Latest topics
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
வழக்கு விவரங்களை செல்போன் மூலம் அறிந்து கொள்ள புதிய செயலி அறிமுகம்; சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தகவல்
Page 1 of 1
வழக்கு விவரங்களை செல்போன் மூலம் அறிந்து கொள்ள புதிய செயலி அறிமுகம்; சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தகவல்
சென்னை,
நாடு முழுவதும் வழக்கு ஆவணங்களை ‘டிஜிட்டல்’ மயமாக்க சுப்ரீம் கோர்ட்டு முடிவு செய்தது. அதன்படி ஐகோர்ட்டு, மாவட்ட கோர்ட்டுகளில் டிஜிட்டல் மையங்கள் தொடங்கப்பட உள்ளன. இதற்கான பணிகள் நடந்து வருகிறது. சென்னை ஐகோர்ட்டில் அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் மையத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது.
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி மதன் பி.லோகுர் மையத்தை திறந்து வைத்தார். அதேபோன்று சமரச தீர்வு மூலம் வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காண்பது குறித்த மாவட்ட நீதிபதிகளுக்கான பயிற்சியையும் அவர் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது அவர் கூறியதாவது:–
ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருப்பது நீதிபரிபாலனத்துக்கு மிகவும் அத்தியாவசியம் ஆகும். ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்குவதால் இடம் மிச்சமாகும். ஆவணங்களை ஸ்கேன் செய்து சேமித்து வைப்பதன் மூலம் தேவைப்படும் ஆவணங்களை எளிதாக பெற முடியும்.
கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கு விவரங்களை செல்போன் மூலம் தெரிந்து கொள்ள புதிய செல்போன் செயலியை அறிமுகப்படுத்தி உள்ளோம்.
இந்த செயலி தொடங்கப்பட்ட ஒரு வாரத்தில் 2 லட்சம் பேர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த செயலி அடுத்த வாரம் முதல் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்.
அதேபோன்று இ–மெயில் மூலம் வழக்குகள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளும் வசதியையும் அறிமுகப்படுத்தி உள்ளோம். இந்த வசதி தொடங்கப்பட்ட 24 மணி நேரத்தில் 3 லட்சம் பேர் தங்களை சேர்த்துக்கொண்டுள்ளனர்.
தேசிய நீதித்துறை தகவல் தொகுப்பில் ஏற்கனவே 4 ஐகோர்ட்டுகள் இணைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் வழக்கு விவரங்களை உடனுக்குடன் பெற முடியும். அடுத்த 10 நாட்களில் மேலும் 10 ஐகோர்ட்டுகள் இதில் இணைக்கப்படும்.
நீதி கிடைப்பதில் தாமதம் இருப்பதாக மக்கள் கூறி வருகின்றனர். மின்னனு மயமாக்கப்படுவதால் இன்னும் 2 மாதங்களில் இதில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படும்.
கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரச தீர்வு மூலம் விரைந்து முடிக்க முடியும். இதனால் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை வெகுவாக குறையும். பொதுவாக சமரச தீர்வு 60 நாட்களுக்குள் முடிவுக்கு வர வேண்டும்.
ஆனால் புதுடெல்லியில் ஏராளமான வழக்குகள் 30 நாட்களில் முடிவுக்கு வந்துள்ளன. சமரச தீர்வு மூலம் பேசி தீர்க்கப்பட வேண்டிய வழக்குகளை முடிக்க சமரச தீர்வு மையத்தை அணுகுமாறு வக்கீல்களுக்கு, மாவட்ட நீதிபதிகள் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதிகள் ஹுலுவாடி ரமேஷ், ராஜீவ்சக்தேர், புஷ்பா சத்யநாராயணா, கிருஷ்ணகுமார், கிருபாகரன், வைத்தியநாதன், தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் எஸ்.செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
------------------------
தினத்தந்தி
நாடு முழுவதும் வழக்கு ஆவணங்களை ‘டிஜிட்டல்’ மயமாக்க சுப்ரீம் கோர்ட்டு முடிவு செய்தது. அதன்படி ஐகோர்ட்டு, மாவட்ட கோர்ட்டுகளில் டிஜிட்டல் மையங்கள் தொடங்கப்பட உள்ளன. இதற்கான பணிகள் நடந்து வருகிறது. சென்னை ஐகோர்ட்டில் அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் மையத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது.
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி மதன் பி.லோகுர் மையத்தை திறந்து வைத்தார். அதேபோன்று சமரச தீர்வு மூலம் வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காண்பது குறித்த மாவட்ட நீதிபதிகளுக்கான பயிற்சியையும் அவர் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது அவர் கூறியதாவது:–
ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருப்பது நீதிபரிபாலனத்துக்கு மிகவும் அத்தியாவசியம் ஆகும். ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்குவதால் இடம் மிச்சமாகும். ஆவணங்களை ஸ்கேன் செய்து சேமித்து வைப்பதன் மூலம் தேவைப்படும் ஆவணங்களை எளிதாக பெற முடியும்.
கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கு விவரங்களை செல்போன் மூலம் தெரிந்து கொள்ள புதிய செல்போன் செயலியை அறிமுகப்படுத்தி உள்ளோம்.
இந்த செயலி தொடங்கப்பட்ட ஒரு வாரத்தில் 2 லட்சம் பேர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த செயலி அடுத்த வாரம் முதல் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்.
அதேபோன்று இ–மெயில் மூலம் வழக்குகள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளும் வசதியையும் அறிமுகப்படுத்தி உள்ளோம். இந்த வசதி தொடங்கப்பட்ட 24 மணி நேரத்தில் 3 லட்சம் பேர் தங்களை சேர்த்துக்கொண்டுள்ளனர்.
தேசிய நீதித்துறை தகவல் தொகுப்பில் ஏற்கனவே 4 ஐகோர்ட்டுகள் இணைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் வழக்கு விவரங்களை உடனுக்குடன் பெற முடியும். அடுத்த 10 நாட்களில் மேலும் 10 ஐகோர்ட்டுகள் இதில் இணைக்கப்படும்.
நீதி கிடைப்பதில் தாமதம் இருப்பதாக மக்கள் கூறி வருகின்றனர். மின்னனு மயமாக்கப்படுவதால் இன்னும் 2 மாதங்களில் இதில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படும்.
கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரச தீர்வு மூலம் விரைந்து முடிக்க முடியும். இதனால் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை வெகுவாக குறையும். பொதுவாக சமரச தீர்வு 60 நாட்களுக்குள் முடிவுக்கு வர வேண்டும்.
ஆனால் புதுடெல்லியில் ஏராளமான வழக்குகள் 30 நாட்களில் முடிவுக்கு வந்துள்ளன. சமரச தீர்வு மூலம் பேசி தீர்க்கப்பட வேண்டிய வழக்குகளை முடிக்க சமரச தீர்வு மையத்தை அணுகுமாறு வக்கீல்களுக்கு, மாவட்ட நீதிபதிகள் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதிகள் ஹுலுவாடி ரமேஷ், ராஜீவ்சக்தேர், புஷ்பா சத்யநாராயணா, கிருஷ்ணகுமார், கிருபாகரன், வைத்தியநாதன், தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் எஸ்.செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
------------------------
தினத்தந்தி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24161
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|