையாதவை.
ஒரு இயற்கை விவசாயி இயற்கையுடன் இசைந்து விவசாயம் செய்து மண்வளம், சுற்றுச் சூழ்நிலை, சுகாதாரம் ஆகியவைகளைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொடுப்பவன் ஆவான்.
நன்றி :மேலும் அறிய
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: விவசாயம் பற்றி அறிவோம்!! வாருங்கள்!
இயற்கை உரம் எங்கிருந்து கிடைக்கும்?
இயற்கை உரங்கள் எங்கிருந்து கிடைக்கும்?
1. மிருகங்களின் கழிவுகள்.
2. மனிதனின் கழிவுகள்
3. பசுந்தாள் உரப்பயிர்கள்
4. மரங்கள் செடிகளில் இருக்கும் இலை, தழைகள்
5. நுண்ணுயிர் உரங்கள்
6. குளங்கள், ஏரிகளில் இருக்கும் வண்டல் மண்
பதினெட்டு, பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டில் 1960 வரை, மேற்கண்ட இயற்கை உரங்களை பயன்படுத்தித்தான் விவசாயம் நடந்தது என்பதை அனைவரும் அறிவீர்கள். அப்போது மக்கள் எவ்வளவு ஆரோக்யமாக வாழ்ந்து வந்தார்கள் என்பதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள்.
(தேசத்துரோகிகள் சொல்வதை நம்பாதீர்கள் - அப்போது இந்தியனின் சராசரி ஆயுட் காலம் 45 வருடம் என்றும் இப்போது இந்தியனின் சராசரி வயது 65 என்றும் சொல்வார்கள். தவிர, அப்போது இந்தியாவில் பல பஞ்சங்கள் தலைவிரித்தாடின, ஆயிரக்கணக்கான மக்கள் பட்டினியால் இறந்தார்கள் என்றும் சொல்வார்கள். எல்லாம் வயித்தெரிச்சலில் சொல்வது.அவர்கள் எல்லாம் கட்டாயம் நரகத்திற்குச் செல்வார்கள் என்பதில் கடுகளவு கூட சந்தேகம் வேண்டாம்).
இந்த இயற்கை உரங்கள் இந்தியாவில் மிகுந்து கிடக்கின்றன. விவசாயிகள் தங்கள் அறியாமையினாலும் விஞ்ஞானிகளின் துர்ப்போதனையினாலும் இந்த உரங்களைப் பயன்படுத்துவதில்லை. அவை வீணாகப் போய்க் கொண்டிருக்கின்றன. தவிர, கால்நடைகளை வளர்ப்பதற்குச் சோம்பல்பட்டு அவைகளை மாமிசத்திற்காக அனுப்புகிறார்கள். மனிதக்கழிவுகளை சேகரித்துப் பயன்படுத்துவதில்லை. விவசாய வேலைகளுக்கு இயந்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள்.
இந்த அநியாயங்களை தடுத்து நிறுத்தவேண்டும். இந்தியாவில் இயற்கை விவசாய மறுமலர்ச்சி ஏற்படவேண்டும். இதற்காக நான் என் உயிரையும் தியாகம் செய்யத் தயார். இந்தப் போராட்டம் அடுத்த சுதந்திர தினத்தன்று டில்லி ஜந்தர் மந்தரில் தொடங்கும். அனைவரும் தயாராக இருங்கள். இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சொர்க்கத்திற்கு செல்ல விசா கொடுப்பதற்காக சித்திரகுப்தன் ஸ்பெஷல் அலுவலகம் திறக்கப் போவதாக உறுதி அளித்திருக்கிறார்.
தேசப் பற்றுள்ளோரே, இயற்கை விவசாயத்தை ஆதரிப்பீர்.
இயற்கை உரங்கள் எங்கிருந்து கிடைக்கும்?
1. மிருகங்களின் கழிவுகள்.
2. மனிதனின் கழிவுகள்
3. பசுந்தாள் உரப்பயிர்கள்
4. மரங்கள் செடிகளில் இருக்கும் இலை, தழைகள்
5. நுண்ணுயிர் உரங்கள்
6. குளங்கள், ஏரிகளில் இருக்கும் வண்டல் மண்
பதினெட்டு, பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டில் 1960 வரை, மேற்கண்ட இயற்கை உரங்களை பயன்படுத்தித்தான் விவசாயம் நடந்தது என்பதை அனைவரும் அறிவீர்கள். அப்போது மக்கள் எவ்வளவு ஆரோக்யமாக வாழ்ந்து வந்தார்கள் என்பதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள்.
(தேசத்துரோகிகள் சொல்வதை நம்பாதீர்கள் - அப்போது இந்தியனின் சராசரி ஆயுட் காலம் 45 வருடம் என்றும் இப்போது இந்தியனின் சராசரி வயது 65 என்றும் சொல்வார்கள். தவிர, அப்போது இந்தியாவில் பல பஞ்சங்கள் தலைவிரித்தாடின, ஆயிரக்கணக்கான மக்கள் பட்டினியால் இறந்தார்கள் என்றும் சொல்வார்கள். எல்லாம் வயித்தெரிச்சலில் சொல்வது.அவர்கள் எல்லாம் கட்டாயம் நரகத்திற்குச் செல்வார்கள் என்பதில் கடுகளவு கூட சந்தேகம் வேண்டாம்).
இந்த இயற்கை உரங்கள் இந்தியாவில் மிகுந்து கிடக்கின்றன. விவசாயிகள் தங்கள் அறியாமையினாலும் விஞ்ஞானிகளின் துர்ப்போதனையினாலும் இந்த உரங்களைப் பயன்படுத்துவதில்லை. அவை வீணாகப் போய்க் கொண்டிருக்கின்றன. தவிர, கால்நடைகளை வளர்ப்பதற்குச் சோம்பல்பட்டு அவைகளை மாமிசத்திற்காக அனுப்புகிறார்கள். மனிதக்கழிவுகளை சேகரித்துப் பயன்படுத்துவதில்லை. விவசாய வேலைகளுக்கு இயந்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள்.
இந்த அநியாயங்களை தடுத்து நிறுத்தவேண்டும். இந்தியாவில் இயற்கை விவசாய மறுமலர்ச்சி ஏற்படவேண்டும். இதற்காக நான் என் உயிரையும் தியாகம் செய்யத் தயார். இந்தப் போராட்டம் அடுத்த சுதந்திர தினத்தன்று டில்லி ஜந்தர் மந்தரில் தொடங்கும். அனைவரும் தயாராக இருங்கள். இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சொர்க்கத்திற்கு செல்ல விசா கொடுப்பதற்காக சித்திரகுப்தன் ஸ்பெஷல் அலுவலகம் திறக்கப் போவதாக உறுதி அளித்திருக்கிறார்.
தேசப் பற்றுள்ளோரே, இயற்கை விவசாயத்தை ஆதரிப்பீர்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: விவசாயம் பற்றி அறிவோம்!! வாருங்கள்!
நெல் சாகுபடி - உயர் விளைச்சல் தரும் நெல் இரகங்கள் : குறுகிய கால இரகங்கள் (110 நாட்கள்) - ஏடிடி43, ஏடிடி45, ஏஎன்டி16 கோ51. மத்திய கால இரகங்கள் (135 நாட்கள்) ஏடிடி39, ஏடிடி 49, கோ-49, கோ-50.
நெல் விளைச்சலை மேம்படுத்த : விதைகளை உப்புநீர் கரைசலின் (18 லிட்டர் நீரில் 3 கிலோ உப்பு) மூலம் தரமான விதைகளைப் பிரித்தெடுக்க வேண்டும். நன்கு மூழ்கிய விதைகளை சுத்தமான நீரில் கழுவி பின் விதைப்புக்கு பயன்படுத்த வேண்டும். ஒரு ஏக்கருக்கு தேவையான 3 கிலோ விதையுடன் 30 கிராம் சூடோமோனாஸ் புளுரசன்ஸ், ஒரு பாக்கெட் அசோஸ்பைரில்லம் (200 கிராம்), ஒரு பாக்கெட் பாஸ்போ பாக்டீரியா (200 கிராம்) அல்லது 2 பாக்கெட் அசோபாஸ் (400 கி) உடன் கலந்து இரவு முழுவதும் ஊறவைத்து விதை நேர்த்தி செய்யவும்.
நடவு வயலில் ஏக்கருக்கு 8-10 கிலோ பசுந்தாள் உர விதையை விதைத்து பூப்பதற்கு முன் (40-45 நாட்களில்) மடக்கி உழவும். உழுவதற்கு முன் தொழுஉரம் அல்லது மக்கிய உரம் ஏக்கருக்கு 5 டன்கள் இட வேண்டும். ஏக்கருக்கு 200 கிலோ ஜிப்சம் மற்றும் 10 கிலோ டிஎன்ஏயு நுண்ணூட்டக் கலவை அல்லது ஜிங்க் சல்பேட் ஆகியவற்றை 20 கிலோ மணலுடன் கலந்து கடைசி உழவின்போது இடவும்.
ஏக்கருக்கு அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா ஒவ்வொன்றும் 4 பாக்கெட் (800 கிராம்) அல்லது அசோபாஸ் 8 பாக்கெட் (1600 கிராம்), சூடோமோனஸ் புளூரசன்ஸ் (பிஎப் 1) ஏக்கருக்கு 1 கிலோ ஆகியவற்றை 20 கிலோ மணலுடன் கலந்து நடவிற்கு முன்பு இடவும். இரசாயன உரங்கள் இடும்போது மண் பரிசோதனைப்படி தேவையான உரங்களை இட வேண்டும். குறுகிய மற்றும் மத்திய கால இரகங்களுக்கு தழை,மணி, சாம்பல் சத்துக்கள் முறையே ஏக்கருக்கு 50:20:20 கிலோவும் மற்றும் 60:20:20 கிலோ என்ற அளவில் இடவேண்டும்.
தழைச்சத்தை 4 சம பாகங்களாக பிரித்து அடியுரம், தூர்கட்டும் பருவம், கதிர் உருவாகும் பருவம் மற்றும் பூக்கும் பருவத்தில் இட வேண்டும்.
சோளத்தில் உயர் விளைச்சல் பெற - உயர் விளைச்சல் இரகங்கள் : கோ-28, கே.நெட்டை கே.8, கோ.30
வீரிய ஒட்டு இரகங்கள் : டி.என்.ஏ.யு. சோளம் வீரிய ஒட்டு கோ.5, மற்றும் பதிவு செய்யப்பட்ட வீரிய ஒட்டு இரகங்கள். இறவை மற்றும் மானாவாரி சோளத்திற்கு ஒரு ஏக்கருக்கு 4 முதல் 5 கிலோ விதை தேவைப்படும். பொட்டாசியம் டை-ஹைட்ரஜன் பாஸ்பேட் 20 கிராமுடன் ஒரு லிட்டர் நீர் கலந்த கரைசலில் விதைகளை 6 மணி நேரம் ஊறவைத்து நிழலில் உலர்த்திய பின் விதைப்பதால் பயர் வறட்சியைத் தாங்கி வளரும்.
இறவைப் பயிருக்கு தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்கள் முறையே 36:18:18 கிலோவும், மானாவாரி பயிருக்கு தழை மற்றும் மணிச்சத்துக்கள் 16:8 மற்றும் நுண்ணூட்டக் கலவை ஏக்கருக்கு 5 கிலோ என்ற அளவில் இடவேண்டும்.
கம்பில் உயர் விளைச்சல் பெற : ஒட்டு இரகம் கோ.9 மற்றும் ஐசிஎம்வி 221. இறவைப்பயிருக்கு ஒரு ஏக்கருக்கு 2 கிலோ விதை, தகுந்த இடைவெளி (45x15 செ.மீ) பின்பற்றி சரியான பயிர் எண்ணிக்கையை பராமரிக்க வேண்டும்.
மானாவாரி விதைப்புக்கு கம்பு விதைகளை கடினப்படுத்த 2 சதம் பொட்டாசியம் குளோரைடு அல்லது 3 சதம் சோடியம் குளோரைடு கரைசலில் 16 மணி நேரம் ஊறவைத்து பின்பு 5 மணி நேரம் நிழலில் உலர வைத்து பின்பு விதைக்க வேண்டும். நுண்ணூட்டசத்து கலவை ஏக்கருக்கு 5 கிலோ வீதம் இட வேண்டும்.
வீரிய ஒட்டு இரகங்களுக்கு ஏக்கருக்கு 32:16:16 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களை இடவேண்டும். இரகங்களுக்கு ஏக்கருக்கு 28:14:14 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களை இடவேண்டும்.
- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்
நெல் விளைச்சலை மேம்படுத்த : விதைகளை உப்புநீர் கரைசலின் (18 லிட்டர் நீரில் 3 கிலோ உப்பு) மூலம் தரமான விதைகளைப் பிரித்தெடுக்க வேண்டும். நன்கு மூழ்கிய விதைகளை சுத்தமான நீரில் கழுவி பின் விதைப்புக்கு பயன்படுத்த வேண்டும். ஒரு ஏக்கருக்கு தேவையான 3 கிலோ விதையுடன் 30 கிராம் சூடோமோனாஸ் புளுரசன்ஸ், ஒரு பாக்கெட் அசோஸ்பைரில்லம் (200 கிராம்), ஒரு பாக்கெட் பாஸ்போ பாக்டீரியா (200 கிராம்) அல்லது 2 பாக்கெட் அசோபாஸ் (400 கி) உடன் கலந்து இரவு முழுவதும் ஊறவைத்து விதை நேர்த்தி செய்யவும்.
நடவு வயலில் ஏக்கருக்கு 8-10 கிலோ பசுந்தாள் உர விதையை விதைத்து பூப்பதற்கு முன் (40-45 நாட்களில்) மடக்கி உழவும். உழுவதற்கு முன் தொழுஉரம் அல்லது மக்கிய உரம் ஏக்கருக்கு 5 டன்கள் இட வேண்டும். ஏக்கருக்கு 200 கிலோ ஜிப்சம் மற்றும் 10 கிலோ டிஎன்ஏயு நுண்ணூட்டக் கலவை அல்லது ஜிங்க் சல்பேட் ஆகியவற்றை 20 கிலோ மணலுடன் கலந்து கடைசி உழவின்போது இடவும்.
ஏக்கருக்கு அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா ஒவ்வொன்றும் 4 பாக்கெட் (800 கிராம்) அல்லது அசோபாஸ் 8 பாக்கெட் (1600 கிராம்), சூடோமோனஸ் புளூரசன்ஸ் (பிஎப் 1) ஏக்கருக்கு 1 கிலோ ஆகியவற்றை 20 கிலோ மணலுடன் கலந்து நடவிற்கு முன்பு இடவும். இரசாயன உரங்கள் இடும்போது மண் பரிசோதனைப்படி தேவையான உரங்களை இட வேண்டும். குறுகிய மற்றும் மத்திய கால இரகங்களுக்கு தழை,மணி, சாம்பல் சத்துக்கள் முறையே ஏக்கருக்கு 50:20:20 கிலோவும் மற்றும் 60:20:20 கிலோ என்ற அளவில் இடவேண்டும்.
தழைச்சத்தை 4 சம பாகங்களாக பிரித்து அடியுரம், தூர்கட்டும் பருவம், கதிர் உருவாகும் பருவம் மற்றும் பூக்கும் பருவத்தில் இட வேண்டும்.
சோளத்தில் உயர் விளைச்சல் பெற - உயர் விளைச்சல் இரகங்கள் : கோ-28, கே.நெட்டை கே.8, கோ.30
வீரிய ஒட்டு இரகங்கள் : டி.என்.ஏ.யு. சோளம் வீரிய ஒட்டு கோ.5, மற்றும் பதிவு செய்யப்பட்ட வீரிய ஒட்டு இரகங்கள். இறவை மற்றும் மானாவாரி சோளத்திற்கு ஒரு ஏக்கருக்கு 4 முதல் 5 கிலோ விதை தேவைப்படும். பொட்டாசியம் டை-ஹைட்ரஜன் பாஸ்பேட் 20 கிராமுடன் ஒரு லிட்டர் நீர் கலந்த கரைசலில் விதைகளை 6 மணி நேரம் ஊறவைத்து நிழலில் உலர்த்திய பின் விதைப்பதால் பயர் வறட்சியைத் தாங்கி வளரும்.
இறவைப் பயிருக்கு தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்கள் முறையே 36:18:18 கிலோவும், மானாவாரி பயிருக்கு தழை மற்றும் மணிச்சத்துக்கள் 16:8 மற்றும் நுண்ணூட்டக் கலவை ஏக்கருக்கு 5 கிலோ என்ற அளவில் இடவேண்டும்.
கம்பில் உயர் விளைச்சல் பெற : ஒட்டு இரகம் கோ.9 மற்றும் ஐசிஎம்வி 221. இறவைப்பயிருக்கு ஒரு ஏக்கருக்கு 2 கிலோ விதை, தகுந்த இடைவெளி (45x15 செ.மீ) பின்பற்றி சரியான பயிர் எண்ணிக்கையை பராமரிக்க வேண்டும்.
மானாவாரி விதைப்புக்கு கம்பு விதைகளை கடினப்படுத்த 2 சதம் பொட்டாசியம் குளோரைடு அல்லது 3 சதம் சோடியம் குளோரைடு கரைசலில் 16 மணி நேரம் ஊறவைத்து பின்பு 5 மணி நேரம் நிழலில் உலர வைத்து பின்பு விதைக்க வேண்டும். நுண்ணூட்டசத்து கலவை ஏக்கருக்கு 5 கிலோ வீதம் இட வேண்டும்.
வீரிய ஒட்டு இரகங்களுக்கு ஏக்கருக்கு 32:16:16 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களை இடவேண்டும். இரகங்களுக்கு ஏக்கருக்கு 28:14:14 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களை இடவேண்டும்.
- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: விவசாயம் பற்றி அறிவோம்!! வாருங்கள்!
வீட்டுக் கழிவுகளிலிருந்து தோட்டங்களுக்கு உரம்! கிராமப்புறங்கள் மட்டுமன்றி நகரங்களில் மாடியிலும், வீட்டின் பின்புறங்களிலும் தோட்டம் அமைத்து காய்கனிச் செடிகள் வளர்ப்பது அதிகரித்து வருகிறது.இத்தகைய தோட்டங்களுக்கு அதிக விலையிலான உரங்களை வாங்கி இடுவதற்குப் பதிலாக வீட்டுக் கழிவுகளிலிருந்தே உரம் தயாரித்து பயன்படுத்தலாம் என தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இயற்கை உரங்களைப் பயன்படுத்துவது மண் வளத்துக்கும், செடிகளுக்கும் ஆரோக்கியம் என்கின்றனர் தோட்டக்கலை வல்லுநர்கள். இயற்கை உரம் தயாரிப்பது எப்படி?: நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் காய்களின் தோல் கழிவுகள் போன்றவற்றையே சிறந்த உரமாகப் பயன்படுத்தலாம். வெங்காயம், உருளைக்கிழங்கின் தோல்கள், பயன்படுத்த முடியாத தக்காளி, இலைக் கழிவுகள் போன்றவற்றை குப்பையில் கொட்டுகிறோம். இதை வீணாக்காமல் வீட்டின் பின்புறம் குழி தோண்டி, அதில் கழிவுகளைக் கொட்டி சிறிது மண்ணைத் தூவினால், உரக்குழி தயார்.இதேபோல, பயன்படுத்தப்பட்ட டீத் தூள், முட்டை ஓடுகள், ஆடு, மாடுகளின் சாணம்கூட சிறந்த இயற்கை உரம் தயாரிக்க பயன்படுகின்றன.
மாடி வீட்டில் வசிப்போர் உடைந்த மண் சட்டி அல்லது பக்கெட்டில் மண்ணை இட்டு இந்த இயற்கை உரம் தயாரிக்கலாம்.இக் கழிவு நல்ல வெயில் படும்படி இருக்க வேண்டும். இப்படிச் செய்வதால் கழிவுப் பொருள்களில் உள்ள சத்துகள் அனைத்தும் ஒன்றாகி மக்கி உரமாகும். இதை தோட்டத்துச் செடிகளுக்கு உரமாகப் பயன்படுத்தும்போது அவை நன்றாக வளரும். இதனால் சுவையான காய்கனிகள் கிடைக்கும். பூங்கா கழிவுகள்: மக்கும் இலைகள், பெரிய பூங்கா, தோட்டங்களில் உதிர்ந்துகிடக்கும் இலை, தழைகளை சேகரித்து வீட்டுத் தோட்டத்தில் ஒரு மூலையில் குவித்துவைக்க வேண்டும். அவற்றை மக்கச்செய்யும் முன் சிறுசிறு துகள்களாக்க வேண்டும். இவற்றிலிருக்கும் கரிமச்சத்து, தழைச்சத்து விகிதம்தான் மக்கும் முறையை நிர்ணயிக்கும் காரணிகள்.எனவே, கரிமச்சத்து, தழைசத்து அதிகமுள்ள கழிவுகளை நன்கு கலக்க வேண்டும்.
அதாவது பச்சை, காய்ந்த கழிவுகளைச் சேர்த்து கலக்க வேண்டும். சமையலறை காய்கனிக் கழிவுகள், பழுப்புக் கழிவுகள்-வைக்கோல், காய்ந்த இலைகள், காய்ந்த புற்கள் இவ்விரண்டையும் கலந்து வைப்பதன் மூலம் குறைந்த காலத்தில் மக்கச் செய்ய முடியும். ஆக்சிஜன் அவசியம்: கம்போஸ்ட் குழிகளில் ஆக்சிஜன் அதிகமாக இருந்தால்தான் நுண்ணுயிர்களின் செயல்பாடுகள் தூண்டப்படும். எனவே, குழியில் காற்றோட்டம் ஏற்படுத்த பூமியில் உள்ள குழியின் பக்கவாட்டிலிருந்து அல்லது செங்குத்தான நிலையில் குழாய்களைப் பொருத்தலாம். 15 நாள்களுக்கு ஒருமுறை குழியிலிருக்கும் கழிவுகளைக் கிளறுவதன் மூலம் கீழுள்ள கழிவுகள் மேலும், மேலுள்ளவை கீழும் செல்வதால், கழிவை மக்கச் செய்ய உருவாகியிருக்கும் நுண்ணுயிர்களின் செயல்பாடுகள் துரிதப்படுத்தப்படுகிறது.
ஈரப்பதம் தேவை: கம்போஸ்ட் குழிகளில் எப்போதும் ஈரப்பதம் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஈரப்பதம் குறைந்தால் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையும் குறைந்து மக்கும் தன்மை பாதிக்கப்படும்.இத் தொழில்நுட்ப முறைகளில் 30 நாள்கள் கம்போஸ்ட் குழிகளில் வைக்கப்படும் கழிவு முதிர்வடையும் நிலையை எட்டும். முதிர்வடைந்த மக்கிய உரமானது, அளவு குறைந்தும், கருப்பு நிறமாகவும், துகள்களின் அளவும் குறைந்து காணப்படும். முதிர்வடைந்த மக்கிய உரத்தைக் கலைத்து தரையில் விரித்து, மறுநாள் 4 மி.மீ. சல்லடையால் சலித்தெடுத்து வைத்துக் கொள்ளலாம்.
செறிவூட்டப்பட்ட உரம் அறுவடை செய்யப்பட்ட மக்கிய உரத்தை நிழலில் கடினமான தரையில் குவித்து நுண்ணுயிர்களான அசோடோபேக்டர், சூடோமோனஸ், அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா 0.02 சதவீதம், ராக்பாஸ்பேட் 0.2 சதவீதம் ஆகியவற்றை 1 டன் மக்கிய உரத்துடன் கலந்து, 60 சதம் ஈரப்பதம் இருக்கும்படி 20 நாள்கள் வைப்பதன் மூலம் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம்.இவ்வாறு தயாரிக்கப்பட்ட உரம் செறிவூட்டப்பட்ட உரமாகும்.
இது சாதாரண மக்கிய உரத்தைவிட ஊட்டச்சத்து அதிகமாகவும், நன்மை செய்யக்கூடிய நுண்ணுயிர்கள் அதிகமாகவும், தாவர வளர்ச்சியைத் தூண்டுவதற்கும் உதவும். வீட்டிலிருக்கும் உடைந்த பிளாஸ்டிக் வாளிகளில்கூட இதுபோன்ற இலைக்கழிவுகளை இட்டு மக்கிய உரம் தயாரிக்கலாம்.அதாவது இந்த பிளாஸ்டிக் வாளியானது பயிர்க்குழிபோல் பயன்படும். இந்த உரங்களை வீட்டுத் தோட்டங்களுக்கு மட்டுமல்லாது வயல்களில் பயிரிடப்படும் அனைத்து வகைப் பயிர்களுக்கும் இயற்கை உரமாக பயன்படுத்தலாம் என்கின்றனர் தோட்டக்கலைத் துறையினர்.
இயற்கை உரங்களைப் பயன்படுத்துவது மண் வளத்துக்கும், செடிகளுக்கும் ஆரோக்கியம் என்கின்றனர் தோட்டக்கலை வல்லுநர்கள். இயற்கை உரம் தயாரிப்பது எப்படி?: நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் காய்களின் தோல் கழிவுகள் போன்றவற்றையே சிறந்த உரமாகப் பயன்படுத்தலாம். வெங்காயம், உருளைக்கிழங்கின் தோல்கள், பயன்படுத்த முடியாத தக்காளி, இலைக் கழிவுகள் போன்றவற்றை குப்பையில் கொட்டுகிறோம். இதை வீணாக்காமல் வீட்டின் பின்புறம் குழி தோண்டி, அதில் கழிவுகளைக் கொட்டி சிறிது மண்ணைத் தூவினால், உரக்குழி தயார்.இதேபோல, பயன்படுத்தப்பட்ட டீத் தூள், முட்டை ஓடுகள், ஆடு, மாடுகளின் சாணம்கூட சிறந்த இயற்கை உரம் தயாரிக்க பயன்படுகின்றன.
மாடி வீட்டில் வசிப்போர் உடைந்த மண் சட்டி அல்லது பக்கெட்டில் மண்ணை இட்டு இந்த இயற்கை உரம் தயாரிக்கலாம்.இக் கழிவு நல்ல வெயில் படும்படி இருக்க வேண்டும். இப்படிச் செய்வதால் கழிவுப் பொருள்களில் உள்ள சத்துகள் அனைத்தும் ஒன்றாகி மக்கி உரமாகும். இதை தோட்டத்துச் செடிகளுக்கு உரமாகப் பயன்படுத்தும்போது அவை நன்றாக வளரும். இதனால் சுவையான காய்கனிகள் கிடைக்கும். பூங்கா கழிவுகள்: மக்கும் இலைகள், பெரிய பூங்கா, தோட்டங்களில் உதிர்ந்துகிடக்கும் இலை, தழைகளை சேகரித்து வீட்டுத் தோட்டத்தில் ஒரு மூலையில் குவித்துவைக்க வேண்டும். அவற்றை மக்கச்செய்யும் முன் சிறுசிறு துகள்களாக்க வேண்டும். இவற்றிலிருக்கும் கரிமச்சத்து, தழைச்சத்து விகிதம்தான் மக்கும் முறையை நிர்ணயிக்கும் காரணிகள்.எனவே, கரிமச்சத்து, தழைசத்து அதிகமுள்ள கழிவுகளை நன்கு கலக்க வேண்டும்.
அதாவது பச்சை, காய்ந்த கழிவுகளைச் சேர்த்து கலக்க வேண்டும். சமையலறை காய்கனிக் கழிவுகள், பழுப்புக் கழிவுகள்-வைக்கோல், காய்ந்த இலைகள், காய்ந்த புற்கள் இவ்விரண்டையும் கலந்து வைப்பதன் மூலம் குறைந்த காலத்தில் மக்கச் செய்ய முடியும். ஆக்சிஜன் அவசியம்: கம்போஸ்ட் குழிகளில் ஆக்சிஜன் அதிகமாக இருந்தால்தான் நுண்ணுயிர்களின் செயல்பாடுகள் தூண்டப்படும். எனவே, குழியில் காற்றோட்டம் ஏற்படுத்த பூமியில் உள்ள குழியின் பக்கவாட்டிலிருந்து அல்லது செங்குத்தான நிலையில் குழாய்களைப் பொருத்தலாம். 15 நாள்களுக்கு ஒருமுறை குழியிலிருக்கும் கழிவுகளைக் கிளறுவதன் மூலம் கீழுள்ள கழிவுகள் மேலும், மேலுள்ளவை கீழும் செல்வதால், கழிவை மக்கச் செய்ய உருவாகியிருக்கும் நுண்ணுயிர்களின் செயல்பாடுகள் துரிதப்படுத்தப்படுகிறது.
ஈரப்பதம் தேவை: கம்போஸ்ட் குழிகளில் எப்போதும் ஈரப்பதம் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஈரப்பதம் குறைந்தால் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையும் குறைந்து மக்கும் தன்மை பாதிக்கப்படும்.இத் தொழில்நுட்ப முறைகளில் 30 நாள்கள் கம்போஸ்ட் குழிகளில் வைக்கப்படும் கழிவு முதிர்வடையும் நிலையை எட்டும். முதிர்வடைந்த மக்கிய உரமானது, அளவு குறைந்தும், கருப்பு நிறமாகவும், துகள்களின் அளவும் குறைந்து காணப்படும். முதிர்வடைந்த மக்கிய உரத்தைக் கலைத்து தரையில் விரித்து, மறுநாள் 4 மி.மீ. சல்லடையால் சலித்தெடுத்து வைத்துக் கொள்ளலாம்.
செறிவூட்டப்பட்ட உரம் அறுவடை செய்யப்பட்ட மக்கிய உரத்தை நிழலில் கடினமான தரையில் குவித்து நுண்ணுயிர்களான அசோடோபேக்டர், சூடோமோனஸ், அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா 0.02 சதவீதம், ராக்பாஸ்பேட் 0.2 சதவீதம் ஆகியவற்றை 1 டன் மக்கிய உரத்துடன் கலந்து, 60 சதம் ஈரப்பதம் இருக்கும்படி 20 நாள்கள் வைப்பதன் மூலம் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம்.இவ்வாறு தயாரிக்கப்பட்ட உரம் செறிவூட்டப்பட்ட உரமாகும்.
இது சாதாரண மக்கிய உரத்தைவிட ஊட்டச்சத்து அதிகமாகவும், நன்மை செய்யக்கூடிய நுண்ணுயிர்கள் அதிகமாகவும், தாவர வளர்ச்சியைத் தூண்டுவதற்கும் உதவும். வீட்டிலிருக்கும் உடைந்த பிளாஸ்டிக் வாளிகளில்கூட இதுபோன்ற இலைக்கழிவுகளை இட்டு மக்கிய உரம் தயாரிக்கலாம்.அதாவது இந்த பிளாஸ்டிக் வாளியானது பயிர்க்குழிபோல் பயன்படும். இந்த உரங்களை வீட்டுத் தோட்டங்களுக்கு மட்டுமல்லாது வயல்களில் பயிரிடப்படும் அனைத்து வகைப் பயிர்களுக்கும் இயற்கை உரமாக பயன்படுத்தலாம் என்கின்றனர் தோட்டக்கலைத் துறையினர்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: விவசாயம் பற்றி அறிவோம்!! வாருங்கள்!
தொடருங்கள் ராகவன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: விவசாயம் பற்றி அறிவோம்!! வாருங்கள்!
நமது இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கும் நீர் நிலைகள்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» வாருங்கள் புறாவினை பற்றி அறிவோம்
» அறிவோம் வாருங்கள்.....
» விசித்திரப்படங்கள்.அறிவோம் வாருங்கள்..!!
» அறிவோம்..வாருங்கள்...
» நத்தையைப் பற்றி அறிவோம்....
» அறிவோம் வாருங்கள்.....
» விசித்திரப்படங்கள்.அறிவோம் வாருங்கள்..!!
» அறிவோம்..வாருங்கள்...
» நத்தையைப் பற்றி அறிவோம்....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|