Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
தேடுங்கள்...தெரியும்..
+2
Nisha
selvakumarm
6 posters
Page 1 of 1
தேடுங்கள்...தெரியும்..
என்
வரமொன்றைக்
காணவில்லை..
எனக்கு
உதவுங்கள்..
கண்களை மூடி
தேடிப்பாருங்கள்.
தூரத்தில்
ஒளிப்புள்ளியாய்
தெரியும்.
துரத்தி ஓடாதீர்கள்.
சில நேரம்
உங்கள்
அருகிலும்
திரியும்.
மூடி மறைக்கலாம்
என
முட்டாளாகாதீர்கள்
மூன்று
நொடிகள் போதும்..
முளைவெடித்து
கிளை பரப்பி
மாரமாய்
மாறும்.
ஆறு
குளங்களென
அதை
தேடிப்பார்க்காதீர்கள்..
அது
எப்போதும்
சாகாது...
நல்ல வாசமென்று
நாசமாகாதீர்கள்
எந்த
வாசமும்
பிடிக்காமல்
போவீர்கள்.
அலைபேசி,
குறுஞ்செய்தி,
இணையவழி
விசாரிக்காதீர்கள்.
அதன்
தொடர்பு எல்லை
இன்னும்
அறுதியிட்டு
முடியவில்லை.
கடல் தாண்டிய
நண்பர்களும்
என்
கவலையில்
பங்கு கொள்ளலாம்.
களவு போனதுக்கு
கால்கள்
இருக்காது..
இறக்கைகள்
இருக்கும்.
விசாக்கள்
இல்லாத
வெளிநாட்டுப்பறவை
போல
உலாவித்திரியும்..
உற்றுப்பாருங்கள்
நிமிர்ந்தே
நடக்கும்.
கண்கள்
திறந்து மூடும்.
நாசிகள்
மூச்சும் விடும்.
அதன்
வாயருகில்
காது கொண்டு
கேளுங்கள்..
சில நேரம்
கவிதைகள்
சொல்லிக்
கொண்டிருக்கும்.
அது
எப்போதும்
ஒளியைச்
சிந்திக்
கொண்டிருக்கும்.
ஓராயிர
அடையாளம்
அதைப்பற்றிச்
சொல்லலாம்..
ஒருவேளை
அதைப்பார்த்தால்..
நான்
தேடுவதைச்
சொன்னாலும்....
அது குறித்து
கவிதை
எழுதுவதை
சொல்லாதீர்கள்....
வரமொன்றைக்
காணவில்லை..
எனக்கு
உதவுங்கள்..
கண்களை மூடி
தேடிப்பாருங்கள்.
தூரத்தில்
ஒளிப்புள்ளியாய்
தெரியும்.
துரத்தி ஓடாதீர்கள்.
சில நேரம்
உங்கள்
அருகிலும்
திரியும்.
மூடி மறைக்கலாம்
என
முட்டாளாகாதீர்கள்
மூன்று
நொடிகள் போதும்..
முளைவெடித்து
கிளை பரப்பி
மாரமாய்
மாறும்.
ஆறு
குளங்களென
அதை
தேடிப்பார்க்காதீர்கள்..
அது
எப்போதும்
சாகாது...
நல்ல வாசமென்று
நாசமாகாதீர்கள்
எந்த
வாசமும்
பிடிக்காமல்
போவீர்கள்.
அலைபேசி,
குறுஞ்செய்தி,
இணையவழி
விசாரிக்காதீர்கள்.
அதன்
தொடர்பு எல்லை
இன்னும்
அறுதியிட்டு
முடியவில்லை.
கடல் தாண்டிய
நண்பர்களும்
என்
கவலையில்
பங்கு கொள்ளலாம்.
களவு போனதுக்கு
கால்கள்
இருக்காது..
இறக்கைகள்
இருக்கும்.
விசாக்கள்
இல்லாத
வெளிநாட்டுப்பறவை
போல
உலாவித்திரியும்..
உற்றுப்பாருங்கள்
நிமிர்ந்தே
நடக்கும்.
கண்கள்
திறந்து மூடும்.
நாசிகள்
மூச்சும் விடும்.
அதன்
வாயருகில்
காது கொண்டு
கேளுங்கள்..
சில நேரம்
கவிதைகள்
சொல்லிக்
கொண்டிருக்கும்.
அது
எப்போதும்
ஒளியைச்
சிந்திக்
கொண்டிருக்கும்.
ஓராயிர
அடையாளம்
அதைப்பற்றிச்
சொல்லலாம்..
ஒருவேளை
அதைப்பார்த்தால்..
நான்
தேடுவதைச்
சொன்னாலும்....
அது குறித்து
கவிதை
எழுதுவதை
சொல்லாதீர்கள்....
selvakumarm- புதுமுகம்
- பதிவுகள்:- : 33
மதிப்பீடுகள் : 10
Re: தேடுங்கள்...தெரியும்..
வித்தியாசமாக வாசிப்பவர்களை அவர்கள் நினைக்கும் கோணத்தில் சிந்திக்க வைக்கும்கவிதை.
உங்கள் வரம் எப்படி காணாமல் போகும் ? வரமென நினைப்பது என்றுமுடன் தானே இருக்கும்.
அப்படி காணாமல் போனாலும் அது வரமென்றால் நீங்கள் தேடவும் வேண்டாம்.தானாய் திரும்ப வரும் .
கவிதை வரிகள் படிக்கும் போது தான் நாங்கள் தமிழில் இன்னும் எதையும் அறியவில்லை என புரிகின்றது.
அருமை செல்வா. இன்னும் நிரம்ப எழுதுங்கள்.
உங்கள் வரம் எப்படி காணாமல் போகும் ? வரமென நினைப்பது என்றுமுடன் தானே இருக்கும்.
அப்படி காணாமல் போனாலும் அது வரமென்றால் நீங்கள் தேடவும் வேண்டாம்.தானாய் திரும்ப வரும் .
கவிதை வரிகள் படிக்கும் போது தான் நாங்கள் தமிழில் இன்னும் எதையும் அறியவில்லை என புரிகின்றது.
அருமை செல்வா. இன்னும் நிரம்ப எழுதுங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தேடுங்கள்...தெரியும்..
மூன்று தரம் படித்து விட்டேன் ஒவ்வொரு தரமும் ஒவ்வொரு வகையான புரிதல் கிடைக்கிறது அக்கா சொன்னது போன்று தமிழில் நான் இன்னும் எவ்வளவு படிக்க வேண்டியுள்ளது எதையுமே தொலைக்காமல் என்னமோ எல்லாம் தேடிக்கொண்டிருக்கிறோம்
மூடி மறைக்க முடியாது பூட்டுப்போட்டு மூட முடியாத எமது எண்ணங்கள்
இன்னும் எழுதுங்கள் உங்கள் கவிதைப் பாணியை நான் அறிய வேண்டும் படிக்க வேண்டும்
நன்றியுடன் நண்பன்
மூடி மறைக்க முடியாது பூட்டுப்போட்டு மூட முடியாத எமது எண்ணங்கள்
இன்னும் எழுதுங்கள் உங்கள் கவிதைப் பாணியை நான் அறிய வேண்டும் படிக்க வேண்டும்
நன்றியுடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தேடுங்கள்...தெரியும்..
வித்தியாசமான கோணத்தில் கவிதை
நான் அந்த வரத்தை தேடிப்பிடித்து வழித்தடம் மாற்றி அனுப்பி வைக்கிறேன் அண்ணா
நான் அந்த வரத்தை தேடிப்பிடித்து வழித்தடம் மாற்றி அனுப்பி வைக்கிறேன் அண்ணா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தேடுங்கள்...தெரியும்..
ஆஹா...
அருமை அண்ணா....
அருமை அண்ணா....
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: தேடுங்கள்...தெரியும்..
பானுஷபானா wrote:வித்தியாசமான கோணத்தில் கவிதை
நான் அந்த வரத்தை தேடிப்பிடித்து வழித்தடம் மாற்றி அனுப்பி வைக்கிறேன் அண்ணா
ஓஹோ!
நான் ஒன்று சொல்வேன் சார் தொலைத்தது என்ன என அவருக்கே தெரியாதாம்!கருப்புக்கண்ணாடியை கழட்டி விட்டு தேடினால் அவரே கண்டும் பிடித்தும் விடுவார்.
அவருக்குள் இருப்பதை அவர் எங்கெங்கோ தேடுகின்றார் என நான் சொன்னால் நீங்கள் எங்கே போய் தேடுவீர்கள் பானு!
ஆனாலும் நான் ஒன்று சொல்வேன் சார் தொலைத்ததை தேடிக்கண்டு பிடிக்கவும் பாசமான தங்கை இருப்பதில் மகிழ்ச்சியே! ஹாஹா!
அவர் மனைவி மகள்கள் சென்னையில் தான் இருக்கின்றார்கள் பானு!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தேடுங்கள்...தெரியும்..
நான் அந்த வரத்தை தேடிப்பிடித்து வழித்தடம் மாற்றி அனுப்பி வைக்கிறேன் அண்ணா/////
நன்றி பானும்மா...
ஆனால் வரங்கள் சாபங்களாவதாக...செய்திகள்..
விட்டு விடலாம் அப்படியே...
நாம் கவிதைகள் எழுதுவோம்
நன்றி பானும்மா...
ஆனால் வரங்கள் சாபங்களாவதாக...செய்திகள்..
விட்டு விடலாம் அப்படியே...
நாம் கவிதைகள் எழுதுவோம்
selvakumarm- புதுமுகம்
- பதிவுகள்:- : 33
மதிப்பீடுகள் : 10
Re: தேடுங்கள்...தெரியும்..
நான் அந்த வரத்தை தேடிப்பிடித்து வழித்தடம் மாற்றி அனுப்பி வைக்கிறேன் அண்ணா/////
நன்றி பானும்மா...
ஆனால் வரங்கள் சாபங்களாவதாக...செய்திகள்..
விட்டு விடலாம் அப்படியே...
நாம் கவிதைகள் எழுதுவோம்
நன்றி பானும்மா...
ஆனால் வரங்கள் சாபங்களாவதாக...செய்திகள்..
விட்டு விடலாம் அப்படியே...
நாம் கவிதைகள் எழுதுவோம்
selvakumarm- புதுமுகம்
- பதிவுகள்:- : 33
மதிப்பீடுகள் : 10
Re: தேடுங்கள்...தெரியும்..
selvakumarm wrote:நான் அந்த வரத்தை தேடிப்பிடித்து வழித்தடம் மாற்றி அனுப்பி வைக்கிறேன் அண்ணா/////
நன்றி பானும்மா...
ஆனால் வரங்கள் சாபங்களாவதாக...செய்திகள்..
விட்டு விடலாம் அப்படியே...
நாம் கவிதைகள் எழுதுவோம்
தாங்கள் அண்ணன் என்று உச்சரிச்சது அடியேனையா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தேடுங்கள்...தெரியும்..
இல்லை! அண்ணா என பானு செல்வா சாரை சொன்னது!
அவருக்கு போனில் மேற்கோள் செய்ய வரவில்லை போலும். அதனால் காப்பி செய்து இட்டிருக்கின்றார். நீங்கள் இங்கே இன்னும் பின்னூட்டம் இடவில்லைங்க சாரே!
அவருக்கு போனில் மேற்கோள் செய்ய வரவில்லை போலும். அதனால் காப்பி செய்து இட்டிருக்கின்றார். நீங்கள் இங்கே இன்னும் பின்னூட்டம் இடவில்லைங்க சாரே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தேடுங்கள்...தெரியும்..
அன்பின் நண்பர்களே.....நான் முழுக்க முழுக்க அலைபேசியில் விரலச்சுவதால் பல வசதிகளை உபயோகிக்க முடிவதில்லை.சேனையின் வலைப்பக்கத்திற்கும்,அலைபேசிப்பக்கத்திற்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. ஒரு நீண்ட பயணத்திற்கான முன்னோட்டமாகவே எழுதிக்கொண்டிருக்கிறேன்....எழுத நிறையவும்,வாசிக்க நீங்களும் இருக்கும் போது...எழுதுகிறேன்..
பாடாப்பொருளை பாடுவதில் விருப்பம் கொண்டவன்..யாரும் தொடாத விசயங்கள் தான் எழுதுவேன்...நெடிய வாசிப்பு அனுபவமே எழுதத் தூண்டுகிறது...
கைக்கணினி வாங்க முடியா சூழல்....ஓரளவு நிஷா என் நிலை அறிவார்.. ஒரு ஒளிப்புள்ளி தேடியே பயணிக்கிறேன்...அந்த வசந்தவாசல் திறக்கும் போது...உங்களுக்கே முதலில் சொல்வேன்....ஓர் நாள் வெல்வேன்...
காலம் சரியாகும் போது உங்களுடன் இன்னும் நெருக்கமாவேன்...
காத்திருக்கிறேன்...,
நன்றி..
நிஷா,
நண்பன் முஸம்மில்,
குமார்
பானு
மலர்..
மற்றும் சேனைக்கு...
பின்னூட்டத்திற்கு நன்றிகள்..
பாடாப்பொருளை பாடுவதில் விருப்பம் கொண்டவன்..யாரும் தொடாத விசயங்கள் தான் எழுதுவேன்...நெடிய வாசிப்பு அனுபவமே எழுதத் தூண்டுகிறது...
கைக்கணினி வாங்க முடியா சூழல்....ஓரளவு நிஷா என் நிலை அறிவார்.. ஒரு ஒளிப்புள்ளி தேடியே பயணிக்கிறேன்...அந்த வசந்தவாசல் திறக்கும் போது...உங்களுக்கே முதலில் சொல்வேன்....ஓர் நாள் வெல்வேன்...
காலம் சரியாகும் போது உங்களுடன் இன்னும் நெருக்கமாவேன்...
காத்திருக்கிறேன்...,
நன்றி..
நிஷா,
நண்பன் முஸம்மில்,
குமார்
பானு
மலர்..
மற்றும் சேனைக்கு...
பின்னூட்டத்திற்கு நன்றிகள்..
selvakumarm- புதுமுகம்
- பதிவுகள்:- : 33
மதிப்பீடுகள் : 10
Re: தேடுங்கள்...தெரியும்..
ஒவ்வொருத்தருடைய தேடல்களும் அவரவர்களின் நிலையினைப் பொறுத்து வித்தியாசப்படுகிறது அடைந்திடாத தேடல்களை அடைவதற்கு நிலைகளையும் மாற்றிப் பார்க்க வேண்டும் தேடல் உள்ளவரை அடைவது சிரமமாகாது என்பது திண்ணம் தொடருங்கள்
Re: தேடுங்கள்...தெரியும்..
selvakumarm wrote:அன்பின் நண்பர்களே.....நான் முழுக்க முழுக்க அலைபேசியில் விரலச்சுவதால் பல வசதிகளை உபயோகிக்க முடிவதில்லை.சேனையின் வலைப்பக்கத்திற்கும்,அலைபேசிப்பக்கத்திற்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. ஒரு நீண்ட பயணத்திற்கான முன்னோட்டமாகவே எழுதிக்கொண்டிருக்கிறேன்....எழுத நிறையவும்,வாசிக்க நீங்களும் இருக்கும் போது...எழுதுகிறேன்..
பாடாப்பொருளை பாடுவதில் விருப்பம் கொண்டவன்..யாரும் தொடாத விசயங்கள் தான் எழுதுவேன்...நெடிய வாசிப்பு அனுபவமே எழுதத் தூண்டுகிறது...
கைக்கணினி வாங்க முடியா சூழல்....ஓரளவு நிஷா என் நிலை அறிவார்.. ஒரு ஒளிப்புள்ளி தேடியே பயணிக்கிறேன்...அந்த வசந்தவாசல் திறக்கும் போது...உங்களுக்கே முதலில் சொல்வேன்....ஓர் நாள் வெல்வேன்...
காலம் சரியாகும் போது உங்களுடன் இன்னும் நெருக்கமாவேன்...
காத்திருக்கிறேன்...,
நன்றி..
நிஷா,
நண்பன் முஸம்மில்,
குமார்
பானு
மலர்..
மற்றும் சேனைக்கு...
பின்னூட்டத்திற்கு நன்றிகள்..
இப்பவே சூப்பரா கலக்குறிங்க கவிஞரே
சீக்கிரம் மடிக்கணனி கிடைக்க வேண்டுகிறேன்
அப்றம் இன்னும் அசத்தலாக இருக்கும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|