சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

மனசின் பக்கம் : கிறுக்கலே சந்தோஷம் Khan11

மனசின் பக்கம் : கிறுக்கலே சந்தோஷம்

Go down

மனசின் பக்கம் : கிறுக்கலே சந்தோஷம் Empty மனசின் பக்கம் : கிறுக்கலே சந்தோஷம்

Post by சே.குமார் Sat 24 Sep 2016 - 21:18

னசின் பக்கத்தில் என்ன நினைக்கிறோமோ.... நம்மைச் சுற்றி என்ன நடந்ததோ... நடக்கிறதோ அது எல்லாவற்றையும் கிறுக்கலாம். அப்படிக் கிறுக்குவதால் சில சமயங்களில் ஏன் அப்படி எழுதினாய் என்ற கேள்விகளும் எழலாம்... எழுந்திருக்கின்றன... இருந்தாலும் மனசின் பக்கத்தில் நாம தொடர்ந்து கிறுக்குவோமுல்ல.


கிறுக்கல்


அவன் ; 'நீ என்ன நினைக்கிறியோ அதைச் செய்..'

இவன் : சரி.

அவன் : 'மனசுலபட்டதைப் பேசு...'

இவன் : சரி.

அவன் : 'அவன் என்ன நினைப்பானோ இவன் என்ன நினைப்பானோன்னு யோசிக்காதே...'

இவன் : சரி.

அவன்: 'யாருக்காகவும் எதுக்காகவும் செய்ய நினைத்ததை செய்யாமல் விடாதே...'

இவன் : சரி.

அவன் : 'எந்த விஷயத்துலயும் யார்க்கிட்டயும் யோசனை கேக்காதே...'

இவன் : சரி.

அவன்: 'இதுதான் பாதை... இதில்தான் பயணம் என்று நினைத்துவிட்டால் அதில் பயணப்படு... துணைக்கு ஆள் வேண்டுமென காத்திருக்காதே...'

இவன் : சரி.

அவன் : 'நீ இதைச் செய்யணுமின்னு நினைச்சியன்ன எவன் பேச்சையும் கேக்காதே...'

இவன் : 'ச...ரி'

அவன் : 'மற்றவன் ஆயிரத்தெட்டு அட்வைஸ் பண்ணுவான்... அதையெல்லாம் தூக்கிச் சுமக்காதே...'

இவன் : '.....'

அவன் : 'என்னடா பதில் சொல்லாம யோசிக்கிறே...?'

இவன்  : 'இம்புட்டு நேரம் நீ என்ன சொல்லிக்கிட்டு இருந்தே...?'

அவன் : 'உன்னை உன்னோட வழியில் போன்னு சொன்னேன்... நல்லதுதானே சொன்னேன்...'

இவன் ; 'அது எங்களுக்குத் தெரியாதோ...? என்ன 'டாஷ்'க்கு அறிவுரை சொல்ல வர்றே...'

அவன் ; '.....'

இவன் : 'பொத்திக்கிட்டு போ... என்னோட பாதையில எப்படி நடக்கணுமின்னு எனக்குத் தெரியும்... அட்வைஸ் பண்றேன்னு எவனுக்கிட்டயும் போயி நிக்காதே... வச்சி செஞ்சிருவானுங்க... உன்னோட பாதையில நீ முதல்ல சரியாப் போறியான்னு பாரு... முதல்ல நீங்க திருந்துங்கடா... அப்புறம் அடுத்தவனுக்கு அட்வைஸ் பண்ணலாம்'

(உண்மையிலேயே இது கிறுக்கியதுதான்... உள் குத்து... வெளிக்குத்து எல்லாம் இதில் இல்லை)


அடி தூள்...1


ண்ணன் சந்தோஷிடமிருந்து 'ஸ்கை கிட்ஸ்' என்ற ஆங்கிலப் படத்தை மொபைலில் ஏற்றிக் கொண்டு வந்து பார்த்துவிட்டு அடுத்த நாள் அக்காவிடம் கொண்டு போய் 'ஏய் இந்தப் படத்தைப் பாரு... சூப்பரா இருக்கு...' என்றபடி மொபைலை நீட்டியிருக்கிறான்.

'நான் சரவணன் மீனாட்சிதான் பார்ப்பேன்... இதெல்லாம் பார்க்கமாட்டேன்..' என்று சொல்ல, 'உன்னைய எதுக்கு இந்தப் படத்தைப் பார்க்கச் சொல்றேன்னு நினைச்சே... அக்கா தம்பியை எப்படிப் பாத்துக்குதுன்னு பாத்துச் தெரிஞ்சிக்கத்தான்... நீ எப்பப்பாரு அடிச்சிக்கிட்டேத்தான் இருக்கே.... அதான் கொடுத்தேன்... பாரு' என்று நீட்டியிருக்கிறான்.

'அம்மா அவனுக்கு உள்ள கொழுப்பைப் பாருங்க... என்ன சொல்லி என்னைய படம் பாக்கச் சொல்றான்னு...' என்று அக்கா கத்த... 'இந்தா பாத்துத் திருந்து'ன்னு மொபைலைக் கொடுத்திருக்கிறான்.

# விஷால் ராக்ஸ்

அடி தூள்...2


'இந்தப் படிப்பை எவன் கண்டு பிடிச்சானோ... யார் போன் பண்ணுனாலும் படி... படியின்னு...'

'பரிட்சைக்கு படிக்கத்தானே வேணும்...? மார்க் எப்படி எடுக்குறது...' நான்.

'அவன் மட்டும் கெடச்சான்..... கொலை பண்ணிடுவேன்...'

'எவன்...?' - நான்.

'பரிட்சையை கண்டுபிடிச்சவன்...'

'அது சரி... இப்பவே இப்படியா.... வாழும்...' - நான்.

'என்னைய படி படியின்னு சொல்றீங்களே... உங்களுக்கு தமிழ், இங்கிலீஸ் தெரியாது.... அம்மாவுக்கு தமிழ், இங்கிலீஸ், ஹிந்தி தெரியாது... அப்புறம் என்னைய மட்டும் படி படியின்னு...'

'இது யாருடா சொன்னா... எங்களுக்குத் தெரியாதுன்னு...' - நான்.

'அதான் எழுதிக் கொடுத்துட்டீங்களே...?'

'எங்க..? எப்ப..?' - நான்.

"எங்க டைரியில..." 

'டைரியிலயா..?'

'ஆமா... அதான் நோ லாங்குவேஜ்ன்னு எழுதிக் கொடுத்திருக்கீங்களே...?'

'அடப்பாவி... நோ லாங்க்வேஜ் இல்லடா... KNOWN (தெரிந்த) லாங்க்வேஜ்டா...'

'சும்மா போங்கப்பா...'

# விஷால் III வகுப்பு

(குழந்தைகள் குறித்து எதுவும் வலையிலோ முகநூலிலோ எழுதுவதில்லை என்றாலும் இந்த இரண்டு நிகழ்வுகளும் எழுதத் தோன்றியதால் எழுதியாச்சு.)


சந்தோஷம்


பாக்யாவில் தொடர்ந்து எனது கருத்து 'மக்கள் மனசு' பகுதியில் வந்து கொண்டிருக்கிறது.  அகலுக்காக எழுதிய 'குழலியின் தேவன்' கட்டுரைக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதில் சந்தோஷமே... மருது சகோதரர்கள், வேலு நாச்சியார் என இரண்டு கட்டுரைகள் எழுதி ரொம்ப நாளைக்குப் பின்னர் எழுதிய வரலாறு சம்பந்தமான கட்டுரை... நண்பர்கள் நல்லாயிருந்தது என்று சொன்னதில் சந்தோஷமே.

மனசின் பக்கம் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum