சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

பேருந்தை ஓட்டும்போது டிரைவருக்கு மாரடைப்பு - பயணிகளைக் காப்பாற்றி உயிரிழந்த டிரைவர்! Khan11

பேருந்தை ஓட்டும்போது டிரைவருக்கு மாரடைப்பு - பயணிகளைக் காப்பாற்றி உயிரிழந்த டிரைவர்!

3 posters

Go down

பேருந்தை ஓட்டும்போது டிரைவருக்கு மாரடைப்பு - பயணிகளைக் காப்பாற்றி உயிரிழந்த டிரைவர்! Empty பேருந்தை ஓட்டும்போது டிரைவருக்கு மாரடைப்பு - பயணிகளைக் காப்பாற்றி உயிரிழந்த டிரைவர்!

Post by Nisha Sun 25 Jan 2015 - 15:18

தினமும், தங்களை மட்டுமே நம்பி பயணிக்க வரும் பயணிகளுக்கு எந்த வித ஆபத்தும் வராமல் கொண்டு செல்வது தான் ஓட்டுநர்களின் ஒரே எண்ணம். ஒரு நாள் கோயம்பேட்டில் இருந்து பெங்களுரு செல்லும் பேருந்தில் ஏறினேன் ,பஸ் புறப்படுவதற்கு இரண்டு நிமிடங்கள் முன், ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்த ஓட்டுனர் தீவிரமாக தனக்கு முன்பு இருந்த சாமி படங்களை வேண்டி கொண்டிருந்தார். பெங்களுருவில் இறங்குவதற்கு முன் அவரிடம், 'வண்டி எடுப்பதற்கு முன்னாடி அவ்வளவு நேரம்  ஏன் சாமி கும்பிட்டுகிட்டு இருந்தீங்க?' என்று கேட்டேன் .அவர் சிரித்தபடி "நமக்கு எந்நாளும் சரி, 'நம்மள நம்பி வர இத்தனை உயிரையும் ஒரு கீறல் கூட விழாம கொண்டுபோய்விடணும் முருகா'ன்னுதான் எப்பவும் வேண்டிப்பேன்" என்றார். அது அவ்வளவும் உண்மை.


பேருந்தை ஓட்டும்போது டிரைவருக்கு மாரடைப்பு - பயணிகளைக் காப்பாற்றி உயிரிழந்த டிரைவர்! Tbm_3


கடந்த 22-ம் தேதி (22-01-2014) , மறைமலை நகரில் இருந்து பொறியாளர்களை ஏற்றிக் கொண்டு தரமணியில் உள்ள  சாஃப்ட்வேர் நிறுவனம் நோக்கி  சென்று  பேருந்தை ஓட்டிக்கொண்டிருந்தார் ஆனந்தன்(31). அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட, வலி  சிறிது அதிகம் ஆனதுமே பேருந்தை இரும்புலியூரில் சாலை ஓரம் நிறுத்தி விட்டார். அது குளிர்சாதன பேருந்து என்பதால் பின்னால் அமர்ந்திருக்கும் ஊழியர்களுக்கு எதுவும் தெரியவில்லை .சிறிது நேரம் கழித்து அந்த வழியாக வந்த ஒரு நபர் ஆனந்தன் உயிருக்கு போராடுவதை அந்த பஸ்சில் அமர்ந்திருந்த ஊழியர்களுக்கு தெரிவித்திருக்கிறார்.  அங்கு இருந்த போக்குவரத்து காவல்துறையினர் வேறு ஓட்டுனர் முலம் பேருந்தை மருத்துவமனைக்கு எடுத்து செல்ல  ஏற்பாடு செய்தனர். ஆனால் ஆனந்தன் மருத்துவமனைக்கு செலும் வழியில் உயிரிழந்து விட்டார். உயிரிழந்த ஆனந்தனுக்கு, மனைவியும், 9 வயது பெண் குழந்தையும் இருக்கிறார்கள்.

பேருந்தை ஓட்டும்போது டிரைவருக்கு மாரடைப்பு - பயணிகளைக் காப்பாற்றி உயிரிழந்த டிரைவர்! Tbm_2


இந்த சம்பவத்தில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், ஆனந்தன் பேருந்தை நிறுத்திய இடத்தில் இருந்து வெறும் 5 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் செல்லக்கூடிய தொலைவில்தான் மருத்துவமனை அமைந்துள்ளது. அது மட்டும் இன்றி ஆனந்தன் பேருந்தை மிக கவனமாக சாலை ஓரம் நிறுத்தியதால் தான் அதில் பயணம் செய்த அனைவரும் சிறு காயங்கள் இல்லாமல் உயிர் தப்பி இருகின்றனர் .

இது குறித்து தாம்பரம் போக்குவரத்து காவல்துறையினர் கூறுகையில் "சம்பவம் நடந்த இடமான இரும்புலியூர் மிகவும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடம் .ஒரு வேளை ஆனந்தன் அந்த பேருந்தை நடுவழியில் நிறுத்தி இருந்தாலும் சரி, இல்லை வலியைப் பொறுத்துக்கொண்டு சிறிது தூரம் ஓட்டி இருந்தாலும் சரி கண்டிப்பாக அங்கு ஒரு மிகப்பெரிய விபத்து நடந்து இருக்கும். அவர் அந்த பேருந்தை சாலை ஓரம் கொண்டு வந்து நிறுத்தியதன் மூலம் ஒரு மிக பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது " என்று கூறினர் .

இதில் ஒரு சோகமான விஷயம் என்னவென்றால் இதை விபத்தாக பதிவு செய்யமுடியாது. அதனால் ஆனந்தனின் குடும்ப உறுப்பினர்களுக்கு காப்பீடு வழங்கப்பட வாய்ப்பில்லை

"ஆனந்தனை எனக்கு ஐந்து வருடங்களாக தெரியும். நான் வேலை செய்யும் அலுவலகத்தில் தான் பஸ் ஓட்டி கொண்டிருக்கிறார். இது வரை அவர் மீது எந்த புகாரும் வந்ததில்லை, வயதில் மிக சிறியவராகபேருந்தை ஓட்டும்போது டிரைவருக்கு மாரடைப்பு - பயணிகளைக் காப்பாற்றி உயிரிழந்த டிரைவர்! Tbm_4

இருந்தாலும், வேலையில் பொறுப்பானவர். இந்த சம்பவம் நடந்த பிறகு அலுவலகம் முழுவதும் ஆனந்தனின் பெயர் தான் ஒலித்து கொண்டிருகிறது. அவருடைய இறுதி ஊர்வலத்துக்கு சென்ற பொழுது, தன்னுடைய அப்பா இறந்து விட்டார் என்று என்று புரியாமல் விளையாடிக் கொண்டிருந்த அந்தக் குழந்தையின் முகம் தான் நெஞ்சில் இன்னும் நிற்கிறது. எங்களால் முடிந்த அளவு முயற்சி செய்து அவரின் குடும்பத்திற்கு உதவி செய்ய தீவிரமாக முயன்று வருகிறோம்" என்று அவரின் பேருந்தில் தினமும் பயணம் செய்யும் ஊழியரான அஷ்வின் கூறினர்.

ஆனந்தன் சிறிது முயற்சி செய்திருந்தால் கூட அருகில் இருந்த மருத்துவமனைக்கு பஸ்சை  ஓட்டி சென்று இருந்திருக்கலாம். ஆனால் தன்னை நம்பி அமர்ந்திருக்கும் நபர்களை எண்ணியதால்தான் பேருந்தை சாலை ஓரம் பத்திரமாக நிறுத்தி உள்ளார்.

அனந்தன் மட்டுமல்ல, இதே போல் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்ட்ரல் நோக்கி வந்து கொண்டிருந்த ரயிலின் ஓட்டுனர் மனோகர் (48), தனக்கு மார்பில் வலி ஏற்படுகிறது என்று தெரிந்ததும் ரயிலை மெயின் லைனில் இருந்து கொண்டு வந்து நிறுத்தி விட்டு, அவர் இருக்கையிலே இறந்து போனார். தங்களுக்கு என்று ஒரு குழந்தை, மனைவி, அப்பா, அம்மா என்று ஒரு உலகம் இருந்தாலும். அந்த ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்த பிறகு, அவர்களை நம்பி வந்திருக்கும் பயணிகள் தான் உலகம் என்ற கடமை உணர்வினால்  தான் பல இக்கட்டான சூழ்நிலையிலும், தங்களைப் பற்றி கவலைப்படாமல் பல உயிர்களைக் காப்பாற்றி உள்ளனர் .

அந்த நிறுவன ஊழியர் சொன்னது போல ஆனந்தன் ஒரு ஹீரோ இல்லை. அவர் அப்போது அந்த வழியாய் சென்று கொண்டிருந்த அனைவரையும் ஆபத்தில் இருந்து காப்பாற்றிய தேவதூதர்!



உயிர்போகும் நிலையிலும் பயணிகளைக் காக்க வேண்டும் என்று நினைத்த, டிரைவர் ஆனந்தனுக்கு சல்யூட்! 

 - கு.நெல்சன் மேத்தியூஸ் மதுரம் (விகடன் மாணவப் பத்திரிகையாளர்)


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பேருந்தை ஓட்டும்போது டிரைவருக்கு மாரடைப்பு - பயணிகளைக் காப்பாற்றி உயிரிழந்த டிரைவர்! Empty Re: பேருந்தை ஓட்டும்போது டிரைவருக்கு மாரடைப்பு - பயணிகளைக் காப்பாற்றி உயிரிழந்த டிரைவர்!

Post by சுறா Mon 26 Jan 2015 - 7:24

சட்டதிட்டங்களை ஏமாற்றி சுரண்டிப்பிழைக்கும் பலர் இருக்கிறார்கள் ஆனால் டிரைவர் இருக்கையில் இறந்தால் அதற்கு இன்சூரன்ஸ் பணம் கிடையாது என்பது என்ன பெரிய விதி. அதை தூக்கி எறியவேண்டும்.

அவரின் குடும்பத்திற்கு அரசாங்கமாவது ஏதாவது உதவித்தொகை தரவேண்டும் பாவம் அவர்கள்.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

பேருந்தை ஓட்டும்போது டிரைவருக்கு மாரடைப்பு - பயணிகளைக் காப்பாற்றி உயிரிழந்த டிரைவர்! Empty Re: பேருந்தை ஓட்டும்போது டிரைவருக்கு மாரடைப்பு - பயணிகளைக் காப்பாற்றி உயிரிழந்த டிரைவர்!

Post by Nisha Mon 26 Jan 2015 - 8:28

சுறா wrote:சட்டதிட்டங்களை ஏமாற்றி சுரண்டிப்பிழைக்கும் பலர் இருக்கிறார்கள் ஆனால் டிரைவர் இருக்கையில் இறந்தால் அதற்கு இன்சூரன்ஸ் பணம் கிடையாது என்பது என்ன பெரிய விதி. அதை தூக்கி எறியவேண்டும்.

அவரின் குடும்பத்திற்கு அரசாங்கமாவது ஏதாவது உதவித்தொகை தரவேண்டும் பாவம் அவர்கள்.

 ஆமாம், எங்காவது முட்டி மோதி நாலு பேர் உயிரை வாங்கி ஐந்து பேர் கால் கையை போக வைச்சிட்டு போய் சேர்ந்திருந்தால் தான் காப்புறுதி கிடைக்கும் எனில் இனிமேல் எல்லா சாரதிகளும் தம் உயிரை தான் பெரிதென மதிப்பர்!

தம் உயிர் போனாலும் பரவாயில்லை பயணிகளை காக்கணும் என நினைத்தவருக்குரிய இழப்பீட்டை தர ஆயிரம் சாக்கு சொல்லமுன்  அந்த குழந்தை முகம் கண்ட பின் கூடவா மனம் இரங்காமல் போகும்.


Last edited by Nisha on Tue 27 Jan 2015 - 12:10; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பேருந்தை ஓட்டும்போது டிரைவருக்கு மாரடைப்பு - பயணிகளைக் காப்பாற்றி உயிரிழந்த டிரைவர்! Empty Re: பேருந்தை ஓட்டும்போது டிரைவருக்கு மாரடைப்பு - பயணிகளைக் காப்பாற்றி உயிரிழந்த டிரைவர்!

Post by சுறா Mon 26 Jan 2015 - 8:41

இதையெல்லாம் நினைத்தால் அந்நியன் படம் தான் நினைவுக்கு வருகிறது.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

பேருந்தை ஓட்டும்போது டிரைவருக்கு மாரடைப்பு - பயணிகளைக் காப்பாற்றி உயிரிழந்த டிரைவர்! Empty Re: பேருந்தை ஓட்டும்போது டிரைவருக்கு மாரடைப்பு - பயணிகளைக் காப்பாற்றி உயிரிழந்த டிரைவர்!

Post by Nisha Mon 26 Jan 2015 - 9:03

அப்ப மாறிர வேண்டியது தான்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பேருந்தை ஓட்டும்போது டிரைவருக்கு மாரடைப்பு - பயணிகளைக் காப்பாற்றி உயிரிழந்த டிரைவர்! Empty Re: பேருந்தை ஓட்டும்போது டிரைவருக்கு மாரடைப்பு - பயணிகளைக் காப்பாற்றி உயிரிழந்த டிரைவர்!

Post by காயத்ரி வைத்தியநாதன் Tue 27 Jan 2015 - 9:53

சுறா wrote:இதையெல்லாம் நினைத்தால் அந்நியன் படம் தான் நினைவுக்கு வருகிறது.
உண்மைதான்..
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

பேருந்தை ஓட்டும்போது டிரைவருக்கு மாரடைப்பு - பயணிகளைக் காப்பாற்றி உயிரிழந்த டிரைவர்! Empty Re: பேருந்தை ஓட்டும்போது டிரைவருக்கு மாரடைப்பு - பயணிகளைக் காப்பாற்றி உயிரிழந்த டிரைவர்!

Post by காயத்ரி வைத்தியநாதன் Tue 27 Jan 2015 - 9:54

Nisha wrote:அப்ப மாறிர வேண்டியது தான்
ம்ம்..அப்படியே அந்நியன், ரமணான்னு 2 டீமா பிரிச்சு மாறிடுவோம்..:)
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

பேருந்தை ஓட்டும்போது டிரைவருக்கு மாரடைப்பு - பயணிகளைக் காப்பாற்றி உயிரிழந்த டிரைவர்! Empty Re: பேருந்தை ஓட்டும்போது டிரைவருக்கு மாரடைப்பு - பயணிகளைக் காப்பாற்றி உயிரிழந்த டிரைவர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum