Latest topics
» மீம்ஸ் - ரசித்தவைby rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
இறுதி இறைத்தூதரின் இனிய மொழிகள்
+4
நண்பன்
ahmad78
*சம்ஸ்
கமாலுதீன்
8 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இறுதி இறைத்தூதரின் இனிய மொழிகள்
தன் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத (கியாமத் நாளில்) ஏழு பேர்களுக்கு அல்லாஹ் தன் (அர்ஷின்) நிழலை வழங்குவான்.
1) நீதமான அரசர்.
2) இறைவணக்கத்தில் வாழ்ந்த வாலிபர்.
3) மஸ்ஜிதுகளுடன் இணைந்திருக்கும் உள்ளத்தையுடையவர்.
4) அல்லாஹ்விற்காக ஒருவரை ஒருவர் நேசிக்கும் இரண்டு மனிதர்கள். அந்நேசத்தின் மீதே ஒன்று சேர்ந்தார்கள். அந்நேசத்துடனேயே பிரிந்து சென்றார்கள்.
5) அந்தஸ்தும் அழகும் நிரம்பிய பெண் அவனை (விபச்சாரத்திற்கு) அழைத்த பொழுதும், "நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்" என் கூறும் (கற்புடைய) மனிதர்.
6) தன் வலக்கரம் செலவழிப்பதை இடக்கரம் அறியாத வண்ணம் (மறைமுகமாக) தர்மம் செய்பவர்.
7) தனிமையில் அல்லாஹ்வை நினைவு கூறி அதனால் இரு கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் மனிதர்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலியல்லாஹ்..)
நூல்: புஹாரி, முஸ்லிம்
1) நீதமான அரசர்.
2) இறைவணக்கத்தில் வாழ்ந்த வாலிபர்.
3) மஸ்ஜிதுகளுடன் இணைந்திருக்கும் உள்ளத்தையுடையவர்.
4) அல்லாஹ்விற்காக ஒருவரை ஒருவர் நேசிக்கும் இரண்டு மனிதர்கள். அந்நேசத்தின் மீதே ஒன்று சேர்ந்தார்கள். அந்நேசத்துடனேயே பிரிந்து சென்றார்கள்.
5) அந்தஸ்தும் அழகும் நிரம்பிய பெண் அவனை (விபச்சாரத்திற்கு) அழைத்த பொழுதும், "நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்" என் கூறும் (கற்புடைய) மனிதர்.
6) தன் வலக்கரம் செலவழிப்பதை இடக்கரம் அறியாத வண்ணம் (மறைமுகமாக) தர்மம் செய்பவர்.
7) தனிமையில் அல்லாஹ்வை நினைவு கூறி அதனால் இரு கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் மனிதர்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலியல்லாஹ்..)
நூல்: புஹாரி, முஸ்லிம்
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: இறுதி இறைத்தூதரின் இனிய மொழிகள்
இதில் நாமும் ஒருவராக இருக்க வல்ல ரஹ்மான் நமக்கு உதவிபுரிவானாக.ஆமீன்!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
இறுதி இறைத்தூதரின் இனிய மொழிகள்
*சம்ஸ் wrote:இதில் நாமும் ஒருவராக இருக்க வல்ல ரஹ்மான் நமக்கு உதவிபுரிவானாக.ஆமீன்!
ஆமீன் ஆமீன்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இறுதி இறைத்தூதரின் இனிய மொழிகள்
*சம்ஸ் wrote:இதில் நாமும் ஒருவராக இருக்க வல்ல ரஹ்மான் நமக்கு உதவிபுரிவானாக.ஆமீன்!
ஆமீன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நயவஞ்சகத் தன்மை
நான்கு குணங்கள் எவனிடத்தில் உள்ளனவோ அவன் நயவஞ்சகனாவான்.
அந்த நான்கு குணங்களில் ஒரு குணம் அவனிடம் குடி கொண்டிருந்தாலும் அவன் அதை விட்டுவிடும்வரை நயவஞ்சகத்தின் ஒரு குணம் அவனிடம் இருப்பதாகப் பொருள்.
அந்த நான்கு குணங்கள் இவைதாம்:
1)அவன் பேசும்போது பொய் பேசுவான்;
2)வாக்களித்தால் மாறு செய்வான்;
3)ஒப்பந்தம் செய்தால் மோசடி செய்வான்;
4)வழக்காடினால் அவமதிப்பான்.
(இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிபவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி).
நூல்: புஹாரி)
அந்த நான்கு குணங்களில் ஒரு குணம் அவனிடம் குடி கொண்டிருந்தாலும் அவன் அதை விட்டுவிடும்வரை நயவஞ்சகத்தின் ஒரு குணம் அவனிடம் இருப்பதாகப் பொருள்.
அந்த நான்கு குணங்கள் இவைதாம்:
1)அவன் பேசும்போது பொய் பேசுவான்;
2)வாக்களித்தால் மாறு செய்வான்;
3)ஒப்பந்தம் செய்தால் மோசடி செய்வான்;
4)வழக்காடினால் அவமதிப்பான்.
(இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிபவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி).
நூல்: புஹாரி)
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: இறுதி இறைத்தூதரின் இனிய மொழிகள்
இறைவன் நம்மைப் பாதுகாக்க வேண்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
செயல்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர்கள் கூறினார்கள்:
இறந்துபோனவரைப் பின்தொடர்ந்து மூன்று பொருட்கள் செல்கின்றன.
அவற்றில் இரண்டு திரும்பிவிடுகின்றன; ஒன்று மட்டுமே அவருடன் தங்கிவிடுகிறது.
அவரை அவருடைய குடும்பமும் செல்வமும் அவர் செய்த செயல்களும் பின்தொடர்ந்து செல்கின்றன.
(அவற்றில்) அவருடைய குடும்பமும் செல்வமும் திரும்பிவிடுகின்றன.
அவருடைய செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடுகின்றன.
அறிவிப்பாளர்: அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: இறுதி இறைத்தூதரின் இனிய மொழிகள்
வாழும் போதே நல்ல பல செயல்களைச் செய்து நாலு பேர் மனதில் நாமும் இடம் பிடிப்போம் நாளை மறுமைக்காய் அவர்கள் நமக்காக பிராத்திப்பார்கள்
நல்லதை நினைப்போம் நல்லதே நடக்கும் சிறந்த தொகுப்புக்கள் இன்னும் தொடருங்கள் சகோ...
நல்லதை நினைப்போம் நல்லதே நடக்கும் சிறந்த தொகுப்புக்கள் இன்னும் தொடருங்கள் சகோ...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இறுதி இறைத்தூதரின் இனிய மொழிகள்
நண்பன் wrote:வாழும் போதே நல்ல பல செயல்களைச் செய்து நாலு பேர் மனதில் நாமும் இடம் பிடிப்போம் நாளை மறுமைக்காய் அவர்கள் நமக்காக பிராத்திப்பார்கள்
நல்லதை நினைப்போம் நல்லதே நடக்கும் சிறந்த தொகுப்புக்கள் இன்னும் தொடருங்கள் சகோ...
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
நிலையான நற்செயல்கள்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பாளர்: ஆயிஷா(ரலி)
நூல்: புஹாரி
நேர்மையோடு (நடுநிலையாகச்) செயல்படுங்கள். நிதானமாகச் செயல்படுங்கள் (வரம்பு மீறிவிடாதீர்கள்).
அறிந்து கொள்ளுங்கள். உங்களில் யாரையும் அவரின் நற்செயல் சொர்க்கத்தில் ஒருபோதும் நுழைவிக்காது.
மாறாக, அல்லாஹ்வின் தனிப்பெரும் கருணையாலேயே எவரும் சொர்க்கம் புகமுடியும்.
நற்செயல்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது. (எண்ணிக்கையில்) மிகவும் குறைவாக இருந்தாலும், (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே ஆகும்.
அறிவிப்பாளர்: ஆயிஷா(ரலி)
நூல்: புஹாரி
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: இறுதி இறைத்தூதரின் இனிய மொழிகள்
உண்மைதான் மறுமையில் ஒருவரைக் கண்டு மற்றொருவர் விரண்டோடும் காலம் தனக்கு தான் செய்த நல்ல காரியங்கள் தன்னோடு கூட வரும்
நேர்மையோடு (நடுநிலையாகச்) செயல்படுங்கள். நிதானமாகச் செயல்படுங்கள் (வரம்பு மீறிவிடாதவர்கள்)
இவர்களை இறைவன் கண்ணியப்படுத்துவான் அந்தக்கூட்டத்தாருடன் இறைவன் எம்மையும் எழுப்புவானாக
எங்கள் உள்ளங்களைத் தூய்மைப் படுத்துவனாக ஆமீன்
நேர்மையோடு (நடுநிலையாகச்) செயல்படுங்கள். நிதானமாகச் செயல்படுங்கள் (வரம்பு மீறிவிடாதவர்கள்)
இவர்களை இறைவன் கண்ணியப்படுத்துவான் அந்தக்கூட்டத்தாருடன் இறைவன் எம்மையும் எழுப்புவானாக
எங்கள் உள்ளங்களைத் தூய்மைப் படுத்துவனாக ஆமீன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
அனாதைக் குழந்தைகளை ஆதரித்தல்
அனாதை குழந்தைகளின் பொறுப்புகளை ஏற்று ஆதரிப்பவனும் நானும் (இரண்டு விரல்களை காட்டி) சொர்க்கத்தில் இவ்வாறு இருப்போம் என்று திரு நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.
நூல்: முஸ்லீம்
நூல்: முஸ்லீம்
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: இறுதி இறைத்தூதரின் இனிய மொழிகள்
நபிகள் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
இந்த பதினான்கு விடயங்கள் நடந்துவிட்டால் மறுமை நாளை எதிர்பாருங்கள்
1 . பொதுச் சொத்தை தம் சொந்தப் பொருளைப் போல் ஆக்கிக் கொள்வார்கள் .
2 . அமானிதத்தை தம் பங்குக்கு கிடைத்த பொருளாக ஆக்கிக் கொள்வார்கள் .
3. ஜகாத்தை கொடுக்க மாட்டார்கள் . (கொடுப்பது அவர்களுக்கு சிரமமாக இருக்கும் )
4. மார்க்கக் கல்வியை உலக லாபத்திற்காக கற்பார்கள் .(பதவிக்காகவும் பொருளுக்காகவும் கற்பார்கள் )
5. கணவன் மனைவிக்கு கட்டுப்பட்டு நடப்பான் .
6. தாயை வேதனைப்படுத்துவான் .
7. நண்பனை அனைத்து விஷயங்களிலும் நெருக்கமாக்கிக் கொண்டு பெற்ற தந்தையை தூரமாக்கி விடுவான்.
8. பள்ளிவாசலில் உலக பேச்சுக்கள் அதிகமாகிவிடும்.
9 . பாவச் செயலில் ஈடுபட்டவன் அச்சமூகத்தின் தலைவனாவான்.
10 . இழிநிலையானவன் முக்கிய்மானவனாகக் கருதப்படுவான் .
11 . அடாவடித் தனத்திற்கு பயந்து அந்த மனிதனுக்கு மரியாதை செய்வார்கள் .
12 . ஆடல் பாடல்களில் ஈடுபடும் பெண்கள் , இசைக் கருவிகள் அதிகமாகிவிடும்.
13 . பலவகையான (பல பெயரில்) மதுபானங்கள் அருந்தப்படும் .
14 . காலத்தால் பிந்தியவன் முந்தைய சமுதாயத்தினரை பழிப்பார்கள் .
இந்த நிலைகள் ஏற்பட்டால் அனல் காற்றையும் பூமி அதிர்ச்சியையும், மனிதன் உருமாற்றபடுவதையும் , வானத்திலிருந்து கற்கள் எறியப்படுவதையும் எதிர்பாருங்கள் .
அறிவிப்பவர் :அபூஹுரைரா (ரலி )
நூல் :திர்மிதி
இந்த பதினான்கு விடயங்கள் நடந்துவிட்டால் மறுமை நாளை எதிர்பாருங்கள்
1 . பொதுச் சொத்தை தம் சொந்தப் பொருளைப் போல் ஆக்கிக் கொள்வார்கள் .
2 . அமானிதத்தை தம் பங்குக்கு கிடைத்த பொருளாக ஆக்கிக் கொள்வார்கள் .
3. ஜகாத்தை கொடுக்க மாட்டார்கள் . (கொடுப்பது அவர்களுக்கு சிரமமாக இருக்கும் )
4. மார்க்கக் கல்வியை உலக லாபத்திற்காக கற்பார்கள் .(பதவிக்காகவும் பொருளுக்காகவும் கற்பார்கள் )
5. கணவன் மனைவிக்கு கட்டுப்பட்டு நடப்பான் .
6. தாயை வேதனைப்படுத்துவான் .
7. நண்பனை அனைத்து விஷயங்களிலும் நெருக்கமாக்கிக் கொண்டு பெற்ற தந்தையை தூரமாக்கி விடுவான்.
8. பள்ளிவாசலில் உலக பேச்சுக்கள் அதிகமாகிவிடும்.
9 . பாவச் செயலில் ஈடுபட்டவன் அச்சமூகத்தின் தலைவனாவான்.
10 . இழிநிலையானவன் முக்கிய்மானவனாகக் கருதப்படுவான் .
11 . அடாவடித் தனத்திற்கு பயந்து அந்த மனிதனுக்கு மரியாதை செய்வார்கள் .
12 . ஆடல் பாடல்களில் ஈடுபடும் பெண்கள் , இசைக் கருவிகள் அதிகமாகிவிடும்.
13 . பலவகையான (பல பெயரில்) மதுபானங்கள் அருந்தப்படும் .
14 . காலத்தால் பிந்தியவன் முந்தைய சமுதாயத்தினரை பழிப்பார்கள் .
இந்த நிலைகள் ஏற்பட்டால் அனல் காற்றையும் பூமி அதிர்ச்சியையும், மனிதன் உருமாற்றபடுவதையும் , வானத்திலிருந்து கற்கள் எறியப்படுவதையும் எதிர்பாருங்கள் .
அறிவிப்பவர் :அபூஹுரைரா (ரலி )
நூல் :திர்மிதி
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: இறுதி இறைத்தூதரின் இனிய மொழிகள்
எம் அனைவரையும் இறைவன் பாதுகாத்து அருள் புரிய வேண்டும் வேதனை மிக்க அந்த நாளில் இறைவன் எம்மைப் பாதுகாக்க வேண்டும் ஆமீன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இறுதி இறைத்தூதரின் இனிய மொழிகள்
அந்த காலத்தில் நம் அனைவரையும் பாதுகாத்து அருள் புரிவானாக ஆமீன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இறுதி இறைத்தூதரின் இனிய மொழிகள்
இனிய மொழிகள்...
பகிர்வுக்கு நன்றி.
பகிர்வுக்கு நன்றி.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: இறுதி இறைத்தூதரின் இனிய மொழிகள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(ஸஹீஹுல் புகாரி)
மனிதர்கள் மீது கருணைகாட்டாதவனுக்கு அல்லாஹ் கருணை காட்டமாட்டான்.
(ஸஹீஹுல் புகாரி)
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: இறுதி இறைத்தூதரின் இனிய மொழிகள்
கமாலுதீன் wrote:அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.மனிதர்கள் மீது கருணைகாட்டாதவனுக்கு அல்லாஹ் கருணை காட்டமாட்டான்.
(ஸஹீஹுல் புகாரி)
உண்மையான கூற்று இரக்கம் காடுவோம் இரக்கம் காட்டப்படுவோம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இறுதி இறைத்தூதரின் இனிய மொழிகள்
"உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் அல்லது தம் அண்டை வீட்டாருக்கும் விரும்பாதவரைக்கும் அவர் (முழுமையான) இறைநம்பிக்கையாளர் ஆகமாட்டார்"
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல் : முஸ்லிம்
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல் : முஸ்லிம்
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: இறுதி இறைத்தூதரின் இனிய மொழிகள்
ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள், பிணங்கிக்கொள்ளாதீர்கள், (மாறாக) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். எந்த ஒரு முஸ்லிமும் தம் சகோதரனுடன் முன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரழி) நூல்: புஹாரி (4045).
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
பெற்றோருக்கு பணிவிடை செய்தல்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"மூக்கு மண்ணைக் கவ்வட்டும்; பிறகும் மூக்கு மண்ணைக் கவ் வட்டும்; பிறகும் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்'' என்று கூறினார்கள். "யார் (மூக்கு), அல்லாஹ்வின் தூதரே?'' என்று கேட்கப்பட்டது.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "தம் பெற்றோரில் ஒருவரையோ அல்லது அவர்கள் இருவரையுமோ முதுமைப் பருவத்தில் அடைந்தும் (அவர்களுக்கு உடலாலும் பொருளாலும் ஊழியம் செய்து, அதன் மூலம்) சொர்க்கம் செல்லத் தவறியவரின் (மூக்குத் தான்)'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) அவர்கள்
நூல்: முஸ்லிம் 4987
"மூக்கு மண்ணைக் கவ்வட்டும்; பிறகும் மூக்கு மண்ணைக் கவ் வட்டும்; பிறகும் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்'' என்று கூறினார்கள். "யார் (மூக்கு), அல்லாஹ்வின் தூதரே?'' என்று கேட்கப்பட்டது.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "தம் பெற்றோரில் ஒருவரையோ அல்லது அவர்கள் இருவரையுமோ முதுமைப் பருவத்தில் அடைந்தும் (அவர்களுக்கு உடலாலும் பொருளாலும் ஊழியம் செய்து, அதன் மூலம்) சொர்க்கம் செல்லத் தவறியவரின் (மூக்குத் தான்)'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) அவர்கள்
நூல்: முஸ்லிம் 4987
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: இறுதி இறைத்தூதரின் இனிய மொழிகள்
பெற்றவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேறச்செய்வோம் சிறந்த பதிவு
இறவைன் உங்களுக்கு நற்கூலி நல்கட்டும்
இறவைன் உங்களுக்கு நற்கூலி நல்கட்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இறுதி இறைத்தூதரின் இனிய மொழிகள்
நபி(ஸல்) அவர்கள் என்னிடம், ‘அப்துல்லாஹ்வே! நீர் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் நின்று வணங்குவதாக எனக்குக் கூறப்படுகிறதே!” என்று கேட்டார்கள். நான் ‘ஆம்! இறைத்தூதர் அவர்களே!” என்றேன். நபி(ஸல்) அவர்கள் ‘இனி அவ்வாறு செய்யாதீர்! (சில நாள்) நோன்பு வையும், (சில நாள்) விட்டுவிடும்! (சிறிது நேரம்) தொழும், (சிறிது நேரம்) உறங்கும்! ஏனெனில், உம் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன், உம் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன, உம் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன், உம் விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு இருக்கின்றன!
(அறிவித்தவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி)
நூல்: புகாரி 1974, 1975, 5199)
(அறிவித்தவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி)
நூல்: புகாரி 1974, 1975, 5199)
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இறுதி ஆசை...
» இறுதி ஆசை ,இறுதியிலும் ஆசை
» இறுதி நாள் நெருங்குகிறது
» நபி மொழிகள் சில..
» இறுதி நபியின் இறுதிப்பேருரை
» இறுதி ஆசை ,இறுதியிலும் ஆசை
» இறுதி நாள் நெருங்குகிறது
» நபி மொழிகள் சில..
» இறுதி நபியின் இறுதிப்பேருரை
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|