சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Yesterday at 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Yesterday at 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Yesterday at 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Yesterday at 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Yesterday at 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Yesterday at 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Yesterday at 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Yesterday at 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Yesterday at 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Yesterday at 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Yesterday at 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Yesterday at 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Yesterday at 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Yesterday at 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48

» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42

» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37

» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31

» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54

» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56

» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49

» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37

» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32

» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Thu 23 May 2024 - 11:25

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Thu 23 May 2024 - 9:24

சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன் Khan11

சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்

Go down

சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன் Empty சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்

Post by rammalar Thu 20 Aug 2020 - 10:21

சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன் E_1278792545

கண்கள் சிவக்க, கோபமாக கத்திக் கொண்டிருந்தான்
குமார். அவன் கோபமாக இருக்கும் போது, நெருங்கவே
பயப்படுவாள் அனு.

அடுக்களையில் அவளுக்கு வேலையே ஓடவில்லை.
பாவம் சந்தீப்... பத்து வயது சிறுவன்; அவன் முன்
அழுதபடி நின்றுக் கொண்டிருந்தான்.

இதற்கும், தனக்கும் சம்பந்தமில்லை என்பது போல்,
உள் அறையில் உட்கார்ந்து சாமி ஸ்லோகம் சொல்லிக்
கொண்டிருந்தாள் அனுவின் மாமியார் ஜெயலட்சுமி.

"இங்க பாரு சந்தீப்... உன்னோட நடவடிக்கை வரவர
சரியில்லை. கொஞ்சமும் மனசில் பயமில்லை.
கூட படிக்கிற பிள்ளைங்களோடு தகராறு, சண்டை.
மிஸ் சொல்றதை கேட்கறது கிடையாது. இதெல்லாம்
நல்ல பழக்கம் இல்லை புரியுதா...
மிஸ் சொல்றதை கேட்டு நடந்துக்கணும். என்ன
சொல்றது விளங்குதா?''

கையில் இருந்த ஸ்கேலால், முழங்காலுக்கு கீழ்,
கால்களில் சுளிரென அடித்தான்.

""அப்பா ப்ளீஸ்பா. அடிக்காதீங்கப்பா... வலிக்குது.''

""வலிக்குதா... அப்பதான் ஞாபகம் இருக்கும்.
இனி இந்த மாதிரி நடந்துக்க மாட்டே. நேத்து வாசலில்
பஞ்சுமிட்டாய் வாங்க அம்மாகிட்டே காசு கேட்டு,
அம்மா கொடுக்கலைன்னு பாட்டிகிட்டே கேட்டியாமே...
உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்.
பாட்டிக்கிட்டே காசு கேட்க கூடாதுன்னு...''

""இல்லேப்பா... அம்மா தரமாட்டேன்னு சொல்லிட்டாங்க.
அதான் பாட்டிகிட்டே கேட்டேன். சாரிப்பா... இனி அப்படி
செய்ய மாட்டேன்.''
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24281
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன் Empty Re: சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்

Post by rammalar Thu 20 Aug 2020 - 10:21

கெஞ்சுதலுடன், அழுத கண்களுடன் பிரதீப் பார்க்க,
"சரி, சரி... உள்ளே போய் முகம் அலம்பிட்டு, ஸ்கூலுக்கு
கிளம்பு...''

அடித்த கணவனை விட, உள்ளே அமைதியாக உட்கார்ந்து
இருக்கும் மாமியார் மீது அனுவுக்கு கோபம் வந்தது.
குழந்தையை திட்டி, அடிக்கிறாரே... போய் தடுப்போம்
என்றில்லாமல், தனக்கும், இதற்கும் சம்பந்தமில்லை
என்பது போல், கல் போல அமர்ந்திருக்கும் மாமியாரை
நினைக்க, எரிச்சல் வந்தது.

அம்மா மீது மிகவும் மரியாதை வைத்திருப்பவன் குமார்.
அம்மா சொல்லை தட்ட மாட்டான். எந்த விஷயத்தில்
குமார் கோபப்பட்டு கத்தினாலும், உடனே தலையிட்டு,
அவனை சாந்தபடுத்துவாள்.

அப்படிபட்டவள், குழந்தையை குமார் அடிக்கும்போது,
தடுக்க வராமல் அமைதியாக இருப்பது... மாமியாரின்
மேல் அவளை கோபம் கொள்ள செய்தது.

முகம் சோர்ந்து சந்தீப், மவுனமாக ஸ்கூலுக்கு கிளம்ப,
"அனு... சந்தீப்பிற்கு தட்டில் டிபன் வைத்து கொடு;
நான் ஊட்டி விட்டு அனுப்பறேன்.''

இதில், ஒன்றும் குறைச்சலில்லை. பேரன் மேல் அக்கறை
இருப்பது போல் காட்டி கொள்கிறாள் என, மனதில்
முணுமுணுத்தபடி, டிபன் தட்டை மாமியாரிடம்
கொடுத்தாள்.

குமார் ஆபிசுக்கு செல்ல, சந்தீப் ஸ்கூலுக்கு சென்றுவிட,
பாத்திரங்களை ஒழித்து தேய்ப்பதற்கு போட்ட அனு,
வேலைக்காரி மரகதம் உள்ளே நுழைவதை பார்த்தாள்.

ஜெயலட்சுமி குளித்துக் கொண்டிருக்க, "மரகதம்,
முதலில் வீட்டை பெருக்கி துடைச்சுடு; அப்புறம்
பாத்திரம் தேய்க்கலாம்.''

"சரிம்மா. பெரியம்மா எங்கே... குளிக்கிறாங்களா?''
கேட்டபடி, துடைப்பத்தை எடுத்து, வீட்டை பெருக்க
ஆரம்பித்தாள்.

குளித்துவிட்டு வந்த ஜெயலட்சுமி, அனுவை பார்த்து,
"அனு... நீ சாப்பிடு. நான் சாமி கும்பிட்டு, அப்புறமா
சாப்பிடறேன். டேபிள் மேலே நாலு இட்லி எடுத்து
வச்சுட்டு, உன் வேலையை பாரு.''

"நேரத்துக்கு சாப்பிட்டு ப்ரஷர் மாத்திரை போட்டுக்கணும்...
முதலில் சாப்பிடுங்க...' சாதாரணமாக அனு அப்படி தான்
சொல்லியிருப்பாள். இன்று மாமியார் மீது கோபமாக
இருப்பதால், ஒன்றும் பதில் சொல்லாமல், அடுக்களையில்
நுழைந்தாள்.

"என்னம்மா முகம் வாடியிருக்கு... குளிச்சுட்டு வந்திருக்கீங்க...
சாப்பிட வேண்டியது தானே. மணியாகலையா?'' வீட்டை
பெருக்கியபடி மரகதம் கேட்க, "மனசு சரியில்லை மரகதம்.
சந்தீப்பையே நினைச்சுட்டு இருக்கேன்.''
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24281
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன் Empty Re: சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்

Post by rammalar Thu 20 Aug 2020 - 10:21

சந்தீப் பெயர், அவர்கள் பேச்சில் அடிபட, என்ன
பேசிக் கொள்கின்றனர் என்பதை கவனித்தாள் அனு.

""ஏன்ம்மா... புள்ளைக்கு என்ன ஆச்சு... உடம்பு
சரியில்லையா... நல்லா தானே ஸ்கூலுக்கு போயிருக்கு.''

""அதில்லை மரகதம்... காலையில் குமார், அவனை
சப்தம் போட்டு அடிச்சுட்டான். அவன் முகம் சோர்ந்து,
ஸ்கூலுக்கு போனதை நினைச்சுக்கிட்டேன்; சாப்பிட
கூட பிடிக்கலை.''

""என்னம்மா இது, குமார் ஐயா உங்க பிள்ளை. நீங்க
எது சொன்னாலும் மறுபேச்சு பேசாமல் கேட்கற
தங்கமான புள்ளை. நீங்க போயி, "அடிக்காதே'ன்னு
சொல்லி தடுத்து இருக்கலாமே... அதை விட்டுட்டு...
இப்ப போயி அடிவாங்கிட்டு போன பேரனை நினைச்சு...
வருத்தப்பட்டுட்டு இருக்கீங்க...''

அனு மனதில் எழுந்த கேள்வியை, மரகதம் கேட்க,
மாமியார் என்ன பதில் சொல்ல போகிறாள் என்பதை
கேட்க கூர்ந்து கவனித்தாள்...

"புள்ளையோட பழக்க வழக்கங்கள் தப்பு. அப்படி
செய்யக் கூடாதுன்னு பெத்தவங்க கண்டிக்கும் போது,
நான் தலையிட்டால் அது, அந்த பிள்ளையை கெடுக்கிற
மாதிரி ஆயிடும்.

தனக்கு ஆதரவாக பாட்டி இருக்காங்க... நாளைக்கு
எந்த தப்பு செய்தாலும் பாட்டி தனக்கு ஆதரவாக
இருந்து காப்பாத் திடுவாங்ககிற எண்ணம், அந்த
பிஞ்சு மனதில் வந்துடும். அது, அவன் போக்கையே
மாத்திடும்... அது தப்பு மரகதம்...

"வயசான நாங்க, பேர பிள்ளைங்க மேல காட்டற
பரிவும், பாசமும் அவங்க நல் வாழ்க்கைக்கே
குந்தகமா அமைஞ்சுட கூடாது. நேத்து, வாசலில்
பஞ்சுமிட்டாய் வாங்கி சாப்பிடக் கூடாதுன்னு அனு,
காசு கொடுக்க மறுத்திட்டா.

பாட்டி கிட்டே வாங்கிடலாம்ன்னு என்கிட்டே ஓடி
வந்தான்.

"" நான் காசு கொடுத்தா... அது, அவனை கெடுக்கற
மாதிரி தானே அமையும். நல்லதை பெத்தவங்க
எடுத்துச் சொல்லும் போது, நாம் குறுக்கிடாம,
அமைதியாக இருக்கிறது தான் நல்லது. உண்மையான
அக்கறையோடு கண்டிக்கிற உரிமை, பெத்தவங்களுக்கு
மட்டும் தான் இருக்கு.

"அதிலே மூணாவது மனுஷங்க, தலையீடு இருக்கக்
கூடாது. அன்பையும், பாசத்தையும் காட்ட வேண்டிய
நேரத்தில் தான் காட்டணும். என் பேரனை நல்
வழிபடுத்தணும்ன்னு தானே கண்டிக்கிறான்னு,
மனசை கல்லாக்கிட்டு உட்கார்ந்திருந்தேன்.

"நிச்சயம் இனி அந்த மாதிரி தவறுகளை பேரன்
செய்ய மாட்டான். அவன் நல்லவனா, வல்லவனா
வளரணும் மரகதம். அதுதான் இந்த பாட்டியோட
விருப்பம்.''

""என்னவோ போங்கம்மா... நீங்க சொல்றது எனக்கு
விளங்கலை. பேரன் மேலே அளவு கடந்த பாசம்
வச்சிருக்கிறது மட்டும் புரியுது.''

மரகதம் வெளியேற, ""அத்தை... எழுந்திருங்க. வாங்க
ரெண்டு பேரும் சாப்பிடலாம்... மணியாச்சு.
சாயந்திரம் உங்க பேரன் வந்ததும் கூட்டிட்டு,
கோவிலுக்கு போய்ட்டு வாங்க, உங்க மனசு
சரியாயிடும்.''

உண்மையான பரிவுடன் கூறினாள் அனு.
-
-----------------------------------
நன்றி-வாரமலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24281
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன் Empty Re: சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum