சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

புதுக்கவிதை. Khan11

புதுக்கவிதை.

5 posters

Go down

புதுக்கவிதை. Empty புதுக்கவிதை.

Post by ந.க.துறைவன் Wed 7 Oct 2015 - 7:41

காத்திருக்கு…!!
*
காற்றில் அழகாய் அசைத்தாடும்
வேப்பமரங்கள் பூத்திருக்கு
நந்தியாவட்டை பூச்செடியில்
வெண்மலர்கள் சிரித்திருக்கு
பசுமையான கிளைநுனியில்
செண்டுப் பூக்கள் சிவந்திருக்கு
மணக்கும் மல்லி பட்டுரோஸ்கள்
கைப்படாமல் காத்திருக்கு
தெய்வமாய் வணங்கும் துளசிசெடி
தொட்டியில் வளர்ந்து நிமிர்ந்திருக்கு
திருஷ்டிக்கு வைத்தக் கள்ளிசெடிகள்
பச்சை மடல்கள் விரி்த்திருக்கு
வீதியில் போவோர் வருவோரெல்லாம்
செடியில் ஒரு கிளையினைக்
கொடுங்கள் என்று கேட்கின்றார்கள்
சிரிப்பை உதிர்த்துச் செல்கின்றார்கள்              
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

புதுக்கவிதை. Empty Re: புதுக்கவிதை.

Post by கமாலுதீன் Wed 7 Oct 2015 - 9:33

ந.க.துறைவன் wrote:காத்திருக்கு…!!
*
காற்றில் அழகாய் அசைத்தாடும்
வேப்பமரங்கள் பூத்திருக்கு
நந்தியாவட்டை பூச்செடியில்
வெண்மலர்கள் சிரித்திருக்கு
பசுமையான கிளைநுனியில்
செண்டுப் பூக்கள் சிவந்திருக்கு
மணக்கும் மல்லி பட்டுரோஸ்கள்
கைப்படாமல் காத்திருக்கு
தெய்வமாய் வணங்கும் துளசிசெடி
தொட்டியில் வளர்ந்து நிமிர்ந்திருக்கு
திருஷ்டிக்கு வைத்தக் கள்ளிசெடிகள்
பச்சை மடல்கள் விரி்த்திருக்கு
வீதியில் போவோர் வருவோரெல்லாம்
செடியில் ஒரு கிளையினைக்
கொடுங்கள் என்று கேட்கின்றார்கள்
சிரிப்பை உதிர்த்துச் செல்கின்றார்கள்              
*
அழகிய தமிழில் மரங்கள், செடிகள், கொடிகள் மற்றும் மலர்களை வர்ணித்து இனிய கவிதை. பாராட்டுக்கள்.

ஒரு சிறு திருத்தம்: பட்டு ரோஸ்கள் என்பதை பட்டு ரோஜாக்கள் என தமிழ்படுத்தியிருக்கலாம்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

புதுக்கவிதை. Empty Re: புதுக்கவிதை.

Post by ந.க.துறைவன் Wed 14 Oct 2015 - 7:01

வானத்தின் கீழ்…!!
*
கோடைவெயிலில் மோர் விற்பவள்
தெருவில் தாகத்தோடு அலைகின்றாள்
புங்கம்இலைகள் போர்த்திய கூடையில்
நுங்கினை வைத்து அமர்ந்துிருப்பவள்
மனிதமுகங்களைப் பார்த்து ஏங்குகின்றாள்
கூடை தலையில் சுமந்து பூ விற்பவள்
சும்மாடு இல்லாமல் திரி்கின்றாள்
விசிறி விற்பவன் வியர்வை வழிய
பாதையில் கூவி திரிகின்றான்
குடை பழுது பார்ப்பவன் மழையில்போது
நனைந்து வீதியில் நடக்கின்றான்
உப்பு விற்பவன் சைக்கிள்வண்டியை
தள்ளிக் களைத்து அலைகின்றான்
பொறி கடலை பட்டாணி சுண்டல்
சூடாக வறுத்து கொடுப்பவன்
வான்மேகத்தைப் பார்த்து நிற்கின்றான்
அசலைத் தேற்றி எடுக்க முடியாமல்
மனமோ எந்நேரம் அலைபாய்கிறது
கடனும் வட்டியும் கட்டியது போக
கையில் போக மிஞ்சுவதென்ன? என்று
கணக்கு பார்த்து மனம் துவள்கிறது
என்றேனும் வாழ்வில் உயர்வோமென்று
எண்ணத்தை தேக்கிய கனவு மனமாய்      
வானத்தின் கீழே நம்பிக்கையோடு
வாழ்வோரின் இன்ப வாழ்க்கையிதுவே…!!
*

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

புதுக்கவிதை. Empty Re: புதுக்கவிதை.

Post by ந.க.துறைவன் Fri 23 Oct 2015 - 7:56

மனக்குறளி…!!
*
உன்னை எங்கோ தேடினேன்
நீ ரோஜா பூவில் ஒளிந்திருப்பதாக
சொன்னது வண்டுகள்.
உன்னை எங்கோ தேடினேன்
நீ ஆப்பிள் பழத்தில் ஒளிந்திருப்பதாக
சொன்னது குருவிகள்.
உன்னை எங்கோ தேடினேன்
நீ கோவைப் பழத்தில் ஒளிந்திருப்பதாக
சொன்னது கிளிகள்.
உன்னை எங்கோ தேடினேன்
நீ தேங்காயில் ஒளிந்திருப்பதாக
சொன்னது காக்கைகள்.
உன்னை எங்கோ தேடினேன்
நீ திராட்சையில் ஒளிந்திருப்பதாக
சொன்னது எறும்புகள்.
உன்னை எங்கோ தேடினேன்
நீ தாழம்பூவில் ஒளிந்திருப்பதாக
சொன்னது ஒணான்கள்.
உன்னை எங்கோ தேடினேன்
நீ கோயில் மண்டபத்தில் ஒளிந்திருப்பதாகச்
சொன்னது புறாக்கள்.
உன்னை எங்கோ தேடினேன்
அப்பொழுது என்னுள்ளிருந்து ஒலித்தது
அட, பைத்தியக்காரா….!
அவள் உன்னிதயத்தில் ஒளிந்திருக்கிறாள் 
பாரடா என்று உண்மையைச்
சொன்னது மனக்குறளி.

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

புதுக்கவிதை. Empty Re: புதுக்கவிதை.

Post by ந.க.துறைவன் Sat 12 Dec 2015 - 4:57

மழை…மழை… எங்கே பிழை…??
*
இனிய குரல் கொடுத்து எனை
அழைக்கும் சிநேகிதர்களைப்
பார்த்துப் இருபது நாள்களாயிற்று.
மழைவெள்ளப் பெருக்கின்போது
எங்கே போயிருந்தன?
அந்தமனப் பறவைகள்.
வெள்ளநீர் பார்வையிடப் போயிருந்ததா?
அணைகள் ஏரிகள் உடைப்புப் பார்த்து
ஆத்திரம் கொண்டு சிலிர்த்ததா?
விளைநிலங்களைப் பார்த்து அழுததா?
வாழ்நாளில் சேகரித்தப் பொருள்கள்
வாரிச்சுருட்டிப் போன அவலத்தைப்
பார்த்துக் கதறியழுததா?
கோரமுகங்காட்டியப் பேயாய் பாய்ந்து
மனிதஉயிர்களைப் பலிகொண்டதைப்
பார்த்து பதறித் துடித்ததா?
உணவின்றி நீரின்றி உறக்கமின்றி
அல்லல்பட்டவர்களைப் பார்த்து
ஆவேசப்பட்டதா?
மின்சாரமின்றி போக்குவரத்தின்றி
வீட்டுச் சிறையிலிருந்த மனிதங்களின்
இருட்டில் வாடிய முகங்களைப் பார்த்துக்
கண்ணீர் வடித்ததா?
நிவாரணப் பணியில் இயங்கும் சமூகத்
தொண்டர்களின் செயல்களின்
அர்ப்பணிப்புப் பாராட்டி உதவிக்கு துணை நின்றதா?
இன்னும் இயல்பு திரும்பாதா? என
ஏங்கித் தவிக்கும் மனிதக் கவலைகளை
எண்ணி ஆறுதல் சொல்லித் திரிந்ததா?
எப்பொழுதேனும் மகிழ்ச்சி தரும் நீர்த்துளிகள்
இப்பொழுது மட்டும் ஏனிந்த கோரமுகம்.
காட்டி பயமுறுத்தி விட்டது இப்பெருமழை….!!


*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

புதுக்கவிதை. Empty Re: புதுக்கவிதை.

Post by நண்பன் Sat 12 Dec 2015 - 17:22

ந.க.துறைவன் wrote:வானத்தின் கீழ்…!!
*
கோடைவெயிலில் மோர் விற்பவள்
தெருவில் தாகத்தோடு அலைகின்றாள்
புங்கம்இலைகள் போர்த்திய கூடையில்
நுங்கினை வைத்து அமர்ந்துிருப்பவள்
மனிதமுகங்களைப் பார்த்து ஏங்குகின்றாள்
கூடை தலையில் சுமந்து பூ விற்பவள்
சும்மாடு இல்லாமல் திரி்கின்றாள்
விசிறி விற்பவன் வியர்வை வழிய
பாதையில் கூவி திரிகின்றான்
குடை பழுது பார்ப்பவன் மழையில்போது
நனைந்து வீதியில் நடக்கின்றான்
உப்பு விற்பவன் சைக்கிள்வண்டியை
தள்ளிக் களைத்து அலைகின்றான்
பொறி கடலை பட்டாணி சுண்டல்
சூடாக வறுத்து கொடுப்பவன்
வான்மேகத்தைப் பார்த்து நிற்கின்றான்
அசலைத் தேற்றி எடுக்க முடியாமல்
மனமோ எந்நேரம் அலைபாய்கிறது
கடனும் வட்டியும் கட்டியது போக
கையில் போக மிஞ்சுவதென்ன? என்று
கணக்கு பார்த்து மனம் துவள்கிறது
என்றேனும் வாழ்வில் உயர்வோமென்று
எண்ணத்தை தேக்கிய கனவு மனமாய்      
வானத்தின் கீழே நம்பிக்கையோடு
வாழ்வோரின் இன்ப வாழ்க்கையிதுவே…!!
*

*
என்றேனும் வாழ்வில் உயர்வோமென்று
எண்ணத்தை தேக்கிய கனவு மனமாய்       
வானத்தின் கீழே நம்பிக்கையோடு
வாழ்வோரின் இன்ப வாழ்க்கையிதுவே…
சூப்பர் சூப்பர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

புதுக்கவிதை. Empty Re: புதுக்கவிதை.

Post by நண்பன் Sat 12 Dec 2015 - 17:24

ந.க.துறைவன் wrote:மனக்குறளி…!!
*
உன்னை எங்கோ தேடினேன்
நீ ரோஜா பூவில் ஒளிந்திருப்பதாக
சொன்னது வண்டுகள்.
உன்னை எங்கோ தேடினேன்
நீ ஆப்பிள் பழத்தில் ஒளிந்திருப்பதாக
சொன்னது குருவிகள்.
உன்னை எங்கோ தேடினேன்
நீ கோவைப் பழத்தில் ஒளிந்திருப்பதாக
சொன்னது கிளிகள்.
உன்னை எங்கோ தேடினேன்
நீ தேங்காயில் ஒளிந்திருப்பதாக
சொன்னது காக்கைகள்.
உன்னை எங்கோ தேடினேன்
நீ திராட்சையில் ஒளிந்திருப்பதாக
சொன்னது எறும்புகள்.
உன்னை எங்கோ தேடினேன்
நீ தாழம்பூவில் ஒளிந்திருப்பதாக
சொன்னது ஒணான்கள்.
உன்னை எங்கோ தேடினேன்
நீ கோயில் மண்டபத்தில் ஒளிந்திருப்பதாகச்
சொன்னது புறாக்கள்.
உன்னை எங்கோ தேடினேன்
அப்பொழுது என்னுள்ளிருந்து ஒலித்தது
அட, பைத்தியக்காரா….!
அவள் உன்னிதயத்தில் ஒளிந்திருக்கிறாள் 
பாரடா என்று உண்மையைச்
சொன்னது மனக்குறளி.

*

இதயராணி என்றும் இதயத்தில் ஒளிந்துகிருக்கிறாள்
மனக்குறளி சூப்பர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

புதுக்கவிதை. Empty Re: புதுக்கவிதை.

Post by நண்பன் Sat 12 Dec 2015 - 17:28

ந.க.துறைவன் wrote:மழை…மழை… எங்கே பிழை…??
*
இனிய குரல் கொடுத்து எனை
அழைக்கும் சிநேகிதர்களைப்
பார்த்துப் இருபது நாள்களாயிற்று.
மழைவெள்ளப் பெருக்கின்போது
எங்கே போயிருந்தன?
அந்தமனப் பறவைகள்.
வெள்ளநீர் பார்வையிடப் போயிருந்ததா?
அணைகள் ஏரிகள் உடைப்புப் பார்த்து
ஆத்திரம் கொண்டு சிலிர்த்ததா?
விளைநிலங்களைப் பார்த்து அழுததா?
வாழ்நாளில் சேகரித்தப் பொருள்கள்
வாரிச்சுருட்டிப் போன அவலத்தைப்
பார்த்துக் கதறியழுததா?
கோரமுகங்காட்டியப் பேயாய் பாய்ந்து
மனிதஉயிர்களைப் பலிகொண்டதைப்
பார்த்து பதறித் துடித்ததா?
உணவின்றி நீரின்றி உறக்கமின்றி
அல்லல்பட்டவர்களைப் பார்த்து
ஆவேசப்பட்டதா?
மின்சாரமின்றி போக்குவரத்தின்றி
வீட்டுச் சிறையிலிருந்த மனிதங்களின்
இருட்டில் வாடிய முகங்களைப் பார்த்துக்
கண்ணீர் வடித்ததா?
நிவாரணப் பணியில் இயங்கும் சமூகத்
தொண்டர்களின் செயல்களின்
அர்ப்பணிப்புப் பாராட்டி உதவிக்கு துணை நின்றதா?
இன்னும் இயல்பு திரும்பாதா? என
ஏங்கித் தவிக்கும் மனிதக் கவலைகளை
எண்ணி ஆறுதல் சொல்லித் திரிந்ததா?
எப்பொழுதேனும் மகிழ்ச்சி தரும் நீர்த்துளிகள்
இப்பொழுது மட்டும் ஏனிந்த கோரமுகம்.
காட்டி பயமுறுத்தி விட்டது இப்பெருமழை….!!


*

எப்பொழுதேனும் மகிழ்ச்சி தரும் நீர்த்துளிகள்
இப்பொழுது மட்டும் ஏனிந்த கோரமுகம்.
காட்டி பயமுறுத்தி விட்டது இப்பெருமழை….


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

புதுக்கவிதை. Empty Re: புதுக்கவிதை.

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 Jan 2016 - 12:49

அருமை அருமை அருமை 

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

புதுக்கவிதை. Empty Re: புதுக்கவிதை.

Post by ந.க.துறைவன் Mon 2 May 2016 - 3:34

பொறுப்பு…!!
*
இன்று விடிந்ததிலிருந்தே
வெளுத்தப்படியே இருக்கிறது
மேகங்களற்ற வெப்ப வானம்.
இன்று விடிந்ததிலிருந்தே
தகிக்கும் வெப்பம்
மனிதர்களையும் பறவைகளையும்
வெளியில் போக வேண்டாமென
அச்சுறுத்துகிறது சூரியக்கதிர் வீச்சுக்கள்.
இன்று விடிந்ததிலிருந்தே
எத்தனை டிகிரி கொதிக்கும் அனலோ?
எந்தத் திசைவழியாயும் சென்றும்
திரும்புகின்றது வெப்பக் காற்று.
இப்பவே இப்படியென்றால்,
இன்னும் கத்திரித் தொடங்கினால்
எப்படி அனல் பறக்குமோ?
வெயில் என்றாலே மனிதர்களுக்கு
நெஞ்சில் எழுகின்றது வெறுப்பு
நெருப்பு.
அதுவும் இந்த அவலநிலைக்கு
எந்தக் கோடைக் காலத்திற்கும் – அந்த
ஆதவனே முழு பொறுப்பு.


*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

புதுக்கவிதை. Empty Re: புதுக்கவிதை.

Post by ந.க.துறைவன் Wed 6 Jul 2016 - 3:46

அணில் விளையாட்டு…!!
 
 
கொய்யா மரக்கிளையில்அமர்ந்து
பழத்தைக் கொறித்து தின்கிறது
அழகான அணில்பிள்ளை.
வேகமாய் விரைந்து வந்து
அணிலை விரட்டுகிறது காகம்.
துள்ளித் துள்ளி அடுத்தடுத்தக்
கிளைக்குத் தாவியது வேகமாய்
உர்ரென்று முறைத்த குரங்கின்
குரல் கேட்டு மீண்டும் தாவியது.
கையிலிருந்தப் பப்பாளிப் பழத்தினை
எறிந்துவிட்டு போட்டிக்கு வந்தத்
தோழனைத் துரத்திய விரட்டியது
தோழமைக் குரங்கு.
திடீரென யாரோ கல்லெறிகிற
சத்தங்கேட்டச் சிட்டுக்கள் பறந்தன.
மரத்தின் கீழ் நின்றிருந்த இரு
சிறுவர்களைக் கண்டதும்
உற்றுப் பார்த்து நக்கல் செய்து
விலகியோடியது
அணில்பிள்ளைக்.கடித்தப்பழம்
கீழே விழுந்தது. தாவி எடுத்து
ஊதித் துடைத்தனர் சிரித்தனர்
அணில் விளையாட்டின் மௌன
அழகை ரசித்தனர் சிறுவர்கள்
சிறிது நெரத்தில் மறைந்தது
அணில்பிள்ளை சிறுவர்கள் கலைந்தனர்
மணித்துளிகளில் நிகழ்ந்தச் சந்தோஷத்
தருணத்தின் இன்பத்தை இழந்தது
தவிக்கின்றது மௌனமாய்
கொய்யா மரம்.
ந.க.துறைவன்.

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

புதுக்கவிதை. Empty Re: புதுக்கவிதை.

Post by ந.க.துறைவன் Mon 18 Jul 2016 - 3:41

பார்த்தல்…!!
*
சவ ஊர்வலத்திற்கு
வழிவிட்டுப் போகின்றன
சாலையில் வாகனங்கள்.
உள்ளிருந்தே பார்வையிடுகிறார்கள்
கடைக்காரர்கள்.
விலகி நின்று பார்க்கிறாரகள்
பாதசாரிகள் வியாபாரிகள்.
பாடை முன் செல்ல பின்னே
மலர்கள் பிழ்த்து உதிர்க்கிறார்கள்.
பின்தொடர்பவர்கள்.
மௌனமாக பயணிக்கிறது
பிணவண்டி.
இறந்தவர் எந்தப் பகுதியென்று
எவருக்கும் தெரியாது?
இறந்தவரை இரக்க உணர்வோடு
பார்க்கிறார்கள்
நாளை இறக்கப் போகிறவர்கள்!!
ந.க.துறைவன்.

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

புதுக்கவிதை. Empty Re: புதுக்கவிதை.

Post by ந.க.துறைவன் Wed 27 Jul 2016 - 3:50

அந்தரங்கம்…!!
*
பேசுபவர்கள் யார் என்று தெரியவில்லை?
பேசியதும் என்னவென்று புரியவில்லை.
அவர்களுக்குள் ஏதோவொரு
ஆழந்தப் பிரச்சினையின் அடிவேரின் மூலம்
உள்ளுணர்வில் புதைந்திருக்கிறது.
இருவரும் விட்டுக் கொடுக்காமல்
பேசினார்கள் கோபப்பட்டார்கள்.
யாரும் சமாதானமாகவில்லை
போவோர் வருவோர் வேடிக்கைப்
பார்க்கிறார்கள் என்று கூட
அச்சப்படவில்லை வெட்கப்படவில்லை.
பொதுவிடம் என்ற பொறுப்பின்றி
மறந்துப் போய் சண்டையின்
உச்சத்திற்கு நெருங்கிவிட்டார்கள்.
வாய்சத்தம் பெரும் சத்தமாகியது
யார் விலகிப் போகுவதன்று
தன்முனைப்பு
கூட்டம் அருகில் நெருங்கி நிற்கிறது
மெல்ல அவள் விலகி நடந்தாள்
அவனோ முறைத்து பார்த்தான்.
வெம்மையின் புழுக்கம் முகம் காட்டியது
உள் அரங்கில் நடக்க வேண்டடியது
அம்பலத்தில் 
வாழ்க்கையே வேடிக்கைப் பார்த்தலின்
நிகழ்வாக அரங்கேறியது
விரைந்து காற்றின் விசையில்
நகர்கிறது வெயிலை மறைத்த மேகம்

ந.க.துறைவன்.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

புதுக்கவிதை. Empty Re: புதுக்கவிதை.

Post by ந.க.துறைவன் Thu 22 Sep 2016 - 3:47

உயிர் பறிக்கும் மின்வயர்…!!
*
மின்சார வயரைக் கடித்து
தற்கொலை செய்துக் கொள்ளும்  
புதியதொரு உத்தியை
அறிமுகமாக்கியுள்ளார்கள்
உங்கள் வீட்டில்
அவளோ / அவளோ இருந்தால்
பத்திரமான பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
அவர்கள் மனப்போக்கை அறிந்து
சற்றே விட்டுக் கொடுத்து
பழகி பாசமாயிருங்கள்.
எதற்கெடுத்தாலும் அவர்கள் மீது
குற்றப் பத்திரிகை வாசிக்காதீர்கள்.
அவளோ / அவனோ எதற்கேனும்
கோபித்து முரண்டு பிடிக்க
இடம் தராதீர்கள்.
அவர்களி்ல் எவரேனும் தற்கொலைக்கு
முயற்சிக்கலாம் உங்களுக்கே தெரியாமல்
வீட்டில் எட்டாத உயரத்தில்
இருக்கும் அறுந்த மின்சாரவயர்களை
உடனே பழுது பாருங்கள்
குடும்பபப் பிரச்னையில் ஏடாகூடமாக
ஏதேனும் நடக்க வாய்ப்பில்லாமல்
உயிர்களைப் பாதுகாக்கலாம்.
ந.க.துறைவன்.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

புதுக்கவிதை. Empty Re: புதுக்கவிதை.

Post by ந.க.துறைவன் Sun 25 Sep 2016 - 4:03

மனதிற்கிசைவாய்…!!
 
தொடங்கிய வேலைகள் இன்னும்
முடிவுபெறாமல் அப்படியே இருக்கிறது.
அதற்கடுத்ததாய் காத்திருக்கும் வேலைகள்
எப்பொழுது தொடங்குவதென
வழியறியாமல் திகைக்கிறது மனம்
திட்டமிட்ட வேலைககள் முடிக்கவே
இயலாத சுமையின் பாரம் தாங்காமல்
தவிக்கையில் சட்டென எதிர்பாராமல்
நிறைவேறி விட்டது எந்தவொரு
வில்லங்கமுமில்லாமல் திட்டமிடாத
சிலவேலைகள் மனதிற்கிசைவாய்…!!
ந.க.துறைவன்

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

புதுக்கவிதை. Empty Re: புதுக்கவிதை.

Post by சே.குமார் Tue 27 Sep 2016 - 20:27

தொடங்கிய வேலைகள் இங்கும் முடிவு பெறாமலேயே இருக்கு ஐயா..
புதிதாய் சில வேலைகள் மனதிற்கு இசைவாய்...
அருமை.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

புதுக்கவிதை. Empty Re: புதுக்கவிதை.

Post by ந.க.துறைவன் Thu 29 Sep 2016 - 4:07

நன்றி குமார்...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

புதுக்கவிதை. Empty Re: புதுக்கவிதை.

Post by ந.க.துறைவன் Thu 29 Sep 2016 - 4:07

ஒன்றுமில்லை…!!
 
குளிர்க் காற்றின் மென்மையில்
காலை நடைபயிற்சியில் இருக்கும்போது
எதிரே வந்த நெருங்கிய நண்பர்
என்னிடம் பேச்சுக் கொடுத்து
நலம் விசாரித்தார் கவனமாய்
பரிமாற்றலுக்குப் பிறகு
மீண்டும் வேறேன்ன செய்தி என்றேன்.
ஓன்றுமில்லை என்றார்
ஒன்றுமில்லை என்று சொன்னவர்
அரைமணி நேரம் தன் சோகச்
சுமைகளைக் கொட்டித் தீர்த்தார்.
ஒன்றுமில்லை என்பதில் தான்
எத்தனை உருவகங்கள் அவர்
உள்மனதில்
புதைந்திருக்கிறதெனப் புரிந்தது.
வெங்காயத்தின்
உள்ளே ஒன்றுமில்லை தான்
அதன் மேலே அடர்த்தியாக
அடுக்கியிருக்கிறது ஒவ்வொன்றாகக்
காய்ந்த சருகுகள்.


*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

புதுக்கவிதை. Empty Re: புதுக்கவிதை.

Post by ந.க.துறைவன் Mon 7 Nov 2016 - 6:42

இருத்தல்…!!
 
 
இருக்கிறேன் என்று சொன்னவர்
எங்கே இருக்கிறார் என்று சொல்லவில்லை.
அருகிலா, தொலைவிலா, வீட்டிற்குள்ளேயா?
எங்கே என்று அனுமானிக்க முடியவில்லை.
இருக்கிறேன் என்பது நிகழ்காலந்தான்
அதுவே
கடந்த காலமாகக் கூட இருக்கலாம்.
இப்பொழுது அவர் தன்னிருப்பை
இருண்மையில் உணர்த்தவே
இருக்கிறேன் என்றாரா?
இருப்பவர்களும்
கடந்துச்செல்பவர்களும் தான்
எப்பொழுதும் இருப்பார்கள்.
இருக்கிறேன் என்பது இருப்பின் நிலை
இருக்கிறவர்களின் முரண் மனநிலை.
இறக்கப் போகிறவர்களின் கனவு நிலை.

ந.க.துறைவன்.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

புதுக்கவிதை. Empty Re: புதுக்கவிதை.

Post by ந.க.துறைவன் Fri 25 Nov 2016 - 3:52

ஒன்றுமில்லை…!!
 
குளிர்க் காற்றின் மென்மையில்
காலை நடைபயிற்சியில் இருக்கும்போது
எதிரே வந்த நெருங்கிய நண்பர்
என்னிடம் பேச்சுக் கொடுத்து
நலம் விசாரித்தார் கவனமாய்
பரிமாற்றலுக்குப் பிறகு
மீண்டும் வேறேன்ன செய்தி என்றேன்.
ஓன்றுமில்லை என்றார்
ஒன்றுமில்லை என்று சொன்னவர்
அரைமணி நேரம் தன் சோகச்
சுமைகளைக் கொட்டித் தீர்த்தார்.
ஒன்றுமில்லை என்பதில் தான்
எத்தனை உருவகங்கள் அவர்
உள்மனதில்
புதைந்திருக்கிறதெனப் புரிந்தது.
வெங்காயத்தின்
உள்ளே ஒன்றுமில்லை தான்
அதன் மேலே அடர்த்தியாக
அடுக்கியிருக்கின்றது ஒவ்வொன்றாகக்
காய்ந்த மனவெம்மைச் சருகுகள்.
ந.க.துறைவன்.

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

புதுக்கவிதை. Empty Re: புதுக்கவிதை.

Post by ந.க.துறைவன் Fri 23 Dec 2016 - 3:48

பொய்களை நம்பாதீர்கள்.
*
 
பொய்களை நம்பாதீர்கள்
புதிய நோட்டுகள்
தாராளமாக கிடைக்கிறது.
பொய்களை நம்பாதீர்கள்
யாரும் க்யூவில் நிற்பதில்லை
யாரும் மயங்கி சாகவில்லை.
பொய்களை நம்பாதீர்கள்
ஊடகங்கள் தான்
ஊருக்குள் நடப்பதை
தவறாகப் பொய்யுரைக்கிறது.
பொய்களை நம்பாதீர்கள்
ஊழல் கருப்பு பணம்
நிச்சயமாக வெளியே
வந்து விடும்.
யாரும் தப்பவே முடியாது?
 
பொருளாதாரம் வெகு
ஸ்திரமாக இருக்கிறது.
பொய்களை நம்பாதீர்கள்
மக்கள் ரொம்ப நல்லவர்கள்
பணபரிமாற்றத் திட்டத்தை
மக்கள் பரிபூரணமாக
ஏற்றுக் கொண்டார்கள்.
அரசுக்கு
ஆதரவாக இருக்கிறார்கள்
பொய்களை நம்பாதீர்கள்
எதிர்க்கட்சி  நண்பர்கள்
என்னை விமர்சிக்கவில்லை
நான் எல்லோருக்குமே
உற்ற நண்பன்.
பொய்களை நம்புாதீர்கள்
மக்கள் சேவைக்காகவே நான்
எனக்காகவே மக்கள்.
இந்தியா மோ - டிஜிட்டில் நோக்கி
முன்னேற்றட்டும்.
( மோடிஜிக்கு சமர்ப்பணம் )

ந.க.துறைவன்
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

புதுக்கவிதை. Empty Re: புதுக்கவிதை.

Post by ந.க.துறைவன் Sat 24 Dec 2016 - 3:56

நிலைமை ரொம்ப மோசமாக இல்லை..!!
*
 
நிலைமை ரொம்ப மோசமாக இல்லை
சமாளிக்கக் கூடிய வகையில் தானிருக்கிறது
சமாளிப்பதற்கான சாத்தியக் கூறுகள்
அத்தனையும் ஆராயப்பட்டுள்ளது.
எப்படியும் சமாளிக்கலாம் என்றுதான்
மையக் குழு முடிவு செய்துள்ளது
நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
விமர்சகர்கள் கரித்துக் கொட்டுகிறார்கள்.
நிலைமை ரொம்ப மோசமாக இல்லை
சமாளிக்கக் கூடிய வகையில் தானிருக்கிறது
எப்படியும் சமாளித்தே தீர வேண்டும் என்பதில்
வைராக்கியமாக இருக்கிறோம் என்பதை மட்டும்
தைரியமாகச் சொல்லிக் கொள்கிறோம்.
சமாளித்து விடுவோம் என்று நம்புங்கள்.
சமாளிப்பது என்பதும் ஒருவகையில்
சர்க்கஸ் வித்தை தான் தெரியுமா?
நிலைமை ரொம்ப மோசமாக இல்லை
சமாளிக்கும் தருணத்தில் கொஞ்சம்
சங்கடங்கள் இருக்கத்தான் செய்யும்
அதை தாங்கிக் கொள்ள மனப்பக்குவம் தேவை.
உங்களுக்கும் இருக்கிறது எனக்கும் இருக்கிறது
சங்கடங்களை வென்றுதான் நாம்
சாதனைகளைப் படைக்க வேண்டும்
சமாளிப்பதற்குள் யாருக்கும் எதுவும்
நேர்ந்து விடாது பார்த்துக் கொள்வோம்.
நிலைமை ரொம்ப மோசமாக இல்லை
சமாளிக்கும் வகையில் தானிருக்கிறது
ஆனால், எப்படி சமாளிப்பது என்பதில்
கொஞ்சம் சிக்கல் உருவாகிவிட்டது?
சிக்கலிலிருந்து தான் சிக்கலை
விடுவிக்க வேண்டும்…??
 

ந.க.துறைவன்.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

புதுக்கவிதை. Empty Re: புதுக்கவிதை.

Post by ந.க.துறைவன் Wed 24 May 2017 - 7:03

அக்னி நட்சத்திரம்.
 
மதிய கோடை வெயில் உக்கிர
அனல் முகத்தைத் தீய்த்தது.
பாதையில் நடக்கையில்
கால்கள் தடுமாறின. கண்கள்
கிறங்கின அந்நொடியில் எங்கே 
ஒதுங்கி நிற்பதென புரியவில்லை.
இடமும் தென்படவில்லை.
கடந்து செல்லும் பாதசாரிகள்
வியர்வையை வழித்து வழித்து
சூரியனை நோக்கி வீசியெரிகிறார்கள்.
வீதியெங்கும் காய்கிறது
நெரிசல் இரைச்சல் எரிச்சல் உண்டாக்கி
விரைகின்ற புகைக்கக்கிய வாகனங்களின்
பெருநரக வாதை.
தலைக்கு மேலே இருக்கும்
சூரியனைப் பாத்தேன். கண்கள் கூசின.
மேகமில்லாத வெண்மை படர்ந்த
வானவெளியெலாரு காக்கை
குருவிகள் தென்படவில்லை.
எங்கும் வெப்பக் கதிரொளி.
ந.க. துறைவன்.

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

புதுக்கவிதை. Empty Re: புதுக்கவிதை.

Post by ந.க.துறைவன் Sun 28 May 2017 - 9:14

பருஉடல்…!!
*
நேற்றைய மனச்சோர்வு இன்றும்
நீங்கவில்லையெனினும் உளம்
திடமான தெம்புடன் இருப்பதாகவே
உணர்கிறேன். யாரோ ஒருவரின்
குரலின் தொனி பார்வை என்மீதான
அக்கரையோடு அழைப்பு விடுக்கிறது.
இருப்பினும் அதனை செவியுறுகிறேன்
என்ன சொல்வாரோ என்ற தயக்கம்?
என்ன கேட்பாரோ என்ற வெட்கம்?
எப்படி உணர்வாரோ என்ற அமைதின்மை?
எனக்குள் வெளியேறாத வார்த்தைகள்
உள்ளுக்குள் ஒளிந்துக் கொண்டிருக்கிறது.
என்னறை எங்கும் வெளிச்சம் மறைந்து
இருள் சூழ்கிறது. வேம்புக் காற்றில் அலைகின்றன
இலைகள். மங்கிய ஒளியெங்கும் பரவிய நேரம்
பறவைகள் ரெண்டு கடந்து பறந்து போகின்றன.
திறந்த சன்னல் வழியே கருப்பு இருட்டை
ஊடுருவிப் பார்க்கிறேன். மின்கம்பத்தின் விளக்கின்
கீழ் விளையாடிக் களிக்கின்ற விட்டில்கள்
மரணத் தவிப்பில் உதிர்ந்து உதிர்ந்து வீழ்கின்ற
அந்நொடிப்பொழுது  கனத்துரைந்து அதிர்கின்றன
என்புதோல் போர்த்திய என் பருஉடல்…!!
ந.க.துறைவன்.

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

புதுக்கவிதை. Empty Re: புதுக்கவிதை.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum