Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
தொடரும் தொடர் பதிவர்கள் அறிமுகம்!
2 posters
Page 1 of 1
தொடரும் தொடர் பதிவர்கள் அறிமுகம்!
பல புதிய பதிவர்களையும்,பழைய பதிவர்களையும், நமக்கு பிடித்தமான பதிவர்களையும் நம் வலைப்பூ மூலம் அறிமுகப்படுத்திடும் அருமையான வாய்ப்பு!
தொடரும் தொடர்பதிவர்கள் எனும் தலைப்பில் மீண்டும் வலையுலகை வலம் வரும் தேரோட்டம்! வளரும் கவிதை முத்து நிலவன் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுக்குள்ளது!
அவரே எஸ்ரா, மாலன், சு.ப வீரபாண்டியன், நந்தினி,சரபோஜி, வைசாலிசெல்வம்,,ஜோசப்பின் என நான் அறியாத பலரை அறிமுகமாக்கி இருந்தார், அதிலும் ஜோசப்பின் எனும் சகோதரியின் பதிவாய் அவர் இணைத்திருந்த பதிவு உணர்வுக்குவியலாய் கண்ணீரில் நனைய வைத்தது!
மற்றவர்களை இன்னும் தொடரவும், படிக்கவும் இயலவில்லை எனினும் நேரம் வாய்ப்பும் போது நிச்சயம் படிப்பேன்!
முத்து நிலவன் அவர்களின் தொடர் அழைப்பில் நான் ஒன்று சொல்வேன் மீரா, செல்வக்குமார் அவர்கள் தொடர்ந்தார், மீரா. செல்வக்குமார் எனக்குப்பிடித்தவை எனும் தலைப்பில் நெற்கொழுவன், கில்லர்ஜி, என் ராஜ பாட்டை, உழைப்பாளி, ஒரு ஊழியனின் குரல்., காவிரி மைந்தன், இஸ்லாமியப்பெண்களளைத்தொடர்ந்து எ ஆல்ப்ஸ்தென்றலையும் இயல்பான தமிழ் என அறிமுகத்துடன் பகிர்ந்து அவர் அறிமுகமாக்கிய வலைப்பதிவர்களையே தொடரும் படி வேண்டியும் இருந்தார்,
அனைவர் வலைப்பூவையும் நுனிப்புல் மேயாமல் நேரம் வாய்க்கும் போது அனைத்தையும் படித்து விட வேண்டும் என குறித்துக்கொண்டேன்.
இந்த தொடரின் படி நானும் பத்து வலைப்பூக்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்பது எழுதப்பட்ட விதி என்பதனால் இதில் குறிப்பிடாமல் விடுபடுவோரை எனக்கு பிடிக்காதோ என கேட்கக்கூடாது என பதிவுக்கு முன்பே சொல்லி விட்டேன்,
எண்களின் வரிகள் கொண்டு எழுத்துக்களை மதிப்பிட்டேன் என்றோ வரிசைப்படுத்தினேன் என்றோ எண்ண வேண்டாம்1
1. இணுவையூர் மயூரன்!
ஈழத்துப்பித்தன் எனும் பெயரில் 11 வயதில் நாட்டை விட்டு சுவிஸுக்கு புலம்பெயர்ந்தாலும் தன் தாய் மண்ணை மட்டுமல்ல தமிழையும் மறக்காது என்னை ஆச்சரியப்படுத்தும் அருமையான தம்பி.
இலங்கையிலும் தமிழ் நாட்டிலும் பிறந்து வளர்ந்து படித்து 25 வயதுக்கு பின் புலம்பெயர்ந்த பலர் தமிழை துச்சமென நினைக்க , தமிழறியாதோராய் நடிக்க, தன்னூரை தன் வலைப்பூவுக்கு பெயராய் இட்டு ஊருக்கும் உறவுக்கும் புகழ் சேர்க்கும் தம்பி! சிறு வயதில் வந்து தமிழை மறக்காததை இட்டு எனக்குள் கொண்டிருந்த இறுமாப்பை நச்சென கொட்டி அக்கா நான் 11 வயசில் இங்கே வந்திட்டன், எனக்கு என் அம்மா தான் தமிழ் சொல்லித்தந்தவ என தன்னை குறித்து அறிமுகப்படுத்திய போது வியந்தேன். இவர் பதிவுகள் தொடர உங்கள் ஆதரவையும், உற்சாகத்தையும் கொட்டுங்கள் உறவுகளே!
2. அவர்கள் உண்மைகள் - மதுரைத்தமிழன்
அவர்கள் உண்மைகளின் பதிவுகளில் கொட்டப்படும் அரசியல் கருத்துகள் நிரம்ப பிடிக்கும்,ஊருக்கு போனால் ஏயார் போட்டில் வைத்தே கடத்துவார்கள் என பயந்து தன்னை மறைத்து தைரியமாய் அரசியலை வாங்கு வாங்கென வாங்கும் வல்லவர், சில பல அருமையான நல் ஆலோசனைகளை எனக்கு ஆரம்ப முதல் வழங்கியதன் மூலம் நல்லவராகவும்,அறிமுகமாகி இருக்கின்றார்.
மனைவியிடம் தினமும் பூரிக்கட்டையால் அடி வாங்குவதாய் சொல்லும் இவர் என்னை சுவிஸுக்குவந்து சந்திக்கும் நாளில் நிஜமாகவே மனைவி
யிடம் பூரிக்கட்டையை கொடுத்து அடி போட வைத்து அதை வீடியோ
வாகவும் புகைப்படமாகவும் எடுத்து பதிவில் போட வேண்டும் என என் ரகசிய சபதத்துக்கும் சொந்தக்காரராயிருக்கின்றார். இந்த ரகசிய சபத விடயத்தை நீங்கள் யாரும் அவரிடம் சொல்லி விடாதீர்கள்..
3.. மனசு - குமார்!
எங்கள் தங்க மனசு குமார், வார்த்தைகளால் ஊஞ்சல் கட்டுவார்,வலைப்
பூவுக்குள் என்னை அழைத்து வந்து எனக்கென வலைப்பூவை திறந்து என்னை வழி நடத்தியதனால் என் வலைப்பூ ஆசானும் ஆனவர்! இவரின் கிராமத்து எழுத்துக்களை படிக்கும் போது அந்த சூழலுக்கு நம்மை கொண்டு சேர்த்து விடும் படி எழுத்தில் மண் வாசனை இருக்கும், அறிமுகம் இல்லாமல் பல வருடங்களாக குமாரின் தொடர் கதைகளுக்கு நான் விசிறி! நீங்களும் படித்து பாருங்கள்.
4. சிந்தையின் சிதறல்கள் -நேசமுடன் ஹாசிம்!
மார்க்கப்பற்றும் சமுதாயசீர்கேடுகளை குறித்தும் தன் எண்ணத்தில் தோன்றுவதை விதையாக்குபவர், சீதனக்கொடுமைக்கெதிரான இவர் எழுத்துக்களும் செயல்பாடுகளும் வியக்க வைக்கும் படி இருக்கும்.
2011 ம் ஆண்டிலிருந்து சேனைத்தமிழ் உலா இணைய தளத்தின் தலைமை நடத்துனராய் இருந்து அத்தளத்தின் மேன்மைக்குரிய தூண்களில் ஒருவராய் இருக்கும் தம்பி!
5. சின்னவள் -சூரியா!
பெயருக்கு ஏற்ப வயதிலும் சின்னவள் தான்! 15 வயதில் சுட்டிப்பெண்ணாய் தன் எண்ணத்தை கோர்வையாக்கி சிரிக்க வைக்கும் இவள் எழுத்து எனக்கு நிரம்ப பிடிக்கும். முயற்சித்தால் எல்லோராலும் எழுத முடியும், ஆனால் நகைச்சுவையாக எவர் மனமும் நோகாது எழுத இவள் போல் சிலரால் மட்டுமே முடியும்., துன்பத்தை துக்கமாக உணரவைக்காது சிரிக்க சொல்லி மலைக்க வைக்கும் பெரிய எழுத்துக்களுக்கு சொந்தக்காரியாய் எதிர்காலத்தில் பிரகாசிக்க நீங்கள் உங்கள் ஆதரவை கொடுங்கள்.
6. ரிலாக்ஸ் பிளீஸ் -வருண்!
பதிவுகளில் எதிர் விவாதங்களுக்கு சொந்தக்காரராய் இருப்பவர், ஒரு பதிவரின் மறைவுக்காக இவரின் இரங்கல் செய்தி இவரின் உள்ளான மனதை புரிய வைக்கும்,தனக்கு வந்தால் தான் தலையிடியும் காய்ச்சலும் என்று பலர் இருக்க சமுதாய் சிந்தனை கருத்துக்களை எழுதுவதால் இவர் பதிவுகளையும் பிடிக்கும், விவாதம்செய்து மாட்டிக்கொண்டு விழிக்க என்னால் முடியாது என்பதால் என் கருத்துக்கள் அரசியல் தவிர்த்த பதிவுகளுக்கு மட்டுமே இடுவேன், ஹாஹா!
7. ஓடி விளையாடு பாப்பா. சக்தி
வலைப்பூவின் தலைப்புத்தான் இப்படி! ஆனால் எழுத்துக்களில் விளையாட்டு இல்லவே இல்லை,எதிர்கால கலெக்டராகும் இலக்கில் சென்று கொண்டிருக்கும் இவளின் பதிவுகளை படித்தால் 18 வயதில் இத்தனை சிந்தனைகளை கொண்டிருக்கும் இவள் போன்றோரால் சமுதாயம் சீர் பெறும் என நம்பிக்கை ஊற்றப்படுகின்றது. சில பல கருத்துக்களும் உதவிட நினைக்கும் நல்ல உள்ளமுமாய் இவளை அறிய பதிவில் சென்று படித்து பாருங்கள்.
8. தோட்டம் - சிவா
இயற்கையோடு ஒன்றிய காய்கறிகளை விளைவித்து தன் அனுபவத்தை அனைவரும் பயனடைய பகிர்பவர்.நான்கைந்து வருடம் முன் தக்காளி, அவரை, கத்தரி, பீற்றூட் என என் வீட்டு பல்கணியில் விதைத்து பயனடைந்தாலும் அதன் பின் ஆர்வம் இல்லாததால் விட்டு விட்டேன். இப்போது இவரின் பதிவுகளை படித்ததிலிருந்து இந்த வருடம் சம்மரில் எங்க வீட்டு பல்கணியில் தோட்டம் போடுவது என முடிவு செய்து இருக்கின்றேன்,
உங்களுக்கும் படங்கள் பார்வைக்கு கிடைக்கும்.
9. என்.கணேசன்
பிரபல்யமான் எழுத்தாளர், நான் இவரின் தொடர்களின் நீண்ட நாள் வாசகி !
10. Ashfa Ashraf Ali
பேஸ்புக்கில் பைந்தமிழ் சோலை எனும் வெண்பாக்களை இயற்ற கற்பிக்கும் குருப்பில் அறிமுகமானார். இலங்கையை சேர்ந்த இவரின் வெண்பாக்கள் படிக்கும் போது உணர்வுக்குள் புகுந்து உள்ளத்தை ஊருவும் விதமாய் இருக்கும். அத்தனை அருமையாய் வார்த்தைகளை கையாண்டு எழுதுகின்றார்.
சான்றாய் ஒரு கவிதை பகிர்கின்றேன். படித்து பாருங்கள்!
கண்ணயரும் வேளைகளில் கலகம் செய்கிறாய் - என்
... கண்ணிரெண்டில் கிடந்துநீயும் குளித்து மகிழ்கிறாய்
எண்ணமெலா மென்னுயிரென் றேங்க வைக்கிறாய் - ஒரு
... எழுதாத புத்தகம்போ லென்னில் கிடக்கிறாய்
வண்ணவண்ணக் கலவைபூசி வந்து போகிறாய் - வரும்
... கனவிலெலாம் வர்ணஜாலம் காட்டி நிற்கிறாய்
தென்றலோடு கலந்துவந்து தொட்டுச் செல்கிறாய் - ஒரு
... துளித்தேனாய் என்னுயிரில் என்று மினிக்கிறாய் !
கொஞ்சிக்கொஞ்சி பேசும்போது குழந்தை யாகிறாய் - ஒரு
... குயிலைப்போல காதில்வந்து கான மிசைக்கிறாய்
அஞ்சியஞ்சி நடக்கும்போது அன்ன மாகிறாய் - சில
... அதிசயத்தி னதிசயமாய் என்னை வதைக்கிறாய்
அஞ்சனங்கள் சூழ்ந்தவிழியா லாட்டிப் படைக்கிறாய் - என்
... ஆளுமையின் விளிம்பினிலே நடந்து செல்கிறாய்
மிஞ்சிமிஞ்சிப் போனாலும் நீயும் நானும்தான் - நம்
... நெஞ்சிரெண்டில் கிடப்பதெல்லாம் காதல் சொர்க்கம்தான் !!
- அஷ்ஃபா அஷ்ரஃப் அலி -
நன்றி!
http://alpsnisha.blogspot.ch/2016/03/blog-post_2.html
தொடரும் தொடர்பதிவர்கள் எனும் தலைப்பில் மீண்டும் வலையுலகை வலம் வரும் தேரோட்டம்! வளரும் கவிதை முத்து நிலவன் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுக்குள்ளது!
அவரே எஸ்ரா, மாலன், சு.ப வீரபாண்டியன், நந்தினி,சரபோஜி, வைசாலிசெல்வம்,,ஜோசப்பின் என நான் அறியாத பலரை அறிமுகமாக்கி இருந்தார், அதிலும் ஜோசப்பின் எனும் சகோதரியின் பதிவாய் அவர் இணைத்திருந்த பதிவு உணர்வுக்குவியலாய் கண்ணீரில் நனைய வைத்தது!
மற்றவர்களை இன்னும் தொடரவும், படிக்கவும் இயலவில்லை எனினும் நேரம் வாய்ப்பும் போது நிச்சயம் படிப்பேன்!
முத்து நிலவன் அவர்களின் தொடர் அழைப்பில் நான் ஒன்று சொல்வேன் மீரா, செல்வக்குமார் அவர்கள் தொடர்ந்தார், மீரா. செல்வக்குமார் எனக்குப்பிடித்தவை எனும் தலைப்பில் நெற்கொழுவன், கில்லர்ஜி, என் ராஜ பாட்டை, உழைப்பாளி, ஒரு ஊழியனின் குரல்., காவிரி மைந்தன், இஸ்லாமியப்பெண்களளைத்தொடர்ந்து எ ஆல்ப்ஸ்தென்றலையும் இயல்பான தமிழ் என அறிமுகத்துடன் பகிர்ந்து அவர் அறிமுகமாக்கிய வலைப்பதிவர்களையே தொடரும் படி வேண்டியும் இருந்தார்,
அனைவர் வலைப்பூவையும் நுனிப்புல் மேயாமல் நேரம் வாய்க்கும் போது அனைத்தையும் படித்து விட வேண்டும் என குறித்துக்கொண்டேன்.
இந்த தொடரின் படி நானும் பத்து வலைப்பூக்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்பது எழுதப்பட்ட விதி என்பதனால் இதில் குறிப்பிடாமல் விடுபடுவோரை எனக்கு பிடிக்காதோ என கேட்கக்கூடாது என பதிவுக்கு முன்பே சொல்லி விட்டேன்,
எண்களின் வரிகள் கொண்டு எழுத்துக்களை மதிப்பிட்டேன் என்றோ வரிசைப்படுத்தினேன் என்றோ எண்ண வேண்டாம்1
1. இணுவையூர் மயூரன்!
ஈழத்துப்பித்தன் எனும் பெயரில் 11 வயதில் நாட்டை விட்டு சுவிஸுக்கு புலம்பெயர்ந்தாலும் தன் தாய் மண்ணை மட்டுமல்ல தமிழையும் மறக்காது என்னை ஆச்சரியப்படுத்தும் அருமையான தம்பி.
இலங்கையிலும் தமிழ் நாட்டிலும் பிறந்து வளர்ந்து படித்து 25 வயதுக்கு பின் புலம்பெயர்ந்த பலர் தமிழை துச்சமென நினைக்க , தமிழறியாதோராய் நடிக்க, தன்னூரை தன் வலைப்பூவுக்கு பெயராய் இட்டு ஊருக்கும் உறவுக்கும் புகழ் சேர்க்கும் தம்பி! சிறு வயதில் வந்து தமிழை மறக்காததை இட்டு எனக்குள் கொண்டிருந்த இறுமாப்பை நச்சென கொட்டி அக்கா நான் 11 வயசில் இங்கே வந்திட்டன், எனக்கு என் அம்மா தான் தமிழ் சொல்லித்தந்தவ என தன்னை குறித்து அறிமுகப்படுத்திய போது வியந்தேன். இவர் பதிவுகள் தொடர உங்கள் ஆதரவையும், உற்சாகத்தையும் கொட்டுங்கள் உறவுகளே!
2. அவர்கள் உண்மைகள் - மதுரைத்தமிழன்
அவர்கள் உண்மைகளின் பதிவுகளில் கொட்டப்படும் அரசியல் கருத்துகள் நிரம்ப பிடிக்கும்,ஊருக்கு போனால் ஏயார் போட்டில் வைத்தே கடத்துவார்கள் என பயந்து தன்னை மறைத்து தைரியமாய் அரசியலை வாங்கு வாங்கென வாங்கும் வல்லவர், சில பல அருமையான நல் ஆலோசனைகளை எனக்கு ஆரம்ப முதல் வழங்கியதன் மூலம் நல்லவராகவும்,அறிமுகமாகி இருக்கின்றார்.
மனைவியிடம் தினமும் பூரிக்கட்டையால் அடி வாங்குவதாய் சொல்லும் இவர் என்னை சுவிஸுக்குவந்து சந்திக்கும் நாளில் நிஜமாகவே மனைவி
யிடம் பூரிக்கட்டையை கொடுத்து அடி போட வைத்து அதை வீடியோ
வாகவும் புகைப்படமாகவும் எடுத்து பதிவில் போட வேண்டும் என என் ரகசிய சபதத்துக்கும் சொந்தக்காரராயிருக்கின்றார். இந்த ரகசிய சபத விடயத்தை நீங்கள் யாரும் அவரிடம் சொல்லி விடாதீர்கள்..
3.. மனசு - குமார்!
எங்கள் தங்க மனசு குமார், வார்த்தைகளால் ஊஞ்சல் கட்டுவார்,வலைப்
பூவுக்குள் என்னை அழைத்து வந்து எனக்கென வலைப்பூவை திறந்து என்னை வழி நடத்தியதனால் என் வலைப்பூ ஆசானும் ஆனவர்! இவரின் கிராமத்து எழுத்துக்களை படிக்கும் போது அந்த சூழலுக்கு நம்மை கொண்டு சேர்த்து விடும் படி எழுத்தில் மண் வாசனை இருக்கும், அறிமுகம் இல்லாமல் பல வருடங்களாக குமாரின் தொடர் கதைகளுக்கு நான் விசிறி! நீங்களும் படித்து பாருங்கள்.
4. சிந்தையின் சிதறல்கள் -நேசமுடன் ஹாசிம்!
மார்க்கப்பற்றும் சமுதாயசீர்கேடுகளை குறித்தும் தன் எண்ணத்தில் தோன்றுவதை விதையாக்குபவர், சீதனக்கொடுமைக்கெதிரான இவர் எழுத்துக்களும் செயல்பாடுகளும் வியக்க வைக்கும் படி இருக்கும்.
2011 ம் ஆண்டிலிருந்து சேனைத்தமிழ் உலா இணைய தளத்தின் தலைமை நடத்துனராய் இருந்து அத்தளத்தின் மேன்மைக்குரிய தூண்களில் ஒருவராய் இருக்கும் தம்பி!
5. சின்னவள் -சூரியா!
பெயருக்கு ஏற்ப வயதிலும் சின்னவள் தான்! 15 வயதில் சுட்டிப்பெண்ணாய் தன் எண்ணத்தை கோர்வையாக்கி சிரிக்க வைக்கும் இவள் எழுத்து எனக்கு நிரம்ப பிடிக்கும். முயற்சித்தால் எல்லோராலும் எழுத முடியும், ஆனால் நகைச்சுவையாக எவர் மனமும் நோகாது எழுத இவள் போல் சிலரால் மட்டுமே முடியும்., துன்பத்தை துக்கமாக உணரவைக்காது சிரிக்க சொல்லி மலைக்க வைக்கும் பெரிய எழுத்துக்களுக்கு சொந்தக்காரியாய் எதிர்காலத்தில் பிரகாசிக்க நீங்கள் உங்கள் ஆதரவை கொடுங்கள்.
6. ரிலாக்ஸ் பிளீஸ் -வருண்!
பதிவுகளில் எதிர் விவாதங்களுக்கு சொந்தக்காரராய் இருப்பவர், ஒரு பதிவரின் மறைவுக்காக இவரின் இரங்கல் செய்தி இவரின் உள்ளான மனதை புரிய வைக்கும்,தனக்கு வந்தால் தான் தலையிடியும் காய்ச்சலும் என்று பலர் இருக்க சமுதாய் சிந்தனை கருத்துக்களை எழுதுவதால் இவர் பதிவுகளையும் பிடிக்கும், விவாதம்செய்து மாட்டிக்கொண்டு விழிக்க என்னால் முடியாது என்பதால் என் கருத்துக்கள் அரசியல் தவிர்த்த பதிவுகளுக்கு மட்டுமே இடுவேன், ஹாஹா!
7. ஓடி விளையாடு பாப்பா. சக்தி
வலைப்பூவின் தலைப்புத்தான் இப்படி! ஆனால் எழுத்துக்களில் விளையாட்டு இல்லவே இல்லை,எதிர்கால கலெக்டராகும் இலக்கில் சென்று கொண்டிருக்கும் இவளின் பதிவுகளை படித்தால் 18 வயதில் இத்தனை சிந்தனைகளை கொண்டிருக்கும் இவள் போன்றோரால் சமுதாயம் சீர் பெறும் என நம்பிக்கை ஊற்றப்படுகின்றது. சில பல கருத்துக்களும் உதவிட நினைக்கும் நல்ல உள்ளமுமாய் இவளை அறிய பதிவில் சென்று படித்து பாருங்கள்.
8. தோட்டம் - சிவா
இயற்கையோடு ஒன்றிய காய்கறிகளை விளைவித்து தன் அனுபவத்தை அனைவரும் பயனடைய பகிர்பவர்.நான்கைந்து வருடம் முன் தக்காளி, அவரை, கத்தரி, பீற்றூட் என என் வீட்டு பல்கணியில் விதைத்து பயனடைந்தாலும் அதன் பின் ஆர்வம் இல்லாததால் விட்டு விட்டேன். இப்போது இவரின் பதிவுகளை படித்ததிலிருந்து இந்த வருடம் சம்மரில் எங்க வீட்டு பல்கணியில் தோட்டம் போடுவது என முடிவு செய்து இருக்கின்றேன்,
உங்களுக்கும் படங்கள் பார்வைக்கு கிடைக்கும்.
9. என்.கணேசன்
பிரபல்யமான் எழுத்தாளர், நான் இவரின் தொடர்களின் நீண்ட நாள் வாசகி !
10. Ashfa Ashraf Ali
பேஸ்புக்கில் பைந்தமிழ் சோலை எனும் வெண்பாக்களை இயற்ற கற்பிக்கும் குருப்பில் அறிமுகமானார். இலங்கையை சேர்ந்த இவரின் வெண்பாக்கள் படிக்கும் போது உணர்வுக்குள் புகுந்து உள்ளத்தை ஊருவும் விதமாய் இருக்கும். அத்தனை அருமையாய் வார்த்தைகளை கையாண்டு எழுதுகின்றார்.
சான்றாய் ஒரு கவிதை பகிர்கின்றேன். படித்து பாருங்கள்!
கண்ணயரும் வேளைகளில் கலகம் செய்கிறாய் - என்
... கண்ணிரெண்டில் கிடந்துநீயும் குளித்து மகிழ்கிறாய்
எண்ணமெலா மென்னுயிரென் றேங்க வைக்கிறாய் - ஒரு
... எழுதாத புத்தகம்போ லென்னில் கிடக்கிறாய்
வண்ணவண்ணக் கலவைபூசி வந்து போகிறாய் - வரும்
... கனவிலெலாம் வர்ணஜாலம் காட்டி நிற்கிறாய்
தென்றலோடு கலந்துவந்து தொட்டுச் செல்கிறாய் - ஒரு
... துளித்தேனாய் என்னுயிரில் என்று மினிக்கிறாய் !
கொஞ்சிக்கொஞ்சி பேசும்போது குழந்தை யாகிறாய் - ஒரு
... குயிலைப்போல காதில்வந்து கான மிசைக்கிறாய்
அஞ்சியஞ்சி நடக்கும்போது அன்ன மாகிறாய் - சில
... அதிசயத்தி னதிசயமாய் என்னை வதைக்கிறாய்
அஞ்சனங்கள் சூழ்ந்தவிழியா லாட்டிப் படைக்கிறாய் - என்
... ஆளுமையின் விளிம்பினிலே நடந்து செல்கிறாய்
மிஞ்சிமிஞ்சிப் போனாலும் நீயும் நானும்தான் - நம்
... நெஞ்சிரெண்டில் கிடப்பதெல்லாம் காதல் சொர்க்கம்தான் !!
- அஷ்ஃபா அஷ்ரஃப் அலி -
தொடர்வார்கள் எனும் நம்பிக்கையில் என்னால் அன்புடன் அழைக்கப்படுபவர்கள்!
1.அஷ்ஃபா அஷ்ரஃப் அலி -
2.இணுவையூர் மயூரன்
3.ரிலாக்ஸ் வருண்
4.அவர்கள் உண்மைகள் மதுரைத்தமிழன்
5.ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் ரூபன்
6.சுவாதியும் கவிதையும் சுவாதி
நன்றி!
http://alpsnisha.blogspot.ch/2016/03/blog-post_2.html
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தொடரும் தொடர் பதிவர்கள் அறிமுகம்!
அருமையான அலசல் அக்கா நான் மட்டும் இல்லை என்னோடு பலர் கலையுலகில் ஜொலிக்கிறார்கள் நான் கண்டேன் அவர்களை நீங்களும் அடைந்து மகிழுங்கள் என்று வழிகாட்டுவதாய் அமைந்த இப்பதிவு புதிய பழைய நண்பர்களை மீட்டிப் பார்த்திட ஏதுவாக அமைந்துவிட்டது மிக்க நன்றிகள்
தங்களின் அலசலில் என்னையும் உள்வாங்கிக் கொண்டு எனக்கும் ஒரு இடம் தந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்
தங்களின் அலசலில் என்னையும் உள்வாங்கிக் கொண்டு எனக்கும் ஒரு இடம் தந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்
Re: தொடரும் தொடர் பதிவர்கள் அறிமுகம்!
நன்றி ஹாசிம்! உங்களால் இதே போல் தொடர முடியுமா? முன்னரும் ஒரு தொடர் பதிவுக்கு உங்களிடம் கேட்காமல் பதிந்து நீங்க தொடராமல் விட்டு விட்டீர்கள், அதனால் இந்த தடவை கேட்காமல் பகிரக்கூடாது என நினைத்து பெயரை சொல்ல வில்லை. ஆம் எனில் உங்கள் பெயரை இணைத்து விடுவேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தொடரும் தொடர் பதிவர்கள் அறிமுகம்!
நிச்சயமாக தொடரலாம் அண்ணா மற்றவர்கள் தொடரட்டும் பின்னர் செய்கிறேன்Nisha wrote: நன்றி ஹாசிம்! உங்களால் இதே போல் தொடர முடியுமா? முன்னரும் ஒரு தொடர் பதிவுக்கு உங்களிடம் கேட்காமல் பதிந்து நீங்க தொடராமல் விட்டு விட்டீர்கள், அதனால் இந்த தடவை கேட்காமல் பகிரக்கூடாது என நினைத்து பெயரை சொல்ல வில்லை. ஆம் எனில் உங்கள் பெயரை இணைத்து விடுவேன்.
Re: தொடரும் தொடர் பதிவர்கள் அறிமுகம்!
அப்படி இல்லை ஹாசிம், தொடர் பதிவு எனும் போது தொடர சொல்லப்படும் பத்து பேரும் தொடரணும், அவர்களும் பத்து பேரை தொடர சொல்லி கேட்க வேண்டும், நீங்கள் தொடருங்கள். நான் குமாரை தொடருக்கு அழைக்கவில்லை, அவரை முத்து நிலவன் அவர்கள் அழைத்து விட்டார். அதனால் குமாரும் தொடர்வார், நீங்களும் தொடருங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தொடரும் தொடர் பதிவர்கள் அறிமுகம்!
பெயரை இணைத்து விட்டேன், உங்கள் பிளக்கில் பதிவு போட்டு விட்டு எனக்கும் சொல்லுங்க
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தொடரும் தொடர் பதிவர்கள் அறிமுகம்!
இதுல பிரச்சினை என்னன்னா மற்றவர்களின் தளங்களையும் படிக்கணும் அதுக்கு நேரமும் அவகாசமும் கிடைக்ககுமா என்பதுதான் எனது பிரச்சினை வேலையுடன் இவ்வாறு தொடர்வதால் முனைந்து செய்திட முடிவதில்லை கண்டிப்பா முயற்சிக்கிறேன்Nisha wrote:அப்படி இல்லை ஹாசிம், தொடர் பதிவு எனும் போது தொடர சொல்லப்படும் பத்து பேரும் தொடரணும், அவர்களும் பத்து பேரை தொடர சொல்லி கேட்க வேண்டும், நீங்கள் தொடருங்கள். நான் குமாரை தொடருக்கு அழைக்கவில்லை, அவரை முத்து நிலவன் அவர்கள் அழைத்து விட்டார். அதனால் குமாரும் தொடர்வார், நீங்களும் தொடருங்கள்.
Re: தொடரும் தொடர் பதிவர்கள் அறிமுகம்!
நல்லது அக்கா தொடர்கிறேன்Nisha wrote:பெயரை இணைத்து விட்டேன், உங்கள் பிளக்கில் பதிவு போட்டு விட்டு எனக்கும் சொல்லுங்க
Similar topics
» தொடரும் சூப்பர் பதிவர்கள்...
» உலகின் TOP 5 பதிவர்கள் !
» தொடர் கதைத் தொடர்......???
» தொடரும்...
» தொடரும் ஏக்கங்கள்
» உலகின் TOP 5 பதிவர்கள் !
» தொடர் கதைத் தொடர்......???
» தொடரும்...
» தொடரும் ஏக்கங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|