Latest topics
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வுby rammalar Today at 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41
» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46
» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Tue 28 May 2024 - 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Tue 28 May 2024 - 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா?
Page 1 of 1
மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா?
அந்த ஊரில் வையாபுரி என்பவர் வட்டிக்குக் கடன்
கொடுப்பவராக இருந்தார். அவரிடம் முருகேசன்
என்ற வியாபாரி நூறு வராகன்கள் கடன் வாங்கி
இருந்தார்.
வையாபுரி முருகேசனிடம் பலமுறை அலைந்து
கேட்டுப் பார்த்தும் முருகேசனோ வட்டியும் தராமல்
அசலும் கொடுக்காமல் அலைக்கழித்தார்.
ஒருநாள் வையாபுரி முருகேசனிடம் தன் பணத்தை
வட்டியுடன் சேர்த்து உடனடியாகக் கொடுத்துவிடுமாறு
கடுமையாகக் கேட்டார்.
முருகேசனோ "நாளை நான் வயலில் வேலை செய்து
கொண்டிருக்கும் போது வந்து கேளுங்கள்! கடன்
பத்திரத்தையும் கொண்டு வாருங்கள்..அப்போது
வட்டியுடன் அசலையும் தருகிறேன்" என்று கூறி
அனுப்பி வைத்தார்.
மறுநாள் வையாபுரி கடன் பத்திரத்துடன் முருகேசனின்
வயலுக்குப் போனார். வையாபுரியைப் பார்த்த
முருகேசன் "உங்கள் கடனைத் தீர்த்து விடுகிறேன்.
கடன் பத்திரத்தைக் கொண்டு வந்திருக்கிறீர்களா?"
என்றார்.
"இதோ கொண்டு வந்திருக்கிறேன்" என்று கூறிய
வையாபுரி தம் மடியில் இருந்த கடன் பத்திரத்தை
எடுத்து முருகேசனிடம் காட்டினார்.
உடனே முருகேசன் சட்டென்று அவர் கையில்
இருந்த கடன் பத்திரத்தை பிடுங்கிச் நார்நாராகக்
கிழித்து அருகில் எரிந்துகொண்டிருந்த
குப்பையோடு குப்பையாக போட்டு எரித்துவிட்டார்.
இதைப் பார்த்து வையாபுரி திகைத்துப் போய்விட்டார்.
முருகேசனோ "இப்போது என்ன செய்வாய்?
நான் உனக்கு எதுவும் தரவேண்டியது இல்லை.
அதற்கான ஆதாரங்களும் இல்லை. இனி பணம்
கேட்டு என்னிடம் அடிக்கடி தோலை செய்யாதே"
என்று கடுமையாகக் கூறிவிட்டு அங்கிருந்து சென்று
விட்டார்.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24317
மதிப்பீடுகள் : 1186
Re: மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா?
மிகுந்த ஏமாற்றமும் அவமரியாதையும் அடைந்த
வையாபுரி மரியாதை இராமனிடம் நடந்ததை
முறையிட்டார்.
அனைத்தையும் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த
மரியாதை இராமன் "முருகேசன் எழுதிக்கொடுத்த கடன்
பத்திரம் எவ்வளவு நீளம் இருக்கும்?" என்று கேட்டார்
"ஒரு ஜான் நீளம் தான் இருக்கும்" என்றார் வையாபுரி.
"நாளைய தினம் இதே கேள்வியை உங்களிடம் கேட்பேன்.
அப்போது நீங்கள் ஒரு முழம் நீளம் இருக்கும் என்று
சொல்ல வேண்டும்" என்றார். வையாபுரியும் சம்மதித்தார்.
மறுநாள் வழக்கு மன்றத்திற்கு வந்தது.
மரியாதை இராமன் முருகேசனிடம்,
"நீர் வையாபுரியிடம் நூறு வராகன் கடன் வாங்கியது
உண்மையா?" என்று கேட்டார்.
"இல்லை ஐயா!" என்று மறுத்தான் முருகேசன்.
"நீ கடன் வாங்கிக் கொண்டு கடன் பத்திரம் கூட எழுதிக்
கொடுத்ததாக வையாபுரி சொல்கிறாரே!" என்றார்
மரியாதை இராமன்.
"பொய், நான் இவரிடம் கடன் வாங்கவுமில்லை. கடன்
பத்திரம் எழுதி கொடுக்கவும் இல்லை." என்றார் முருகேசன்.
மரியாதை இராமன் வையாபுரியைப் பார்த்து
"இவர் உம்மிடம் கடன் வாங்கிக்கொண்டு பத்திரம்
எழுதிக்கொடுத்தார் என்று சொன்னீர்கள் அல்லவா, அதன்
நீளம் எவ்வளவு இருக்கும்?" என்றார்.
"ஒரு முழம் நீளம் இருக்கும்" என்றார் வையாபுரி.
உடனே முருகேசனுக்கு கோபம் வந்துவிட்டது.
"ஏன் புளுகுகிறாய்? நீ கொடுத்த நூறு வராகனுக்கு ஒரு
முழத்திற்கா பத்திரம் எழுதுவார்கள்?
ஒரு ஜான் நீளம் கூட இருக்காது" என்றார் ஆவேசமாக.
இதைக்கேட்ட மரியாதை இராமன்"ஆமாம் அவரை அப்படி
புளுகுமாறு நான் தான் சொன்னேன். அதனால் தானே
இப்போது உம் வாயாலேயே நீர் உண்மையைச் சொல்லி
விட்டீர்" என்றார்.
பின் வையாபுரிக்கு சேரவேண்டிய நூறு வராகனை
வட்டியுடன் அடைக்கவும், பத்திரத்தை கிழித்துப் போட்டு
விட்டு பொய் சொல்லி ஏமாற்ற முயன்றதுக்காக ஐம்பது
கசையடிகளும் கொடுக்குமாறு தீர்ப்பு கூறினார்.
மரியாதை இராமன் சாதுர்யமாக உண்மையை
வெளிக்கொண்டுவந்ததை ஊர்மக்கள் மிகவும்
பாராட்டினார்கள்.
-
வையாபுரி மரியாதை இராமனிடம் நடந்ததை
முறையிட்டார்.
அனைத்தையும் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த
மரியாதை இராமன் "முருகேசன் எழுதிக்கொடுத்த கடன்
பத்திரம் எவ்வளவு நீளம் இருக்கும்?" என்று கேட்டார்
"ஒரு ஜான் நீளம் தான் இருக்கும்" என்றார் வையாபுரி.
"நாளைய தினம் இதே கேள்வியை உங்களிடம் கேட்பேன்.
அப்போது நீங்கள் ஒரு முழம் நீளம் இருக்கும் என்று
சொல்ல வேண்டும்" என்றார். வையாபுரியும் சம்மதித்தார்.
மறுநாள் வழக்கு மன்றத்திற்கு வந்தது.
மரியாதை இராமன் முருகேசனிடம்,
"நீர் வையாபுரியிடம் நூறு வராகன் கடன் வாங்கியது
உண்மையா?" என்று கேட்டார்.
"இல்லை ஐயா!" என்று மறுத்தான் முருகேசன்.
"நீ கடன் வாங்கிக் கொண்டு கடன் பத்திரம் கூட எழுதிக்
கொடுத்ததாக வையாபுரி சொல்கிறாரே!" என்றார்
மரியாதை இராமன்.
"பொய், நான் இவரிடம் கடன் வாங்கவுமில்லை. கடன்
பத்திரம் எழுதி கொடுக்கவும் இல்லை." என்றார் முருகேசன்.
மரியாதை இராமன் வையாபுரியைப் பார்த்து
"இவர் உம்மிடம் கடன் வாங்கிக்கொண்டு பத்திரம்
எழுதிக்கொடுத்தார் என்று சொன்னீர்கள் அல்லவா, அதன்
நீளம் எவ்வளவு இருக்கும்?" என்றார்.
"ஒரு முழம் நீளம் இருக்கும்" என்றார் வையாபுரி.
உடனே முருகேசனுக்கு கோபம் வந்துவிட்டது.
"ஏன் புளுகுகிறாய்? நீ கொடுத்த நூறு வராகனுக்கு ஒரு
முழத்திற்கா பத்திரம் எழுதுவார்கள்?
ஒரு ஜான் நீளம் கூட இருக்காது" என்றார் ஆவேசமாக.
இதைக்கேட்ட மரியாதை இராமன்"ஆமாம் அவரை அப்படி
புளுகுமாறு நான் தான் சொன்னேன். அதனால் தானே
இப்போது உம் வாயாலேயே நீர் உண்மையைச் சொல்லி
விட்டீர்" என்றார்.
பின் வையாபுரிக்கு சேரவேண்டிய நூறு வராகனை
வட்டியுடன் அடைக்கவும், பத்திரத்தை கிழித்துப் போட்டு
விட்டு பொய் சொல்லி ஏமாற்ற முயன்றதுக்காக ஐம்பது
கசையடிகளும் கொடுக்குமாறு தீர்ப்பு கூறினார்.
மரியாதை இராமன் சாதுர்யமாக உண்மையை
வெளிக்கொண்டுவந்ததை ஊர்மக்கள் மிகவும்
பாராட்டினார்கள்.
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24317
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» மரியாதை இராமன் கதைகள் - இரும்பைத் தின்ற எலி வழக்கு
» சி.வி.இராமன்
» ஒரு முழம் கயிறைத்தான் திருடினேன். …
» முதல் அரசியல் பயணத்தை மேற்கொள்கிறார் ஆங் சான் சூகி.
» புகழ் பெற்ற விஞ்ஞானி சர். சி. வி. இராமன்
» சி.வி.இராமன்
» ஒரு முழம் கயிறைத்தான் திருடினேன். …
» முதல் அரசியல் பயணத்தை மேற்கொள்கிறார் ஆங் சான் சூகி.
» புகழ் பெற்ற விஞ்ஞானி சர். சி. வி. இராமன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|