Latest topics
» பல்சுவை 11by rammalar Yesterday at 17:13
» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Yesterday at 17:08
» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Yesterday at 11:43
» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Yesterday at 9:36
» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Yesterday at 9:33
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Yesterday at 9:31
» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Yesterday at 9:30
» பாசம் - ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 9:27
» தீவிரமாக ஆன்மீகத்தில் இறங்கிய சமந்தா.. வைரலாகும் ஸ்டில்கள்
by rammalar Yesterday at 6:56
» காதலனுடன் கங்கனாவின் நெருக்கமான படங்கள் லீக்
by rammalar Yesterday at 6:53
» 12 வயது சிறுவனுக்கு அம்மாவான ரோஷிணி
by rammalar Yesterday at 6:50
» ஹரா விமர்சனம்
by rammalar Yesterday at 6:48
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by rammalar Yesterday at 4:17
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by rammalar Yesterday at 4:09
» நொடிக்கதைகள்
by rammalar Tue 11 Jun 2024 - 17:20
» பல்சுவை- 10
by rammalar Tue 11 Jun 2024 - 16:39
» வெஜ் பால் பிரியாணி
by rammalar Tue 11 Jun 2024 - 12:50
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by rammalar Tue 11 Jun 2024 - 10:18
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by rammalar Tue 11 Jun 2024 - 10:12
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by rammalar Tue 11 Jun 2024 - 6:46
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by rammalar Tue 11 Jun 2024 - 6:46
» வாயாடிப் பெண்ணுக்கு பொருத்தமான மாப்பிள்ளை!
by rammalar Tue 11 Jun 2024 - 6:30
» ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Tue 11 Jun 2024 - 4:37
» திமுக நாடாளுமன்ற குழுத் தலைவராக கனிமொழி நியமனம்..!
by rammalar Tue 11 Jun 2024 - 4:19
» அமைச்சர்கள் பட்டியல்
by rammalar Mon 10 Jun 2024 - 19:16
» சம்பளத்துக்கு பதிலா 500 முத்தம் ...
by rammalar Mon 10 Jun 2024 - 18:55
» இரண்டி ஒன்று போனால் ஒன்றுமில்லை ...
by rammalar Mon 10 Jun 2024 - 17:46
» தமிழ்நாட்டில் கள்ளக் கடல் நிகழ்வு.. நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
by rammalar Mon 10 Jun 2024 - 15:49
» பல்சுவை - 9
by rammalar Mon 10 Jun 2024 - 15:09
» நற்காலை வணக்கம்!
by rammalar Mon 10 Jun 2024 - 13:08
» அனாதைக்காதலன் கவிதைகள்
by rammalar Mon 10 Jun 2024 - 11:52
» முடக்கத்தான் கீரையின் பயன்கள்
by rammalar Mon 10 Jun 2024 - 11:35
» பொய்க்கு ஆரம்பம் இல்லை…
by rammalar Mon 10 Jun 2024 - 10:14
» பணம் -தத்துவம்!
by rammalar Mon 10 Jun 2024 - 8:12
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by rammalar Mon 10 Jun 2024 - 6:14
இன்று குடும்ப நலனுக்காக பெண்கள் அனுஷ்டிக்கும் ரம்பை திருதியை
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
இன்று குடும்ப நலனுக்காக பெண்கள் அனுஷ்டிக்கும் ரம்பை திருதியை
---------------------------
அட்சய திருதியை’ அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
அந்த நல்ல நாளில், ஏதாவது ஒரு பொருள் வாங்கினால்,
வீட்டில் ஐஸ்வர்யம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை
நிலவி வருகிறது.
குடும்ப நலனுக்காகவும், கணவன்- மனைவி
ஒற்றுமைக்காகவும், நீண்ட ஆயுள் வேண்டியும் பெண்கள்
இருக்கும் விரதத்திற்கு ‘ரம்பை திருதியை’ என்று
பெயர்.
அனைத்து வளங்களும், நலன்களும் வேண்டும் என்பதற்காக,
தேவலோக கன்னிகையான ரம்பை செய்த பூஜையே,
‘ரம்பை திருதியை’ நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த விரதமுறை வந்த கதையைப் பற்றி பார்ப்போம்.
தேவலோகத்தில் உமையவளுக்குத் தோழிகளாக இருப்பவர்கள்,
அரம்பையர்கள். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக்
கடைந்தபோது, இவர்கள் கடலுக்குள் இருந்து வெளிப்பட்டதாகப்
புராணங்கள் சொல்கின்றன.
இவர்கள் தாங்கள் என்றும் இளமை மாறாத கன்னியர்களாகத்
திகழ வேண்டும்; தங்களுக்கென்று தனி உலகம் வேண்டும்
என்று சிவபெருமானை வேண்டினார்கள்.
சிவபெருமானும் அவர்களுக்காக ஓர் உலகத்தைப் படைத்தார்.
அது “அரம்பையர்கள் லோகம்’ எனப்பட்டது.
அந்த உலகத்தில் பாற்கடலில் தோன்றிய அறுபதாயிரம்
அரம்பையர் பெண்களும் வசித்து வந்தார்கள்.
அவர்களுக்கு தலைவியாக இருந்தவள் ரம்பை.
அரம்பையர்கள் சிவ பூஜையினை மேற்கொள்பவர்களாகத்
திகழ்ந்ததுடன் உமையவளுக்கு தோழியராகவும் இருந்தார்கள்.
இவர்களில் ரம்பை, அலம்புசை, மனோகரை, ஊர்வசி, கலாநிதி,
கனகை, மேனகை, திலோத்தமை, சந்திரலேகை என்பவர்கள்
மிகவும் புகழ் பெற்றவர்கள். இவர்களை ‘அப்சகணம்’
என்று அழைப்பார்கள்.
இந்த அழகான அரம்பையர்கள், பல வகையான இசைக்
கருவிகளை மீட்டியபடி இனிய குரலில் பாடுவார்கள்.
ஆடல் கலையில் வல்லவர்கள். பாற்கடலில் தோன்றிய
இவர்களை வழிபட்டால் மகிழ்ச்சியும் செல்வமும் இளமைத்
தோற்றமும் கிட்டும் என்று புராணங்கள் சொல்கின்றன.
ஆனி மாதத் திருதியை இவர்களுக்குரிய நாள் என்றும்,
கார்த்திகை மாத சுக்லபட்ச திருதியை நாளே இவர்களுக்குரியது
என்றும் இருவேறு கருத்துகள் உள்ளன.
இந்நாளில் அரம்பையர்களை வழிபடும் வழக்கம்
முற்காலத்திலேயே இருந்துள்ளது. இது, காலம் செல்ல செல்ல
வழிபடும் வழக்கம் மருவி தற்பொழுது, வடநாட்டில் மட்டும்
இந்நாளில் லட்சுமி பூஜை செய்து பலன் பெறுகிறார்கள்.
கார்த்திகை மாத வளர்பிறை திருதியை திதி அன்று, ரம்பை
திருதியை விரதம் கடைப்பிடித்து, அருகிலுள்ள
சிவாலயத்திற்குச் சென்று சிவபெருமானையும்
அம்பாளையும் வழிபட்டால், அரம்பையர்கள் மகிழ்ந்து
வாழ்த்துவார்கள். என்றும் அழகு குன்றாமலும், இளமைத்
தோற்றத்துடனும், லட்சுமி கடாட்சம் நிறைந்தும் வாழ வழி
வகுப்பார்கள்.
கலைத் தொழிலில் ஈடுபாடுள்ளவர்களும் இசை, நடனம்,
பாடல் பயில்வோரும் இந்நாளில் விரதம் மேற்கொண்டால்
கலைஞானம் கிட்டுவதுடன் பெயரும் புகழும் கிட்டும் என்பர்.
திருப்பைஞ்ஞீலி என்ற திருத்தலத்தில் பார்வதி சிவபெருமானை
வழிபட வந்த போது, அரம்பையர்கள் வாழை மரங்களாக மாறி
நிழல் தந்து உதவி, அவர்களது அருளைப் பெற்றனர்.
வாரணாசி யில் மேனகையும், திருக்கழுக்குன்றத்தில்
திலோத்தமையும், சிவபெருமானை வழிபாடு செய்து அருள்
பெற்றனர்.
திருநீலக்குடி, பந்தநல்லூர் போன்ற இடங்களிலும் பல
அரம்பையர்கள் வழிபாடு செய்து அருள் பெற்றதாக
தலபுராணங்கள் குறிப்பிடுகின்றன.
மாலைமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24529
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» இன்று குடும்ப நலனுக்காக பெண்கள் அனுஷ்டிக்கும் ரம்பை திருதியை
» அன்னபூரணி அவதரித்த அட்சய திருதியை
» பெண்கள் இன்று வாழ்க்கையில் தனித்து நிற்கிறார்கள்! தவித்து நிற்கிறார்கள்!
» மாணவிகள் நலனுக்காக கேரளாவில் என்ன செய்திருக்கிறார்கள் தெரியுமா…?
» அட்சய திருதியை – பெருமைகள்
» அன்னபூரணி அவதரித்த அட்சய திருதியை
» பெண்கள் இன்று வாழ்க்கையில் தனித்து நிற்கிறார்கள்! தவித்து நிற்கிறார்கள்!
» மாணவிகள் நலனுக்காக கேரளாவில் என்ன செய்திருக்கிறார்கள் தெரியுமா…?
» அட்சய திருதியை – பெருமைகள்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|