சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

ஆன்மீக கதை – 'ஐயோ' வேண்டாமே .... Khan11

ஆன்மீக கதை – 'ஐயோ' வேண்டாமே ....

Go down

ஆன்மீக கதை – 'ஐயோ' வேண்டாமே .... Empty ஆன்மீக கதை – 'ஐயோ' வேண்டாமே ....

Post by rammalar Wed 24 Apr 2019 - 22:07

ஆன்மீக கதை – 'ஐயோ' வேண்டாமே .... 50586

--
ஒரு காட்டின் அடிவாரத்தில் ஓர் அழகிய கிராமம் ஒன்று 
இருந்தது.  இயற்கை எழில் சூழ மனதை மயக்கும் 
வகையில் ரம்மியமாக அமைந்திருந்தது. 


அழகிய  தேவதைகளும், தேவ தூதர்களும் அவ்வப்போது 
அங்கு வந்து இளைப்பாறிச் செல்வார்கள். மக்களுடன் 
பேசி மகிழ்வார்கள். ஆச்சரியப்படத்தக்க வகையில் 
 எதிர் துருவங்களாக கருதப்படும் சிங்கமும் மானும் 
கூட நட்பு பாராட்டி வாழ்ந்து வந்தன.


 மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் பரஸ்பர அன்பு 
பாலம்  பிணைந்திருந்தது. மக்கள் எவ்வித குறையுமின்றி 
வாழ்ந்துவந்தனர். 


ஒரு முறை ஊரெங்கும் மழை கொட்டித் தீர்த்தது. 
இன்று ஒரு நாள்… நாளை ஒரு நாள்…. என மக்கள் மழையின் 
யுள்காலத்தை நீட்டித்துக் கொண்டே போகுமளவுக்கு 
மழையின் தீவிரம் அதிகமாகியதே தவிர குறையவில்லை. 


இப்படியே போனால் நாமும் மடிந்துவிட வேண்டியதுதான் 
என்று மக்கள் தங்கள் உடைமைகளையும், தங்கள் வீட்டு 
விலங்குகளையும் அழைத்துக்கொண்டு வெளியேறினார்கள்.


அழகிய தேவதைகளும், தேவ தூதர்களும் மக்களை மீட்டு 
பத்திரமாக அடுத்த கிராமத்துக்கு அழைத்துச் சென்றனர். 
அனைத்து மக்களையும் காப்பாற்றிய தேவதை இறுதியாக 
மரத்தின் மீது அமர்ந்திருந்த ஒரு மனிதனைக் கண்டதும் 
ஓடிச்சென்று வா சீக்கிரம்.. 


விரைவில் இந்த ஊரே வெள்ளத்தில் அடித்து செல்ல போகிறது. 
நான் உன்னை வேறு ஊருக்கு அழைத்துச் செல்கிறேன் என்று 
கூப்பிட்டது. அவன் எப்போதும் அடுத்தவர்களைத் 
துன்புறுத்தியே பழக்கப்பட்டவன். எல்லாமே நான் தான் என்ற 
இறுமாப்போடு திரிவான்.


 சமயத்தில் தான் என்ற கர்வத்துடன் எடக்கு மடக்காகவே 
பேசுவான். இப்போது தேவதை அழைத்ததும் அவனுக்
கு கடுங்கோபம் வந்தது.  என்னைக் காப்பாற்ற என்னைப்
 படைத்தவன் வருவான். நீ போய் உன்னை காப்பாற்றிக்கொள்
 என்றான். 


தேவதைக்கு அவனைப் பற்றி தெரியும் என்பதால் மீண்டும்
 மீண்டும் வற்புறுத்தியது. ஆனாலும் அவன் பற்றிய மரக்
கிளையை விடாமல் தேவதையிடம் வாதாடிக் கொண்டே 
இருந்தான். 


விண்ணுலகத்தில் இருந்து நடந்ததைப் பார்த்து சிரித்துக்
கொண்டிருந்தார் சிவபெருமான். அருகிலிருந்த பார்வதி 
குழப்பமுற்று.. “இறைவா என்ன செய்கிறீர்கள். இன்னும் 
சில நிமிட துளிகளில் நான் அந்த கிராமத்தை மூழ்கடிக்க 
போகிறேன். 


நீங்கள் இன்னும் அவனைக் காப்பாற்றவில்லையா” என்று 
கேட்டாள். சிவபெருமான் சிரித்துக்கொண்டே,” எனக்கும் 
அவனை காப்பாற்ற வேண்டும் என்றுதான் ஆசை. 
ஆனால் அவன் தான் என்னை  அழைக்கவில்லையே” 
என்றார்.


“நீங்கள் விளையாடுகிறீர்கள். வேண்டுமானால் ஒன்று 
செய்யலாம் என்ற பார்வதி தேவி தொடர்ந்தார் அப்பா 
என்றால் நீங்கள் ஓடிப்போய் அவனைக் காப்பாற்றுங்கள். 
அம்மா என்றால் நான் சென்று காப்பாற்றுகிறேன்” என்று 
கூறினாள். 


“சரி உன் விருப்பப்படி செய்” என்றார் சிவபெருமான்.
 பார்வதி தேவி மழையின் தீவிரத்தை அதிகரிக்கும் படி 
வருண பகவானிடம் கூறி அவனுக்கு அச்சத்தை 
அதிகரித்தாள். 


தேவதை கூப்பிடும் போதே போயிருக்கலாம். இப்போது 
என்ன செய்வது என்று கதறினான்… சிவனும், பார்வதியும் 
அவனைக் காப்பாற்ற தயாரானார்கள். அப்பா என்றும்
 அழைக்காமல்…. அம்மா என்றும் அழைக்காமல்….
 ஐயோ  நான் என்ன செய்வேன் என்று அவன் கூறியதுதான் 
தாமதம் அருகிலிருந்த யமன் அவனை வென்றுவிட்டான். 


மேலுலகத்துக்கு போன அவன் கோபத்துடன் சிவபெருமானை 
எதிர்கொண்டான்.  நான் என்ன செய்வது நீ தான் அப்பா 
என்று என்னை அழைக்கவில்லை அம்மா என்று உன் 
தாயையும் அழைக்கவில்லை.. அழைத்திருந்தால் 
வந்திருப்போம். 


ஐயோ என்றதும் அழையா விருந்தாளியாய் வந்த யமன் 
உன்னை வென்றுவிட்டான் என்றார்.


பேசும் வார்த்தையும்,செய்யும் செயலும் நல்லவிதமாய் 
இருந்தால் ,நம்மை நாடி வருவதும் நன்மையாகவே அமையும்.
 தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதற்கு இதைவிட வேறு 
என்ன உதாரணம் இருக்க முடியும்…. 
-
-----------------------------------------------
படித்ததில் பிடித்தது
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24054
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum