Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Today at 20:30
» கதம்பம்
by rammalar Today at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
சினிமா : டார்விண்டே பரிணாமம் (மலையாளம்)
Page 1 of 1
சினிமா : டார்விண்டே பரிணாமம் (மலையாளம்)
என்னு நிண்டே மொய்தீன், அனார்கலி, அமர் அக்பர் அந்தோணி, பாவட என தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்த ப்ரிதிவிராஜ் நடித்த படம் இது. மேலே சொன்ன படங்கள் அளவுக்கு பேசப்படவில்லை என்றாலும் இதுவும் வெற்றிப்படம்தான்.
அம்மாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் கர்ப்பிணியான மனைவி அமலா (சாந்தினி ஸ்ரீதரன்) உடன் வீட்டை விட்டு வெளியேறி தன் நண்பன் ஊரில் அடைக்கலமாகும் நாயகன் அணில் ஆன்டோவுக்கு (ப்ரிதிவிராஜ்) எல்லாமே நண்பன் கொடுத்து உதவ, DTH வைப்பது மற்றும் பழுது பார்ப்பது தொடர்பான பணி செய்கிறான். கர்ப்பிணியான மனைவியின் கழுத்தில் கிடக்கும் செயினை ரவுடி அறுக்கும் போது ஏற்பட்ட தகராறில் மனைவி கீழே விழுந்து கர்ப்பம் கலைந்து விடுகிறது. அந்த சோகத்தின் பிடியில் இருப்பவன் அந்த ரவுடியை சந்திக்க நேர, அவனைப் போட்டுப் புரட்டி எடுத்து விடுகிறான்.
இந்த நிகழ்வால் அந்த பகுதியின் மிகப்பெரிய ரவுடியான அவனின் அண்ணன் டார்வின் (செம்பொன் வினோத் ஜோஸ்) மற்றும் அவனுக்கு சலாம் அடிக்கும் போலீசாரால் தொந்தரவுக்கு உள்ளாகிறான். வீட்டிலிருந்த பொருட்கள் எல்லாம் களவு போக, கையிலிருந்த பைக்கும் களவு போகிறது. இதற்கெல்லாம் காரணம் அந்த பெரிய ரவுடிதான் என்பதை அறிந்து அவனுடன் மோத தயாராகிறான். ஐயப்பன் என்பவரின் உதவியுடன் அவனின் இரண்டாவது தம்பியைக் கடத்த, அது தோல்வியில் முடிந்தாலும் தம்பிக்காரனின் செல்போனில் இருக்கும் ஒரு போட்டோவை வைத்து வில்லன் சர்ச்சில் இருக்கும் தங்கப் புண்ணியாலன் (இயேசு) சிலையைத் திருடி, அதற்குப் பதிலாக வேறு சிலையை வைத்து விட்டு அதை ஒரு வெளிநாட்டுக்காரனுக்கு கோடிக்கணக்கில் விற்க இருப்பதை அறிகிறான். அதை வைத்தே தன்னோட வீட்டிலிருந்து எடுத்த பொருட்கள் அனைத்தையும் அவன் மூலமாக திருப்பப் பெற போடும் திட்டமே படத்தின் கதை. ஒரு பொருள் இல்லாமல் எல்லாப் பொருளையும் பெற்றானா...? புண்ணியாலன் சிலையை காப்பாற்றினானா..? பொருட்களை கொடுத்த வில்லன் இவனைப் பழி வாங்கினானா...? அல்லது இவன் வில்லனைப் பழி வாங்கினானா என்பதே மீதிக்கதை...
இதில் வில்லனை நாயகனாகவும் நாயகனை வில்லனாகவும் சித்தரித்து இருக்கிறார்கள். படம் முடியும் போது நமக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. ப்ரிதிவிராஜ் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரின் மனைவியாக வரும் சாந்தினியும் சிறப்பாக செய்திருக்கிறார். வில்லன் செம்பொன்னும் அவரின் அடியாட்களும், ஐயப்பனும் அவரது குரூப்பும் சினிமா நாயகனாகத் துடிக்கும் வில்லனின் இரண்டாவது தம்பியும் கலக்கியிருக்காங்க.
பொருட்களை தேடி எடுக்கும் போது முதலிரவில் இருப்பவனிடம் இருந்து கட்டிலை வாங்கப் போவது...பிரிட்ஜை கடலில் தேடுவது போன்ற காட்சிகள் கலக்கல் காமெடி.
கொஞ்சம் ஜாலியான வித்தியாசமான படம். ப்ரிதிவிராஜின் மற்ற படங்களுக்கு இணையானது இல்லைதான் என்றாலும் ஜாலியாக பார்க்கலாம். அதுவும் வில்லனுடன் பொருட்களைத் தேடிச் செல்லும் காட்சியில் ஆரம்பிக்கும் சிரிப்பு கடைசி வரை தொடர்கிறது.
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Similar topics
» சினிமா : கலி (மலையாளம்)
» சினிமா : கோதா (ഗോദ - மலையாளம்)
» சினிமா : கோதா (ഗോദ - மலையாளம்)
» சினிமா : பத்தேமாரி (மலையாளம்)
» சினிமா : மகேஷிண்டே பிரதிகாரம் (மலையாளம்)
» சினிமா : கோதா (ഗോദ - மலையாளம்)
» சினிமா : கோதா (ഗോദ - மலையாளம்)
» சினிமா : பத்தேமாரி (மலையாளம்)
» சினிமா : மகேஷிண்டே பிரதிகாரம் (மலையாளம்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|