Latest topics
» தங்கம் விலை நிலவர்மby rammalar Today at 17:06
» பல்சுவை - 7
by rammalar Today at 16:50
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by rammalar Today at 6:45
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by rammalar Today at 5:57
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by rammalar Today at 5:48
» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Yesterday at 20:36
» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Yesterday at 20:33
» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Yesterday at 20:31
» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Yesterday at 20:28
» ஜோக்கூ - ரசித்தவை
by rammalar Yesterday at 19:43
» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Yesterday at 17:06
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Yesterday at 8:56
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Yesterday at 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Yesterday at 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue 4 Jun 2024 - 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue 4 Jun 2024 - 8:01
» பல்சுவை - 7
by rammalar Tue 4 Jun 2024 - 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue 4 Jun 2024 - 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue 4 Jun 2024 - 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
தீர்க்கதரிசி: திரை விமர்சனம்
Page 1 of 1
தீர்க்கதரிசி: திரை விமர்சனம்
--
மாநகரக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அடிக்கடி வரும் மர்மக் குரல்,
கொலை, கொள்ளை, திட்டமிட்ட விபத்து என பல குற்றச் செயல்கள்
அடுத்தடுத்து நடக்கப் போவதாகவும் தடுக்கும்படியும் தகவல் கொடுக்கிறது.
முதலில் அலட்சியப்படுத்தும் காவல்துறை, குரல் சொன்னது அப்படியே
நடக்க, மர்மக் குரல் மனிதரைத் தேடிகொண்டே, குற்றச் செயல்களைத்
தடுக்கவும் ஓடுகிறார்கள். அவர்களால் அவரைக் கண்டுபிடிக்க முடிந்ததா,
நடக்கப்போகும் நிகழ்வுகள் அவருக்கு மட்டும் எப்படி முன்னதாகத் தெரிய
வருகின்றன என்பது கதை.
தலைப்பை நியாயப்படுத்தும் ஒருவரிக் கதைக்கு விறுவிறுப்பான
திரைக்கதை எழுத முயற்சித்திருக்கிறார் பி.சதீஷ்குமார். ஆனால், மர்மக்
குரலுக்கும் காவல் துறைக்கும் இடையிலான இந்த ‘டாம் அண்ட் ஜெர்ரி’
ஓட்டம் ஒரு கட்டத்தில் சோர்வைத் தருகிறது.
அதற்குத் தர்க்க ரீதியாக விலகல்கள் இருப்பது ஒரு காரணம். இருப்பினும்
அந்த மர்மக் குரலை மிடுக்குடன் ஒலிக்க வைத்து, நடக்கப்போகும்
சம்பவங்களைக் காட்சிப்படுத்திய விதத்தால் அறிமுக இயக்குநர்கள்
பி.ஜி.மோகனும் எல்.ஆர்.சுந்தரபாண்டியும் இக்குறைகளைச்
சமாளித்திருக்கிறார்கள்.
இன்னும் பல இடங்களில் ஜி.பாலசுப்ரமணியத்தின் பின்னணி இசையும்
ரஞ்சித் சி.கே.வின் படத்தொகுப்பும் ஈடுகட்ட முயன்றுள்ளன.
சி.சி.டி.வி பதிவு, ஜி.பி.எஸ்ட்ராக்கிங், கால் ட்ராக்கிங் ஆகியவற்றையே
காவல்துறை அதிகமும் நம்பியிருப்பது, இவற்றைப் பலமுறைப்பார்த்துச்
சலித்தப் பார்வையாளர்களுக்கு அவையே பெருந்துன்பம்.
மர்மக் குரலுக்குரிய மனிதரைக் கண்டுபிடிக்க அமர்த்தப்படும் காவல்
அதிகாரியாக வரும் அஜ்மல், கதாபாத்திரத்துக்குரிய ஆளுமையை நடிப்பில்
கொண்டு வந்துவிடுகிறார். ஆனால் அவரது துடிப்புக்குப் போதுமான தீனி
கிடைக்கவில்லை.
அவருக்குக் கைகொடுக்கும் சக காவல் அதிகாரிகளாக வரும் ஜெய்வந்த்,
துஷ்யந்த் இருவரும் கவனிக்கவைக்கிறார்கள். துணைக் கதாபாத்திரங்களில்
வரும் ஸ்ரீமன், மதுமிதா, மூணாறு ரமேஷ் உரிய பங்களிப்பைக்
கொடுத்திருக்கிறார்கள்.
மாறுபட்ட கவுரவக் கதாபாத்திரத்தில் வரும் சத்யராஜ், தனக்கேயுரிய
பகடியுடன் அலட்டாத நடிப்பை, கிளைமாக்ஸில் அதிர்ச்சியையும் கொடுத்து,
கதைக்கும் களத்துக்கும் தோள் கொடுத்திருக்கிறார்.
பரபரப்பான சாலைகளில் சுழலும் ஜெ.லட்சுமணனின் கேமரா, அதே
பரபரப்பைக் காவல் கட்டுப்பாட்டு அறைக்குள்ளும் பதிவு செய்திருப்பது
திறமை. அவசியமற்ற நகைச்சுவைக் காட்சிகள், காவல் துறைக்கான
போற்றிப் பாடல் ஆகியன இக்களத்துக்கு தொங்கு சதைகள்.
காவல் கட்டுப்பாட்டு அறையை மையப்படுத்தி, அதனுடன் இன்றைய
முக்கியச் சமூகப் பிரச்சினை ஒன்றைப் பரபரவெனத் தொடர்பு
படுத்தியிருப்பதைப் பாராட்டலாம். அதற்குத் திரைக்கதையின் நகர்வு,
படத்தொகுப்பின் வேகம் ஆகியவை மட்டுமே உண்மையான விறுவிறுப்பைக்
கொடுத்துவிட முடியாது.
அதைத் தாண்டி படத்தின் இறுதியில் பார்வையாளர்களின் கவனத்துக்குத்
தெரிய வரும் அப்பிரச்சினையின் ஆழமும் அரசியலும் பேசப்பட்டிருக்க
வேண்டும். அதை இந்தத் தீர்க்கதரிசி தவறவிட்டிருக்கிறார்.
-நன்றி: இந்து தமிழ் திசை
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24440
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» தீர்க்கதரிசி -சினிமா விமர்சனம்
» சி..வி.2 -திரை விமர்சனம்
» 83 -திரை விமர்சனம்
» ராஜவம்சம் - திரை விமர்சனம்
» விஸ்வரூபம் –திரை விமர்சனம்
» சி..வி.2 -திரை விமர்சனம்
» 83 -திரை விமர்சனம்
» ராஜவம்சம் - திரை விமர்சனம்
» விஸ்வரூபம் –திரை விமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|