Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
நான் ரசித்த திரைப்பட பாடல் வரிகள் - தொடர்பதிவு
3 posters
Page 1 of 1
நான் ரசித்த திரைப்பட பாடல் வரிகள் - தொடர்பதிவு
அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
படம் – பார் மகளே பார்
இசை – விஸ்வநாதன் – ராமமூர்த்தி
பாடியவர்கள் – டி.எம். சௌந்தரராஜன் – பி.பி. ஸ்ரீநிவாஸ்
-
-
படம்த இணையம்
——————————————
அவள் பறந்து போனாளே என்னை மறந்து
போனாளே
நான் பார்க்கும் போது கண்கள இரண்டைக்
கவர்ந்து போனாளே
-
அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்கள் இரெண்டைக் கவர்ந்து
போனாளே
-
என் காதுக்கு மொழியில்லை
என் நாவுக்கு சுவையில்லை
என் நெஞ்சுக்கு நினைவில்லை
என் நிழலுக்கு உறக்கமில்லை
என் நிழலுக்கு உறக்கமில்லை
-
இந்த வீட்டுக்கு விளக்கில்லை
சொந்தக் கூட்டுக்கு குயிலில்லை
என் அன்புக்கு மகளில்லை
ஒரு ஆறுதல் மொழியில்லை
ஒரு ஆறுதல் மொழியில்லை
-
அவள் பறந்து போனாளே என்னை மறந்து
போனாளே
நான் பார்க்கும் போது கண்கள இரண்டைக்
கவர்ந்து போனாளே
-
என் இதயத்தில் பூட்டிவைத்தேன்
அதில் என்னையே காவல் வைத்தேன்
அவள் கதவை உடைத்தாளே
தன் சிறகை விரித்தாளே
-
அவள் எனக்கா மகளானாள்
நான் அவளுக்கு மகனானேன்
என் உரிமைத் தாயல்லவா
என் உயிரை எடுத்துச் சென்றாள்
என் உயிரை எடுத்துச் சென்றாள்
-
அவள் பறந்து போனாளே என்னை மறந்து
போனாளே
நான் பார்க்கும் போது கண்கள் இரண்டைக்
கவர்ந்து போனாளே
-
—————————————–
படம்: இணையம்
படம் – பார் மகளே பார்
இசை – விஸ்வநாதன் – ராமமூர்த்தி
பாடியவர்கள் – டி.எம். சௌந்தரராஜன் – பி.பி. ஸ்ரீநிவாஸ்
-
-
படம்த இணையம்
——————————————
அவள் பறந்து போனாளே என்னை மறந்து
போனாளே
நான் பார்க்கும் போது கண்கள இரண்டைக்
கவர்ந்து போனாளே
-
அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்கள் இரெண்டைக் கவர்ந்து
போனாளே
-
என் காதுக்கு மொழியில்லை
என் நாவுக்கு சுவையில்லை
என் நெஞ்சுக்கு நினைவில்லை
என் நிழலுக்கு உறக்கமில்லை
என் நிழலுக்கு உறக்கமில்லை
-
இந்த வீட்டுக்கு விளக்கில்லை
சொந்தக் கூட்டுக்கு குயிலில்லை
என் அன்புக்கு மகளில்லை
ஒரு ஆறுதல் மொழியில்லை
ஒரு ஆறுதல் மொழியில்லை
-
அவள் பறந்து போனாளே என்னை மறந்து
போனாளே
நான் பார்க்கும் போது கண்கள இரண்டைக்
கவர்ந்து போனாளே
-
என் இதயத்தில் பூட்டிவைத்தேன்
அதில் என்னையே காவல் வைத்தேன்
அவள் கதவை உடைத்தாளே
தன் சிறகை விரித்தாளே
-
அவள் எனக்கா மகளானாள்
நான் அவளுக்கு மகனானேன்
என் உரிமைத் தாயல்லவா
என் உயிரை எடுத்துச் சென்றாள்
என் உயிரை எடுத்துச் சென்றாள்
-
அவள் பறந்து போனாளே என்னை மறந்து
போனாளே
நான் பார்க்கும் போது கண்கள் இரண்டைக்
கவர்ந்து போனாளே
-
—————————————–
படம்: இணையம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Re: நான் ரசித்த திரைப்பட பாடல் வரிகள் - தொடர்பதிவு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Re: நான் ரசித்த திரைப்பட பாடல் வரிகள் - தொடர்பதிவு
கேட்டு ரசிக்க வேண்டிய சில பாடல்கள்
விபரம்:
-
1) பி.மாதவன் இயக்கத்தில் மணியோசை
படத்தில் வரும்,
”தேவன் கோயில் மணியோசை....” சீர்காழி கோவிந்தராஜன்
பாடியது.
-
2) திருமால் பெருமை படத்தில் டி.எம் சௌந்தரராஜன்
பாடிய, “ மலர்களிலே அவன் மணம் கண்டேன்....”
-
3) தூக்குத்தூக்கி படத்தில் ஒரு அருமையான பாடல்.
“சுந்தரி சௌந்தரி நிரந்தரியே...”
-
4) கண்ணதாசன் இயற்றி விஸ்வநாதன்- ராமமூர்த்தி மெட்டமைத்த
ஏ.எல்.எஸ்- தயாரிப்பில் சாந்தி திரைப்படத்தில்,
”செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு சேதியை....”
பாடல் வரிகளின் முடிவில் அடி...அடி
என்று அதாவது ’வாசலில் வருவேனடி, வாழ்கெனச் சொல்வானடி...’
பெண்ணை முன்னிலைப் படுத்தி சிறப்பித்திருப்பார்.
ஒருவகை மிஸ்ர சிவரஞ்சனி ராகத்தில் அமைந்தது.
-
5) யானைப்பாகன் படத்தில் கோவை குமாரதேவன் எழுதிய
“பதினாறும் நிறையாத பருவ மங்கை காதல் பசியூட்டி
வசமாக்கும் ரதியின் தங்கை” ஹிந்துஸ்தானி யமன் ராகம்.
-
6) விஜயா கம்பைன்ஸ் எங்க வீட்டு பிள்ளை படத்தில் விஸ்வநாதன் -
ராமமூர்த்தி இசையப்பில் ஹிந்துஸ்தானி மால்குஞ்சி ராகத்தில்
உருவான ‘மலருக்குத்தென்றல் பகையானால்’ ஆலங்குடி சோமு
எழுதிய பாடல்.
-
7) வீரபாண்டிய கட்டபொம்மன்! ஜி.ராமநாதன் அருமையாக வழங்கி
இருக்கும், பி.பி.ஸ்ரீனிவாஸ் பி.சுசீலா இணைந்து பாடிய ‘இன்பம்
பொங்கும் வெண்ணிலா வீசுதே’
-
8) ஹிந்துஸ்தானி ஆசாபரி ராகத்தை அதிகமாக கையாண்டிருப்பார்கள்,
பிரபலப் படுத்தியுமிருப்பார்கள் மெல்லிசை மன்னர்கள்.
அந்த வகையில் கண்ணதாசன் எழுதி டி.எம்.எஸ், சுசீலா பாடிய
பச்சை விளக்கு படத்தில் வந்த
‘வாராதிருப்பாளோ வண்ணமலர் கன்னியவள்’ என்ற பாடல்.
ஷெனாய் வாத்தியம் பிரதானமாயிருக்கும். இதே ஜாடையில்
மற்றொரு பாடல் ‘கண்ணிலே அன்பிருந்தால்’ படித்த மனைவி
படம் என்று நினைக்கிறேன்.
-
9) விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையமைத்த ஒரே மாதிரி
மெட்டில் வரும்
’காதலாகினேன்...’ ‘தேன் மதுவை வண்டினம் தேடி வரும்..’
‘தேன்சுவை மேவும் செந்தமிழ் கீதம்...’ போன்ற வரிசையில்
மிஸ்ர பேஹாக் ராகத்தில் உத்தமபுத்திரன் படத்தில் பத்மினிக்காக
சுசீலா பாடிய ‘உன்னழகை கன்னியர்கள் கண்டதினாலே..’.
இயக்குனர் திலகம் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இயற்றி
ஜி.ராமநாதன் இசையமைப்பில் உருவான ஓர் அழகான பாடல்.
-
10) இளையராஜா ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் மிகவும் சிலாகித்துப்
பேசும் மெல்லிசை மன்னர்களது பாடல் ஒன்று உண்டு.
அது கண்ணதாசன் எழுதி ஹிந்துஸ்தானி-சந்திரகவுன்ஸ் ராகத்தில்
பாக்கியலக்ஷ்மி படத்தில் வரும், ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே...’
-
11) அடுத்து... மிஸ்ர திலங் ராகத்தில் அரங்கம் அதிரும்
தபேலா தரங்-கும், வீணை சிட்டிபாபுவின் வீணையும் இணைந்து
வரும் பஞ்சவர்ணக்கிளி படத்தில் வி.ரா. மெட்டமைத்த
’அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்..’
படத்தில் எல்.விஜயலக்ஷ்மியின் நடனம் அழகு.
-
12) டி.ஆர். ராமண்ணா தமது கூண்டுக்கிளி படத்துக்காக
பதிவு செய்த பாடல் இது. கே.வி. மகாதேவன் இசையமைத்தது.
விந்தன் எழுதி பாகேஸ்ஸ்ரீ ராகத்தில் அமைந்த
‘மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ...’ பாடல்,
அப்படத்தின் நீளம் கருதி எடுத்துவிட்டார்கள். பின்னர் ராமண்ணாவின்
மற்றொரு படமான ‘குலேபகாவலி’ படத்தில் இணைத்துவிட்டார்.
ஆனால் குலேபகாவலி படத்துக்கு இசையமைப்பு மெல்லிசைமன்னர்கள்.
ஆனால் அந்த நீரோட்டத்தில் கே.வி.மாகாதேவன் இசையமைத்த
இப்பாடலும் சேர்ந்து கொண்டது.
கே.வி.மகாதேவனும் பெருந்தன்மையாக இருந்துவிட்டார்.
அக்காலம் மேன்மக்கள் காலம்!!!!!
இப்பாடலுக்கு ஜி.வரலக்ஷ்மியின் வாயசைப்பு வேடிக்கையாயிருக்கும்.
உதடு கால் செண்டி மீட்டர் கூட பிரியாது.
-
13) பணம் படைத்தவன். இப்படத்தில் வரும்
‘மாணிக்கத்தொட்டில் இங்கிருக்க மன்னவன் மட்டும் அங்கிருக்க...’
ஹிந்துஸ்தானி- அஹிர்பைரவி ராகத்தில் வாலி எழுத
மெ.மன்னர்கள் மெட்டமைத்தது.
‘உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது..’ பாடலும்
இதே ராகத்தில் அமைந்தது.
-
14) ‘துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும்...’
படம் கல்யாணப் பரிசு , எழுதியது பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்,
இசை ஏ.எம்.ராஜா, பாடியவர்கள் ஏ.எம்.ராஜா - ஜிக்கி ஜோடி. ராகம்
யமனகல்யாணி.
-
15)ஹிந்துஸ்தானி ராகேஸ்ஸ்ரீ ராகத்தை அதிகம் பயன் படுத்தியது
எம்.எஸ்.வி அவர்கள்தான்.இந்தப் படத்திலும் அதே ராகத்தில்
பஞ்சு அருணாசலம் எழுதிய ‘பொன் எழில் பூத்தது புது வானில்...’
கலங்கரைவிளக்கம் படத்தில் டி.எம்.எஸ்-சுசீலா பாடிய
அற்புதமான பாடல்!
-
16) அகிலன் எழுதிய ‘சித்திரப்பாவை’ நாவலை , விஜயகோபால்
ஃபிலிம்ஸ், ‘பாவைவிளக்கு’ என்ற பெயரில் படமாக தயாரித்தார்கள்.
அதில் கே.வி.மகாதேவனின் இசையில் மருதகாசி எழுதி
சி.எஸ்.ஜெயராமன் - பி.சுசீலா பாடிய ‘காவியமா நெஞ்சின் ஓவியமா...’
-
17) ‘சின்னஞ்சிறு கிளியே...’ இதுக்கு மற்ற விபரங்கள்
தேவையில்லை.
-
--------------------------------
விபரம்:
-
1) பி.மாதவன் இயக்கத்தில் மணியோசை
படத்தில் வரும்,
”தேவன் கோயில் மணியோசை....” சீர்காழி கோவிந்தராஜன்
பாடியது.
-
2) திருமால் பெருமை படத்தில் டி.எம் சௌந்தரராஜன்
பாடிய, “ மலர்களிலே அவன் மணம் கண்டேன்....”
-
3) தூக்குத்தூக்கி படத்தில் ஒரு அருமையான பாடல்.
“சுந்தரி சௌந்தரி நிரந்தரியே...”
-
4) கண்ணதாசன் இயற்றி விஸ்வநாதன்- ராமமூர்த்தி மெட்டமைத்த
ஏ.எல்.எஸ்- தயாரிப்பில் சாந்தி திரைப்படத்தில்,
”செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு சேதியை....”
பாடல் வரிகளின் முடிவில் அடி...அடி
என்று அதாவது ’வாசலில் வருவேனடி, வாழ்கெனச் சொல்வானடி...’
பெண்ணை முன்னிலைப் படுத்தி சிறப்பித்திருப்பார்.
ஒருவகை மிஸ்ர சிவரஞ்சனி ராகத்தில் அமைந்தது.
-
5) யானைப்பாகன் படத்தில் கோவை குமாரதேவன் எழுதிய
“பதினாறும் நிறையாத பருவ மங்கை காதல் பசியூட்டி
வசமாக்கும் ரதியின் தங்கை” ஹிந்துஸ்தானி யமன் ராகம்.
-
6) விஜயா கம்பைன்ஸ் எங்க வீட்டு பிள்ளை படத்தில் விஸ்வநாதன் -
ராமமூர்த்தி இசையப்பில் ஹிந்துஸ்தானி மால்குஞ்சி ராகத்தில்
உருவான ‘மலருக்குத்தென்றல் பகையானால்’ ஆலங்குடி சோமு
எழுதிய பாடல்.
-
7) வீரபாண்டிய கட்டபொம்மன்! ஜி.ராமநாதன் அருமையாக வழங்கி
இருக்கும், பி.பி.ஸ்ரீனிவாஸ் பி.சுசீலா இணைந்து பாடிய ‘இன்பம்
பொங்கும் வெண்ணிலா வீசுதே’
-
8) ஹிந்துஸ்தானி ஆசாபரி ராகத்தை அதிகமாக கையாண்டிருப்பார்கள்,
பிரபலப் படுத்தியுமிருப்பார்கள் மெல்லிசை மன்னர்கள்.
அந்த வகையில் கண்ணதாசன் எழுதி டி.எம்.எஸ், சுசீலா பாடிய
பச்சை விளக்கு படத்தில் வந்த
‘வாராதிருப்பாளோ வண்ணமலர் கன்னியவள்’ என்ற பாடல்.
ஷெனாய் வாத்தியம் பிரதானமாயிருக்கும். இதே ஜாடையில்
மற்றொரு பாடல் ‘கண்ணிலே அன்பிருந்தால்’ படித்த மனைவி
படம் என்று நினைக்கிறேன்.
-
9) விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையமைத்த ஒரே மாதிரி
மெட்டில் வரும்
’காதலாகினேன்...’ ‘தேன் மதுவை வண்டினம் தேடி வரும்..’
‘தேன்சுவை மேவும் செந்தமிழ் கீதம்...’ போன்ற வரிசையில்
மிஸ்ர பேஹாக் ராகத்தில் உத்தமபுத்திரன் படத்தில் பத்மினிக்காக
சுசீலா பாடிய ‘உன்னழகை கன்னியர்கள் கண்டதினாலே..’.
இயக்குனர் திலகம் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இயற்றி
ஜி.ராமநாதன் இசையமைப்பில் உருவான ஓர் அழகான பாடல்.
-
10) இளையராஜா ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் மிகவும் சிலாகித்துப்
பேசும் மெல்லிசை மன்னர்களது பாடல் ஒன்று உண்டு.
அது கண்ணதாசன் எழுதி ஹிந்துஸ்தானி-சந்திரகவுன்ஸ் ராகத்தில்
பாக்கியலக்ஷ்மி படத்தில் வரும், ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே...’
-
11) அடுத்து... மிஸ்ர திலங் ராகத்தில் அரங்கம் அதிரும்
தபேலா தரங்-கும், வீணை சிட்டிபாபுவின் வீணையும் இணைந்து
வரும் பஞ்சவர்ணக்கிளி படத்தில் வி.ரா. மெட்டமைத்த
’அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்..’
படத்தில் எல்.விஜயலக்ஷ்மியின் நடனம் அழகு.
-
12) டி.ஆர். ராமண்ணா தமது கூண்டுக்கிளி படத்துக்காக
பதிவு செய்த பாடல் இது. கே.வி. மகாதேவன் இசையமைத்தது.
விந்தன் எழுதி பாகேஸ்ஸ்ரீ ராகத்தில் அமைந்த
‘மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ...’ பாடல்,
அப்படத்தின் நீளம் கருதி எடுத்துவிட்டார்கள். பின்னர் ராமண்ணாவின்
மற்றொரு படமான ‘குலேபகாவலி’ படத்தில் இணைத்துவிட்டார்.
ஆனால் குலேபகாவலி படத்துக்கு இசையமைப்பு மெல்லிசைமன்னர்கள்.
ஆனால் அந்த நீரோட்டத்தில் கே.வி.மாகாதேவன் இசையமைத்த
இப்பாடலும் சேர்ந்து கொண்டது.
கே.வி.மகாதேவனும் பெருந்தன்மையாக இருந்துவிட்டார்.
அக்காலம் மேன்மக்கள் காலம்!!!!!
இப்பாடலுக்கு ஜி.வரலக்ஷ்மியின் வாயசைப்பு வேடிக்கையாயிருக்கும்.
உதடு கால் செண்டி மீட்டர் கூட பிரியாது.
-
13) பணம் படைத்தவன். இப்படத்தில் வரும்
‘மாணிக்கத்தொட்டில் இங்கிருக்க மன்னவன் மட்டும் அங்கிருக்க...’
ஹிந்துஸ்தானி- அஹிர்பைரவி ராகத்தில் வாலி எழுத
மெ.மன்னர்கள் மெட்டமைத்தது.
‘உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது..’ பாடலும்
இதே ராகத்தில் அமைந்தது.
-
14) ‘துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும்...’
படம் கல்யாணப் பரிசு , எழுதியது பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்,
இசை ஏ.எம்.ராஜா, பாடியவர்கள் ஏ.எம்.ராஜா - ஜிக்கி ஜோடி. ராகம்
யமனகல்யாணி.
-
15)ஹிந்துஸ்தானி ராகேஸ்ஸ்ரீ ராகத்தை அதிகம் பயன் படுத்தியது
எம்.எஸ்.வி அவர்கள்தான்.இந்தப் படத்திலும் அதே ராகத்தில்
பஞ்சு அருணாசலம் எழுதிய ‘பொன் எழில் பூத்தது புது வானில்...’
கலங்கரைவிளக்கம் படத்தில் டி.எம்.எஸ்-சுசீலா பாடிய
அற்புதமான பாடல்!
-
16) அகிலன் எழுதிய ‘சித்திரப்பாவை’ நாவலை , விஜயகோபால்
ஃபிலிம்ஸ், ‘பாவைவிளக்கு’ என்ற பெயரில் படமாக தயாரித்தார்கள்.
அதில் கே.வி.மகாதேவனின் இசையில் மருதகாசி எழுதி
சி.எஸ்.ஜெயராமன் - பி.சுசீலா பாடிய ‘காவியமா நெஞ்சின் ஓவியமா...’
-
17) ‘சின்னஞ்சிறு கிளியே...’ இதுக்கு மற்ற விபரங்கள்
தேவையில்லை.
-
--------------------------------
Last edited by rammalar on Thu 14 Aug 2014 - 18:42; edited 1 time in total
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Re: நான் ரசித்த திரைப்பட பாடல் வரிகள் - தொடர்பதிவு
நாளை வருவான் நாயகன் என்றே
நல்லோர்கள் சொன்னாரடி
நாளை வருவான் நாயகன் என்றே
நல்லோர்கள் சொன்னாரடி
நாயகன் தானும் ஓலை வடிவில்
என்னோடு வந்தானடி
ஆடை திருத்தி மாலைகள் தொடுத்து
வாசலில் வருவேனடி
ஆடை திருத்தி மாலைகள் தொடுத்து
வாசலில் வருவேனடி
மன்னவன் என்னை மார்பில் தழுவி
வாழ்கெனச் சொன்னானடி
வாழ்கெனச் சொன்னானடி
செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு
சேதியை நான் கேட்டேன் கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்
பாடலை நான் கேட்டேன்
எனக்கும் ரெம்ப பிடித்த வரிகள் மட்டுமல்ல பாடலும் கூட!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Re: நான் ரசித்த திரைப்பட பாடல் வரிகள் - தொடர்பதிவு
தாயில்லாமல் நானில்லை…
திரைப்படம் :அடிமைப்பெண்
பாடியவர் : டி.எம் .எஸ்
--
---------------------------------
தாயில்லாமல் நானில்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள் (தாயில்லாமல்)
ஜீவநதியாய் வருவாள்
என் தாகம் தீர்த்து மகிழ்வாள் (ஜீவநதியாய்)
தவறினைப் பொறுப்பாள்
தர்மத்தை வளர்ப்பாள்
தரணியிலே வளம் சேர்த்திடுவாள் (தவறினை)
தாயில்லாமல் நானில்லை
தூய நிலமாய் கிடப்பாள்
தன் தோளில் என்னை சுமப்பாள் (தூய)
தன்மையில்லாமல் நான் மிதித்தாலும் (2)
தாய்மையிலே மனம் கனிந்திடுவாள்
தாயில்லாமல் நானில்லை
மேக வீதியில் நடப்பாள்
உயிர் மூச்சினிலே கலந்திருப்பாள் (மேக)
மலைமுடி தொடுவாள், மலர்மணம் தருவாள்
மங்கள வாழ்வுக்கு துணையிருப்பாள் (மலைமுடி)
தாயில்லாமல் நானில்லை
ஆதி அந்தமும் அவள்தான்
நம்மை ஆளும் நீதியும் அவள்தான் (ஆதி)
அகந்தையை அழிப்பாள்
ஆற்றல் கொடுப்பாள்
அவள்தான் அன்னை மகா சக்தி
அந்த தாயில்லாமல் நானில்லை
தானே எவரும் பிறந்ததில்லை
என்க்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்
தாயில்லாமல் நானில்லை
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு
» திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு
» திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு
» எந்த திரைப்பட பாடல் வரிகள்..?
» தமிழ்(பழைய) திரைப்பட பாடல்...வரிகள்
» திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு
» திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு
» எந்த திரைப்பட பாடல் வரிகள்..?
» தமிழ்(பழைய) திரைப்பட பாடல்...வரிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|