சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Today at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

சிறுவர்களுக்கான இராமாயணம் Khan11

சிறுவர்களுக்கான இராமாயணம்

Go down

சிறுவர்களுக்கான இராமாயணம் Empty சிறுவர்களுக்கான இராமாயணம்

Post by ராகவா Sun 26 Apr 2015 - 14:04

சிறுவர்களுக்கான இராமாயணம் Ramayana
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், இராவணன் என்ற அரக்கன் மூன்று உலகங்களையும் (விண்ணுலகம், மண்ணுலகம், பாதாள உலகம் ) ஆட்சி செய்து வந்தான். அவனுக்கு ஒரு தலை அல்ல, இரு தலை அல்ல, பத்துத் தலைகள் இருந்தன. அதனால் அவனுக்குப் பத்துத் தலை இராவணன் என்று பெயர். அந்தக் காலத்தில், மேல் உலகமான சொர்க்கத்தில் தேவர்களும், பூலோகத்தில் மனிதர்களும், பாதாள உலகத்தில் கொடிய அரக்கர்களும் வாழ்ந்து வந்தார்கள்.
ஆனால், மிகவும் கொடிய அரக்கனாகிய இராவணன், பிரம்மா தேவரிடம் இருந்து பெற்ற வரத்தின் பயனாக அதிசய சக்திகள் பெற்று, மூன்று உலகங்களையும் கைப்பற்றிக்கொண்டான். இலங்கைக்கு அரசனாக இருந்த குபேரனை அடித்து விரட்டி விட்டு, இலங்கையைக் கைப்பற்றினான். நினைத்த இடத்துக்கு வானத்தில் பறந்து செல்ல உதவும் புஷ்பக விமானம் குபேரனிடம் இருந்தது. அதை இராவணன் கைப்பற்றிக்கொண்டான். அழகிய தீவான இலங்கையில் தனது பெரிய கோட்டையைக் கட்டிக்கொண்டு, மூன்று உலகங்களையும் ஆட்சி செய்தான்.
இராவணன் மிகவும் கொடூரமான அரக்கன். மாய சக்திகள் நிறைந்தவன். நினைத்த நேரத்தில் பலவிதமான உருவங்களை எடுக்கக் கூடியவன். அவனுடைய ஆட்சியில், தேவர்களும், மனிதர்களும் பட்ட துயரங்களுக்குக் கணக்கே இல்லை. தேவர்கள் எல்லாரும் இராவணனுக்கு அடிமைகளாகி, அவனது அரண்மனையில் வேலை செய்தார்கள்.
அக்கினி தேவன் சமையல் வேலையையும், வாயு தேவன் அரண்மனையைக் கூட்டிச் சுத்தம் செய்யும் வேலையையும், வருண பகவான் தண்ணீர் வழங்கும் வேலையையும், குபேரன் செல்வத்தைக் கணக்கு வைக்கும் வேலையையும் செய்து வந்தார்கள். கடவுளின் பக்தர்களையும், முனிவர்களையும் இராவணனின் அரக்கர்கள் கொன்று குவித்தார்கள். பல அரசர்களைக் கொன்று, அவர்களின் செல்வங்களை எல்லாம் கொள்ளையடித்தார்கள்.
மிகவும் கொடிய அரக்கனாகிய இராவணனுக்கு நான்கு தம்பிகள். விபீஷணன், கும்பகருணன், கரன், தூஷணன். சூர்ப்பனகை என்ற அரக்கி ஒரே தங்கை. இராவணனுக்குப் பல மனைவிகள் இருந்தார்கள். அவர்களில், மண்டோதரி என்பவள் சிறந்த அழகியாக விளங்கினாள். அவளே பட்டத்து ராணியாக இருந்தாள்.
இராவணனின் கொடுமைகளால் பூவுலகம் நடுங்கியது. பூமியின் தேவதையான பூமாதேவி தனது மக்களின் கஷ்டங்களைக் கண்டு மனம் கலங்கினாள். அவள் ஒரு பசுவின் உருவத்தில் பிரம்ம லோகத்துக்குச் சென்றாள். பிரம்ம தேவரைப் பார்த்துக் கண்ணீர் விட்டு அழுதாள்.
"சகல உலகங்களையும், அதில் வாழும் எல்லா உயிர்களையும் படைக்கும் பிரம்ம தேவரே, உமது படைப்பான இராவணனின் கொடுமைகளால் தேவர்களும், பூவுலக மக்களும் அனுபவிக்கும் கஷ்டங்களுக்கு அளவேயில்லை. இவர்களைக் காப்பாற்ற யாருமே இல்லையா? " என்று கேட்டாள்.
அவளது துயரத்தைக் கண்டு பிரம்ம தேவர் மனம் இரங்கினார். " மகளே, உனது துயரம் எனக்குப் புரிகிறது. ஆனால், இராவணனுக்குச் சக்தி வாய்ந்த வரங்களைக் கொடுத்ததே நான்தான். அந்த வரங்களின்படி, தேவர்களால் அவனுக்கு மரணம் ஏற்படாது. ஆகவே,சகல உலகங்களையும் காக்கும் கடவுளாகிய ஸ்ரீ நாராயணராகிய மகா விஷ்ணுவிடம் சென்று நமது குறைகளைச் சொல்வோம். அவர் நிச்சயம் நம்மையெல்லாம் காப்பாற்றுவார்" என்றார்.
அதன்பின், பிரம்ம தேவரும், பூமா தேவியும், ஏனைய தேவர்களும் வைகுண்ட லோகம் சென்று மகா விஷ்ணுவின் தரிசனத்துக்காகக் காத்திருந்தார்கள்.
அப்போது, ஒரு கோடி சூரியர்களின் பிரகாசத்துடன், தமது கருட வாகனத்தில் அமர்ந்து, மிக அழகிய தோற்றத்துடன், ஸ்ரீ நாராயணராகிய மகா விஷ்ணு கிழக்குத் திசையில் தோன்றினார்.
பிரம்ம தேவரும், பூமாதேவியும், ஏனைய தேவர்களும் அவரைப் பக்தியுடன் வணங்கினார்கள். மகா விஷ்ணுவின் புகழைக் கூறும் பாடல்களைப் பக்திப் பரவசத்துடன் பாடினார்கள். " ஓம் நமோ நாராயணாய நமோ " என்று போற்றி வணங்கினார்கள்.
மகா விஷ்ணு அவர்களை அன்புடன் பார்த்தார். " எனது அருமைப் பிள்ளைகளே, உண்மையான அன்புடனும், பக்தியுடனும் என்னைப் பார்க்க வந்திருக்கின்றீர்கள். உங்களைப் பார்க்கும்போது நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். ஆனால், உங்கள் முகங்களில் மகிழ்ச்சியே இல்லையே. ஏன் எல்லாரும் கவலையுடன் காணப்படுகின்றீர்கள் ? " என்று அன்புடன் கேட்டார்.
பிரம்ம தேவர் அவரை வணங்கிப் பேசத் தொடங்கினார். " எல்லா உலகங்களையும், எல்லா உயிர்களையும் காத்து ரட்சிக்கும் இறைவா, எங்கும் நிறைந்திருக்கும் கடவுளாகிய உமக்கு எங்கள் துயரங்கள் தெரியும். ஆயினும் சொல்கிறேன். பூவுலகில் இராவணனின் கொடுமைகள் பெருகி விட்டன.
மூன்று உலகங்களையும் தனக்கு அடிமைப் படுத்திக் கொண்டு, எல்லாரையும் துன்பப்படுத்துகின்றான். தேவர்கள் பலர் இராவணனுக்கு அடிமைகளாகி, நாள் முழுவதும் துன்பப் படுகின்றார்கள். இராவணனுடைய அரக்கர்கள் பூலோகம் எங்கும் நிறைந்து, பூலோகத்தையே நாசமாக்குகின்றார்கள். இந்த நிலை தொடருமானால், இன்னும் சில நாட்களில், பூவுலகில் மனிதர்களே இருக்க மாட்டார்கள். எங்கும் அரக்கர்களே நிறைந்து விடுவார்கள். எங்கள் துன்பத்தைத் துடைத்து, நீங்கள்தான் எங்களைக் காப்பாற்ற வேண்டும் " என்று கூறினார்.
மகா விஷ்ணு அவரைப் பார்த்து அன்புடன் சிரித்தார்.
"பிரம்ம தேவரே, இராவணன் தங்களிடமிருந்து பெற்ற வரங்களின் உதவியுடன்தான் இக் கொடுமைகளையெல்லாம் செய்வதாக அறிகின்றேன். அவை என்ன வரங்கள் ? " என்று கேட்டார்.
"இறைவா, இராவணன் ஒற்றைக்காலில் நின்று பல வருடங்கள் தவம் செய்தான். அவனது தவத்தைக்கண்டு மனம் இரங்கிய நான், அவனுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டேன். ' மூன்று உலகங்களிலும், தேவர்களாலும், அரக்கர்களாலும் தனக்கு மரணம் நேரிடக்கூடாது' என்னும் வரத்தை அவன் கேட்டுப் பெற்றுக் கொண்டான்" என்று பிரம்ம தேவர் கூறினார்.
புன்சிரிப்புடன் கேட்டுக்கொண்டிருந்த மகா விஷ்ணு, ஒரு கணம் சிந்தித்தார். பின்னர், பிரம்ம தேவரைப் பார்த்துக் கேட்டார், "பிரம்ம தேவரே, மனிதரால் தனக்கு மரணம் நேரிடக்கூடாது என்று அவன் ஏன் கேட்கவில்லை?"
"இறைவா, இராவணன் ஆணவம் மிக்கவன். மனிதர்களை வெறும் பூச்சிகளாகவே நினைக்கிறான். அளவற்ற சக்திகள் நிறைந்த தன்னை எந்த மனிதனாலும் கொல்ல முடியாது என்று அவன் நினைக்கிறான்" என்றார் பிரம்ம தேவர்.
மகா விஷ்ணு அழகாகச் சிரித்தார்.
"பிரம்ம தேவரே, இராவணன் தனது ஆணவத்தால் தனக்கே அழிவைத் தேடிக் கொள்கிறான். அவன் வெறும் பூச்சிகளைவிடக் கேவலமாக நினைக்கும் மனிதர்களாலேயே அவனுக்கு அழிவு ஏற்படப்போகிறது" என்றார்.
"அது எப்படி, இறைவா ?" என்று பூமித்தாய் கேட்டாள்.
"பூமித்தாயே, கவலைப்படாதே. கொடியவனாகிய இராவணனைக் கொல்வதற்காக நானே பூவுலகில் மனிதனாகப் பிறக்கத் தீர்மானித்து விட்டேன். பாரத தேசத்திலே, கோசல நாட்டு மன்னனாகிய தசரதன் பிள்ளைகள் இல்லாததால், புத்திர காமேஷ்டி யாகம் செய்கிறான். நான் அவனுக்கு மகனாகப் பிறந்து, உங்கள் கண்ணீரைத் துடைப்பேன். இது உறுதி" என்று கூறினார்.
பிரம்ம தேவரும், பூமாதேவியும், ஏனைய தேவர்களும் மகா விஷ்ணுவுக்கு நன்றிகூறி மீண்டும் வணங்கினார்கள்.
* * *
அதே வேளையில், பாரத தேசத்திலே, கோசல நாட்டின் தலைநகரான அயோத்தியிலே, தசரத மன்னரின் அரண்மனையில் அந்த நாட்டு மக்கள் கூட்டம் நிறைந்திருந்தது.
அரண்மனை விழாக்கோலம் கொண்டிருந்தது. பெரும் முனிவரான ரிஷ்ய சிருங்கரின் தலைமையில், பல முனிவர்கள் சேர்ந்து அரண்மனை முற்றத்தில் யாக நெருப்பு வளர்த்துப் பூஜைகள் செய்துகொண்டிருந்தார்கள். அந்த நெருப்பு எரியும் யாக குண்டத்தில் தசரத மன்னர் நெய்யை ஊற்ற , முனிவர்கள் மந்திரங்களை ஓதினார்கள். மன்னருக்குப் பிள்ளை வரம் தர வேண்டும் என்று இறைவனை வேண்டினார்கள்.
அப்போது.....
யாக நெருப்பிலிருந்து, ஒளிமயமான ஒரு தேவர் தோன்றினார். அவரது கரங்களிலே ஒரு தங்கக் கிண்ணம் இருந்தது.
அந்தக் கிண்ணத்திலே, இனிமையான அமுதம் இருந்தது. அந்த அமுதம் அபூர்வ சக்திகள் நிறைந்தது. அந்தக் கிண்ணத்தைத் தசரத மன்னரிடம் கொடுத்து, அவர் பேசத் தொடங்கினார்.
அவர் சொன்ன விஷயம்.............
அடுத்த அத்தியாயத்திலே தொடரும்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum