Latest topics
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
மனசின் பக்கம் : ஊரையெல்லாம்...
3 posters
Page 1 of 1
மனசின் பக்கம் : ஊரையெல்லாம்...
சரவணன் அண்ணனின் இரண்டாவது குறும்படமான அகம் புறத்தில் சிறு குறைகள் இருந்தாலும் அனைவராலும் பாராட்டப்பட்டுள்ளது. குறிப்பாக வசனங்கள் எல்லோரையும் கவர்ந்திருக்கிறது. தனது படம் குறித்த நண்பர்களின் கேள்விகளுக்கு எல்லாம் மிகச் சிறப்பான பதிலோடு தனது தளத்தில் ஒரு பகிர்வு போட்டிருக்கிறார். அவர் இன்னும் சிறப்பான படங்களைக் கொடுப்பார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இன்னும் சிறப்பாக வளர்வீர்கள் அண்ணா... விரைவில் உங்களை வெள்ளித் திரையில் காண்போம். இதுவரை அகம் புறம் பார்க்காதவர்கள் கீழே இருக்கும் இணைப்பில் சென்று பாருங்கள்.
***
நம்மை எல்லாம் தனது நகைச்சுவையால் சிரிக்க வைக்கும் நடிகர் விவேக் அவர்களின் 13 வயது மகன் பிரசன்னா டெங்கு காய்ச்சலால் மரணம் அடைந்துள்ளார். மிகவும் வருத்தமான செய்தி... ஒரு தகப்பனாய் மகனை இழந்து தவிக்கும் விவேக்கிற்கு யாராலும் ஆறுதல் சொல்ல முடியாதுதான்... இருப்பினும் அவர் இழப்பில் இருந்து விரைவில் மீண்டு வரவேண்டும். இந்த டெங்குவினால் எத்தனை எத்தனையோ பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்பதை நாம் தினசரிகளிலும் தொலைக்காட்சிகளிலும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இதைத் தடுக்க முடியாவிட்டாலும் நம்மை நெருங்காதவண்ணம் நாமாவது பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.
பிரசன்னா உன் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
***
கஞ்சா கருப்பு தனது சொந்த ஊரில் இலவசப் பள்ளிக்கூடம் நடத்தும் செய்தி முகநூலில் ஏனோ இப்போதுதான் அவர் ஆரம்பித்திருப்பது போல உலா வருகிறது. அவர் ஆரம்பித்து இரண்டு மூன்று ஆண்டுகளாகிவிட்டது. நான் தான் படிக்கவில்லை என் ஊர் குழந்தைகளாவது படிக்கட்டுமே என்று சொல்லித்தான் ஆரம்பித்தார். அவரின் டாக்டர் மனைவிதான் பள்ளியையும் பார்த்துக் கொள்கிறார். இதனிடையே வேல் முருகன் போர்வெல்ஸ் படத்தில் நடித்த போது சிவகங்கைப் பகுதியில் சில கிராமங்களில் சொந்தச் செலவில் போர் போட்டுக் கொடுத்திருக்கிறார் என்றும் செய்திகள் வந்தன... அதுவும் உண்மைதான். இதை ஏன் சொல்ல வருகிறேன் என்றால் முகநூலில் தற்போது வைரலாகிவரும் அந்த செய்தி கண்டதும் ஒரு நண்பர் இது உண்மையா... இதற்கு சான்று இருக்கா... என்றெல்லாம் கேட்டு... போர் போட்டுக் கொடுத்தார் என்பதை எல்லாம் ஆதாரமில்லாமல் நம்ப முடியாது என ஒரு பக்கப் பதிவு போட்டிருந்தார்.
அவர் இதன் நம்பகத்தன்மையை அறியவே முகநூலில் கேட்டிருக்கிறார். அவருக்கு நானும் சில நண்பர்களும் பதில் சொன்னதும் அப்படியா சந்தோஷம் என்று சொல்லியிருந்தார். நாம் மாற்றம் முன்னேற்றம் என்று நம்மை ஏமாற்ற வரும் கூட்டத்தை, செய்வார்கள் என்ற நம்பிக்கையோடு அரியணை ஏற்றி அமர வைத்து கோவணத்துடன் அமர்ந்து கொள்கிறோம்... மாற்றம் முன்னேற்றம் எல்லாம் அவர்கள் குடும்பத்தோடு நின்று விடுகிறது... நமக்குத்தான் மாற்றமும் இல்லை முன்னேற்றமும் இல்லை... தான் சம்பாதித்த பணத்தில் தன்னால் முடிந்த ஒரு செயலை ஒருவர் செய்யும் போது இதற்கு சாட்சி இருக்கா... இதுல உப்பு இருக்கான்னு கேட்போம்... என்ன மனிதர்கள் நாம்..?
***
அகல் தீபாவளி மின்னிதழில் எனது சிறுகதைக்கும் இடமளித்திருக்கிறார்களாம்... முகநூலில் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் வசம் எனது பரிசு பெற்ற சிறுகதையும் மற்றொரு சிறுகதையும் இருக்கு... எந்தக் கதை என்று அறியும் ஆவலில் காத்திருக்கிறேன்... தீபாவளி மலரில் எனது கதைகள் வருமா என கல்லூரியில் படித்த காலத்தில் ஏங்கியிருக்கிறேன். மற்ற நாட்களில் வந்த கதையோ கவிதையோ தீபாவளி மலர்களில் மட்டும் வருவதில்லை. அது இந்த வருட தீபாவளிக்கு நனவாகிறது. அகல் மின்னிதழ் குழுவுக்கு நன்றி.
***
எங்கள் வார்டு குறித்து தினகரன் நகர்மலர் பகுதியில் செய்தி வந்திருக்கு. அதில் எனது துணைவியாரும் கருத்துச் சொல்லியிருக்கிறார். அந்தக் கருத்தும் அவரது போட்டோவும் தினகரனில் வந்திருந்ததாம். நான் இணையத்தில் பார்த்து எடுத்துப் படித்தேன்... நாம கிறுக்கும் போது நம்ம துணையும் கொஞ்சமாவது நம்மளைப் போல் இருக்க வேண்டாமா என்ன... அவர் என்னைவிட நன்றாக கவிதை எழுதுவார்.
***
இங்கு குளிர்காலம் ஆரம்பமாகிறது... வெயிலின் உக்கிரம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது... இரவு 7 மணி வரைக்கும் வீட்டுக்குப் போகமாட்டேன் என்று அடம்பிடித்த சூரியன் ஐந்தரை மணிக்கெல்லாம் கிளம்ப ஆரம்பித்து விட்டது. காலையில் நல்ல காற்று இருக்கிறது... மதியும் வெயில் இன்னும் கொஞ்சம் கூடுதலாகத்தான் இருக்கிறது... இனி நான்கு ஐந்து மாதங்களுக்கு வெயிலின் உக்கிரத்தில் இருந்து தப்பி குளிரில் குதூகலிக்கலாம்... என்ன அலுவலகத்தில்தான் அரபிப் பெண்கள் வெயில் காலத்தில் எப்படி ஏசி பயன்படுத்துவார்களோ அப்படியே குளிரிலும் பயன்படுத்துவார்கள். நாமதான் தண்ணீரில் நனைந்த கோழியாய்... மார்கழி மாதம் அதிகாலையில் கண்மாயில் குளித்து விட்டு... வெடவெடக்கும் குளிரில் பற்கள் டக்கு...டக்குன்னு அடிச்சிக்க... வீடு நோக்கி ஓடிய நாட்களை நினைத்தபடி... அதே சூழலில் அமர்ந்திருக்க வேண்டும்.
***
ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு சிறுகதை எழுதினேன்... கொஞ்சம் காதல் கலந்த கதை... வித்தியாசமான பார்வையில்... மழை பெய்யும் மாலை... ஆட்டுக் கசாலை... இதுதான் கதையின் களம்... கதை மாந்தராய் மூவர் மட்டுமே.... எனக்குப் பிடித்திருந்தது. ஒரு இதழுக்கு அனுப்பும் பொருட்டு நண்பனுடன் பேசியபோது அவன் எங்கே கதையைச் சொல்லு என்றான்.... சொன்னேன்... நீயாடா எழுதினே என்றான் சிரிப்போடு... ஆமாடா நாந்தான் ஏன்..? என்றேன் அப்பிராணியாய்... மூதேவி நீ இப்படியெல்லாம் எழுத மாட்டியே... நீ உன்னோட போக்குல போடா... எதுக்குடா இப்படியெல்லாம் கதை எழுதிக்கிட்டு என்றான்... டேய் நான் எழுதிய முதல் தொடர்கதை முழுக்க முழுக்க காதல்தானேடா... எல்லாருக்கும் பிடித்திருந்தது... அது போக இந்தக் கதையும் வித்தியாசமாத்தான்டா இருக்கு என்றதும் என்னமோ போ... உனக்கு கதை எழுதத் தெரிந்த அளவு அதைச் சொல்லத் தெரியலைன்னு நினைக்கிறேன்... ஒருவேளை அதை முழுவதும் படித்தால் எனக்கு உன்னோட கதை பிடிக்கலாம் என்று சொல்லிச் சிரித்தான். கதை சொல்றது எப்படின்னு படிக்கணும் போல... சரி சரவணன் அண்ணனுக்கிட்ட கேட்டு தெரிஞ்சிக்க வேண்டியதுதான் என்ற முடிவோடு ரெண்டு மூணு நாளைக்கு முன்னாலயே துண்டைப் போட்டு வச்சிருக்கேன்...
***
பத்து எண்றதுக்குள்ள படம் பார்த்தேன்... காரில் சம்மர் ஷாட் அடிப்பதும்... பறப்பதும்... வீலிங் செய்வதும்... என இன்னும் இன்னுமாய் விக்ரம் செய்கிறார். இதை எல்லாம் ரஜினி செய்தால் ரசிப்போம்... ஏன்னா ஸ்டைல்ன்னா ரஜினின்னு நாம கொண்டாடிட்டோம்... கால்ல கயிரைக்கட்டி ஓடுற காரை இழுத்து நிப்பாட்டினாலும்... ஷூவுல தீப்பொறி பறக்க நடந்தாலும் கைதட்டி ரசிப்போம்... குருவி, சுறான்னு விஐய் செய்து பார்த்து நொந்து போயிக் கிடக்காரு... இப்ப புலியும் பதுங்கிருச்சு... விக்ரம் உடலை வருத்தி நடிக்ககூடிய நல்ல நடிகன்... அவரும் எதற்காக இது போன்ற சூறாவளிக்குள் சிக்கிக் கொண்டார் என்று தெரியவில்லை... கதை சொல்லும் போதே எனக்கு இது செட் ஆகாது என்று சொல்லியிருக்க வேண்டாமா? காரில் பயணிக்கும் கதை, பத்து எண்ணுறதுக்குள்ள முடியும் விக்ரமின் வேலைகள், அழகான சமந்தா என எல்லாம் இருந்தும் படத்தை ரசிக்க முடியவில்லை என்றாலும் இதுவரை உடம்பை வருத்தி நடித்த விக்ரம் இதில் சாதாரணமாக நடித்திருப்பதால் அவருக்காக ரசிக்கலாம்... மற்றபடி படம் ரொம்பச் சுமார்.
***
சில பாடல்களை கேட்டே இருக்க மாட்டோம்... ஆனால் எப்போதாவது தற்செயலாக கேட்க நேர்ந்தால் அது நம்மைப் பிடித்துக் கொள்ளும். அப்படித்தான் மன்னாரு படத்தில் வரும் இந்தப் பாடலும்... இதுவரை கேட்டதேயில்லை... இன்றுதான் முதன் முதலில் கேட்டேன்... கிருஷ்ணராஜ் அவர்களும் எஸ்.பி. சைலஷா அம்மாவும் பாடியிருக்கிறார்கள். 80களின் மெலோடியை ஞாபகப்படுத்திறது பாடல்... இசை உதயன் என்பவராம்... மிகவும் அழகாக செய்திருக்கிறார்... கேட்டுப்பாருங்கள் உங்களுக்கும் பிடிக்கும்.
மனசின் பக்கம் மீண்டும் வரும்...
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: மனசின் பக்கம் : ஊரையெல்லாம்...
நிரம்ப தகவல்களோடு தொடரும் மனசின் பக்கம் அசத்தல்! விவேக் மகனுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
பகிர்வுக்கும் நன்றிப்பா!
பகிர்வுக்கும் நன்றிப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மனசின் பக்கம் : ஊரையெல்லாம்...
Nisha wrote:நிரம்ப தகவல்களோடு தொடரும் மனசின் பக்கம் அசத்தல்! விவேக் மகனுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
பகிர்வுக்கும் நன்றிப்பா!
கடைசியாக அப்புக்குட்டியின் பாடல் காட்சிகளைப் பார்க்க வில்லையா ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மனசின் பக்கம் : ஊரையெல்லாம்...
ஊரையெல்லாம் காவல் காக்கும் அய்யனாரு சாமி . சுப்பராக இருக்குல்ல... ! மறுபடி கேட்கணும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மனசின் பக்கம் : ஊரையெல்லாம்...
நண்பன் wrote:Nisha wrote:நிரம்ப தகவல்களோடு தொடரும் மனசின் பக்கம் அசத்தல்! விவேக் மகனுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
பகிர்வுக்கும் நன்றிப்பா!
கடைசியாக அப்புக்குட்டியின் பாடல் காட்சிகளைப் பார்க்க வில்லையா ?
அப்புக்குட்டி யாரு?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» மனசின் பக்கம் : சுகந்தானுங்களே...
» மனசின் பக்கம் : படைப்புக்கள்
» மனசின் பக்கம் : இனியவை சில...
» மனசின் பக்கம்: மனசுக்கு விடுமுறை
» மனசின் பக்கம் : ஜல்லியும் தப்பட்டையும்
» மனசின் பக்கம் : படைப்புக்கள்
» மனசின் பக்கம் : இனியவை சில...
» மனசின் பக்கம்: மனசுக்கு விடுமுறை
» மனசின் பக்கம் : ஜல்லியும் தப்பட்டையும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|