சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

தேநீர் பொழுதுகள்! வாசகர் கவிதைகள்! Khan11

தேநீர் பொழுதுகள்! வாசகர் கவிதைகள்!

Go down

தேநீர் பொழுதுகள்! வாசகர் கவிதைகள்! Empty தேநீர் பொழுதுகள்! வாசகர் கவிதைகள்!

Post by rammalar Fri 11 Jan 2019 - 5:49

**


தொடர்ந்து செய்யும் வேலைக்கு இடையே
  புத்துணர்வு ஏற்படுத்தும் ஒருமுயற்சியே
தேநீர் பொழுதுகள் என்னும் முறையாகும்
  தேடாது அனைவருக்கும் கிடைக்க வேண்டும்


தேநீர் பொழுதுகள் சிலவற்றை தீர்மானித்துள்ளது ! நட்புகளை
 கொள்கை குழுக்களை , கூட்டணிகளை - அது
நல்ல அரசியல் போக்கு உருவாக உதவும்
  நல்ல தலைவர்கள் உருவாக காரணமாய் அமையும்


இது ஒருவகையாய் ஆனது, ஆனால் உண்மையில்
  அலுவலகத்தில் வேலைபார்ப்பவர், தொழிற்சாலையில்
தொழில் செய்வோர், மற்றும் கட்டிட வேலை, வண்ணம்
   அடிப்பவர், வயரிங் வேலை செய்வோர்,ஏனையோர்


இயல்பாகக் கொண்டதுதான் இந்த தேநீர் பொழுது
   இனிமையான அனுபவமாகும் அதை ரசிப்போம்
இந்த வீட்டு வேலைசெய்வோர் மற்றும் கூலிவேலை
   செய்பவர்க்கும் ஏனில்லை இந்த வாய்ப்பு?


குடும்பப் பெண்கள், ஆம் இல்லத்தரசிகள் வீட்டில்
   குடும்பத்தில் இருக்கும் ஏனையவர்க்கும் ஏனிலை?
ரேஷங்கடையில் காத்திருக்கும் இல்லத்தரசிகள்
   பால் டிப்போ  மாவு மிஷின், குழாயடி இவர்களுக்கும்


தேநீர் பொழுது ஒதுக்கவேன்டும் ! காத்துக்கடகிறார்கள்
   நீண்ட வரிசையில், பழியாய் கிடக்கிறார்கள்
வரிசையை கிடைத்து விட்டு டோக்கனோடு செல்ல
 வழிவகுக்க வேண்டும் தேநீர்பொழுது அனைவரும் பெற !            


- கவிஞர் ஜி. சூடாமணி


**


தேநீர்ப் பொழுதுகள் தெம்பு தருபவை
தளர்ச்சி நீக்கி சுறுசுறுப்பு வழங்குபவை!


தாகம் தணிக்கும் தவிப்பை நீக்கும்
தரமாக இருந்தால் மனம் மகிழும்!


விழாக்களிலும் தேநீர்ப் பொழுதுகள் உண்டு
விசாரணைகள் அப்பொழுதுகளில் நடப்பது உண்டு!


அறியாத முகங்கள் அறிமுகம் நடக்கும்
அன்பை வெளிப்படுத்த வாய்ப்பு வரும்!


உலக அரசியலும் பேசுவது உண்டு
உள்ளூர் அரசியலும் பேசுவது உண்டு!


பிந்தியவர்களுக்கு கிடைக்காமல் போவதும் உண்டு
முந்தியவர்கள் பருகி மகிழ்வது உண்டு!


இருக்கையிலிருந்து எழுந்து நடக்க வாய்ப்பு
இறுக்கம் தளர்த்தி இளைப்பார விடுதலை கிட்டும்!


தேநீருக்கு முன் ரொட்டிகளும் தருவது உண்டு
தேநீரில் முக்கி ரொட்டி உண்பதும் உண்டு!


பேசியவர் பற்றிய விமர்சனம் நடப்பதுண்டு
பேசியவர் கேட்டு  நொந்து விடுவதுண்டு!


சோர்வை நீக்கி புதுப்பிக்க உதவும்
சோம்பல் முறித்து புத்துணர்வு பெறலாம்!


தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் உழைப்பு
தேமதுரத் தேநீராய் உருவானது மகிழ்வு!


நல்ல தேயிலைகள் ஏற்றுமதி ஆகின்றன
குப்பைத் தேயிலைகள் நமக்கு வருகின்றன!


அயல்நாட்டான் குடிக்கும் அற்புத தேநீர்
அனைவருக்கும் நமக்கும் கிட்டும் நாள் திருநாள்!


- கவிஞர் இரா .இரவி


**
இமை மூடிய விழிகளுக்குள்
இதமான கனவுகள் .
இமைகள் பிரிய மறுத்தாலும்
நாசியைத்  துளைத்தது 
நறுமணம் கொண்டதேநீர் !
அதிகாலை வேளை இன்று
அன்புக்கணவர்   தயாரித்த
இஞ்சியுடன் கருப்பட்டியின்
இன்சுவைசேர 
தேநீரது 
தேவாமிர்தமாக
சுவையோ சுவை .!
சுகமான வேளை .!
தேடினாலும் கிடைக்காத
தேநீர் பொழுதன்றோ ?


- ஜெயா வெங்கட்


**


தனிமை இருட்டின்
காதுகளில் கிசுகிசுத்து
நள்ளிரவு மழைச்சாரல்
யுகங்களின் சோகங்களை
உச்சரித்த ஓர் வனத்தில்….


அந்தரங்கத்தின் சுந்தர
கணங்கள்
நீலக்கனவுகள் ஈரமாய்
கோலம்போடும் 
உன் வண்ணத்துப்பூச்சி
விழிகளில் சிறகடித்தன


உதடுகளைச் சுழித்து 
முத்தம் கொடுப்பது
போலச் செய்த
உன் பாவனை 
மன்மதனுக்கு
வைத்த சோதனை
நம்முன்
இரண்டு
கோப்பைகள் 
இருந்தன
பேசிக்கொண்டே
இருந்ததை
கேட்டுக்கொண்டே
வெட்கத்தில்
நெளிந்தது
சூடான தேனீர் 
ஆவி


கோப்பை விளிம்புகளில்
நர்த்தனமாடின
இதயங்கள்,
நுரைக் குமிழிகளில் 
திரைபோட்டு
உட்கார்ந்திருந்த
காதலை
வெட்கத்தோடு 
மறுத்தது உன்முகம் 
இல்லை என்று
உதடுகளும் தலையும்
காற்றில் ஆடும் தீபமாக
அசைந்தன;
ஆமாம் என்று கண்கள்
அகலில்
ஒற்றைக்கோடாய்ப்
பற்றவைத்த ஜோதிபோல்
நின்று எரிந்தன


சுவைத்துமுடித்த
தேனீர்த் துளி
உன் உதட்டில்
மிச்சமிருந்தது


துடைக்க நீண்ட
என் கைவிரல்கள்
காலாதீதத்தின்
மத்திமத்தில்
உறைந்தன


யுகம்பல முடிந்து
சோகங்களை
மீண்டும் உச்சரித்து
நடுராத்திரி மழைச்சாரல்
வந்தது ஓர் அமானுஷ்ய
கணத்தில்


முன்னே 
ஒற்றைக்
கோப்பை
வெறுமை


இன்மையில் இருந்த
தேனீர் ஆவியாக
முத்தம் கொடுப்பதாய்
பாவனையில் சுழித்த
உன் உதடுகள்


உதட்டின் மிச்ச
தேனீர்த்துளியை
துடைக்க 
நீண்டன 
உடலை
துறந்துவிட்ட
என் விரல்கள்


- கவிஞர் மஹாரதி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23947
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum