Latest topics
» பல்சுவை- ரசித்தவை - 9by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
நாலு போலீசுல கான்ஸ்டபிள்தான் டாப்பு
4 posters
Page 1 of 1
நாலு போலீசுல கான்ஸ்டபிள்தான் டாப்பு
கடந்த புதனன்று வயிறு வலியின் காரணமாக அலுவலகத்துக்கு விடுப்புப் போட்டுவிட்டு படுத்திருந்தேன். ஊரில் ஒரு சிறிய பிரச்சினை, அது குறித்தான சர்ச்சைகள்... பேச்சு வார்த்தைகள் என மதியம் வரை போனிலேயே கரைந்தது. வயிறு வலி மட்டும் கரையாமல் இருந்தது. மதியம் சாப்பாட்டுக்குப் பின்னர் படுத்தாலும் உறக்கம் வரவில்லை. சரி எதாவது படம் பார்க்கலாம் என ஆன்லைனில் தேடினேன். சரி நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்ன்னு படம் பேரு இருக்கே.... கொஞ்சம் சிரிக்கலாம்... வயிறுவலியோட மனவலியும் போகும்ன்னு நினைச்சு பார்க்க ஆரம்பித்தேன்.
படத்தோட ஆரம்பத்துல காட்டின தொடர்ந்து ஜனாதிபதி அவார்டு வாங்கும் கிராமத்தைப் பார்த்ததும் ஆஹா ஓவராக் காட்டுறாங்களேன்னு நினைச்சிக்கிட்டே பார்க்க ஆரம்பித்தேன். பிரசிடெண்டே இறங்கி கால்வாய் சுத்தப்படுத்துவது, கடையில் பால்காரர் பால் ஊற்றிவிட்டு கல்லாவில் பணம் எடுத்துக் கொண்டு போவது, பத்துப் பவுனு நகையை ரோட்டுல போட்டு ரெண்டு நாளாக் கிடக்குது தொலச்சவங்க வந்து எடுத்துக்கிட்டுப் போவாங்கன்னு சொல்றதுன்னு வித்தியாசமாப் போனப்பவே சுதாரிச்சிருக்கணும்... வேற வலி தூக்கமும் வரலை... அறையில் பேச்சுத் துணைக்கும் ஆளில்லை... இருந்தாலும் ஆளாளுக்கு கணிப்பொறியே தெய்வம்ன்னுதான் இருப்போம். அது வேற விஷயம்... இருந்தாலும் ஓரிரு வார்த்தைகள் பேசலாமே... இன்னைக்கு தனியாத்தானே இருக்கோம் தொடர்ந்து பார்ப்போம்ன்னு தொடர ஆரம்பித்தேன்.
நம்ம கலைஞர் பேரன்தான் நாயகன்... ஆரு... தம்பி உதயநிதியான்னு கேக்குறீகளா? இல்லைங்க இது அருள்நிதி... இது வம்சத்துல வந்துச்சே அந்தத் தம்பி... அதுல கூட அப்புடி இப்புடி இருந்துச்சு... இதுல ஆளு நல்லாத் தெரிஞ்சிச்சு... சரி கொஞ்சம் நல்லாயிருக்கும் போலன்னு நெனச்சா... நாலு போலீசுல எஸ்.ஐ, ஏட்டு ரெண்டு பேரும் இருக்கும் போது தம்பிதான் எல்லா முடிவும் எடுக்குது. நம்ம ஊருப்பக்கமெல்லாம் கான்ஸ்டபிள் கொஞ்சம் எந்திரிச்சிப் பேசினாலே 'யோவ் இருய்யா... நாங்க பேசிக்கிட்டு இருக்கோம்ல்ல' என்று அதட்டும் எஸ்.ஐயைத்தானே பார்த்திருக்கிறோம். இங்க எஸ்.ஐ. எதுவுமே சொல்றதில்லை. எப்படி இப்படியெல்லாம் படமெடுக்கிறாங்கன்னு தெரியலையேன்னு நினைக்காதீங்க... எல்லாம் நாம பாக்குறோங்கிற தைரியத்துலதான் எடுக்குறாங்க.
நாயகன் அருள்நிதிக்கு வீடு இருக்கு அம்மா அப்பா இல்லை.... எஸ்.ஐக்கும் இன்னொரு கான்ஸ்டபிளுக்கும் வீடே இல்லை... சிங்கம்புலிக்கு மட்டும் குடும்பம் குட்டி இருக்கு. நாயகி டீச்சராம்... இவரு தேடிப் போயி லவ் பண்றாராம்... பாவம் நாயகி ரம்யா நம்பீசன் கனவு காண்கிறார்... பாட்டுப் பாடுகிறார். அதிகம் வேலை இல்லை. சிங்கம்புலிதான் நல்லா இருந்த ஊரைக் கெடுக்க திட்டம் தீட்டுகிறார். எதற்காக என்றால் இராமநாதபுரத்துக்கு நாலு பேரையும் மாற்றப் போறோம் என்று மேலதிகாரி சொல்லியதற்காக...
படத்தில் ரசிக்க வைத்த இடம் என்றால் சிங்கப்பூர் மாப்பிள்ளை முதல் காட்சியில் ஊருக்குள் வரும்போது பார்த்து மலைப்பதும் பின்னர் இறுதிக் காட்சிகளில் மனைவியுடன் வந்து படாதபாடுபட்டுப் போவதும்தான். மற்றபடி சின்னச் சின்ன பாத்திரங்களில் எட்டிப் பார்த்த ஒரு ஆளை வில்லனாக்கி அவன் திருட ஆளெடுப்பதும் அவர்களை திருட அனுப்பும் போது ஏதோ இசை ராஜா போல் கையை ஆட்டி ஆட்டி சைகை செய்வதும்... தான் திருடன் என்று தெரிந்து தன்னை அன்போடு பார்த்த ஊருக்குள் திருடுவதும்... என ஸ்ஸ்ஸ்... அப்பா முடியலை சாமி.
சிங்கம்புலி செய்த காரியங்களால் ஊருக்குள் அடிதடி சண்டை, திருட்டு, வெட்டுக் குத்தெல்லாம் வருது. அப்பத்தான் ஜனாதிபதி விருதுக்காக அந்த ஊரைப் பார்வையிட்டு மக்களிடம் பேச கலெக்டர் வருகிறார். சரி... சரி... இருங்க நீங்க கேக்குறது தெரியுது... என்னாச்சு...? படத்தில் அந்த ஊர் மீண்டும் நல்ல நிலைக்கு வந்து ஜனாதிபதி அவார்ட் வாங்குச்சான்னுதானே?... அடப்போங்கப்பா கலெக்டரையே கடத்திடுறானுங்க... ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் ஊர் வந்திருது... அதுக்கப்புறம் எப்படி முடிக்கிறதுன்னு தெரியாம நாயகன் வாயால ஒரு வசனத்தைச் சொல்ல வச்சி முடிச்சிட்டானுங்க...
பொற்பந்தல்ன்னு பொய்யான கிராமத்தைக் காட்டின இயக்குநர், இராமநாதபுரம் என்றாலே அடிதடி, வெட்டுக்குத்து, 144 தடை உத்தரவு எனச் சொல்வதும்... இராமநாதபுரம் பேருந்துக்குள் அடிதடி பற்றி பேசுவதும்... படிக்காத மனிதர்கள் அடித்துப் பிடித்து ஏறுவதும்... என காட்சிப்படுத்தியிருக்கிறார். அதை கடைசியில் இராமநாதபுரத்தில் இருந்து சிலரை பொற்பந்தலுக்கு மாற்றுவதாக கேள்விப்பட்ட எஸ்.ஐ என்னய்யா உங்களை பொற்பந்தலுக்கு மாத்திட்டாங்கன்னு வருத்தப்படுறாருங்கிற மாதிரி காட்சி வைத்து சரி பண்ணியிருக்காரு. இயக்குநர் இராமநாதபுரத்துக்காரராய் இருப்பார் போல.
சரி விடுங்க... இந்த மாதிரி படமெல்லாம் பார்க்க நேரம் கிடைக்குது பாருங்க... சண்டி வீரன் படத்துல தண்ணிப் பிரச்சினை பேசி, காதல், அழகிய பாடல்கள்ன்னு கொண்டு போன சற்குணம் லால் போன்ற நல்ல நடிகரை கடைசியில் காமெடியன் ஆக்கி தண்ணி ஓடுற வாய்க்காலோட அழகை ரசிச்சிக்கிட்டே போகும் போது டக்குன்னு வாகமடை போட்டு அடச்சி எல்லாரையும் என்னடா இந்தாளு இப்படி காமெடி பண்ணிட்டாருன்னு சொல்ல வைக்கலையா... அது மாதிரித்தான் இதுவும்... அதுல இயக்குநர் கடைசியில சிரிக்க வச்சாரு... இதுல இயக்குநர் கதையே இல்லாட்டியும் அங்க அங்க சிரிக்க வைக்கிறாரு...
-:000:-
-:பாரதிபாரதிபாரதிபாரதிபாரதிபாரதிபாரதிபாரதி:-
இன்று நம் நேசக் கவிஞன்... தேசக் கவிஞன் பாரதியின் நினைவுநாள்... 'சாதிகள் இல்லையடி பாப்பா' என்று சொன்ன நம் தமிழன் பாரதியை நினைவில் நிறுத்துவோம்.
"ஏழை யென்றும் அடிமையென்றும்
எவனும் இல்லை ஜாதியில்,
இழிவு கொண்ட மனித ரென்பது
இந்தி யாவில் இல்லையே
வாழி கல்வி செல்வம் எய்தி
மனம கிழ்ந்து கூடியே
மனிதர் யாரும் ஒருநிகர் கர்ச
மானமாக வாழ்வமே!"
என்று சொன்னவன் பாரதி.... இன்னைக்கு அப்படியிருக்கான்னு கேக்கக்கூடாது... இன்னைக்கு அவனையே சாதிக்குள்ள் கொண்டு வந்துட்டோமுல்ல....சரி விடுங்க... எட்டுத் திக்கும் தமிழ் என கொட்டும் முரசடித்த நம் மீசைக் கவிஞனை என்றும் நினைப்போம்...
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: நாலு போலீசுல கான்ஸ்டபிள்தான் டாப்பு
பட விமர்சனம் நல்லா இருக்கு குமார். பட விமர்சனத்தினை விட கடைசியில் போட்ட பாடல் தான் என்மனசோடு பேசியது!
பாரதியார் நினைவுக்கான பாடல் மிக சோகமாய் இருக்கின்றது. ஆனால் அருமையான் வரிகள். இந்த பாட்டையே உங்கள் பதிவில் தான் அறிந்தேன் என சொல்லணும்.
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்
சொப்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
போனதெல்லாம் கனவினைப்போல்
புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?
காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ? அங்கு குணங்களும் பொய்களோ?
எத்தனை எத்தனை அருமையான வரிகள். ஹரீஷ் ராகவேந்திராவின் குரலில் இளையராஜா இசையில் பாடலை கேட்கும் போதும் காட்சிகளை காணும் போது
கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி – பாரதியார் சொன்னதாய் படித்தது தான் நினைசுக்கு வந்தது!
பாரதியார் நினைவுக்கான பாடல் மிக சோகமாய் இருக்கின்றது. ஆனால் அருமையான் வரிகள். இந்த பாட்டையே உங்கள் பதிவில் தான் அறிந்தேன் என சொல்லணும்.
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்
சொப்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
போனதெல்லாம் கனவினைப்போல்
புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?
காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ? அங்கு குணங்களும் பொய்களோ?
எத்தனை எத்தனை அருமையான வரிகள். ஹரீஷ் ராகவேந்திராவின் குரலில் இளையராஜா இசையில் பாடலை கேட்கும் போதும் காட்சிகளை காணும் போது
கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி – பாரதியார் சொன்னதாய் படித்தது தான் நினைசுக்கு வந்தது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாலு போலீசுல கான்ஸ்டபிள்தான் டாப்பு
அடட்ட்ட்டா! அவரே ஏன் படம் பார்த்தோம் என நொந்து நூலாகி ச்ச்ச்ச்சே நூடில்ஸாகி விமர்சனம் எழுதி இருக்கார். இதில் இவங்க படம் தேடி பார்க்க போறாகளாம். அதுக்கு மட்டும் நேரம் எங்கிருந்து வருமாம்? சேனைல நாலு பதிவு போட்டால் பதிவு எண்ணிக்கை கூடி நாலு வரி பாராட்டாச்சும் கிடைக்குமாக்கும்! ம்ம்ம்ம்ம்க்கும்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாலு போலீசுல கான்ஸ்டபிள்தான் டாப்பு
ஒருத்தருடைய விமர்சனத்துடன் நின்று விடாமல் நாமும் பார்த்து கருத்தெழுதலாம் ஒருவொருத்தரும் பார்க்கின்ற கோணங்கள் வேறுவிதமாக அமையும்Nisha wrote:அடட்ட்ட்டா! அவரே ஏன் படம் பார்த்தோம் என நொந்து நூலாகி ச்ச்ச்ச்சே நூடில்ஸாகி விமர்சனம் எழுதி இருக்கார். இதில் இவங்க படம் தேடி பார்க்க போறாகளாம். அதுக்கு மட்டும் நேரம் எங்கிருந்து வருமாம்? சேனைல நாலு பதிவு போட்டால் பதிவு எண்ணிக்கை கூடி நாலு வரி பாராட்டாச்சும் கிடைக்குமாக்கும்! ம்ம்ம்ம்ம்க்கும்!
Re: நாலு போலீசுல கான்ஸ்டபிள்தான் டாப்பு
அட! ஆமாம்’ல! கரெக்ட்தான் ஹாசிம்.
அருமையான பார்வை! நீங்களும் பார்த்திட்டு கருத்து எழுதுங்க! காத்திருக்கேன்!
அருமையான பார்வை! நீங்களும் பார்த்திட்டு கருத்து எழுதுங்க! காத்திருக்கேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாலு போலீசுல கான்ஸ்டபிள்தான் டாப்பு
நேரம் கிடைத்தால் பார்க்கலாம்Nisha wrote:அட! ஆமாம்’ல! கரெக்ட்தான் ஹாசிம்.
அருமையான பார்வை! நீங்களும் பார்த்திட்டு கருத்து எழுதுங்க! காத்திருக்கேன்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|