சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

என்னைப் பறிச்சவளே..! Khan11

என்னைப் பறிச்சவளே..!

5 posters

Go down

என்னைப் பறிச்சவளே..! Empty என்னைப் பறிச்சவளே..!

Post by சே.குமார் Tue 9 Feb 2016 - 6:15

எதைச் சொல்வேன்...
எப்படிச் சொல்வேன்...
அப்படியே மனசுக்குள்
அடுக்கி வைக்கும்
எண்ணம் ஏதுமில்லை..!
எப்படியும் என் வழியே
வழிந்தோடும் உன் சாரல்..!


நீரெடுக்க நீ வருவேன்னு
காத்திருந்தேன் கரையோரம்...
குனிஞ்சு நீரெடுத்தே...
என்னையும் சேர்த்தெடுத்தே..!

வைக்கோல் படப்போரம்
வைதேகி நீயும் நிற்க...
அஞ்சாறு முறை நானும்
கடந்து போனேனே..!

வழியை மறிச்சு நீ
வாகாய் நிற்கையிலே...
கன்னத்தில் நான் பேசி
கடந்து சென்றேனே..!


முத்த எச்சில் துடைக்காமல்...
கடுங்கோபம் கொள்ளாமல்...
பதிலேதும் பேசாமல்
பார்த்துக்கிட்டு நின்னாயே..!


கருப்பர் கோயிலுக்கு
விளக்குப் போட வருவாயென
விழியில் திரிபோட்டு
வீதியிலே காத்திருந்தேன்..!


காத்திருந்த என்னை நீ
கடந்துதான் போகையிலே
கால் கொலுசு சேதி சொல்லி
முன்னே நான் வந்தேனே..!


உயிர் வந்த சந்தோஷம்
உன் முகத்தில் தீபமேற்ற...
உறவுப் பயத்தால
விலகித்தான் ஓடினாயே..!


திரி நீ போட
எண்ணெய் நானூற்ற
வெட்கி எரிந்த தீபம்
உன் உதட்டுச் சிவப்பாட்டம்
ஓளியைத்தான் பரப்புதடி..!


என்னைப் பறிச்சவளே..! Thaneer+karaiyil+thaamarai


மாமன் மகளேன்னு
மல்லுக்கு நிக்கலையே...
மனசைக் கொடுத்துட்டு
மறுதலிச்சும் போகலையே...


போகும் இடமெல்லாம்
புள்ள நீயும் வந்துபுட்டே...
காணும் இடமெல்லாம்
கள்ளி நீ சிரிக்கிறேடி...


ஆடிபோனபின்னே
ஆவணியும் வரும்போது
தாவணித் துணி மாற்றி
சேலைக்குள் சிரித்தபடி
தாலி நீ வாங்கும் 
நன்நாளை நினைக்கையிலே....


வேப்பம்பூ விரிச்சதுபோல்
மனசு சொக்குதடி..!
இலுப்பை பூவாட்டம்
இதயம் பொங்குதடி..!


அருகம்புல் வேராட்டம்
ஆசை அரும்புதடி...
புளியம்பூ பூத்ததுபோல
புன்னகையும் அரும்புதடி...


அல்லிக் கொடியழகி...
ஆவாரம் பூவழகி...
கன்னக் குழியழகி...
கருவண்டு விழியழகி...
என்னைப் பறிச்சவளே...
இளங்காற்றாய் சிரிச்சவளே...


உன்னைக் கரம்பிடிக்கும்
நாளை எண்ணி
வண்ணக் கனவோட
நானுறங்கிப் போனேனே...!


(படம் இணையத்தில் சுட்டது -  அழகாய் படம் வரைந்த ஓவியருக்கு நன்றி)


(மனசுல இது 100வது கவிதை... எனக்கே ஆச்சர்யமா இருக்கு...)


Read @ Manasu Please click link : http://vayalaan.blogspot.com/2016/02/blog-post_8.html


-'பரிவை' சே.குமார்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

என்னைப் பறிச்சவளே..! Empty Re: என்னைப் பறிச்சவளே..!

Post by நேசமுடன் ஹாசிம் Wed 10 Feb 2016 - 11:23

மிக மிக அருமையான கவிதை 
கவிதை படிக்கும் போதே கவிப் பேரரசு வைரமுத்து கவிதை படித்த உணர்வு பெற்றேன் தொடருங்கள் வாழ்த்துகள் அண்ணா


என்னைப் பறிச்சவளே..! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

என்னைப் பறிச்சவளே..! Empty Re: என்னைப் பறிச்சவளே..!

Post by பானுஷபானா Wed 10 Feb 2016 - 12:24

கவிதை வரிகள் அருமை குமார். 100 வது கவிதைக்கு மனமார்ந்த வாழ்த்துகள்....


படத்துக்கு முன்னால உள்ள வரிகள்படிக்கும் போது காற்றுக்காக எழுதியதோனு நினைத்தேன்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

என்னைப் பறிச்சவளே..! Empty Re: என்னைப் பறிச்சவளே..!

Post by Nisha Wed 10 Feb 2016 - 21:10

காதலர் தினம் வருகின்றதாக்கும் !  

கிராமத்து சூழலை, அழகாக தாவணி போட்ட பெண்ணை ஏங்கி தவிக்கும் காதல் வரிகள், அனுபவித்து எழுதியது போல உணர்வைக்கலந்து உயிர்ப்பாய் இருக்கும் வார்த்தைகள்!

அல்லிக் கொடியழகி...
ஆவாரம் பூவழகி...
கன்னக் குழியழகி...
கருவண்டு விழியழகி...
என்னைப் பறிச்சவளே...
இளங்காற்றாய் சிரிச்சவளே...

அம்மாடியோவ்! வர்ணனைகள் அற்புதம்,இத்தனையும் வாய்க்கப்பெற்ற பெண் கொடுத்து வைச்சவள் தான்,

ஏம்பா இனிமேலாச்சும் இந்த இங்கிலூபீசை விட்டு இப்படி  அழகான தமிழில் காதலை சொல்லுங்கப்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என்னைப் பறிச்சவளே..! Empty Re: என்னைப் பறிச்சவளே..!

Post by Nisha Wed 10 Feb 2016 - 21:11

100 ஆவது கவிதைக்கு வாழ்த்துகள் சீக்கிரம் புத்தகம் போடும் வேலையை பாருங்கள்.

புத்தக வெளியீடுக்கு விமான டிக்கட்டும் அனுப்புங்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என்னைப் பறிச்சவளே..! Empty Re: என்னைப் பறிச்சவளே..!

Post by Nisha Wed 10 Feb 2016 - 21:13

பாருங்கள் வைரமுத்து எழுதினார் என நினைத்து படித்தால் அவர்தான் நினைவில் வருவாராம், அதனால் யார் எழுதினார் என பார்க்காமல் எழுத்தை மட்டும் வைத்து பார்த்தால் எங்க குமாரும் வைரமுத்து தான்,


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என்னைப் பறிச்சவளே..! Empty Re: என்னைப் பறிச்சவளே..!

Post by கவிப்புயல் இனியவன் Thu 11 Feb 2016 - 17:05

மிக மிக அருமையான கவிதை 
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என்னைப் பறிச்சவளே..! Empty Re: என்னைப் பறிச்சவளே..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum