சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

பெற்ற தாயை எதிரியாக நினைத்த மகள் Khan11

பெற்ற தாயை எதிரியாக நினைத்த மகள்

2 posters

Go down

பெற்ற தாயை எதிரியாக நினைத்த மகள் Empty பெற்ற தாயை எதிரியாக நினைத்த மகள்

Post by Nisha Mon 26 Jan 2015 - 1:17

விந்தியாவுக்கு வயது 45. பார்க்க அழகாகவும், இளமையாகவும் தெரிந்தார். நேர்த்தியாக அலங்காரமும் செய்திருந்தார். அவர் முகத்தில் மட்டும் சோகம் நிறைந்திருந்தது. தனது மகளையும் அழைத்து வந்திருந்தார். அவள் மன இறுக்கத்துடன் காணப்பட்டாள். இருவரும் முகம் கொடுத்து பேசிக்கொள்ளவில்லை. தாய்–மகள் இடையே சுமுக உறவு இல்லை என்பது அவர்கள் சொல்லாமலே தெரிந்தது. 

இருவரும் எதுவும் பேசாமல் மவுனம் காத்ததால் விந்தியாவின் மகளை வெளியே அனுப்பி வைத்து விட்டு அவரிடம் பேசினேன். 

தன் மகளே தனக்கு எதிரியாகி தன் வாழ்க்கையை நரகமாக்கி விட்டதாக கூறி விந்தியா வருத்தப்பட்டார். 

‘என்ன பிரச்சினை?’ என்று கேட்டேன். 

‘என் மகளுக்கு 22 வயதாகிறது. கல்லூரியில் படிக்கிறாள். சிறு வயதிலிருந்தே என் மீது அவளுக்கு பொறாமை உண்டு. அவள் என்னை விட நிறம் சற்று குறைவு. அதனால் எப்பொழுதும் என் மீது கோபமாக இருப்பாள்’ என்றார். 

மகள் மீது உப்பு சப்பில்லாத காரணங்களை கூறுகிறார் என்பதும், பிரச்சினைக்கு காரணம் அதுவல்ல என்பதும் அவர் பேச்சில் புரிந்தது. ‘உங்கள் வாழ்க்கையில் நடந்தது என்ன?’ என்று கேட்டேன். 

‘நான் ஒரு அலுவலகத்தில் வேலை பார்க்கிறேன். ஒரு மாதத்துக்கு முன்பு புதிதாக அதிகாரி ஒருவர் பணிக்கு சேர்ந்தார். அவர் மிகவும் திறமைசாலி. எப்படியோ எங்கள் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டு விட்டது. அவருடன் பழகியதும் பல வருடங்கள் கழித்து என் மனதில் ஒரு சந்தோஷம் துளிர்விட்டதை போல் உணர்ந்தேன். அதை முழுவதும் மனதில் உள்வாங்கிக் கொள்வதற்குள் என் மகள் எல்லாவற்றையும் கெடுத்து விட்டாள். என் சந்தோஷம் கெட்டது பெரிதில்லை. இப்பொழுது மிகப் பெரிய பிரச்சினையை வேறு உருவாக்கி விட்டாள்’ என்றாள். 

விந்தியாவுக்கும், அந்த அதிகாரிக்கும் இடையே அலுவலகத்தில் ஏற்பட்ட பழக்கம் வீடு வரை பின்தொடர்ந்திருக்கிறது. இருவரும் அடிக்கடி போனில் பேசியும், எஸ்.எம்.எஸ். அனுப்பியும் தங்களுக்குள் நெருக்கத்தை அதிகப்படுத்தி இருக்கிறார்கள்.  

‘அந்த அதிகாரி எனக்கு அனுப்பி இருந்த மெசேஜை என் மகள் பார்த்து விட்டாள். அதை என் கணவருக்கு தெரியப்படுத்தி எங்களுக்குள் பெரிய சிக்கலை ஏற்படுத்தி விட்டாள். அத்துடன் அந்த அதிகாரிக்கு போன் செய்து அவரை மிக கடுமையாக திட்டி விட்டாள். அதோடு அவருடைய மனைவிக்கும் இந்த விஷயத்தை தெரியப்படுத்தி விட்டாள். இப்பொழுது அவர் வீட்டிலும் பிரச்சினையாகி விட்டது’’ என்றார். 

‘தான் நடந்து கொண்ட விதம் தவறு என்பதை விட தன் மகளால்தான் இவ்வளவு பெரிய பூதாகரம் வெடித்து விட்டது’ என்பது போல் விந்தியா பேச்சு அமைந்தது. 

‘எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அந்த அதிகாரிக்கும், எனக்கும் இருந்த நெருக்கம் நிரந்தரமற்றது என்பது இருவருக்குமே நன்றாகவே தெரியும். நிச்சயம் எங்கள் இருவருடைய குடும்பங்களையும் எந்த விதத்திலும் பாதிக்காது என்று நினைத்திருந்தோம். ஆனால் இப்பொழுது என் மகளால் எல்லாமே பிரச்சினையாகி விட்டது’ என்று கலங்கினாள்.

அவருடைய மகளை அழைத்துப் பேசினேன். 

‘ஏன் இப்படி செய்தாய்?’ என்று கேட்டேன். 

‘என் தாயை ஏனோ எனக்கு பிடிக்காமல் போய்விட்டது. எப்படியாவது அவரை மாட்டி விட வேண்டும் என்று காத்திருந்தேன். இப்பொழுது தான் சந்தர்ப்பம் கிடைத்தது’ என்று சர்வ சாதாரணமாக சொன்னாள். 

‘ஒரு தவறு நடந்திருப்பது உண்மைதான். ஆனால் அதை இப்படி பெரிதுபடுத்தி இத்தனை பேர் வாழ்க்கையை பாதிக்க செய்து விட்டாயே? முதலில் நீ உன் தாயை கண்டித்திருக்கலாம். அப்பாவிடம் சொல்லி விடுவேன் என்று பயமுறுத்தியும் இருக்கலாம். அதையெல்லாம் விட்டு விட்டு இப்படி பல பேர் வாழ்க்கையில் மாற்ற முடியாத பிரச்சினைகளை உருவாக்குவது எவ்வளவு பெரிய தவறு என்பது உனக்கு தெரியவில்லையா?. ஒருவர் மீது நீ கொண்ட கோபத்தால் எத்தனை பேரின் நிம்மதி தொலைந்து போய் இருக்கிறது’ என்பதை அவளுக்கு விளக்கினேன்.

தொடர்ந்து அவளுக்கு கவுன்சலிங் கொடுக்கப்பட்டது. 

அதன்பிறகு தாயின் மீது அவளுக்கு இருந்த கோபம் படிப்படியாக குறைந்தது. தன் தவறை உணர்ந்தாள். தன் செயலுக்காக வருந்தினாள். 

விந்தியாவும் தானும் தவறு செய்து இருக்கிறேன் என்று கண்கலங்கினார். 

இப்போது தாயும் மகளும் அன்புடனும், நட்புடனும் இருக்கிறார்கள்.

வளர்ந்த பிள்ளைகள் முன்பு, தங்கள்நடவடிக்கைகள் குறை சொல்ல முடியாத வகையில் இருக்குமாறு பார்த்துக் கொள்வது பெற்றோருடைய கடமையாகும்.

–விஜயலட்சுமி பந்தையன்.
தினத்தந்தி 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பெற்ற தாயை எதிரியாக நினைத்த மகள் Empty Re: பெற்ற தாயை எதிரியாக நினைத்த மகள்

Post by Nisha Mon 26 Jan 2015 - 1:22

இதை குறித்த உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்!

இம்மாதிரி ஒரிரு சம்பவங்களால்  தான் ஆண் பெண் நட்பு என்றாலே அதில் களங்கமும் கள்ளமும் உண்டெனும் புரிதல் அதிகமாகின்றதோ?ஆணோ பெண்ணோ தனித்தனி பிரைவசி அவசியம். அந்த பிரைவசியை  பயன் படுத்துகின்றோம் எனும் பெயரில் தம்பெயரையே கெடுத்து கொள்ளும் பெண்களை என்ன  சொல்வது?

22 வயதில் மகளை வைத்த்திருக்கும் தாய்க்கு இதெல்லாம் தேவை தானா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பெற்ற தாயை எதிரியாக நினைத்த மகள் Empty Re: பெற்ற தாயை எதிரியாக நினைத்த மகள்

Post by சுறா Mon 26 Jan 2015 - 7:16

இவையனைத்தும் மனமுதிர்ச்சியின் வெளிப்பாடே காரணம் ஆகும். இருவருமே தவறிழைத்தவர்கள் தான். இருவருக்குமே கவுன்சிலிங் தேவை தான்.

வாழ்க்கையில் இதுபோன்ற சிக்கல்கள் நிறைந்த விசயங்கள் நிறைய உண்டு. மனமுதிர்ச்சியற்ற யாராவது ஒருவரால் அந்த குடும்பமே அவதிப்படுவதை நான் என் சொந்த அனுபவத்திலேயே பார்த்திருக்கிறேன்.

அருமையான பகிர்வு நிஷா


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

பெற்ற தாயை எதிரியாக நினைத்த மகள் Empty Re: பெற்ற தாயை எதிரியாக நினைத்த மகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum