சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

தேநீர் பொழுதுகள்! வாசகர் கவிதைகள்! Khan11

தேநீர் பொழுதுகள்! வாசகர் கவிதைகள்!

Go down

தேநீர் பொழுதுகள்! வாசகர் கவிதைகள்! Empty தேநீர் பொழுதுகள்! வாசகர் கவிதைகள்!

Post by rammalar Fri 11 Jan 2019 - 5:56

பரிதி மயங்கிடும் பொழுதினில்
தேநீர் கடை வாசலில்
ஆலமர விழுதுகளின்
நட்பினில் கீச் கீச் பறவைகளின்
இன்னிசை ஒலியில்
கண்மூடிய பாவனையில்
படுத்திருந்த நான்கு காலினத்தை
நினைத்தே நானும் 
ஊற்றிய ஆண்டு கணக்கில்
சிரட்டை தேநீர் நட்புக்காக 
உடுக்களின் வெளிச்சத்தில் 
என்னுடன் பயணித்த நன்றியினம்
இன்று ஏனோ எனை
மறந்து விண்ணுலகம் சென்றதுவே!


ஊற்றி வைத்த தேநீர் 
ஆறிய நீராகி 
தேநீர் பொழுதுகளை
சுமையாக்கி சென்றதுவே!-
-
------------------------------


- சீனி
கவிதைமணி


**


தேநீர் பொழுதுகள்- கவிதை- ஆ. செந்தில் குமார்.




தோழர்கள் அண்மையில் இனிமையாய் இருக்கும்..
தனிமையின் வெறுமையில் துணையாய் இருக்கும்..
விருந்தினர் வருகையில் வீட்டில் மணக்கும்..
வறுமையின் கொடுமையில் தேனாய் இனிக்கும்..!!
-
அலுவல் நேரத்தில் ஆனந்தம் கொடுக்கும்..
அந்தி சாய்கையில் அருமையாய் சுவைக்கும்..
மழையின் தூரலில் மகிழ்வைக் கொடுக்கும்..
மனதின் தேடலில் ஒளிர்வைக் கொடுக்கும்..!!
-
கடின வேலையை விறுவிறுப் பாக்கிடும்..
காலை நேரத்தை சுறுசுறுப் பாக்கிடும்..
உறையும் குளிரில் கதகதப் பாக்கிடும்..
உள்ளத்தை என்றும் துறுதுறுப் பாக்கிடும்..!!
-
உடல்நலக் குறைவில் புத்துணர் வூட்டிடும்..
உழைப்பின் நிறைவில் இன்னுணர் வூட்டிடும்..
அமைதியின் இழப்பில் ஆறுதல் அளிக்கும்..
அனைத்து நிகழ்விலும் முதன்மையாய் இனிக்கும்..!!
-
-----------------------------------
- ஆ. செந்தில் குமார்.
கவிதைமணி


**


அந்தி சாயும் சந்தி  வேளை - வியர்வை 
சிந்தி வேலை விட்டு திரும்பும் 
வேளை 
முந்தி வந்து தேநீர் தரும் 
சந்திர முகத்தாள் சாந்தமெனும் 
அகத்தால் 
வந்து நின்று நான் சொல்லும் 
இந்திரலோகத்துக்  கதைகளை
இருந்து கேட்கும் 
மந்திரி எனலாம் மங்கைநல்லாள் 
மகிழ்ந்திருக்கும் வேளை 
கவிதையாக்கம் 


- எஸ் வி ஆர் மூர்த்தி.பெங்களூர் 


**


காலைப் பனிப் பொழுதின் உற்சாகமாய்,
கடும் பயணத்தின் களைப்பு நீக்கியாய்,
உற்ற நட்புதனை வளர்க்கும் உண்ணதமாய்,
அரசியல் களம் பேசும் அரங்கமாய்,
குவலயத்தின் சேதியெல்லாம் குழைகின்ற கோப்பையாய்,
உரையாடல்களுக்கு உயிரளிக்கும் உணர்ச்சிப் பிழம்பாய்,
இளம் காதல் வளர்க்கும் சிநேகமாய்,
சிநேகத்தில் சில்லிடும் சிரிப்புத் தூரலாய்,
அன்பு மழையில் நனைத்திடும் அருவியாய்,
முதுமையின் இதழ்களில் இனிக்கின்ற புன்னகையாய்,
வசந்தகாலத்தின் அந்தி மாலைப் பொழுதாய்,
இனிக்கின்ற இனியபொழுதாம் தேநீர்ப் பொழுதுகள்.
ஆக்கம்


- கவிஞர். ராம் விஜய், குடியாத்தம்.


**


தெருவோரத் தேநீர்க்கடைகளில்  
காலையில் கலகலக்கும் 
மாலையில் சலசலக்கும்
அரசியல் அலசப்படும்
அரசமைப்பு பேசப்படும்
கட்சி விதிகள் மாற்றப்படும்
கட்சி தலைவிதி மாறும்
தோழர்கள் கூடுவர், 
தோழமை வளரும்
மனம்விட்டுப் பேசுவர்
மானிட நட்பு தோன்றும்
அலுவலக தேநீர் நேரங்களில்
இல்லக விவரங்கள் பேசப்படும்
இல்லல்கள் ஒழிய வழி பிறக்கும்
தெரியாதவை தெளிவுபடும்
தெரிந்தவை தெரிவிக்கப்படும்
மாலை காக்கைப் பள்ளி நடைபெறும்
மாலையில் வீட்டில் தேநீர் நேரங்களில்
குடும்ப உறுப்பினர் கூடுவர்
குடும்பச் சிக்கல்கள்  பிரிபடும்
மனைவி கணவன் மனம் கலப்பர்
மனம்விட்டுச் செய்தி கலக்கப்படும்
மனம் மகிழ்வு ஏற்படும்
இல்லறம் நல்லறமாகும்


- மீனாள் தேவராஜன்


**


உன்னையும் என்னையும்
நம்மையும் நம் மெள‌னத்தையும் 
கரைத்து நிரம்பிய‌ தேநீர்ப் பொழுதுகள்.
கனவுகள் பேசினோம்
கதைகளும் பேசினோம்.
உணர்வுகளை வழித்து
உள்ளங்கள் வழிந்த சொற்கள்.
காத்திருந்த தேநீர்ப்பொழுதுகளில்
உணர்வுகளும் சொற்களும்
கண்ணீரும் சிரிப்பும்
அவ்வளவும் கொட்டியும் தீர்த்தும்
பின்வந்த‌ தேநீர்ப்பொழுதுகளில்
தேடியதாய் வற்றியதாய் 
என்றும் நினைவில்லை.
சுமைகள் மறந்த நிமிடங்கள்.


இன்றும் பனிக்காலம்.
என் தேநீர்க் கோப்பையோடு
மெல்லப் பேசுகிறேன்.
நீயும் பேசிப்பார்த்தால்
மெளனங்கள் விலகும் உணர்வுகள்
உன்னிடமும் மெல்லச் சொல்லும்
திரைகள் இல்லா உள்ளங்கள்
வழிந்துவழியும் சொற்கள் உணர்வுகள்
அவ்வளவு இனிப்பு..
சுமைகள் மறக்கும் நிமிடங்கள்...


- ரமேஷ் கோபாலகிருஷ்ணன்




தென்றல் தவழும் மாலையில் - நம்மை
தீண்டும் இன்பமான வேளையில்..
தேனுறங்கும் பூக்களும் பூத்தது - நம்
தேநீர்ப்பொழுதுகள் நெஞ்சினில் இனித்தது..
காலாற கால்களும் நடந்தது -  நம்மை
காற்றும் பின்னால் தொடர்ந்தது..
காலம்தரும் கவலைகளும் மறந்தது - நமது
கனவுகளுக்கு ஊக்கமும் தந்தது..
ஒருகோப்பை தேநீரின் புத்துணர்ச்சி - அதில்
ஒளிந்து கொண்டது மகிழ்ச்சி..
இருவர் உள்ளத்திலும் புதுவெழுச்சி - அது
இன்பப் பொழுதுகளின் நெகிழ்ச்சி..
பொழுதுகள் யாவும் புதுமையானது - நம்
பொன்னான நிமிடங்களும் அழகானது..
மொழிகளும் இனித்திடும் பேச்சானது - அது
மென்மை பேசிடும் மலரானது..


- கவிஞர் நா. நடராசு


**


உழைத்து உழைத்து 
களைத்து  வரும் பொழுது  
உற்சாகம்  தரும்  
ஊக்கம் போல
தேநீரை  பருகுவோம்  
அந்த. தேனீர்  பொழுதினில்  
சிலவற்றை  அதிலும் 
பலவற்றை   பேசாமல்  
சுருக்கமாக  
பேசுவோம்
சுகமான பொழுதென  
தேநீர் பொழுதுகளை  மாற்றுவோம்  
ஒன்றாக நன்றாக  
பணிகள் ஆற்ற  
புறப்படுவோம்  
மனத்திற்கும்  
ஒரு தேநீர் பொழுது 
வேண்டும்
அதுதான்
உற்சாகம் தரும் 
உறவுகளை  பலப்படுத்தும்  நல்
ஒழுக்கம்  என்ற 
தேநீர்.
மனம் சரியானபொழுதுகளே  
உண்மையான தேநீர் 
பொழுதுகள்


- களக்காடு.வ.மாரிசுப்பிரமணியன்


**


நாழும் பொழுதுமாய்
நகருகின்ற வாழ்க்கையிலே
புலா்ந்து செல்லும் பொழுதுகளில்
அடுப்பங்கரையினிலே
அழுக்கு உடையினிலே


அழகாய் தொியும் என் அம்மாவின்
கரங்களிலே  தேநீர் குவளையுடன்
வரும் பொழுதிற்காய் காத்திருந்த 
பொழுதுகளில் இன்றும் என் மனதில்
பசுமரத்தாாணியாய் இருக்கிறது
நினைவுகளை தந்தபடி
தேநீர்ப் பொொழுதுகள்.


- ஈழநங்கை


**


ஒரு வேளை தேநீர்ப் பொழுது 
ஏழைக்கு உணவு
ஒரு வேளை தேநீர்ப் பொழுது
செல்வந்தருக்கு பார்மாலிட்டி உணவு


ஒரு வேளை தேநீர்ப் பொழுது
எழுத்தாளருக்கு ஊக்கம் தரும்
ஒரு வேளை தேநீர்ப் பொழுது
மாணவர்களுக்கு விழிப்பு தரும்


ஒரு வேளை தேநீர்ப் பொழுது
தேநீர் கடைக்காரருக்கு வயிற்று பிழைப்பு
ஒரு வேளை தேநீர்ப் பொழுது 
அஜீரனக்காரருக்கு மருந்து


ஒரு வேளை தேநீர்ப் பொழுது
கிடைக்காதவர்களும் உண்டு
ஒரு வேளை தேநீர்ப் பொழுது
கிடைத்தும் வீணாக்கியவர்களும் உண்டு


ஒரு வேளை தேநீர்ப் பொழுது
ஒரு வேலை கிடைத்தால் தான் 
ஒரு வேளை தேநீர்ப் பொழுது
ஒரு வேலை கிடைக்காவிட்டாலும் தான்
ஒரு வேளை தேநீர்ப் பொழுது
ஒரு வேளை கிடைக்காவிட்டால்


- ஆம்பூர் எம். அருண்குமார்.


**


உழுதுபயிர் செய்வோர்கள் களைத்த பின்னே
……….உழைப்பிற்குத் தேநீரும் தருமுற் சாகம்..!
எழுதுபவர்க் கிடையிடையே வேண்டும் தேநீர்
……….எழுச்சிமிகு சிந்தனையும் வருவ தற்கே..!
குழுவாகச் சேர்ந்துழைக்கும் கூட்டத் தார்க்கு
……….குடிக்குமந்தத் தேநீரால் விலகும் சோம்பல்..!
தொழுதுன்னை வரவேற்போம் ஆவல் கொண்டு
……….தேநீர்ப்பொ ழுதுகளாகத் தினமும் வாங்க..!
கேப்பைக்கூழ் கம்புக்கூழ் குடிப்ப தாலே


……….கட்டான உடலமைய வழிவ குக்கும்..!
ஆப்பையிலே அளந்துதரும் காளான் சூப்பில்
……….அளவற்ற சத்துக்கள் நிறைந்தி ருக்கும்..!
கோப்பையிலே அருந்துகின்ற குளிரும் பானம்
……….குடித்தாலே ஒருவிதத்தில் சுகம்கெ டுக்கும்..!
காப்பியோடு தேநீரும் நமக்கு என்றும்
……….காலையிலே அருந்துதற்கு உகந்த பானம்..!
பொழுதெல்லாம் ஊர்சுற்றிப் போன காலம்


……….பகலிரவு கழிந்ததெலாம் திரும்ப வாரா..!
அழுதாலும் புரண்டாலும் கடந்து போன
……….அருமையான நேரங்கள் மீண்டும் மீளா..!
ஒழுங்காக நேரத்தைத் திட்ட மிட்டு
……….உபயோக மாய்ச்செய்ய வழிகள் செய்வீர் ..!
பொழுதுகளைக் கழிக்கத்தான் வழிகள் இன்றி
……….பொன்னான நேரத்தை வீணாக் காதீர்..!
 
- கவிஞர் பெருவை பார்த்தசாரதி


**
 
கீரியும் பாம்புமாய்-மனிதன்
வேலையோடு போராடும் 
பொழுதிற்கு நடுவே 
புல்வெளியில் புரண்டு 
புத்தாக்கம் செய்யவரும்  
தேநீர்ப் பொழுதுகள்!


காரிருள் அடைமழைக்கு இடையே
ஒளியூட்டும் மின்னல் போல 
தொடர்ப்பணிக்கு இடையே
தெம்பூட்டும் 
தேநீர்ப் பொழுதுகள்!


பணியில் மூழ்கி 
முத்தெடுத்தெடுப்பவர்களை
களைப்பிலிருந்து மீட்டெடுக்கும்
தேநீர்ப் பொழுதுகள்!


உழைத்தே ஓடாய் போனவர்களின் 
சோர்வை நீக்கி 
தேனீயாய் சுறுசுறுப்பூட்டும்
தேநீர்ப் பொழுதுகள்!


உழைத்து களைத்த 
களைப்புகளை
கலைத்து விரட்டும்
தேநீர்ப் பொழுதுகள்!


தேநீர்
உடலை பழுதாக்கலாம்! 
தேநீர்ப் பொழுதுகள்
உள்ளத்தை பழுதுபார்க்கும்!


தேநீர்ப் பொழுதுகளில் 
நட்புகள் கைகுலுக்கும்!
நகைச்சுவை தேன் தெளிக்கும்!
உற்சாகம் ஊற்றெடுக்கும்!


தேநீர்ப்பொழுதுகள்
சோகத்தை சுளுக்கெடுக்கும்!
மன காயத்திற்கு
மயிலிறகில் மருந்து போடும்!


தேநீர்ப் பொழுதுகள் 
களைப்பை களையெடுக்கும்
உழைப்பை விளைவிக்கும்!


தேநீர்ப் பொழுதுகள்
நொறுக்குத்தீனியை வாயில் போடும்!
நாட்டு நடப்பை காதில் போடும்!
மனக்கவலையை வெளியில் போடும்!


தேநீர்ப் பொழுதுகள் 
தேனான பொழுதுகள்!
என்ன விலை கொடுத்தாலும் 
வாங்க முடியாதவை!


-கு.முருகேசன்


**




காலை பொழுது மலர்ந்ததும் வேண்டும் தேநீர் சிலருக்கு 
மாலையில் ஒரு "நொறுக்குடன் " தேவை தேநீர் சிலருக்கு !
தேநீர் நேரம் என்று ஒன்று  பணிநேரத்தில் இருந்தாலும் 
தேநீர் ஒன்றே தலையாய பணியாக மாறும் சிலருக்கு !
தேநீர் பொழுதை  ஒரு விருந்தாக மாற்றி வணிகம் 
வர்த்தகம் செய்யும் வித்தகர்களும் உண்டு உலகில் ! 
தேநீரும் ஒரு "பொறையும்" மட்டுமே  உணவாக 
மாறும் மூன்று வேளையும் ஒரு உழைப்பாளிக்கு !
தேநீர் பொழுது அவனுக்கு ஒரு பொழுது போக்கு 
அல்ல ! தன் பொழுதை வீணாகப் போக்குபவனும் 
அவன் இல்லை !


- K.நடராஜன் 


**


இஞ்சியும் ஏலமும் மணக்க
இம்மி எலுமிச்சை சாறு சேர
இருக்கட்டுமென இட்ட இனிப்புடன்
இனித்தது் தேநீருடன் ..இல்லறமும்


செய்தித்தாள் நான் கையிலேந்தி
சூடான தேநீர் உறிந்தபடி 
சுற்றி நடக்கும் செய்திகள்
சுவையாய் நீ சொன்ன காலமது


சொல்லாமல் சென்றாயே அன்று
செயலிழந்தேன் நானும் இங்கு.
செயலிகள் பல இருந்தும் இன்று
சலிப்பே  மிச்சமே இங்கு.


தேனாய் இனித்த நாட்கள்
திரும்ப இனி இல்லவே இல்லை
தனிமையில் எனக்குத்  துணையாக..
தேநீர்க் கோப்பையில் ..
தித்திக்கும் உன் நினைவுகளே..


- அகிலா ராமசாமி


**


உழவன் ஏர்க்கலப்பையுடன் ஒருநாள் நின்ற வேளை
பொழுதும் புலர்ந்தது தேநீர் கடையினுள் சென்ற வேளை
கற்றவன் மற்றவன் நின்றவன் தாள்பார்த்து படித்த வேளை
அரசியல் அடுத்த தெரு பொண்ணு ஓடிப் போன வேளை
வரப்பு தகறாரில் பங்காளி தலை வெட்டிய செய்தி
மூன்றாம் பத்தியில் போட்டோவுடன் செய்தி
முழு மூச்சில் படித்திட கட்டிப்புரண்டு மானம் போக
பேசித் தீர்ந்த போது தேவைப்பட்ட பொழுது தேநீர்ப் பொழுதுகள்
ஏழை நடுத்தர பணக்கார வர்க்கம் தூங்கியெழுந்த போது
தேவைப்பட்ட பொழுது தேநீர்ப் பொழுதுகள்
வீணான பேச்சு பேசி நேரத்தை விரயமாக்கும் பொழுது 
கூடிநின்று நாணயம் தேடும்பொழுது தேநீர்ப்பொழுதுகள்
படித்தவர்கள் பணியாளர்கள் அலுவலர்கள் மட்டும் அல்ல
வணிகர்கள் நுகர்வோர்கள் தொழிலாளர்கள் 
களைப்பு தீர மட்டும் அல்ல
நோக்கம் மேம்படுத்த கூட்டாக தனியாக இளைப்பார
ஒதுங்கும் பொழுது தேநீர்ப்பொழுதுகள்.


- இரா.அண்ணாமலை, திருவண்ணாமலை


**


ஆங்கிலேயரின்
அடிமைத் தளையிலிருந்து
விடுபட்டாலும்
அவர் அன்று  அறிமுகப்படுத்திய 
அதீத சுவைக்கொண்ட
அற்புதபானமாம்  தேநீருக்கு  அடிமைப்பட்டுக் கிடக்கும் 
நம்மில் பலருக்கு 
தேநீர்ப்பொழுதுகள் சில
அலாதியானவை !


மறக்க முடியாத
மாணவப் பருவத்தில்
உருப்போட்ட  பாடங்களுடன்
உறக்கத்தை விரட்ட
உதவியவை
உற்சாகம் அளித்த
தேநீர்ப் பொழுதுகள்
என்றால் அது மிகையில்லை!


பசியும் தாகமுமாய் 
நெடுந்தூரம் பயணிக்கையில்
தெருவோரம் அமைந்த
தேநீர்க்  கடையொன்றில்
கலீ ரென்ற சத்தத்துடன்
கழுவப்பட்ட 
கண்ணாடித் தம்ளரில்
ஊற்றித் தூக்கி
ஆற்றித் தந்த
ஆவிபறக்கும் தேநீர்
அருந்தும்  அந்த நேரம்
ஆவி உள்ளவரை
நினைவில் 
நீங்காது நிற்கும்
சுகமான
சுவையான
தேநீர்ப் பொழுது தான் !


இளமையோ  முதுமையோ
வளமையோ  வறுமையோ
எந்த நிலையிலும்
ஏதோ ஒரு வகையில்
 நம் வாழ்க்கையை 
நேசிக்க வைப்பவை
தேநீர்ப் பொழுதுகள் தான் !


- கே. ருக்மணி, கோவை.


**


ஓயாது புரியும் பணியில் நேரம் கிடைப்பதில்லை
தேயாத நிலவு அமாவாசைக்கு வருவதில்லை
பாயாத நதிகளின் ஓரம் நாகரீகம் வளர்வதில்லை
வேயாத கூரையின் கீழும் தேநீர் மட்டும் வேண்டுமே


மாலைப் பொழுதின் மயக்கத்தில் காதல் வருகிறது
ஒலைக்குடிசையிலும் மாலை நேர மயக்கமுண்டு
சோலைப் பூங்காவிலும் மயக்கும் மாலைப் பொழுது
பாலை நிலத்தில் காணும் சுனையாய் தேநீருடன் தான்


கசக்கிப் பிழிந்து அறிவு வடிக்கும் மென்பொறியாளர்
இசங்கள் பேசி விவாதங்கள் வடிக்கும் அறிவாளிகள்
வசதி வாய்ப்புடன் பொருள் சேர்த்த பணக்காரர்களும்
அசதி போக்க அமர்வர் தேநீர்ப் பொழுதுகளில் தேநீர்க்கு


வீட்டுப் பணிபுரியும் ஓயா உழைப்பாளப் பெண்டிர்
நாட்டு நடப்புகளை தொலைக்காட்சியில் கண்டாலும்
மீட்டும் வீணை இசையின் லயிப்பில் இருந்தாலும்
வாட்டும் தலைவலிக்கு மாலைப் பொழுது தேநீர் தான்


தேநீர் மாலைப் பொழுதுகள் தரும் இன்பம் தனிதான்
காணீர் எங்கும் தேநீரருந்தும் மக்களை மாலையிலே
நாணீர் மது அருந்தும் மாக்களைப் பார்த்து என்றும்
தேநீர் அருந்திடுவீர் தெம்புடன் நடந்திடுவீர் நலமே.


- கவிஞர்  ராம்க்ருஷ்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23947
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum