Latest topics
» மாம்பழ குல்ஃபிby rammalar Yesterday at 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41
» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46
» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Tue 28 May 2024 - 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Tue 28 May 2024 - 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
விலைவாசி உயர்வுக்கு காரணம் என்ன?புரியாமல் மக்கள் குழப்பம்
Page 1 of 1
விலைவாசி உயர்வுக்கு காரணம் என்ன?புரியாமல் மக்கள் குழப்பம்
இந்தியாவின் முதன்மையான தொழில் விவசாயம். நாட்டின் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில், உணவுப் பொருள்களுக்கான தேவையும் பல மடங்கு அதிகரித்து வருகிறது.உணவுப் பொருள்களின் விலை உயர்வு மக்களிடையே கவலையை ஏற்படுத்தி வருகிறது. விலைவாசி உயர்வுக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், உண்மை நிலை வேறு மாதிரியாக உள்ளது.
உணவு தானியங்கள் உற்பத்தி குறைந்து வருவது, பெட்ரோலிய பொருள்கள் விலையேற்றம், முன்பேர வர்த்தகம் மற்றும் தேவையில்லா ஏற்றுமதி போன்றவற்றால் தான் விலைவாசி தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.உணவு தானியங்கள் உற்பத்தி, மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியாவில் பல மடங்கு குறைவாகவே உள்ளது. இந்தியாவில், ஒரு எக்டரில் நெல் உற்பத்தி, 2.20 டன் என்ற அளவில் தான் உள்ளது. அதேசமயம், ஜப்பான் நாட்டில் ஒரு எக்டரில், 6.50 டன்னும், சீனாவில் 6.70 டன்னும், எகிப்தில் 7.50 டன்னும், இஸ்ரேலில் 5.50 டன் என்ற அளவிலும் நெல் உற்பத்தியாகிறது, இத்தனைக்கும் மேலே குறிப்பிட்டுள்ள நாடுகள் அனைத்தும், முழு அளவில் விவசாயத்தை மேற்கொள்ளும் நாடுகள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
அதே சமயம், அங்கு மேற்கொள்ளப்படும் நவீன தொழில்நுட்பங்கள், விவசாயிகளுக்கு அந்நாட்டு அரசு தரும் ஆலோசனைகளால் தான் அந்நாடுகளால் அதிக உற்பத்தி செய்ய முடிகிறது.தமிழகத்தைப் பொறுத்தமட்டில், 6.21 கோடி டன் அளவுக்கு உணவு தானியங்களுக்கான தேவைப்பாடு உள்ளது. ஆனால், இங்கு 5.69 கோடி டன்னுக்கு தான் உற்பத்தி உள்ளது. தமிழகத்தில் 51 லட்சம் எக்டர் நிலத்தில் 19 லட்சம் எக்டரில் தான் பயிர் செய்யப்படுகிறது.
கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும், லட்சக்கணக்கான மக்கள் தாங்கள் சார்ந்திருந்த விவசாய தொழிலை விட்டு, வெளியேறி உள்ளனர் என்பது வருந்தத்தக்க செய்தியாகும். இந்தியாவில், 2.30 லட்சம் எக்டரில் 1.05 கோடி டன் அளவுக்கு பருப்பு வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இது, போதியளவிற்கு இல்லாததால், ஆண்டுதோறும் 30 லட்சம் டன் அளவுக்கு பருப்பு இறக்குமதி செய்யப்படுகிறது. பருப்பு வகைகளை தொடர்ந்து இறக்குமதி செய்வதால், அதன் விலை நிலையில்லாமல் உள்ளது. 118 கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில், 2001ம் ஆண்டுக்குப் பிறகு வேளாண் உற்பத்தி 20 சதவீதம் குறைந்துள்ளது. பெட்ரோலிய பொருள்கள் விலையும், உயர்ந்து கொண்டே போகிறது.
மத்திய அரசு, பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்டுவதற்காக, அந்நிறுவனங்களே பெட்ரோலின் விலையை நிர்ணயம் செய்து கொள்ள அனுமதி வழங்கியது. இதனால், பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இழப்பு என்று கூறிக் கொள்ளும், இந்நிறுவனங்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் மத்திய அரசுக்கு கலால், சுங்கம், பங்கு ஈவு தொகை மீதான மற்றும் சேவை வரிகள் மூலம் 4 லட்சத்து 10 ஆயிரத்து 842 கோடி ரூபாய் வழங்கியுள்ளன.இதே காலத்தில், மாநில அரசுகளுக்கு, மதிப்பு கூட்டு வரி (ஙஅகூ) மற்றும் “சர்ஜார்ஜ்’ எனப்படும் கூடுதல் வரி முதலியவற்றின் மூலம் 2 லட்சத்து 63 ஆயிரத்து 766 கோடி ரூபாயை வழங்கியுள்ளன.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: விலைவாசி உயர்வுக்கு காரணம் என்ன?புரியாமல் மக்கள் குழப்பம்
இந்நிறுவனங்களுக்கு மத்திய அரசு, 23 ஆயிரத்து 325 கோடி ரூபாய் மானியம் வழங்கியுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும், இந்நிறுவனங்களால் மத்திய அரசுக்கு 1லட்சத்து 11 ஆயிரத்து 779 கோடி ரூபாயும், மாநில அரசுகளுக்கு 72 ஆயிரத்து 89 கோடி ரூபாயும் வருவாய் கிடைத்துள்ளது. இதே காலத்தில், 1 லட்சத்து 26 ஆயிரத்து 288 கோடி ரூபாயை இந்நிறுவனங்கள், தங்கள் ஆண்டறிக்கையில் வருவாயாக காட்டியுள்ளன.
நாம் ஒவ்வொருவரும், ஒரு லிட்டர் பெட்ரோல் போடும் போது, மொத்த தொகையில் 50 சதவீத தொகையை வரியாக செலுத்துகிறோம். பெட்ரோலிய பொருள்களின் விலையை கட்டுக்குள் வைத்தாலே, உணவு பொருள்களின் விலை உயர்வை தடுத்து நிறுத்தலாம். “ஆன்-லைன்’ எனப்படும் முன்பேர வர்த்தகத்தில், நம் நாட்டில் 23 நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இதில் தங்கம், வெள்ளி உள்ளிட்ட உலோகங்கள் மற்றும் உணவு தானியங்கள் மீது முன்பேர வர்த்தகம் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிறுவனங்கள், பொருள்களை கையில் வைக்காமலேயே வியாபாரத்தில் ஈடுபடுகின்றன. இவை நிர்ணயிக்கும் விலையைத் தான் வியாபாரிகள் ஏற்க வேண்டும். இந்த முன்பேர வர்த்தக சந்தைகள் வாயிலாக, மத்திய அரசுக்கு சேவை வரி மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது.
சென்ற டிசம்பர் வரை இச்சந்தைகளில், 95 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடந்துள்ளது. நடப்பாண்டு ஜனவரி மாதத்தில், இதில் தனியாவைச் சேர்த்ததன் விளைவாக, 40 ரூபாய்க்கு விற்ற தனியா தற்போது 50 ரூபாயாக அதிகரித்துள்ளது. முன்பேர வர்த்தகத்தில் சர்க்கரை இருந்த போது, இதன் விலை கடுமையாக உயர்ந்தது. பிறகு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அதன் விலை சரிவடைந்தது. இந்நிலையில், மீண்டும் சர்க்கரையை இதில் இணைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.அண்மையில், டில்லியில் நடந்த மாநில முதல்வர்கள் மாநாட்டில், தமிழக துணை முதல்வர் ஸ்டாலின், இந்த ஆன்-லைன் வர்த்தகத்திலிருந்து உணவு தானியங்களை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்தாக, தேவையில்லாத ஏற்றுமதிக்கு அரசு விதித்த தடையை, குறைந்தது ஆறு மாத காலத்திற்காவது நீட்டிக்க வேண்டும். நம் நாட்டில், விளையும் உணவு தானியங்கள், இங்குள்ள மக்களின் தேவைகளை பூர்த்தி செய்த பிறகு தான் ஏற்றுமதி செய்ய வேண்டும். சமீப காலமாக, அரசு உணவு தானியங்களை அதிகளவில் ஏற்றுமதி செய்து வருகிறது. இதனால், உணவு பொருள்களுக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது.இதற்கு சிறந்த உதாரணமாக, வெங்காயத்தை எடுத்துக் கொள்ளலாம். உள்நாட்டில் உற்பத்தி குறைந்து போன நிலையில், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இதனால், இதன் விலை கடுமையாக உயர்ந்தது. வெளிநாடுகளில் இருந்து, இறக்குமதியும் செய்யப்பட்டது.
இந்த நிலையில், தற்போது இதன் உற்பத்தி அதிகரித்ததால், இதன் விலை மிகவும் சரிவடைந்தது. இதையடுத்து, இதன் மீதான ஏற்றுமதி தடை மீண்டும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. எனவே, ஏற்றுமதியை பொறுத்தமட்டில் அரசு தெளிவான கொள்கையை கடைபிடிக்க வேண்டும்.இதுபோன்ற காரணங்களால் தான், உணவு பொருள்களின் விலை உள்நாட்டில் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இதற்கான தீர்வு குறித்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுச் செயலர் கே.மோகன் ராஜ் கூறியதாவது:உணவு தானியங்களை ஆன்-லைன் வர்த்தகத்தில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும். “ஸ்பெக்ட்ரம்’ விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தை முடக்குவதைப் போல, விலைவாசி உயர்வை எதிர்த்தும் போராட வேண்டும். அரசு விலை உயர்வை கட்டுப்படுத்த குழுக்களை அமைக்கும் போது, அதில் பொதுமக்கள், வணிகர்கள், விவசாயிகள் ஆகியோரையும் இடம்பெறச் செய்ய வேண்டும். பெட்ரோலிய நிறுவனங்கள், சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, பெட்ரோல் விலையை நிர்ணயித்துக் கொள்ளும் அனுமதியை, மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். மேலும், உள்நாட்டு தேவை பூர்த்தி செய்யப்பட்ட பிறகே, உணவு தானியங்களை ஏற்றுமதி செய்ய அனுமதிக்க வேண்டும். பன்னாட்டு நிறுவனங்கள் பொருள்களின் விலையையும், எடையையும் மூன்று மாதங்களுக்கு உயர்த்தாமல் இருக்கும் வகையில், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்ட நடவடிக்கைகளை எடுத்தாலே, விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டு வரலாம்.இவ்வாறு மோகன்ராஜ் தெரிவித்தார்.
நாம் ஒவ்வொருவரும், ஒரு லிட்டர் பெட்ரோல் போடும் போது, மொத்த தொகையில் 50 சதவீத தொகையை வரியாக செலுத்துகிறோம். பெட்ரோலிய பொருள்களின் விலையை கட்டுக்குள் வைத்தாலே, உணவு பொருள்களின் விலை உயர்வை தடுத்து நிறுத்தலாம். “ஆன்-லைன்’ எனப்படும் முன்பேர வர்த்தகத்தில், நம் நாட்டில் 23 நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இதில் தங்கம், வெள்ளி உள்ளிட்ட உலோகங்கள் மற்றும் உணவு தானியங்கள் மீது முன்பேர வர்த்தகம் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிறுவனங்கள், பொருள்களை கையில் வைக்காமலேயே வியாபாரத்தில் ஈடுபடுகின்றன. இவை நிர்ணயிக்கும் விலையைத் தான் வியாபாரிகள் ஏற்க வேண்டும். இந்த முன்பேர வர்த்தக சந்தைகள் வாயிலாக, மத்திய அரசுக்கு சேவை வரி மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது.
சென்ற டிசம்பர் வரை இச்சந்தைகளில், 95 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடந்துள்ளது. நடப்பாண்டு ஜனவரி மாதத்தில், இதில் தனியாவைச் சேர்த்ததன் விளைவாக, 40 ரூபாய்க்கு விற்ற தனியா தற்போது 50 ரூபாயாக அதிகரித்துள்ளது. முன்பேர வர்த்தகத்தில் சர்க்கரை இருந்த போது, இதன் விலை கடுமையாக உயர்ந்தது. பிறகு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அதன் விலை சரிவடைந்தது. இந்நிலையில், மீண்டும் சர்க்கரையை இதில் இணைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.அண்மையில், டில்லியில் நடந்த மாநில முதல்வர்கள் மாநாட்டில், தமிழக துணை முதல்வர் ஸ்டாலின், இந்த ஆன்-லைன் வர்த்தகத்திலிருந்து உணவு தானியங்களை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்தாக, தேவையில்லாத ஏற்றுமதிக்கு அரசு விதித்த தடையை, குறைந்தது ஆறு மாத காலத்திற்காவது நீட்டிக்க வேண்டும். நம் நாட்டில், விளையும் உணவு தானியங்கள், இங்குள்ள மக்களின் தேவைகளை பூர்த்தி செய்த பிறகு தான் ஏற்றுமதி செய்ய வேண்டும். சமீப காலமாக, அரசு உணவு தானியங்களை அதிகளவில் ஏற்றுமதி செய்து வருகிறது. இதனால், உணவு பொருள்களுக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது.இதற்கு சிறந்த உதாரணமாக, வெங்காயத்தை எடுத்துக் கொள்ளலாம். உள்நாட்டில் உற்பத்தி குறைந்து போன நிலையில், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இதனால், இதன் விலை கடுமையாக உயர்ந்தது. வெளிநாடுகளில் இருந்து, இறக்குமதியும் செய்யப்பட்டது.
இந்த நிலையில், தற்போது இதன் உற்பத்தி அதிகரித்ததால், இதன் விலை மிகவும் சரிவடைந்தது. இதையடுத்து, இதன் மீதான ஏற்றுமதி தடை மீண்டும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. எனவே, ஏற்றுமதியை பொறுத்தமட்டில் அரசு தெளிவான கொள்கையை கடைபிடிக்க வேண்டும்.இதுபோன்ற காரணங்களால் தான், உணவு பொருள்களின் விலை உள்நாட்டில் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இதற்கான தீர்வு குறித்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுச் செயலர் கே.மோகன் ராஜ் கூறியதாவது:உணவு தானியங்களை ஆன்-லைன் வர்த்தகத்தில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும். “ஸ்பெக்ட்ரம்’ விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தை முடக்குவதைப் போல, விலைவாசி உயர்வை எதிர்த்தும் போராட வேண்டும். அரசு விலை உயர்வை கட்டுப்படுத்த குழுக்களை அமைக்கும் போது, அதில் பொதுமக்கள், வணிகர்கள், விவசாயிகள் ஆகியோரையும் இடம்பெறச் செய்ய வேண்டும். பெட்ரோலிய நிறுவனங்கள், சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, பெட்ரோல் விலையை நிர்ணயித்துக் கொள்ளும் அனுமதியை, மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். மேலும், உள்நாட்டு தேவை பூர்த்தி செய்யப்பட்ட பிறகே, உணவு தானியங்களை ஏற்றுமதி செய்ய அனுமதிக்க வேண்டும். பன்னாட்டு நிறுவனங்கள் பொருள்களின் விலையையும், எடையையும் மூன்று மாதங்களுக்கு உயர்த்தாமல் இருக்கும் வகையில், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்ட நடவடிக்கைகளை எடுத்தாலே, விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டு வரலாம்.இவ்வாறு மோகன்ராஜ் தெரிவித்தார்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் என்ன? - விரிவான அலசல்
» தலைவருக்கு என்ன திடீர் குழப்பம்…!
» ‘காதலர் தினம்’ படம் பார்க்கப் போவதில் என்ன குழப்பம்?
» மக்கள் வரிப்பணம் பல நூறு கோடி ரூபாய் பாழ் : மெத்தனமே காரணம்
» தோல்விக்கு என்ன காரணம்?
» தலைவருக்கு என்ன திடீர் குழப்பம்…!
» ‘காதலர் தினம்’ படம் பார்க்கப் போவதில் என்ன குழப்பம்?
» மக்கள் வரிப்பணம் பல நூறு கோடி ரூபாய் பாழ் : மெத்தனமே காரணம்
» தோல்விக்கு என்ன காரணம்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|