சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48

» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42

» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37

» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31

» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54

» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56

» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49

» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37

» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32

ஒரு நிமிட கதை- பரிவு Khan11

ஒரு நிமிட கதை- பரிவு

Go down

ஒரு நிமிட கதை- பரிவு Empty ஒரு நிமிட கதை- பரிவு

Post by rammalar Sat 30 Apr 2022 - 14:20

ஒரு நிமிட கதை- பரிவு 46867
-

-
“ஏம்மா, உன்னை சீக்கிரமா கிளம்பத் தானே சொன்னேன்?...”- 
என்று அம்மாவிடம் சிடுசிடுத்த ராகவன், மனைவியிடம் சென்று,
“ஏய்...அம்மாவுக்கு சீக்கிரம் டிபன் வை. நான் ஆபிஸ் போகும்
போது அவங்களை பஸ் ஸ்டாண்டுல விட்டுட்டுப் போயிடறேன்” 
என்றான்.

“ஊருக்கு கிளம்பற அம்மாகிட்ட ஏன் இப்படி எரிஞ்சு விழறீங்க? 
நீங்க கால்ல சுடு தண்ணி ஊத்திக்கிட்ட மாதிரி படபடக்கறது 
அவங்களுக்கு சரிப்பட்டு வராது. நீங்க கிளம்புங்க. அவங்க வ
யசானவங்க. நிதானமா கிளம்பி ஆட்டோவுல போவாங்க. நான் 
அவங்களை வழி அனுப்பி வைக்கிறேன்!” ரமா சொன்னாள்.

ரமா மாமியாருக்காக பரிந்து பேசுவதைப் பார்த்து ராகவன் 
ஆனந்தப்பட்டான்.

ஆனால் அவள் அப்படி பேசுவதற்கு அர்த்தம் இருந்தது. 
ஊரிலிருந்து வந்திருக்கிற அம்மா இன்று கிளம்புகிறாள் என்று 
காலையில் தெரிந்ததுமே ‘செலவுக்கு வச்சுக்கம்மா’ என்று 
ராகவன் பணம் கொடுத்தபோது, ரமா பார்த்துவிட்டாள். 

அதை எப்படியாவது மாமியாரிடமிருந்து பிடுங்கிவிட வேண்டும் 
என்றுதான் இந்த கரிசன நாடகம்.

மாமியார் கிளம்பி ரமாவிடம் விடைபெறும் போது ரமா கேட்டாள், 
“அத்தே, உங்கப் பிள்ளை என் செலவுக்குன்னு பணமே தர்றது 
இல்லை. கேட்டா, ‘எல்லாம் நான்தான் வாங்கி வந்து 
போட்டுடறேனே. அப்புறம் உனக்கு ஏன் தனியாப் பணம்? ’ன்னு 
கேட்கறார். வீட்ல கைக்குழந்தை இருக்கு. திடீர்னு அதுக்கு 
ஒண்ணுன்னா டாக்டர்கிட்ட அழைச்சுட்டுப் போகக்கூட அவசர 
செலவுக்குன்னு வீட்ல பத்து பைசா இல்லை. 

நீங்க தப்பா எடுத்துக்க லேன்னா உங்ககிட்ட பணம் ஏதாவது 
இருந்தா கொடுத்துட்டு போங்க அத்தே”.
ரமாவின் பேச்சு மிக இயல்பாய் இருந்தது.

மகன் கொடுத்த பணத்துடன் ஆட்டோவுக் கென்று எடுத்து 
வைத்திருந்த பணத்தையும் சேர்த்து ரமாவிடம் கொடுத்துவிட்டு,
 மூணு கிலோ மீட்டர் வெயிலில் நடந்தே பஸ் ஸ்டாண்டுக்கு வந்தாள் 
ராகவனின் அம்மா.

“என்ன ராகவ்... காலையில இருந்து சந்தோஷமா இருக்கே? - 
ராகவனிடம் ஆபிஸ் நண்பன் குமார் கேட்டான்.

“என் மனைவி என்னைக்காவது ஒரு நாள் மனசு மாறி, என் 
அம்மாகிட்ட அன்பா நடந்துக்க மாட்டாளான்னு எதிர்பார்த்துட்டு 
இருந்தேண்டா. அவ இவ்வளவு சீக்கிரம் மாறுவாள்னு நினைக்கவே 
இல்லை”

தாமதமாய் கிளம்பிய அம்மாவிடம் தான் கோபமாய் பேசியதையும், 
அதற்கு ரமா பரிந்து வந்ததையும் பெருமையாகச் சொல்லிக் 
கொண்டிருந்தான் ராகவன்.. உலகம் புரியாத அப்பாவியாய்!-
---
-எஸ்.எஸ்.பூங்கதிர்
நன்றி-இந்து தமிழ் திசை


Last edited by rammalar on Sat 30 Apr 2022 - 14:22; edited 1 time in total
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24288
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ஒரு நிமிட கதை- பரிவு Empty Re: ஒரு நிமிட கதை- பரிவு

Post by rammalar Sat 30 Apr 2022 - 14:20

மிளகில் இருக்கு சூட்சுமம்

* ஒரே ஒரு மிளகு போதும்... உண்ணும் உணவு சுவையாக.

* இரண்டு மிளகெடுத்து இரண்டொரு ஆடாதோடா இலை 
சேர்த்தால் இருமல், சளி காணாமல் போகும்.

* மூன்று மிளகெடுத்து வெங்காயம் சேர்த்து தலைக்கு 
தேய்த்தால் கேசம்கூட முசு முசுவென்று வளரும்.

* நான்கு மிளகும், சுக்கும் சிறிது கலந்தால் நெஞ்சுவலி 
சொல்லாமல் போகும்.

* ஐந்து மிளகும் சுக்கும் திப்பிலியும் இணைந்தால் கோழை 
ஓடியே போகும்.

* ஆறு மிளகெடுத்து பெருஞ்சீரகம் (சோம்பு) இடித்து உண்ண, 
மூலநோய் வந்த சுவடின்றி தானே மறையும்.

* ஏழு மிளகை பொடி செய்து நெய் கலந்து அன்னம் பிசைந்து 
உண்டால் நல்ல பசி எடுக்கும். தொண்டைப்புண்ணும் 
தொண்டைக்கட்டும் விட்டுப் போகும்.

* எட்டு மிளகோடு பெருங்காயம் சேர்த்துக்கொண்டால் 
வாந்திகூட எட்டி நிற்கும்.

* ஒன்பது மிளகும் துளசியும், ஒவ்வாமையை (அலர்ஜி) 
துரத்தியடிக்கும்.*

* பத்து மிளகை வாயில் போட்டு கடித்து மென்று விட்டு, 
பகைவன் வீட்டிலும் பயமேயின்றி விருந்துண்ணலாம்.*
---------------------
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24288
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum