Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
வாந்தி பேதி மருந்துகள்
3 posters
Page 1 of 1
வாந்தி பேதி மருந்துகள்
வாந்தி, பேதி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டவர்களை நம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்காமல் இருக்க முடியாது. வாந்தி என்றாலே, அது
90 சதவிகிதம் உணவுக்குழாய் பிரச்னை என்று அர்த்தம். 10 சதவிகித அளவுக்கு காய்ச்சல் நோயாளிகளுக்கும் மூளை சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும் வாந்தி வரலாம்.
வாந்தி என்பது என்ன?
உடலுக்கு ஒப்புக் கொள்ளாத, தேவையில்லாத விஷமான ஒன்றை இரைப்பைக்குள் உறிஞ்ச விடாமல், உணவுக்குழாய்க்குள் மேலும் கீழும் செல்லவிடாமல் தடுக்கும் ஓர் அற்புதமான தற்காப்பு செயலே! இது எத்தனை பேருக்குத் தெரியும்? அதனால்தான் சில வேளைகளில் வாந்தி எடுத்த பின், உபாதைகள் நீங்கி நலமாக ஆகிவிட்டது போல தோன்றும். வாந்தி நின்றுவிட்டாலே மருத்துவத்தையோ, மருத்துவரையோ தேட மாட்டார்கள். இதனால் வாந்தியை மீறி உணவுக்குழாய்க்குள் செல்லும் கிருமிகளோ, வேண்டாத உணவோ உணவுக்குழாயின் மற்றொரு நோயாக வயிற்றுப்போக்குப் பேதியை உருவாக்கும்.
இந்தியா போன்ற கோடை நாடுகளில் பயணத்தின் போது ஏற்படும் வைரஸ் கிருமிகளாலான Travaler’s Diarrhea சில வேளைகளில் தானாகவே நின்று விடும். பெரும்பாலான நேரங்களில் கையை சுத்தமாக கழுவாதவர்கள், சரியாகக் கழுவி பராமரிக்கப்படாத பாத்திரங்கள், சுகாதாரமற்ற உணவுத் தயாரிப்பு, காய்கறிகள், இறைச்சி, முறையாக தேக்கி வைத்து சுத்தமாக சமைக்கப் படாதது, சமைக்கப்பட்ட உணவு சுத்தமாக பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு பரிமாறப் படாதது, பரிமாறுபவர்களின் சுத்தம், சுகாதாரம் இல்லாமை என அனைத்து நிலைகளிலும் உணவில் கிருமிகள் கலக்கலாம்.
வாந்தியுடன் கூடிய பேதிக்கு வாந்தியை நிறுத்த Ondansetron மருந்துகள் வாந்தியின் போது தண்ணீர் இல்லாமலே வாயிலேயே கரையும் மருந்துகளாக, சொட்டு மருந்துகளாக, மாத்திரையாகக் கிடைக்கிறது. இந்த மருந்துகளை எடுத்து ஒரு மணி நேரம் எதுவும் எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் வாந்தி நின்று விடும். வாந்தி மட்டுமே இருந்தாலும் இம் மருந்தால் குணமானாலும் அடுத்து சில மணி நேரங்களில் வரப்போகும் பேதிக்காக மருத்துவரை அணுகி தேவையான மருந்துகளை உட்கொள்ள வேண்டியது அவசியம். வாந்தியுடன் திரவ உணவுகளை முழுங்க முடிந்து திட உணவுகளை முழுங்க முடியாமல் இருந்தால் உணவுக்குழாய் கேன்சராக இருக்கலாம்.
இரண்டு அல்லது மூன்று முறைக்கு மேல் நீராக ரத்தமின்றி, ரத்தமுடன் முழுமையாக ஜீரணமாகாத உணவுடன், வயிற்று வலியுடனோ வலி இல்லாமலோ பேதியானால் மருத்துவரை உடனே அணுகுவது நல்லது. காரணமே இல்லாது, ஒப்புக் கொள்ளாத உணவு அல்லது அதிகப்படியான உணவு காரணமாக ஏற்படும் வயிற்றுப்போக்கு இரு முறைக்கு மேல் இருந்தால் - வயிற்றுப்போக்கை நிறுத்தும் மருந்தை எடுத்து நன்றாக ஆகிவிட்டதுபோல ஓர் உணர்வு இருந்தால்கூட மருத்துவரிடம் சென்று நோய்க்கான காரணத்துக்கு மருந்துகள் வாங்குவது நல்லது.
காரணம்... பேதியாவதற்கு முக்கிய காரணிகளான வைரஸ், பாக்டீரியா, புரோட்டோசோவா, காளான் (Fungus), புழு (Worms) போன்ற கிருமிகள். குடல் அசைவைத் தடுக்கும் மருந்துகளை உட்கொண்டு பேதியாவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்தாலும் கூட, நோய் முற்றிய உடலில் நீர் இழந்த நிலையில் மருத்துவரை நாட வேண்டியது வரும். பேதியாவதற்கு மேலே கூறிய காரணங்களைத் தவிர பாலுக்கு ஒவ்வாமை (Lactose Intolerance) இருந்தாலும், அதிகமாக கிருமி மருந்துகளை உட்கொள்ளுவதாலும், மருந்துகளை அடிக்கடி உட்கொள்வ தாலும், குடலில் நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் கொல்லப்படுவதாலும், ஹைப்பர் தைராய்டிஸம் என்ற பிரச்னையாலும் குடல் கேன்சரினாலும் கூட பேதியாவது சகஜம். முதியவர்களுக்கு மலச்சிக்கலும் பேதியும் மாறி மாறி வருவதாக இருந்தால் குடல் கேன்சராக இருக்கலாம்.
பேதியாகும் போது கிருமிகள் தாக்கத்தால் குடலிலிருந்து நீர் வெளியேறுவதும், கிருமிகள் இருக்கும் இடங்களில் அப்போது குடல் சுருங்குவதால்
அதனால் ஏற்படும் வலியும், சிலவேளைகளில் ரத்தப்போக்கும், வயிற்றுப்போக்கின் நோய் அறிகுறிகளை விளக்குவதால் வெறும் பேதியை நிறுத்தும் மருந்தால் நோயிலிருந்து முழு நிவாரணம் அடைய முடியாது.
பேதி என்பது முழுக்க முழுக்க குடலிலிருந்து கிருமிகளின் தாக்கத்தால் நீர் வெளியேறுவது. அதனால் உடலிலிருந்து நீருடன் சில உப்புகளும் வெளியேறுவதுதான் உடலைப் பாதிக்கும் ஒரு முக்கியமான நோயின் தாக்கமாகும். அதனால், உடலுக்கு நீர் தருவது, தேவையான அளவு உப்புக்கரைசலுடன் தருவது (ORS Oral Rehydration Salts) மிக முக்கியமான சிகிச்சை. நம் மக்கள் பேதியோ, ஜுரமோ, பச்சைத் தண்ணீர் கூட பல்லிலே படாமல் இருந்தால் சரியாகி விடும் என்ற தவறான எண்ணத்தில் இருக்கின்றனர். பேதியாகும் போது எவ்வளவு நீர் வெளியேறுகிறதோ, அந்த அளவுக்கு வீட்டில் தயாரிக்கும் அளவான உப்புடன் தாராளமான அரிசி நொய் கஞ்சி எடுப்பது மிகச் சிறந்த மருந்தாகும். அதற்கு அடுத்தது புளிக்காத மோர், இளநீர், ளிஸிஷி பவுடர் கரைசல்கள், பழச்சாறு போன்றவையும் கொடுக்கலாம்.
இதற்குப் பிறகு மருத்துவரை அணுகும் முன், அவசரத்துக்கு பிரயாணத்தின் போது, மருத்துவர் பரிந்துரைக்கும் பேதியை நிறுத்தும் குடல் அசைவைத் தடுக்கும் மருந்துகளை (Anti Motlity Drugs) எடுத்துக் கொள்ளலாம். அது வேலை செய்யும் 6 - 8 மணி நேரத்துக்குள் மருத்துவரைச் சந்தித்து கிருமிகளுக்கான நீர் வெளியேற்றத்தைத் தடுக்கும் மருந்து எடுத்துக் கொள்வது அவசியம். பேதியை நிறுத்தும் மருந்துகளை அடுத்த வேளை பேதி இல்லாத போது எடுத்துக் கொண்டால் மலச்சிக்கலை உருவாக்கும். அடிக்கடி பேதியானால் மட்டுமே, மருத்துவர் பரிந்துரைக்கும் போது எடுத்துக் கொள்ளவும்.
15 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு இதை கொடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு கொடுக்கும் போது குடல் விரிந்துவிட (Paralytic Ileus) வாய்ப்பு இருக்கிறது. ஆகவே, இந்த மருந்துகளை கொடுக்க வேண்டாம். Loperamide, Codeine (Paralytic Ileus போன்ற மருந்துகளை குழந்தைகளுக்கு கண்டிப்பாக கொடுக்கக் கூடாது. மூத்த குடிமக்கள் 12 மணி நேரத்துக்கு ஒரு முறை தேவைப்பட்டால் மட்டுமே எடுத்துக் கொள்ளலாம். பேதி நின்றாலும் நோய் காரணிக்கான மருந்துகளை உட்கொள்வது, சில நேரங்களில் ஈரலில் ஏற்படும் சீழ் கட்டிகள் மற்றும் அப்பென்டிசைடிஸ் போன்ற அறுவை சிகிச்சை நோய்களுக்குக் கூட ஆரம்ப கட்ட வைத்தியத்தினால், மருந்தினால், அறுவை சிகிச்சை இல்லாமல் பூரண குணமாக வாய்ப்பு இருக்கிறது.
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3278
90 சதவிகிதம் உணவுக்குழாய் பிரச்னை என்று அர்த்தம். 10 சதவிகித அளவுக்கு காய்ச்சல் நோயாளிகளுக்கும் மூளை சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும் வாந்தி வரலாம்.
வாந்தி என்பது என்ன?
உடலுக்கு ஒப்புக் கொள்ளாத, தேவையில்லாத விஷமான ஒன்றை இரைப்பைக்குள் உறிஞ்ச விடாமல், உணவுக்குழாய்க்குள் மேலும் கீழும் செல்லவிடாமல் தடுக்கும் ஓர் அற்புதமான தற்காப்பு செயலே! இது எத்தனை பேருக்குத் தெரியும்? அதனால்தான் சில வேளைகளில் வாந்தி எடுத்த பின், உபாதைகள் நீங்கி நலமாக ஆகிவிட்டது போல தோன்றும். வாந்தி நின்றுவிட்டாலே மருத்துவத்தையோ, மருத்துவரையோ தேட மாட்டார்கள். இதனால் வாந்தியை மீறி உணவுக்குழாய்க்குள் செல்லும் கிருமிகளோ, வேண்டாத உணவோ உணவுக்குழாயின் மற்றொரு நோயாக வயிற்றுப்போக்குப் பேதியை உருவாக்கும்.
இந்தியா போன்ற கோடை நாடுகளில் பயணத்தின் போது ஏற்படும் வைரஸ் கிருமிகளாலான Travaler’s Diarrhea சில வேளைகளில் தானாகவே நின்று விடும். பெரும்பாலான நேரங்களில் கையை சுத்தமாக கழுவாதவர்கள், சரியாகக் கழுவி பராமரிக்கப்படாத பாத்திரங்கள், சுகாதாரமற்ற உணவுத் தயாரிப்பு, காய்கறிகள், இறைச்சி, முறையாக தேக்கி வைத்து சுத்தமாக சமைக்கப் படாதது, சமைக்கப்பட்ட உணவு சுத்தமாக பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு பரிமாறப் படாதது, பரிமாறுபவர்களின் சுத்தம், சுகாதாரம் இல்லாமை என அனைத்து நிலைகளிலும் உணவில் கிருமிகள் கலக்கலாம்.
வாந்தியுடன் கூடிய பேதிக்கு வாந்தியை நிறுத்த Ondansetron மருந்துகள் வாந்தியின் போது தண்ணீர் இல்லாமலே வாயிலேயே கரையும் மருந்துகளாக, சொட்டு மருந்துகளாக, மாத்திரையாகக் கிடைக்கிறது. இந்த மருந்துகளை எடுத்து ஒரு மணி நேரம் எதுவும் எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் வாந்தி நின்று விடும். வாந்தி மட்டுமே இருந்தாலும் இம் மருந்தால் குணமானாலும் அடுத்து சில மணி நேரங்களில் வரப்போகும் பேதிக்காக மருத்துவரை அணுகி தேவையான மருந்துகளை உட்கொள்ள வேண்டியது அவசியம். வாந்தியுடன் திரவ உணவுகளை முழுங்க முடிந்து திட உணவுகளை முழுங்க முடியாமல் இருந்தால் உணவுக்குழாய் கேன்சராக இருக்கலாம்.
இரண்டு அல்லது மூன்று முறைக்கு மேல் நீராக ரத்தமின்றி, ரத்தமுடன் முழுமையாக ஜீரணமாகாத உணவுடன், வயிற்று வலியுடனோ வலி இல்லாமலோ பேதியானால் மருத்துவரை உடனே அணுகுவது நல்லது. காரணமே இல்லாது, ஒப்புக் கொள்ளாத உணவு அல்லது அதிகப்படியான உணவு காரணமாக ஏற்படும் வயிற்றுப்போக்கு இரு முறைக்கு மேல் இருந்தால் - வயிற்றுப்போக்கை நிறுத்தும் மருந்தை எடுத்து நன்றாக ஆகிவிட்டதுபோல ஓர் உணர்வு இருந்தால்கூட மருத்துவரிடம் சென்று நோய்க்கான காரணத்துக்கு மருந்துகள் வாங்குவது நல்லது.
காரணம்... பேதியாவதற்கு முக்கிய காரணிகளான வைரஸ், பாக்டீரியா, புரோட்டோசோவா, காளான் (Fungus), புழு (Worms) போன்ற கிருமிகள். குடல் அசைவைத் தடுக்கும் மருந்துகளை உட்கொண்டு பேதியாவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்தாலும் கூட, நோய் முற்றிய உடலில் நீர் இழந்த நிலையில் மருத்துவரை நாட வேண்டியது வரும். பேதியாவதற்கு மேலே கூறிய காரணங்களைத் தவிர பாலுக்கு ஒவ்வாமை (Lactose Intolerance) இருந்தாலும், அதிகமாக கிருமி மருந்துகளை உட்கொள்ளுவதாலும், மருந்துகளை அடிக்கடி உட்கொள்வ தாலும், குடலில் நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் கொல்லப்படுவதாலும், ஹைப்பர் தைராய்டிஸம் என்ற பிரச்னையாலும் குடல் கேன்சரினாலும் கூட பேதியாவது சகஜம். முதியவர்களுக்கு மலச்சிக்கலும் பேதியும் மாறி மாறி வருவதாக இருந்தால் குடல் கேன்சராக இருக்கலாம்.
பேதியாகும் போது கிருமிகள் தாக்கத்தால் குடலிலிருந்து நீர் வெளியேறுவதும், கிருமிகள் இருக்கும் இடங்களில் அப்போது குடல் சுருங்குவதால்
அதனால் ஏற்படும் வலியும், சிலவேளைகளில் ரத்தப்போக்கும், வயிற்றுப்போக்கின் நோய் அறிகுறிகளை விளக்குவதால் வெறும் பேதியை நிறுத்தும் மருந்தால் நோயிலிருந்து முழு நிவாரணம் அடைய முடியாது.
பேதி என்பது முழுக்க முழுக்க குடலிலிருந்து கிருமிகளின் தாக்கத்தால் நீர் வெளியேறுவது. அதனால் உடலிலிருந்து நீருடன் சில உப்புகளும் வெளியேறுவதுதான் உடலைப் பாதிக்கும் ஒரு முக்கியமான நோயின் தாக்கமாகும். அதனால், உடலுக்கு நீர் தருவது, தேவையான அளவு உப்புக்கரைசலுடன் தருவது (ORS Oral Rehydration Salts) மிக முக்கியமான சிகிச்சை. நம் மக்கள் பேதியோ, ஜுரமோ, பச்சைத் தண்ணீர் கூட பல்லிலே படாமல் இருந்தால் சரியாகி விடும் என்ற தவறான எண்ணத்தில் இருக்கின்றனர். பேதியாகும் போது எவ்வளவு நீர் வெளியேறுகிறதோ, அந்த அளவுக்கு வீட்டில் தயாரிக்கும் அளவான உப்புடன் தாராளமான அரிசி நொய் கஞ்சி எடுப்பது மிகச் சிறந்த மருந்தாகும். அதற்கு அடுத்தது புளிக்காத மோர், இளநீர், ளிஸிஷி பவுடர் கரைசல்கள், பழச்சாறு போன்றவையும் கொடுக்கலாம்.
இதற்குப் பிறகு மருத்துவரை அணுகும் முன், அவசரத்துக்கு பிரயாணத்தின் போது, மருத்துவர் பரிந்துரைக்கும் பேதியை நிறுத்தும் குடல் அசைவைத் தடுக்கும் மருந்துகளை (Anti Motlity Drugs) எடுத்துக் கொள்ளலாம். அது வேலை செய்யும் 6 - 8 மணி நேரத்துக்குள் மருத்துவரைச் சந்தித்து கிருமிகளுக்கான நீர் வெளியேற்றத்தைத் தடுக்கும் மருந்து எடுத்துக் கொள்வது அவசியம். பேதியை நிறுத்தும் மருந்துகளை அடுத்த வேளை பேதி இல்லாத போது எடுத்துக் கொண்டால் மலச்சிக்கலை உருவாக்கும். அடிக்கடி பேதியானால் மட்டுமே, மருத்துவர் பரிந்துரைக்கும் போது எடுத்துக் கொள்ளவும்.
15 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு இதை கொடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு கொடுக்கும் போது குடல் விரிந்துவிட (Paralytic Ileus) வாய்ப்பு இருக்கிறது. ஆகவே, இந்த மருந்துகளை கொடுக்க வேண்டாம். Loperamide, Codeine (Paralytic Ileus போன்ற மருந்துகளை குழந்தைகளுக்கு கண்டிப்பாக கொடுக்கக் கூடாது. மூத்த குடிமக்கள் 12 மணி நேரத்துக்கு ஒரு முறை தேவைப்பட்டால் மட்டுமே எடுத்துக் கொள்ளலாம். பேதி நின்றாலும் நோய் காரணிக்கான மருந்துகளை உட்கொள்வது, சில நேரங்களில் ஈரலில் ஏற்படும் சீழ் கட்டிகள் மற்றும் அப்பென்டிசைடிஸ் போன்ற அறுவை சிகிச்சை நோய்களுக்குக் கூட ஆரம்ப கட்ட வைத்தியத்தினால், மருந்தினால், அறுவை சிகிச்சை இல்லாமல் பூரண குணமாக வாய்ப்பு இருக்கிறது.
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3278
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» வாந்தி, பேதி வராமல் தடுப்பூசி போடுங்க
» குழந்தைகளுக்கு வாந்தி நிற்க..
» சமையலறை மருந்துகள்! - 1
» அலர்ஜி மருந்துகள்!
» இதய நோய் மருந்துகள்
» குழந்தைகளுக்கு வாந்தி நிற்க..
» சமையலறை மருந்துகள்! - 1
» அலர்ஜி மருந்துகள்!
» இதய நோய் மருந்துகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|