Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..by rammalar Today at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Today at 17:35
» nisc
by rammalar Today at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
Page 1 of 1
கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
-
* கேக் செய்ய மாவு கலக்கும்போது ஒரு ஸ்பூன் ஆரஞ்ச்
மர்மலேட் சேர்த்துக் கலக்கி தயாரித்தால், கேக் ஆரஞ்சு
சுவையுடன் இருக்கும்.
-
* கேக் மற்றும் பிரெட்டை ஃபிரிட்ஜில் வைத்திருந்து எடுத்த
பின்பு, ஒருமுறை அவனில் வைத்து எடுக்க புத்தம் புதியதாக
இருக்கும்.
– கே.பிரபாவதி, கன்னியாகுமரி.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23954
மதிப்பீடுகள் : 1186
Re: கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
* இரண்டு பங்கு அரிசி மாவுடன், ஒரு பங்கு வறுத்த மைதா மாவு, தேவையான அளவு உப்பு, காரம், எள், ஒன்றிரண்டாக உடைத்த நிலக்கடலை, சூடான எண்ணெய் ஒரு ஸ்பூன் சேர்த்துப் பிசைந்து ‘எள்ளடை’ செய்யலாம்.
* சூப் தயாரித்த பின்பு அதில் சிறிதளவு ‘கிரீம்’ விட – சூப்பின் சுவை மிக அதிகமாகும்.
* அதிரசம் மாவு, நெய் விளக்கு மாவு இவைகளில் தேங்காய்ப்பால் சேர்த்துக் கரைத்து, பணியாரமாகச் சுட்டு எடுத்தால், இனிப்புப் பணியாரம் எல்லோரையும் ஈர்க்கும்.
* வேர்க்கடலையை வறுத்துத் தூளாக்கி வைத்திருந்தால், பொரியல் செய்து இறக்கும்போது, ஒரு ஸ்பூன் அளவு சேர்த்துக் கிளறி இறக்கலாம். அருமையான சுவை கிடைக்கும்.
– எஸ்.வளர்மதி, கொட்டாரம்.
* சூப் தயாரித்த பின்பு அதில் சிறிதளவு ‘கிரீம்’ விட – சூப்பின் சுவை மிக அதிகமாகும்.
* அதிரசம் மாவு, நெய் விளக்கு மாவு இவைகளில் தேங்காய்ப்பால் சேர்த்துக் கரைத்து, பணியாரமாகச் சுட்டு எடுத்தால், இனிப்புப் பணியாரம் எல்லோரையும் ஈர்க்கும்.
* வேர்க்கடலையை வறுத்துத் தூளாக்கி வைத்திருந்தால், பொரியல் செய்து இறக்கும்போது, ஒரு ஸ்பூன் அளவு சேர்த்துக் கிளறி இறக்கலாம். அருமையான சுவை கிடைக்கும்.
– எஸ்.வளர்மதி, கொட்டாரம்.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23954
மதிப்பீடுகள் : 1186
Re: கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
* அரிசி உப்புமா மீந்து விட்டால், அதில் கொஞ்சம் வேகவைத்த காராமணியை கலந்து அடையாக தட்டி, இட்லி தட்டில் வேக வைத்து சாப்பிடலாம். காரடையான் நோன்பு அடை போல படு ருசியாக இருக்கும்.
* பொரித்த அப்பளங்கள், வடாம்கள் மீதமாகிவிட்டால் அவற்றை ஒரு கெட்டியான பாலிதீன் பையில் போட்டு நன்றாக சுற்றி ஃபிரிட்ஜில் வைத்துவிட்டால் ஒரு வாரம் ஆனாலும் மொறு மொறுப்பு மாறாமல் இருக்கும்.
– எஸ்.விஜயலட்சுமி, ஈரோடு.
* பொரித்த அப்பளங்கள், வடாம்கள் மீதமாகிவிட்டால் அவற்றை ஒரு கெட்டியான பாலிதீன் பையில் போட்டு நன்றாக சுற்றி ஃபிரிட்ஜில் வைத்துவிட்டால் ஒரு வாரம் ஆனாலும் மொறு மொறுப்பு மாறாமல் இருக்கும்.
– எஸ்.விஜயலட்சுமி, ஈரோடு.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23954
மதிப்பீடுகள் : 1186
Re: கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
* மிளகாய்த் தூள், அரிசி மாவு, கோதுமை மாவு மற்றும் இதர மசாலா பொருட்கள் வைத்திருக்கும் ஜாடிகளில் சிறிதளவு உப்பு கலந்து வைத்தால் வண்டுகள் வராது.
* வெயில் காலங்களில் நான்கு நெல்லை பாலில் போட்டு வைத்தால் பால் திரிந்து போகாது.
* வெங்காய பஜ்ஜிக்கு வெங்காயம் நறுக்கும் போது தோல் உரிக்காமல் வெங்காயத்தை வட்ட வடிவில் நறுக்கினால் வெங்காயம் தனித் தனியாக வராது.
* அப்பளத்தின் இரண்டு பக்கங்களையும் சுத்தமான துணியால் நன்றாகத் துடைத்து விட்டு, பிறகு அதைப் பொரித்தால் எண்ணெய் கருப்பாக மாறாது.
-
– சௌமியா சுப்ரமணியன், சென்னை.
* வெயில் காலங்களில் நான்கு நெல்லை பாலில் போட்டு வைத்தால் பால் திரிந்து போகாது.
* வெங்காய பஜ்ஜிக்கு வெங்காயம் நறுக்கும் போது தோல் உரிக்காமல் வெங்காயத்தை வட்ட வடிவில் நறுக்கினால் வெங்காயம் தனித் தனியாக வராது.
* அப்பளத்தின் இரண்டு பக்கங்களையும் சுத்தமான துணியால் நன்றாகத் துடைத்து விட்டு, பிறகு அதைப் பொரித்தால் எண்ணெய் கருப்பாக மாறாது.
-
– சௌமியா சுப்ரமணியன், சென்னை.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23954
மதிப்பீடுகள் : 1186
Re: கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
* வீட்டில் மோர் அதிகமாகிவிட்டதா? புளிக்க விடாதீர்கள். துளி உப்பு சேர்த்து ஐஸ் ட்ரேயில் கியூப் ஆக வைத்து எடுத்து வேண்டும் போது குளிர்ந்த நீர் சேர்த்து விட்டால் மோரும் வீணாகாது.
* பெருங்காயக் கட்டியை, பொரித்து எடுக்கும் பொழுது எண்ணெய் சுட ஆரம்பிக்கும் பொழுதே போட்டால்தான், மேலேயும் உள்ளேயும் ஒன்று போல் பொரிந்து இருக்கும். எண்ணெய் நன்கு காய்ந்து போட்டால் மேல்புறம் கறுத்துப் போனால் கூட உட்புறம் பச்சையாகவே இருக்கும்.
* அரிசி உப்புமா செய்யும் போது, தாளிதம் செய்த உடன் தண்ணீர் சேர்க்கும் போது ஒரு கைப்பிடி உளுத்தம் பருப்பை ஊறவைத்து சிறிது கரகரப்பாக அரைத்து அந்தத் தண்ணீரில் விடவும். பிறகு அரிசிக் குருணையை போட்டு உப்புமா கிளறவும், ருசியும் மணமும் கூடியிருக்கும்.
– எம்.ஏ.நிவேதா, திருச்சி.
* பெருங்காயக் கட்டியை, பொரித்து எடுக்கும் பொழுது எண்ணெய் சுட ஆரம்பிக்கும் பொழுதே போட்டால்தான், மேலேயும் உள்ளேயும் ஒன்று போல் பொரிந்து இருக்கும். எண்ணெய் நன்கு காய்ந்து போட்டால் மேல்புறம் கறுத்துப் போனால் கூட உட்புறம் பச்சையாகவே இருக்கும்.
* அரிசி உப்புமா செய்யும் போது, தாளிதம் செய்த உடன் தண்ணீர் சேர்க்கும் போது ஒரு கைப்பிடி உளுத்தம் பருப்பை ஊறவைத்து சிறிது கரகரப்பாக அரைத்து அந்தத் தண்ணீரில் விடவும். பிறகு அரிசிக் குருணையை போட்டு உப்புமா கிளறவும், ருசியும் மணமும் கூடியிருக்கும்.
– எம்.ஏ.நிவேதா, திருச்சி.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23954
மதிப்பீடுகள் : 1186
Re: கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
* ரசம் கொதிக்கும் நிலையில் கொத்தமல்லித் தழையை போட்டு மூடி வைத்து விட்டால் சற்று நேரம் கழித்து ரசம் மணம் வீசும். மேலும் எளிதில் ஜீரணமாகும்.
* முட்டைக்கோஸ், பட்டாணி, கீரைகள் சுவை கூட, அவை வேகும்போது சிறிது சர்க்கரையும், வெந்தபின் உப்பும் சேர்க்க வேண்டும்.
* உருளைக்கிழங்கு வறுவலுக்கு சீவியவுடன், துணியில் முடிந்து கொதிக்கும் நீரில் ஐந்து நிமிடங்கள் அமிழ்த்து வைத்து, எடுத்து உப்பு கரைத்த நீரில் ஐந்து நிமிடங்கள் மூழ்க வைத்து எடுத்து பிறகு பொரித்தால், உப்பு ஒரே சீராக இருக்கும்.
* தக்காளிப்பழங்களை நறுக்கி, வெயிலில் காய வைத்து, பொடித்து வைத்துக் கொண்டால், குழம்பு, ரசம், சூப் என்று எல்லா உணவு வகைக்கும் தக்காளிக்கு பதிலாக பயன்படுத்தலாம்.
– எஸ்.ராஜம், ஸ்ரீரங்கம்.
* முட்டைக்கோஸ், பட்டாணி, கீரைகள் சுவை கூட, அவை வேகும்போது சிறிது சர்க்கரையும், வெந்தபின் உப்பும் சேர்க்க வேண்டும்.
* உருளைக்கிழங்கு வறுவலுக்கு சீவியவுடன், துணியில் முடிந்து கொதிக்கும் நீரில் ஐந்து நிமிடங்கள் அமிழ்த்து வைத்து, எடுத்து உப்பு கரைத்த நீரில் ஐந்து நிமிடங்கள் மூழ்க வைத்து எடுத்து பிறகு பொரித்தால், உப்பு ஒரே சீராக இருக்கும்.
* தக்காளிப்பழங்களை நறுக்கி, வெயிலில் காய வைத்து, பொடித்து வைத்துக் கொண்டால், குழம்பு, ரசம், சூப் என்று எல்லா உணவு வகைக்கும் தக்காளிக்கு பதிலாக பயன்படுத்தலாம்.
– எஸ்.ராஜம், ஸ்ரீரங்கம்.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23954
மதிப்பீடுகள் : 1186
Re: கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
* பயறு வகைகளை சிறிது விளக்கெண்ணெய் சேர்த்து கிளறி வைத்தால் பல நாட்கள் வரை புழுத்து போகாமல் இருக்கும்.
* இட்லி சாம்பாருக்கு கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.
– சுந்தரி காந்தி, சென்னை.
* இட்லி சாம்பாருக்கு கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.
– சுந்தரி காந்தி, சென்னை.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23954
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|