Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
கர்ப்பம் யாதெனில்?
5 posters
Page 1 of 1
கர்ப்பம் யாதெனில்?
கவிதை சுமப்பதும்
கர்ப்பம் சுமப்பதும்
ஒன்றுதான்.
நெஞ்சுக்கூட்டுக்குள்
வார்த்தையின்
உயிரணுக்கள்
வந்துமோதும்
வேகத்தில் தான்
கவிதை
கர்ப்பம்
தரிக்கிறது.
படுக்கவிடாது..
உண்ணுதல்
குமட்டும்..
சித்தம்
வேறேதும்
பிடிக்காமல்
வாந்தியெடுக்கும்.
பிஞ்சுக்கால்கள்
வைத்து
மூளையை
உதைக்கும்.
தாம்பத்யம்
சிற்றின்பமென்றால்,
இது
வார்த்தைகள்
இணையும்
பேரின்பம்
இது.
இதயம் கொள்ளும்
இந்த
எழுத்து நேசம்..
கொழுத்துத்திரியும்
கூடா நட்பல்ல..
செத்தபின்னும்
மறையா
சித்திரக்காதல்...
மொழிகள்
பார்ப்பதில்லை..
வலிகள்
வரையும்
வார்த்தை
ஓவியங்கள்..
நேசிப்பவர்
எங்கிருப்பினும்
வந்துவிடும்
கவிதைக் காதல்.
வயிறு
சுமந்து சரிவதாய்..
வார்த்தைகள்
திரண்டு
பிரசவமாகிறது
கவிதை..
ஆயுதப்பிரசவ
ஆபத்து
கவிதைக்கு
எப்போதும்
கிடையாது..
பெற்றுப்போட்ட
கவிதைக்கு
பெயரும்
வைக்கவேண்டும்
பிள்ளைக்குப்
போலவே..
எல்லாக் கவிதையும்
பொன்குஞ்சுகள்
தான்..
பெற்ற தாய்க்கு..
பொட்டுவைப்பதும்
பூச்சூட்டி
மகிழ்வதும்..
பார்ப்போர்,
படிப்போர்
அதன்
உச்சிமுகர்ந்து
முத்தம் ஒன்று
கொடுத்துவிட்டால்..
நித்தம்
கருத்தரித்து
தாயாக
தாவும்
மனசு..
உணவூட்டல்
போலவே..
கவிதைகளும்
பின்னூட்டத்தில்
வளரும்.
நூறேனும்
சொல்லலாம்
ஒற்றுமை..
வேற்றுமையும்
வேற்று
உவமையும்
உங்களுக்கிருந்தால்
சொல்லி
அனுப்புங்கள்..
இந்தக்
கவிதைக்
குழந்தையிடமே...
http://naanselva.blogspot.in/2016/01/blog-post_22.html?m=1
கர்ப்பம் சுமப்பதும்
ஒன்றுதான்.
நெஞ்சுக்கூட்டுக்குள்
வார்த்தையின்
உயிரணுக்கள்
வந்துமோதும்
வேகத்தில் தான்
கவிதை
கர்ப்பம்
தரிக்கிறது.
படுக்கவிடாது..
உண்ணுதல்
குமட்டும்..
சித்தம்
வேறேதும்
பிடிக்காமல்
வாந்தியெடுக்கும்.
பிஞ்சுக்கால்கள்
வைத்து
மூளையை
உதைக்கும்.
தாம்பத்யம்
சிற்றின்பமென்றால்,
இது
வார்த்தைகள்
இணையும்
பேரின்பம்
இது.
இதயம் கொள்ளும்
இந்த
எழுத்து நேசம்..
கொழுத்துத்திரியும்
கூடா நட்பல்ல..
செத்தபின்னும்
மறையா
சித்திரக்காதல்...
மொழிகள்
பார்ப்பதில்லை..
வலிகள்
வரையும்
வார்த்தை
ஓவியங்கள்..
நேசிப்பவர்
எங்கிருப்பினும்
வந்துவிடும்
கவிதைக் காதல்.
வயிறு
சுமந்து சரிவதாய்..
வார்த்தைகள்
திரண்டு
பிரசவமாகிறது
கவிதை..
ஆயுதப்பிரசவ
ஆபத்து
கவிதைக்கு
எப்போதும்
கிடையாது..
பெற்றுப்போட்ட
கவிதைக்கு
பெயரும்
வைக்கவேண்டும்
பிள்ளைக்குப்
போலவே..
எல்லாக் கவிதையும்
பொன்குஞ்சுகள்
தான்..
பெற்ற தாய்க்கு..
பொட்டுவைப்பதும்
பூச்சூட்டி
மகிழ்வதும்..
பார்ப்போர்,
படிப்போர்
அதன்
உச்சிமுகர்ந்து
முத்தம் ஒன்று
கொடுத்துவிட்டால்..
நித்தம்
கருத்தரித்து
தாயாக
தாவும்
மனசு..
உணவூட்டல்
போலவே..
கவிதைகளும்
பின்னூட்டத்தில்
வளரும்.
நூறேனும்
சொல்லலாம்
ஒற்றுமை..
வேற்றுமையும்
வேற்று
உவமையும்
உங்களுக்கிருந்தால்
சொல்லி
அனுப்புங்கள்..
இந்தக்
கவிதைக்
குழந்தையிடமே...
http://naanselva.blogspot.in/2016/01/blog-post_22.html?m=1
selvakumarm- புதுமுகம்
- பதிவுகள்:- : 33
மதிப்பீடுகள் : 10
Re: கர்ப்பம் யாதெனில்?
அலைபேசியில் தட்டச்சுவதால்,,,எடிட் செய்ய முடியவில்ல..மன்னிக்கவும்...சில பிழைகளுக்காக..
selvakumarm- புதுமுகம்
- பதிவுகள்:- : 33
மதிப்பீடுகள் : 10
Re: கர்ப்பம் யாதெனில்?
எழுத்துப்பிழை ஏதும் இல்லை செல்வா சார், இருந்தாலும் நான் திருத்தி விடுவேன். அலைபேசியில் தமிழ் தட்டச்சுட்டு பதிவது எப்படி என உங்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
சம்ஸ், நண்பன் நோட் திஸ் பாயிண்ட்!ஊருக்கு போனால் பதிவு போட பயன் படும்.
சம்ஸ், நண்பன் நோட் திஸ் பாயிண்ட்!ஊருக்கு போனால் பதிவு போட பயன் படும்.
Last edited by Nisha on Sat 23 Jan 2016 - 22:39; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கர்ப்பம் யாதெனில்?
வாவ் ரொம்ப அழகான வரிகளில் கவிதைக் குழந்தை.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கர்ப்பம் யாதெனில்?
நிஜம் தான்! அத்தனையும் அற்புதமான வரிகள், ஒவ்வொரு படைப்பும் பிரசவம் தான்,படைப்பை வெளியிட்டு விட்டு காத்திருத்தல்? எவ்ரேனும் தூக்க மாட்டார்களா என ஏங்கும் குழந்தை மன நிலை ஒத்தது.
எல்லாக் கவிதையும்
பொன்குஞ்சுகள்
தான்..
பெற்ற தாய்க்கு..
பொட்டுவைப்பதும்
பூச்சூட்டி
மகிழ்வதும்..
பார்ப்போர்,
படிப்போர்
அதன்
உச்சிமுகர்ந்து
முத்தம் ஒன்று
கொடுத்துவிட்டால்..
ஒரு கவிஞனாய் உள்ளத்து எதிர்பார்ப்பை எழுதிச்சென்ற விதம் அருமை,
செத்த பின்னும் மறையா சித்திரக்காதல்! எத்தனை அழகான உவமானம்!இதயம் கொள்ளும்
இந்த
எழுத்து நேசம்..
கொழுத்துத்திரியும்
கூடா நட்பல்ல..
செத்தபின்னும்
மறையா
சித்திரக்காதல்...
அருமை செல்வா! இன்னும் இன்னும் நிரம்ப எழுதுங்கள். கவிதைகளோடு நில்லாமல் எல்லாமே எழுதுங்கள்.
படிக்க, கருத்திட நாங்கள் காத்திருக்கின்றோம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கர்ப்பம் யாதெனில்?
பானுஷபானா wrote:வாவ் ரொம்ப அழகான வரிகளில் கவிதைக் குழந்தை.
பானு அவர் வலைப்பூவிலும் கருத்தை போட்டு விடுங்கமா,! சேனைப்புகழ் உலகெங்கும் பரவட்டும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கர்ப்பம் யாதெனில்?
வாவ் சூப்பர் சூப்பர்
கர்ப்பம் யாதெனில்
என்ற கேள்வில் உங்கள்
உள்ளத்திலிருந்து மனக்கருவறையில்
இருந்து உதித்த அத்தனையும் முத்துக்கள்
எவ்வளவு அழகாய் இணைக்கப்பட்டுள்ளது வரிகள்
பிரமாதம் பிரமாதம்
நிறைமாதக் கர்ப்பினியாய் நீங்கள் பிரசவித்த கவிதை அதற்கிட்ட பெயர் இன்னும் சிறப்பு
நான் சில நேரம் கவிதை கிறுக்குவேன் அது என்னவோ தெரியல குறைமாதத்தில் பிரசவித்தது போல் என் பார்வைக்கு தெரிகிறது
ஹா ஹா
தொடருங்கள் கவிஞரே
நன்றியுடன் நண்பன்
கர்ப்பம் யாதெனில்
என்ற கேள்வில் உங்கள்
உள்ளத்திலிருந்து மனக்கருவறையில்
இருந்து உதித்த அத்தனையும் முத்துக்கள்
எவ்வளவு அழகாய் இணைக்கப்பட்டுள்ளது வரிகள்
பிரமாதம் பிரமாதம்
நிறைமாதக் கர்ப்பினியாய் நீங்கள் பிரசவித்த கவிதை அதற்கிட்ட பெயர் இன்னும் சிறப்பு
நான் சில நேரம் கவிதை கிறுக்குவேன் அது என்னவோ தெரியல குறைமாதத்தில் பிரசவித்தது போல் என் பார்வைக்கு தெரிகிறது
ஹா ஹா
தொடருங்கள் கவிஞரே
நன்றியுடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கர்ப்பம் யாதெனில்?
நன்றி நிஷா...உடனுக்குடன் என் வரிகளை வாசித்து சிலாகிக்கும் உங்களுக்கு...
selvakumarm- புதுமுகம்
- பதிவுகள்:- : 33
மதிப்பீடுகள் : 10
Re: கர்ப்பம் யாதெனில்?
வாவ் ரொம்ப அழகான வரிகளில் கவிதைக் குழந்தை.////
நன்றி பானு சகோதரி..
நன்றி பானு சகோதரி..
selvakumarm- புதுமுகம்
- பதிவுகள்:- : 33
மதிப்பீடுகள் : 10
Re: கர்ப்பம் யாதெனில்?
நான் சில நேரம் கவிதை கிறுக்குவேன் அது என்னவோ தெரியல குறைமாதத்தில் பிரசவித்தது போல் என் பார்வைக்கு தெரிகிறது////
நண்பா எனக்கும் நேர்வதுண்டு...குறைமாதப்பிள்ளைகளும் சிறப்பதுண்டு..
நன்றிகள்..
நண்பா எனக்கும் நேர்வதுண்டு...குறைமாதப்பிள்ளைகளும் சிறப்பதுண்டு..
நன்றிகள்..
selvakumarm- புதுமுகம்
- பதிவுகள்:- : 33
மதிப்பீடுகள் : 10
Similar topics
» மருந்தெனப்படுவது யாதெனில்
» மருந்தெனப்படுவது யாதெனில்….
» அறம் எனப்படுவது யாதெனில்....
» முத்துப்பிள்ளை கர்ப்பம்.
» நடிகை ஷில்பாஷெட்டி கர்ப்பம்
» மருந்தெனப்படுவது யாதெனில்….
» அறம் எனப்படுவது யாதெனில்....
» முத்துப்பிள்ளை கர்ப்பம்.
» நடிகை ஷில்பாஷெட்டி கர்ப்பம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|