சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Tue 28 May 2024 - 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Tue 28 May 2024 - 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

காலுல ஏன் கட்டு? Khan11

காலுல ஏன் கட்டு?

Go down

காலுல ஏன் கட்டு? Empty காலுல ஏன் கட்டு?

Post by rammalar Sun 2 Oct 2016 - 14:02

நகைச்சுவைக் கதை ஒன்று. அதைக் கொஞ்சம் கேளுங்களேன்…

காலுல கட்டு போட்டுக்கிட்டு நோயாளி ஒருத்தர்
மருத்துவரை பார்க்க வந்தாரு.
என்னையா! என்ன உடம்புக்கு? மருத்துவரு கேட்டாரு.
தலைவலிங்க நோயாளி சொன்னாரு.
அப்புறம் காலுல ஏன் கட்டு? என்று மருத்துவரு கேட்டாரு.
அதுக்கு நோயாளி சொன்னாரு நழுவி வந்துடுச்சுங்க.

இந்தக் கதையை ஒரு நண்பரோட குடும்பத்தினருக்கு
சொன்னேன். எல்லோரும் சிரிச்சாங்க.
எல்லோரும்தான் ஒரே ஒருவரைத்தவிர…

சாப்பாட்டு மேசைக்கு அந்தப் பக்கம் உட்கார்ந்துகிட்டு
இருந்த அவர் என்னை ஒரு தினுசாகவே பார்த்துக் கொண்டு
இருந்தார்.

கொஞ்ச நேரம் ஏதோ யோசனையில் மூழ்கிப்போன அந்தப்
பெரியவர் மேசையின் மேல் குறுக்காக சாயந்து கொண்டு,
‘எங்க… மறுபடியும் சொல்லு. நான் சரியா கவனிக்கல.
அந்த நோயாளிக்கு என்ன பிரச்சினை?’

அவுருக்குத் தலைவலி.
அட அப்பிடியா அந்த முதியவர் சோகமாகச் சொன்னார்.
சொல்லிவிட்டுப் பெருமூச்சு விட்டார். மறுபடியும் ஏதோ
யோசனையில் ஆழ்ந்து போனார்.

சில மணித்துளிகளுக்குப் பிறகு திடீரென்று எனக்கு புரியலப்பா.
அந்த ஹாஸ்யம் எனக்குப் பிடிபடல. இந்தக் கதையெ நியாயமப்
பார்ப்போம். நோயாளி தனக்கு தலைவலின்னு சொன்னான்.
அப்பிடித்தான் சொன்னான்?
ஆமாம்.
பின் ஏன் காலுல கட்டு போட்டுக்கிட்டு வந்தான்.
நழுவி வந்துடுச்சாம்.

நம்ப முடியலியே என்று சொன்ன அந்த முதியவர் எழுந்து நின்றார்.
ஜன்னல் வழியாகத் தெரிந்த இருளை மட்டுமே பார்த்துக் கொண்டு
புகைபிடிக்க ஆரம்பித்தார்.
யோசனையில் மூழ்கிப் போனார்.

நண்பரின் வீட்டில் எனக்கு அளிக்கப்பட்ட தேநீரை நான் பருகி
கொண்டிருந்தேன். சிறிது நேரத்திற்கு பிறகு, அந்த முதியவர்
எனக்குப் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார்.

நான் எவ்வளவோ முயற்சி பண்ணியும் என்னால அதில் இருக்கிற
நகைச்சுவையைப் புரிஞ்சிக்க முடியல. ஒருத்தனுக்குத் தலைவலி
வந்தா அவன் எதுக்குக் காலுல கட்டுப் போட்டுக்கணும்? என்று
சற்றே அமைதியான குரலில் கேட்டார்.

அவன் காலுல கட்டு போட்டுக்கல. தலையிலதான் போட்டுக்கிட்டான்
என்று நான் அழுத்திச் சொன்னேன்.
பின்ன எப்படி அது அவன் காலுக்கு வந்தது?
அதாங்க நழுவி வந்துடுச்சாம்.

முதியவர் சடக்கென்று எழுந்து நின்று கொண்டார்.
என்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்தார்.

திடீரென்று ஏதோ முடிவு எடுத்ததைப்போல, ‘சரி, எங்கூட
கொஞ்ம் வெளியில வா, இதெப் பத்தி நான் ஒங்கூட
மறுபடியும் பேசணும்’ என்றார்.

நாங்கள் இருவரும் வெளியே வந்தோம். என் தோளில் கை
போட்டபடியே இங்க பாருப்பா இது உண்மையிலேயே தமாஷ்
கதையா? இல்ல எனக்கு காது குத்தறியா?
இல்லீங்க… இது தமாஷ் கதை தான்?

சரி! எந்த இடத்துல தமாஷ் இருக்குது? எனக்குக் கொஞ்சம்
விவரமா சொல்லு
தெரியலீங்க… ஆனா இது சிரிப்பு கதைதான்.

அப்படின்னா நீ நடுவுல ஏதோ விவரத்தை சொல்லாம விட்டுட்ட
அவனுக்கு ஒரே ஒரு காலு தான?

இல்ல.. இல்ல.. நான் அவருடைய அனுமானத்தை மறுத்தேன்.
நோயாளி ஒத்தக்காலு ஆளு இல்லை.

கட்டு வழுவிடுச்சிங்கிறது உண்மையின்னா, தலையில் இருந்த
கட்டு உடம்பு பூராவும் நழுவி வந்து ரெண்டு காலுலேயுந்தான
இருக்கணும். நீ சொல்ற மாதிரி அவனுக்கு ரெண்டு காலும்
இருந்தாக்கா எப்பிடி கட்டு ஒரு காலுல மட்டும் இருக்குது?
அப்ப அவன் ஒத்தக் காலு ஆளுதான்.

நான் அவர் காதருகில் சென்று அதான் சொன்னேனே.. நழுவி
வந்துடுச்சுன்னு என்று ரகசியம் சொல்வதைப் போல் சொன்னேன்.

முதியவர் தன்னோட நெற்றியில் பூத்த வியர்வையைத் துடைத்துக்
கொண்டார் சரி நான் வருகிறேன். என்று வீட்டிற்கு கிளம்பிவிட்டார்.

இது அவருக்கு புரியவில்லை ஆகையால் தொடர்ந்து தொலை
பேசியிலும் நேரிலும் தொந்தரவு கொடுத்துக் கொண்டே இருந்தார்.
நான் முகஞ்சுளித்தேன். விரட்டியும் விட்டேன். அய்யோ எதுவும்
வேலை செய்யவில்லை.

அந்த முதியவரை வைத்து ஒரு கதை எழுதலாம் என்று முடிவு
செய்தேன். நகைச்சுவை உணர்வே இல்லாத ஒரு மனிதனைப்
பற்றிய கதை. எழுதி முடித்ததும். கதையை எடுத்துக் கொண்டு
கிண்டல் பத்திரிகை ஒன்றின் ஆசிரியரிடம் சென்றேன்.

அவரோ படித்துவிட்டு வாய்விட்டுச் சிரித்தார். அதுவும் நீண்ட
நேரமாய்…

பிறகு ரகசியத் தொனியில், எங்ககிட்ட மட்டுமாவது உண்மைய
சொல்லுங்க. அந்த நோயாளிக்கு என்னதான் ஒடம்புக்கு?
தலைவலி என் குரலில் சோகமே மிகுந்திருந்தது.
அப்புறம் காலுல ஏன் கட்டு?
நான் எழுதிய கதை அந்தப் பத்திரிகையில் வெளிவராது என்பதைத்
திடமாக உணர்ந்தேன்.

————————————–

– ராஜ்ஜா
மஞ்சரி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24315
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum