Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
வெற்றியின் ரகசியம்!
Page 1 of 1
வெற்றியின் ரகசியம்!
பதிவு செய்த நாள்
31மார்
2019
00:00
மற்றவர்களை பார்த்து, 'உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன...' என்று கேட்பர். அதுமட்டுமல்ல, வெற்றி பெற்றவர்களை பார்த்து, 'யாரோ பணம் படைத்தவரின் ஆதரவு இருக்கும்; இல்லேன்னா, வெற்றியை இவ்வளவு எளிதில் அடைந்திருக்க முடியாது...' என்று நினைப்பர்.
உண்மையாக, வெற்றியின் ரகசியம் எது தெரியுமா? இதோ, இந்த கதையை படியுங்கள்...
அரண்மனையில், தத்ரூபமான சேவல் ஓவியம் ஒன்றை வைக்க நினைத்தார், மன்னர். மன்னரின் ஆசை, காட்டுத் தீ போல் ஊரெங்கும் பரவியது. எத்தனையோ ஓவியர்கள் வந்தும், மன்னருக்கு திருப்தியான ஓவியங்களை வரையவில்லை.
மற்ற நாடுகளில் உள்ள ஓவியர்களுக்காக, ஒரு போட்டி வைத்தார். அவர்கள் வரைந்த ஓவியங்களை, மன்னரின் பார்வைக்கு வைத்தனர்.
சிறு வயதில், தனக்கு ஓவியம் கற்றுக்கொடுத்த, வயதான ஓவிய ஆசிரியரை, இப்போட்டியின் நீதிபதியாக அறிவித்தார், மன்னர்.
ஓவிய ஆசிரியரிடம், 'எல்லா ஓவியங்களையும் பார்த்து, சிறந்த சேவல் ஓவியத்தை தேர்வு செய்து விட்டீர்களா...' எனக் கேட்டார், மன்னர்.
'இதில், எந்த ஓவியமும் தகுதியானது இல்லை...' என்றவர், 'ஓவியங்கள் வைத்த அறையில், சேவல்களை விடுவோம். தன் இனத்தை சேர்ந்த வேறொரு சேவலை பார்த்ததும், சண்டை போடத் தோன்றும். எந்த ஓவியத்தை பார்த்து, சண்டை போடத் துவங்குகிறதோ, அது தான், மிகச்சிறந்த ஓவியம் என, முடிவு செய்வோம்...' என்றார், ஆசிரியர்.
அறையில் நிறைய சேவல்களை விட கட்டளையிட்டார், மன்னர். ஆனால், ஓவியத்தை பார்த்து, சேவல்கள் சண்டை போடாமல், வெளியேறின.
'சண்டை போட துாண்டும் சேவல் ஓவியத்தை, நீங்கள் ஏன் வரையக் கூடாது...' என, ஓவிய ஆசிரியரிடம் கேட்டார், மன்னர்.
'உங்கள் சித்தம். ஆனால், எனக்கு ஆறு மாதம் அவகாசம் தேவை...' என்றார், ஆசிரியர்.
'சரி... ஆறு மாதத்திற்கு பின், இதே அறையில் சந்திப்போம்...' என்றார்.
ஆறு மாதத்திற்கு பின், அதே அறையில் எல்லா ஓவியர்களும் மீண்டும் கூடினர். ஆனால், வயதான ஓவிய ஆசிரியர், கையில் எந்த ஓவியமும் எடுத்து வரவில்லை. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார், மன்னர்.
'மன்னா... இங்கேயே, அரை மணியில் வரைகிறேன். அதற்கான உபகரணங்கள் தேவை...' என்று, ஆசிரியர் கூறியதும், அனைத்தும் வந்தன.
மற்ற ஓவியங்களோடு, தான் வரைந்த ஓவியத்தையும் வைத்தார், ஆசிரியர். மீண்டும் அறைக்குள் சேவல்கள் அனுப்பப்பட்டன.
எல்லாரும் ஆவலாக காத்திருக்க, ஆசிரியர் வரைந்திருந்த ஓவியத்தை, நிஜ சேவலாக நினைத்து சண்டைக்கு போனது, ஒரு சேவல். அப்போட்டியில் வெற்றி பெற்றார், ஆசிரியர்.
வயதான ஆசிரியரிடம், 'உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன... ஏன், ஆறு மாதம் தேவைப்பட்டது... இருப்பினும், அப்போது எதுவும் வரையாமல், கடைசியில் வரைய ஏன் அரை மணி நேரம் கேட்டீர்கள்...' என கேட்டார், மன்னர்.
'ஆறு மாதமாக, கோழி, சேவல்கள் எப்படி நடக்கிறதோ, துாங்குகிறதோ மற்றும் உணவு உண்கிறதோ, அதுபோன்றே நானும் நடந்தேன், துாங்கினேன், உண்டேன். அதனுடன் ஒன்றிப்போய், கோழியாகவே மாறி விட்டேன். அதன்பின் தான் சேவல் படத்தை வரைந்தேன்...' என்றார், ஆசிரியர்.
எந்த வேலையிலும், அதில் ஒன்றிப் போவது தான் வெற்றியின் ரகசியம்.
அது போலவே, பிரார்த்தனையின் போது, கடவுள் நாமத்தை வெறுமனே முணுமுணுத்தால் மட்டும் போதாது. கடவுளோடு ஒன்றிப் போக, முழு மனதோடு பிரார்த்தனை செய்ய வேண்டும்.
31மார்
2019
00:00
மற்றவர்களை பார்த்து, 'உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன...' என்று கேட்பர். அதுமட்டுமல்ல, வெற்றி பெற்றவர்களை பார்த்து, 'யாரோ பணம் படைத்தவரின் ஆதரவு இருக்கும்; இல்லேன்னா, வெற்றியை இவ்வளவு எளிதில் அடைந்திருக்க முடியாது...' என்று நினைப்பர்.
உண்மையாக, வெற்றியின் ரகசியம் எது தெரியுமா? இதோ, இந்த கதையை படியுங்கள்...
அரண்மனையில், தத்ரூபமான சேவல் ஓவியம் ஒன்றை வைக்க நினைத்தார், மன்னர். மன்னரின் ஆசை, காட்டுத் தீ போல் ஊரெங்கும் பரவியது. எத்தனையோ ஓவியர்கள் வந்தும், மன்னருக்கு திருப்தியான ஓவியங்களை வரையவில்லை.
மற்ற நாடுகளில் உள்ள ஓவியர்களுக்காக, ஒரு போட்டி வைத்தார். அவர்கள் வரைந்த ஓவியங்களை, மன்னரின் பார்வைக்கு வைத்தனர்.
சிறு வயதில், தனக்கு ஓவியம் கற்றுக்கொடுத்த, வயதான ஓவிய ஆசிரியரை, இப்போட்டியின் நீதிபதியாக அறிவித்தார், மன்னர்.
ஓவிய ஆசிரியரிடம், 'எல்லா ஓவியங்களையும் பார்த்து, சிறந்த சேவல் ஓவியத்தை தேர்வு செய்து விட்டீர்களா...' எனக் கேட்டார், மன்னர்.
'இதில், எந்த ஓவியமும் தகுதியானது இல்லை...' என்றவர், 'ஓவியங்கள் வைத்த அறையில், சேவல்களை விடுவோம். தன் இனத்தை சேர்ந்த வேறொரு சேவலை பார்த்ததும், சண்டை போடத் தோன்றும். எந்த ஓவியத்தை பார்த்து, சண்டை போடத் துவங்குகிறதோ, அது தான், மிகச்சிறந்த ஓவியம் என, முடிவு செய்வோம்...' என்றார், ஆசிரியர்.
அறையில் நிறைய சேவல்களை விட கட்டளையிட்டார், மன்னர். ஆனால், ஓவியத்தை பார்த்து, சேவல்கள் சண்டை போடாமல், வெளியேறின.
'சண்டை போட துாண்டும் சேவல் ஓவியத்தை, நீங்கள் ஏன் வரையக் கூடாது...' என, ஓவிய ஆசிரியரிடம் கேட்டார், மன்னர்.
'உங்கள் சித்தம். ஆனால், எனக்கு ஆறு மாதம் அவகாசம் தேவை...' என்றார், ஆசிரியர்.
'சரி... ஆறு மாதத்திற்கு பின், இதே அறையில் சந்திப்போம்...' என்றார்.
ஆறு மாதத்திற்கு பின், அதே அறையில் எல்லா ஓவியர்களும் மீண்டும் கூடினர். ஆனால், வயதான ஓவிய ஆசிரியர், கையில் எந்த ஓவியமும் எடுத்து வரவில்லை. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார், மன்னர்.
'மன்னா... இங்கேயே, அரை மணியில் வரைகிறேன். அதற்கான உபகரணங்கள் தேவை...' என்று, ஆசிரியர் கூறியதும், அனைத்தும் வந்தன.
மற்ற ஓவியங்களோடு, தான் வரைந்த ஓவியத்தையும் வைத்தார், ஆசிரியர். மீண்டும் அறைக்குள் சேவல்கள் அனுப்பப்பட்டன.
எல்லாரும் ஆவலாக காத்திருக்க, ஆசிரியர் வரைந்திருந்த ஓவியத்தை, நிஜ சேவலாக நினைத்து சண்டைக்கு போனது, ஒரு சேவல். அப்போட்டியில் வெற்றி பெற்றார், ஆசிரியர்.
வயதான ஆசிரியரிடம், 'உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன... ஏன், ஆறு மாதம் தேவைப்பட்டது... இருப்பினும், அப்போது எதுவும் வரையாமல், கடைசியில் வரைய ஏன் அரை மணி நேரம் கேட்டீர்கள்...' என கேட்டார், மன்னர்.
'ஆறு மாதமாக, கோழி, சேவல்கள் எப்படி நடக்கிறதோ, துாங்குகிறதோ மற்றும் உணவு உண்கிறதோ, அதுபோன்றே நானும் நடந்தேன், துாங்கினேன், உண்டேன். அதனுடன் ஒன்றிப்போய், கோழியாகவே மாறி விட்டேன். அதன்பின் தான் சேவல் படத்தை வரைந்தேன்...' என்றார், ஆசிரியர்.
எந்த வேலையிலும், அதில் ஒன்றிப் போவது தான் வெற்றியின் ரகசியம்.
அது போலவே, பிரார்த்தனையின் போது, கடவுள் நாமத்தை வெறுமனே முணுமுணுத்தால் மட்டும் போதாது. கடவுளோடு ஒன்றிப் போக, முழு மனதோடு பிரார்த்தனை செய்ய வேண்டும்.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24060
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|