Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்by rammalar Today at 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
ஏ. பி. ஜே. அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு
2 posters
Page 1 of 1
ஏ. பி. ஜே. அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு
இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி மேலும் தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள்.
பிறப்பு: அக்டோபர் 15, 1931
இடம்: இராமேஸ்வரம் (தமிழ் நாடு)
பிறப்பு:
1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் ஒரூ இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.
இளமைப் பருவம்:
அப்துல் கலாம், இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கினார். ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே இவர் தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்குச் சென்றார். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார். இவருடைய பள்ளிப்பருவத்தில் இவர் ஒரு சராசரி மாணவனாகவே வளர்ந்தார்.
கல்லூரி வாழ்க்கை:
தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சிராப்பள்ளியிலுள்ள “செயின்ட் ஜோசப் கல்லூரியில்” இயற்பியல் பயின்றார். 1954ஆம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்த இவர், 1955 ஆம் ஆண்டு தன்னுடைய “விண்வெளி பொறியில் படிப்பை” சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
விஞ்ஞானியாக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:
1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது. இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது. 1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அவர், அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.
குடியரசுத் தலைவராக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:
2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மேலும், “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு குடியரசுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம், பிறகு பல காரணங்களால் அந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு செய்து விலகினார்.
விருதுகள்:
1981 – பத்ம பூஷன்
1990 – பத்ம விபூஷன்
1997 – பாரத ரத்னா
1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது
1998 – வீர் சவர்கார் விருது
2000 – ராமானுஜன் விருது
2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்
2007 – கிங் சார்லஸ்-II பட்டம்
2008 – பொறியியல் டாக்டர் பட்டம்
2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது
2009 – ஹூவர் மெடல்
2010 – பொறியியல் டாக்டர் பட்டம்
2012 – சட்டங்களின் டாக்டர்
2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது
ஏ.பி.ஜே அப்துல் கலாம் எழுதிய நூல்கள்:
அக்னி சிறகுகள்
இந்தியா 2012
எழுச்சி தீபங்கள்
அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை
இறுதிவரைக்கும் பிரம்மச்சாரியாக வாழ்ந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் எளிமையான வாழ்க்கையும், அவரது இனிமையான பேச்சும் எல்லோரையும் கவர்ந்தது என்றால் வியப்பில்லை. ‘எதிர்கால இந்திய இளைஞர்கள் கையில்’ என்ற அவர் “கனவு காணுங்கள்! அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள்” என்னும் வாக்கியத்தை இளைஞர்களின் மனதில் வேரூன்ற செய்தவர்.
உலகம் போற்றும் விஞ்ஞானியான கலாம் தன்னுடைய பொன்மொழிகளாலும், கவிதைகளாலும், வாசகங்களாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
நன்றி ; இத்ச்டமில் .கம (தளம் )
பிறப்பு: அக்டோபர் 15, 1931
இடம்: இராமேஸ்வரம் (தமிழ் நாடு)
பிறப்பு:
1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் ஒரூ இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.
இளமைப் பருவம்:
அப்துல் கலாம், இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கினார். ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே இவர் தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்குச் சென்றார். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார். இவருடைய பள்ளிப்பருவத்தில் இவர் ஒரு சராசரி மாணவனாகவே வளர்ந்தார்.
கல்லூரி வாழ்க்கை:
தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சிராப்பள்ளியிலுள்ள “செயின்ட் ஜோசப் கல்லூரியில்” இயற்பியல் பயின்றார். 1954ஆம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்த இவர், 1955 ஆம் ஆண்டு தன்னுடைய “விண்வெளி பொறியில் படிப்பை” சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
விஞ்ஞானியாக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:
1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது. இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது. 1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அவர், அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.
குடியரசுத் தலைவராக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:
2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மேலும், “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு குடியரசுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம், பிறகு பல காரணங்களால் அந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு செய்து விலகினார்.
விருதுகள்:
1981 – பத்ம பூஷன்
1990 – பத்ம விபூஷன்
1997 – பாரத ரத்னா
1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது
1998 – வீர் சவர்கார் விருது
2000 – ராமானுஜன் விருது
2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்
2007 – கிங் சார்லஸ்-II பட்டம்
2008 – பொறியியல் டாக்டர் பட்டம்
2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது
2009 – ஹூவர் மெடல்
2010 – பொறியியல் டாக்டர் பட்டம்
2012 – சட்டங்களின் டாக்டர்
2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது
ஏ.பி.ஜே அப்துல் கலாம் எழுதிய நூல்கள்:
அக்னி சிறகுகள்
இந்தியா 2012
எழுச்சி தீபங்கள்
அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை
இறுதிவரைக்கும் பிரம்மச்சாரியாக வாழ்ந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் எளிமையான வாழ்க்கையும், அவரது இனிமையான பேச்சும் எல்லோரையும் கவர்ந்தது என்றால் வியப்பில்லை. ‘எதிர்கால இந்திய இளைஞர்கள் கையில்’ என்ற அவர் “கனவு காணுங்கள்! அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள்” என்னும் வாக்கியத்தை இளைஞர்களின் மனதில் வேரூன்ற செய்தவர்.
உலகம் போற்றும் விஞ்ஞானியான கலாம் தன்னுடைய பொன்மொழிகளாலும், கவிதைகளாலும், வாசகங்களாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
நன்றி ; இத்ச்டமில் .கம (தளம் )
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஏ. பி. ஜே. அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு
அப்துல் கலாம் சைவப் பிரியராக மாறியது எப்படி
திருச்சியில் உள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரியில் அரசின் கல்வி உதவித்தொகை மூலம் அப்துல் கலாம் இயற்பியல் படித்துவந்த வேளையில் குடும்ப வறுமையால் அந்த உதவித் தொகையை மட்டும் வைத்தே வாழ்க்கையை நடத்த வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது.
எனவே, அதிகம் செலவாகும் என்பதால் அவர் அசைவ உணவு உண்பதை தவிர்த்தார். பின்னாளில், அவருக்கு சைவமே மிகவும் பிடித்துப்போனதால், கடைசிவரை சைவப் பிரியராகவே இருந்து விட்டார்.
கலாம் அவரது அம்மா ஆஷியம்மாவின் செல்லப் பிள்ளையாக இருந்தவர், அவ்வப்போது அம்மாவுடன் சமையலறையிலேயே உணவு உண்ணும் வழக்கம் அவருக்கு இருந்தது. வாழை இலையில் அம்மா பரிமாறும் சாம்பார் சாதமும், தேங்காய் சட்டினியும் அவருக்கு மிகவும் பிடித்தமான உணவாக இருந்துள்ளது.
இதுதவிர, பிரபல ஐய்யங்கார் வகை உணவுகளான புளியோதரை, வெந்தயக் குழம்பு போன்றவற்றின் சுவைக்கு இவர் மனதைப் பறிகொடுத்தார். தனது சைவ உணவுத் தேர்வு தொடர்பாக கூறும்போது, ‘காய்கறிகளால் ஆன எதையேனும் சூடாக கொடுத்தாலே போதும்.
அதைக்கொண்டே காலத்தை கடத்தி விடுவேன்’ என தெரிவித்தார். கல்லூரி காலத்தில் எப்போதாவது ’பண்டிகை விருந்து’ போல் அவர் உண்ட அசைவ உணவு ‘கேரள புரோட்டாவும், முட்டை மாசாலாவும்’ என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவிலிருந்து, கேரளா வரை வெவ்வேறு இடங்களில் பணிக்காக செல்ல வேண்டியிருந்தபோது, தமிழக உணவு வகைகளுக்காக சமையலுக்கு ஏங்கியவராய் தனது இளமைக் காலத்தில் நெடுந்தூரம் பயணித்திருக்கிறார், கலாம்.
நன்றி ஜேவி பி தளம்
திருச்சியில் உள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரியில் அரசின் கல்வி உதவித்தொகை மூலம் அப்துல் கலாம் இயற்பியல் படித்துவந்த வேளையில் குடும்ப வறுமையால் அந்த உதவித் தொகையை மட்டும் வைத்தே வாழ்க்கையை நடத்த வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது.
எனவே, அதிகம் செலவாகும் என்பதால் அவர் அசைவ உணவு உண்பதை தவிர்த்தார். பின்னாளில், அவருக்கு சைவமே மிகவும் பிடித்துப்போனதால், கடைசிவரை சைவப் பிரியராகவே இருந்து விட்டார்.
கலாம் அவரது அம்மா ஆஷியம்மாவின் செல்லப் பிள்ளையாக இருந்தவர், அவ்வப்போது அம்மாவுடன் சமையலறையிலேயே உணவு உண்ணும் வழக்கம் அவருக்கு இருந்தது. வாழை இலையில் அம்மா பரிமாறும் சாம்பார் சாதமும், தேங்காய் சட்டினியும் அவருக்கு மிகவும் பிடித்தமான உணவாக இருந்துள்ளது.
இதுதவிர, பிரபல ஐய்யங்கார் வகை உணவுகளான புளியோதரை, வெந்தயக் குழம்பு போன்றவற்றின் சுவைக்கு இவர் மனதைப் பறிகொடுத்தார். தனது சைவ உணவுத் தேர்வு தொடர்பாக கூறும்போது, ‘காய்கறிகளால் ஆன எதையேனும் சூடாக கொடுத்தாலே போதும்.
அதைக்கொண்டே காலத்தை கடத்தி விடுவேன்’ என தெரிவித்தார். கல்லூரி காலத்தில் எப்போதாவது ’பண்டிகை விருந்து’ போல் அவர் உண்ட அசைவ உணவு ‘கேரள புரோட்டாவும், முட்டை மாசாலாவும்’ என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவிலிருந்து, கேரளா வரை வெவ்வேறு இடங்களில் பணிக்காக செல்ல வேண்டியிருந்தபோது, தமிழக உணவு வகைகளுக்காக சமையலுக்கு ஏங்கியவராய் தனது இளமைக் காலத்தில் நெடுந்தூரம் பயணித்திருக்கிறார், கலாம்.
நன்றி ஜேவி பி தளம்
Re: ஏ. பி. ஜே. அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு
அப்துல் கலாம் திருமணம் செய்துகொள்ளாதது ஏன்
நீங்கள் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்கிற கேள்வியை பலமுறை எதிர்கொண்டுள்ளார் கலாம். தும்பா மையத்தில் வேலை பார்த்தபோது, கலாம் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று அவருடைய குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் பலமுறை அழுத்தம் கொடுத்தார்கள். ஆனால் கலாம் அதில் ஈடுபாடு காட்டவேயில்லை. உன் திருமணத்துக்கு வருகை தரும் சாக்கிலாவது நாங்கள் ராமேஸ்வரம் பார்க்கவேண்டும் என்று கலாமின் நண்பர்கள் சொன்னதுண்டு. ஆனால் அது இறுதிவரை நிறைவேறாமலே போய்விட்டது.
திருமணம் குறித்த கேள்விக்கு கலாமின் பதில்:
‘திருமணம் என் கனவுகளைச் சிதைத்துவிடும். என் கனவும் நம்பிக்கையும் வேறு. ஒரு குடும்பத் தலைவனாக நான் குடும்பத்துக்கும் நேரமும் உழைப்பையும் கொடுத்தாக வேண்டும். அங்கே என் லட்சியம் பின்னுக்குத் தள்ளப்படுகிறது. லட்சியமா, குடும்பமா என்றால் குடும்பம் என் லட்சியத்துக்குப் பின்னால்தான். என்னுடைய இந்தக் கோட்பாட்டினால் ஒரு பெண்ணின் வாழ்க்கையும் பாழாகிவிடக்கூடாது. ஆக, இறுதிவரை நான் இப்படி இருப்பதுதான் சிறந்தது. என்னை என் போக்கில் விட்டுவிடுங்கள்’ என்று தன் மீது அக்கறை செலுத்தி கேள்வி கேட்டவர்களிடம் இந்தப் பதிலை அளித்துள்ளார் கலாம்.
நன்றி ; ஜேவிபி தளம்
நீங்கள் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்கிற கேள்வியை பலமுறை எதிர்கொண்டுள்ளார் கலாம். தும்பா மையத்தில் வேலை பார்த்தபோது, கலாம் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று அவருடைய குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் பலமுறை அழுத்தம் கொடுத்தார்கள். ஆனால் கலாம் அதில் ஈடுபாடு காட்டவேயில்லை. உன் திருமணத்துக்கு வருகை தரும் சாக்கிலாவது நாங்கள் ராமேஸ்வரம் பார்க்கவேண்டும் என்று கலாமின் நண்பர்கள் சொன்னதுண்டு. ஆனால் அது இறுதிவரை நிறைவேறாமலே போய்விட்டது.
திருமணம் குறித்த கேள்விக்கு கலாமின் பதில்:
‘திருமணம் என் கனவுகளைச் சிதைத்துவிடும். என் கனவும் நம்பிக்கையும் வேறு. ஒரு குடும்பத் தலைவனாக நான் குடும்பத்துக்கும் நேரமும் உழைப்பையும் கொடுத்தாக வேண்டும். அங்கே என் லட்சியம் பின்னுக்குத் தள்ளப்படுகிறது. லட்சியமா, குடும்பமா என்றால் குடும்பம் என் லட்சியத்துக்குப் பின்னால்தான். என்னுடைய இந்தக் கோட்பாட்டினால் ஒரு பெண்ணின் வாழ்க்கையும் பாழாகிவிடக்கூடாது. ஆக, இறுதிவரை நான் இப்படி இருப்பதுதான் சிறந்தது. என்னை என் போக்கில் விட்டுவிடுங்கள்’ என்று தன் மீது அக்கறை செலுத்தி கேள்வி கேட்டவர்களிடம் இந்தப் பதிலை அளித்துள்ளார் கலாம்.
நன்றி ; ஜேவிபி தளம்
Re: ஏ. பி. ஜே. அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு
அப்துல் கலாம் ஆசிரியர் பிறந்த மண் யாழ்ப்பாணம்
ஒரு உயர்ந்த உன்னதமான மனிதரை இன்று காணப்போகின்றேன் என்ற வேணவாவுடன் பல்கலைக்கு புறப்பட்டேன். வீட்டிலிருந்து புறப்படும் போதே நல்ல சகுனம்.
நெற்றியிலே திலகம் மின்ன இடுப்பிலொரு குழந்தையைத் தூக்கிய வண்ணம் தாயொருத்தி முன்னே வந்து கொண்டிருந்தாள். உள்ளத்தில் பொங்கும் மகிழ்ச்சி அலைகளோடு ஊந்துருளியை பல்கலை நோக்கி வேகமாக ஓட்டினேன்.
உலக மக்களால் மதிக்கப்படும் மாண்புமிகு மனிதரல்லவா! எவ்வளவு பெரிய மனிதர்!! எத்தனையோ நோயாளர்களை பயனடைய வைக்கும் இருதய குருதிக்குழாய் தாங்கு சுருளியின் (stent) உருவாக்கத்திற்கு பங்காற்றிய அற்புத பிறவியல்லவா!
இலட்சியத்திற்காக கனவுகாணுங்களென இளையோரை ஊக்கப்படுத்திய பேரறிஞரல்லவா! ‘ரோகினி’ செயற்கைக்கோளை புவியின் அண்மித்த சுற்று வட்டப்பாதையில் நிலைபெறச்செய்த விஞ்ஞானியல்லவா!
இவ்வாறான எண்ண ஓட்டங்களுடன் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்க மண்டபத்துள்ளே முன் வரிசை ஆசனங்களுக்கு அண்மிய கரையோரமாக நிற்கிறேன்.
கலையரங்கம் முழுதும் ஐயாயிரக்கணக்கான மக்களும் மாணவர்களும் மட்டுமன்றி அரங்கின் வெளியேயும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அறிஞரைக்காணும் ஆவலோடிருந்ததை அவதானித்து மெய்சிலிர்த்தேன்.
நீண்ட காத்திருப்பின் பின் அந்த மகான் இத்தனை வயதிலும் இயலாத நிலையிலும் தன்னைக்காண வந்த மக்களுக்காய் நடந்தே வந்தார்.
எவ்வளவு எளிமையான முகம். கல்நெஞ்சையும் கரைக்கும் கனிவான பார்வை. இத்தகைய மனிதர் எம்மண்ணிற்கு வந்ததை நினைக்க என் ஓர விழி இருதுளி கண்ணீர் முத்துக்களைச் சிந்தியது.
தனது உரையின் ஆரம்பத்திலேயே “வணக்கம் நண்பர்களே” என விழித்தார். சபையெங்கணும் கைதட்டலொலி அதிர்ந்ததது. பின் “புயலைத்தாண்டினால் தென்றல்” எனும் தலைப்பில் தான் உரையாற்றப்போவதாகவும் தலைப்பு பிடித்திருக்கா என்றும் சபையைக் கேட்டார்.
கலாம் மேலும், “நான் 1941 இல் ராமேஸ்வரத்திலே 5ம் வகுப்பில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திரு கனகசுந்தரநாத் ஆசிரியரிடம் கணிதம் பயின்றேன்.
என் ஆசிரியர் பிறந்த இந்த யாழ்ப்பாண மண்ணை நான் வணங்குகிறேன். யாழ்ப்பாண மக்களுக்கு எனது வாழ்த்துக்கள்” என்றார். தொடர்ந்து தான் எழுதிய கவிதையொன்றை வாசித்து தன்னுடன் சேர்ந்து சொல்லும்படி சபையைக்கேட்டார்.
“நான் பிறந்தேன் அரும்பெரும் சக்தியுடன்
நான் பிறந்தேன் நற்பண்புகளுடன்
நான் பிறந்தேன் நல்ல எண்ணங்களுடன்
நான் பிறந்தேன் உயர்ந்த எண்ணங்களைச் செயல்படுத்த
நான் பிறந்தேன் ஆராட்சி உள்ளத்துடன்
நான் பிறந்தேன் ஆகாய உச்சியில் பறக்க
நான் பூமியில் ஒருபோதும் தவளமாட்டேன்,
தவளவேமாட்டேன்!
ஆராட்சி ஒன்று தான் என் லட்சியம்.”
அடடா என்ன ஒரு உயர்ந்த நோக்கு. எத்தனையோ நல்ல விடயங்களை எளிமையாகச் சொன்ன அறிஞரது அத்தனை கருத்துக்களையும் கிரகிக்க இந்தச் சிறியேனால் முடியவில்லை! எனினும் அம்மகானது கூற்றுக்கள் சில இந்நேரம் வரை என் இதயத்தில் ஒலித்துக்கொண்டேயிருக்கின்றன.
லட்சியத்தையடைய உழைப்பு முக்கியம். விடாமுயற்சி இருந்தால் நீ யாராக இருந்தாலும் வெற்றி உன்னை வந்து சேரும். என்ற கருத்துக்களே அவை.
தனது வாழ்க்கைக்கு அச்சாணியாக அமைந்தது உலகப்பொது மறையான திருக்குறளே என திருக்குறட்பாக்கள் பலவற்றை எடுத்துக்காட்டினார்.
இறுதியில் ” அன்பு மாணவ செல்வங்களே, நம்பிக்கையையும் லட்டசியத்தையும் உங்கள் கண்களில் காண்கிறேன். உறக்கத்தை மறக்க கனவு காணுங்கள்.
வெற்றி உங்களை நாடிவரும்.” என்ற பொன்னான வாசகத்தை எளிமையாகக் கூறி முடித்தார். மனதிலே பெருத்ததொரு திருப்திகரமான வைராக்கியத்தோடு கலையரங்கை விட்டு சபையோடு சபையாக அகன்றேன்!
V.சண்முகராஜா,
ஊடகக்கற்கைகள்,
யாழ்.பல்கலைக்கழகம்.
ஒரு உயர்ந்த உன்னதமான மனிதரை இன்று காணப்போகின்றேன் என்ற வேணவாவுடன் பல்கலைக்கு புறப்பட்டேன். வீட்டிலிருந்து புறப்படும் போதே நல்ல சகுனம்.
நெற்றியிலே திலகம் மின்ன இடுப்பிலொரு குழந்தையைத் தூக்கிய வண்ணம் தாயொருத்தி முன்னே வந்து கொண்டிருந்தாள். உள்ளத்தில் பொங்கும் மகிழ்ச்சி அலைகளோடு ஊந்துருளியை பல்கலை நோக்கி வேகமாக ஓட்டினேன்.
உலக மக்களால் மதிக்கப்படும் மாண்புமிகு மனிதரல்லவா! எவ்வளவு பெரிய மனிதர்!! எத்தனையோ நோயாளர்களை பயனடைய வைக்கும் இருதய குருதிக்குழாய் தாங்கு சுருளியின் (stent) உருவாக்கத்திற்கு பங்காற்றிய அற்புத பிறவியல்லவா!
இலட்சியத்திற்காக கனவுகாணுங்களென இளையோரை ஊக்கப்படுத்திய பேரறிஞரல்லவா! ‘ரோகினி’ செயற்கைக்கோளை புவியின் அண்மித்த சுற்று வட்டப்பாதையில் நிலைபெறச்செய்த விஞ்ஞானியல்லவா!
இவ்வாறான எண்ண ஓட்டங்களுடன் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்க மண்டபத்துள்ளே முன் வரிசை ஆசனங்களுக்கு அண்மிய கரையோரமாக நிற்கிறேன்.
கலையரங்கம் முழுதும் ஐயாயிரக்கணக்கான மக்களும் மாணவர்களும் மட்டுமன்றி அரங்கின் வெளியேயும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அறிஞரைக்காணும் ஆவலோடிருந்ததை அவதானித்து மெய்சிலிர்த்தேன்.
நீண்ட காத்திருப்பின் பின் அந்த மகான் இத்தனை வயதிலும் இயலாத நிலையிலும் தன்னைக்காண வந்த மக்களுக்காய் நடந்தே வந்தார்.
எவ்வளவு எளிமையான முகம். கல்நெஞ்சையும் கரைக்கும் கனிவான பார்வை. இத்தகைய மனிதர் எம்மண்ணிற்கு வந்ததை நினைக்க என் ஓர விழி இருதுளி கண்ணீர் முத்துக்களைச் சிந்தியது.
தனது உரையின் ஆரம்பத்திலேயே “வணக்கம் நண்பர்களே” என விழித்தார். சபையெங்கணும் கைதட்டலொலி அதிர்ந்ததது. பின் “புயலைத்தாண்டினால் தென்றல்” எனும் தலைப்பில் தான் உரையாற்றப்போவதாகவும் தலைப்பு பிடித்திருக்கா என்றும் சபையைக் கேட்டார்.
கலாம் மேலும், “நான் 1941 இல் ராமேஸ்வரத்திலே 5ம் வகுப்பில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திரு கனகசுந்தரநாத் ஆசிரியரிடம் கணிதம் பயின்றேன்.
என் ஆசிரியர் பிறந்த இந்த யாழ்ப்பாண மண்ணை நான் வணங்குகிறேன். யாழ்ப்பாண மக்களுக்கு எனது வாழ்த்துக்கள்” என்றார். தொடர்ந்து தான் எழுதிய கவிதையொன்றை வாசித்து தன்னுடன் சேர்ந்து சொல்லும்படி சபையைக்கேட்டார்.
“நான் பிறந்தேன் அரும்பெரும் சக்தியுடன்
நான் பிறந்தேன் நற்பண்புகளுடன்
நான் பிறந்தேன் நல்ல எண்ணங்களுடன்
நான் பிறந்தேன் உயர்ந்த எண்ணங்களைச் செயல்படுத்த
நான் பிறந்தேன் ஆராட்சி உள்ளத்துடன்
நான் பிறந்தேன் ஆகாய உச்சியில் பறக்க
நான் பூமியில் ஒருபோதும் தவளமாட்டேன்,
தவளவேமாட்டேன்!
ஆராட்சி ஒன்று தான் என் லட்சியம்.”
அடடா என்ன ஒரு உயர்ந்த நோக்கு. எத்தனையோ நல்ல விடயங்களை எளிமையாகச் சொன்ன அறிஞரது அத்தனை கருத்துக்களையும் கிரகிக்க இந்தச் சிறியேனால் முடியவில்லை! எனினும் அம்மகானது கூற்றுக்கள் சில இந்நேரம் வரை என் இதயத்தில் ஒலித்துக்கொண்டேயிருக்கின்றன.
லட்சியத்தையடைய உழைப்பு முக்கியம். விடாமுயற்சி இருந்தால் நீ யாராக இருந்தாலும் வெற்றி உன்னை வந்து சேரும். என்ற கருத்துக்களே அவை.
தனது வாழ்க்கைக்கு அச்சாணியாக அமைந்தது உலகப்பொது மறையான திருக்குறளே என திருக்குறட்பாக்கள் பலவற்றை எடுத்துக்காட்டினார்.
இறுதியில் ” அன்பு மாணவ செல்வங்களே, நம்பிக்கையையும் லட்டசியத்தையும் உங்கள் கண்களில் காண்கிறேன். உறக்கத்தை மறக்க கனவு காணுங்கள்.
வெற்றி உங்களை நாடிவரும்.” என்ற பொன்னான வாசகத்தை எளிமையாகக் கூறி முடித்தார். மனதிலே பெருத்ததொரு திருப்திகரமான வைராக்கியத்தோடு கலையரங்கை விட்டு சபையோடு சபையாக அகன்றேன்!
V.சண்முகராஜா,
ஊடகக்கற்கைகள்,
யாழ்.பல்கலைக்கழகம்.
Similar topics
» அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.
» ABJ அப்துல் கலாம்
» அப்துல் கலாம் சொன்னது...
» அப்துல் கலாம் பார்வை
» அப்துல் கலாம் அவர்களின் பெருந்தன்மை
» ABJ அப்துல் கலாம்
» அப்துல் கலாம் சொன்னது...
» அப்துல் கலாம் பார்வை
» அப்துல் கலாம் அவர்களின் பெருந்தன்மை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|