Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Today at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
உலகின் இரண்டாவது பிரமாண்ட கோயில்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
உலகின் இரண்டாவது பிரமாண்ட கோயில்
191 அடி உயர கோபுரம், 10,000 சிலைகள், 183 ஏக்கர் - அமெரிக்காவில்
உருவானது 2வது பெரிய இந்துக்கோயில்!
-
பாப்ஸ் சுவாமி நாராயண் அக்ஷர்தாம் கோயில் வளாகம்
183 ஏக்கர் நிலப்பரப்பில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இது நியூயார்க் நகரில் அமைந்துள்ள மெட்லைஃப் ஸ்டேடியத்தைப்
போல நான்கு மடங்கு பெரியது.
உலகின் மிகப்பெரிய இந்துக்கோயில் என்னும் பெருமையை
உடையது கம்போடியாவில் அமைந்திருக்கும் அங்கூர்வாட் விஷ்ணு
கோயில். சுமார் 402 ஏக்கர் பரப்பளவில் இந்தக் கோயில் பரந்து
விரிந்து காணப்படும்.
இரண்டாவது பெரிய இந்துக் கோயிலாக 156 ஏக்கர் பரப்பளவில்
அமைந்துள்ள ஶ்ரீரங்கம் அரங்கநாதன் கோயில் திகழ்ந்தது. தற்போது
அந்தப் பெருமையை அமெரிக்காவில் அமைந்துள்ள நியூஜெர்சி
அக்ஷர்தாம் கோயில் தட்டிச் செல்கிறது. சுமார் 183 ஏக்கர்
பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கோயில் 'பாப்ஸ்' என்கிற ஆன்மிக
அமைப்பினால் உருவாக்கப்பட்டுள்ளது.
பாப்ஸ் (BAPS) என்று அழைக்கப்படும் போச்சாசன்வாசி ஶ்ரீ அக்ஷர்
புருஷோத்தம் சுவாமிநாராயன் சன்ஸ்தா என்கிற அமைப்பு
அமெரிக்காவில் ட்ரென்டன் மாநகரின் அருகில் மிகப்பெரிய கோயில்
ஒன்றை உருவாக்கியிருக்கிறது.
பாப்ஸ் சுவாமி நாராயண் அக்ஷர்தாம் கோயில் வளாகம் 183 ஏக்கர்
நிலப்பரப்பில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இது நியூயார்க்
நகரில் அமைந்துள்ள மெட்லைஃப் ஸ்டேடியத்தைப்போல நான்கு மடங்கு
பெரியது. பளிங்குக் கற்கள் கொண்டு எழிலுடன் அமைக்கப்பட்டிருக்கும்
இந்த ஆலயத்தில் 10 ஆயிரம் சிலைகள் உள்ளன.
இந்த வளாகத்தில் மொத்தம் 13 கோயில்கள் உள்ளன.
இதன் கட்டுமானத்துக்காக உலகெங்கிலும் இருந்து 2 மில்லியன் கன அடி
உயர் ரகப் பளிங்குக் கற்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்தியச் சிற்பிகள்
அவற்றைக் கலைநயத்துடன் சிற்பங்களாக தூண்களாக உருவாக்கி
இருக்கிறார்கள்.
இவற்றில் பிரதான கோயில் ஒன்றின் கோபுரம் 191 அடி உயரத்தில் கற்கள்
கொண்டே அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கோயில் உருவாக்கத்தில் சுமார் 13 ஆயிரம் பணியாளர்கள் கடந்த
12 ஆண்டுகளாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் கடின உழைப்பில்
உருவான இந்த ஆலயம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் - 8) அன்று
தொடக்க விழா கண்டது.
இதையொட்டிப் பல சர்வதேசப் பிரமுகர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்தக் கோயில் வளாகத்தில் இந்துக்களின் சடங்குகள் மற்றும்
சம்பிரதாயங்கள் குறித்த ஆன்மிக அருங்காட்சியம் ஒன்றும் அமைக்கப்
பட்டுள்ளது. இளம் தலைமுறையினர் ஆன்மிகம் குறித்து அறிந்துகொள்ள
உதவும் பல அரங்குகள் இந்த வளாகத்தில் உள்ளன.
இது அமெரிக்க வாழும் இந்துக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம்
என்கிறார்கள்.
இதுகுறித்துக் கோயில் நிர்வாகம் சார்பில் பேசும்போது, "இது சமகாலத்தில்
கட்டப்பட்ட இந்துக்கோயில்களில் மிகப்பெரியது. அமெரிக்க வாழ்
இந்துக்களுக்குப் பெருமை சேர்க்கும் மிக பிரமாண்டமான கட்டுமானம் இது"
என்கிறார்கள்.
சர்ச்சை
இந்த ஆலயத்தின் கட்டுமானப் பணிகளின் போது 2021-ம் ஆண்டு சில
பணியாளர்கள் அமெரிக்க நீதிமன்றத்தை நாடினர். கோயில் நிர்வாகம்
ஒரு நாளைக்கு 12 மணி நேரத்துக்கு மேல் வேலை வாங்குவதாகவும்
குறைந்தபட்ச சம்பள விதியைப் பின்பற்றாமலும் செயல்படுவதாகவும் புகார்
தெரிவித்தனர். இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் வளாகத்தில் சோதனை
நடத்தி வழக்குத் தொடர்ந்தனர்.
அந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ள நிலையில் கோயில் வளாகம்
பக்தர்கள் பார்வைக்காக வரும் அக்டோபர் 18-ம் தேதி முதல் திறக்கப்பட
உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
நன்றி: இல.சைலபதி (விகடன்)
உருவானது 2வது பெரிய இந்துக்கோயில்!
-
பாப்ஸ் சுவாமி நாராயண் அக்ஷர்தாம் கோயில் வளாகம்
183 ஏக்கர் நிலப்பரப்பில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இது நியூயார்க் நகரில் அமைந்துள்ள மெட்லைஃப் ஸ்டேடியத்தைப்
போல நான்கு மடங்கு பெரியது.
உலகின் மிகப்பெரிய இந்துக்கோயில் என்னும் பெருமையை
உடையது கம்போடியாவில் அமைந்திருக்கும் அங்கூர்வாட் விஷ்ணு
கோயில். சுமார் 402 ஏக்கர் பரப்பளவில் இந்தக் கோயில் பரந்து
விரிந்து காணப்படும்.
இரண்டாவது பெரிய இந்துக் கோயிலாக 156 ஏக்கர் பரப்பளவில்
அமைந்துள்ள ஶ்ரீரங்கம் அரங்கநாதன் கோயில் திகழ்ந்தது. தற்போது
அந்தப் பெருமையை அமெரிக்காவில் அமைந்துள்ள நியூஜெர்சி
அக்ஷர்தாம் கோயில் தட்டிச் செல்கிறது. சுமார் 183 ஏக்கர்
பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கோயில் 'பாப்ஸ்' என்கிற ஆன்மிக
அமைப்பினால் உருவாக்கப்பட்டுள்ளது.
பாப்ஸ் (BAPS) என்று அழைக்கப்படும் போச்சாசன்வாசி ஶ்ரீ அக்ஷர்
புருஷோத்தம் சுவாமிநாராயன் சன்ஸ்தா என்கிற அமைப்பு
அமெரிக்காவில் ட்ரென்டன் மாநகரின் அருகில் மிகப்பெரிய கோயில்
ஒன்றை உருவாக்கியிருக்கிறது.
பாப்ஸ் சுவாமி நாராயண் அக்ஷர்தாம் கோயில் வளாகம் 183 ஏக்கர்
நிலப்பரப்பில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இது நியூயார்க்
நகரில் அமைந்துள்ள மெட்லைஃப் ஸ்டேடியத்தைப்போல நான்கு மடங்கு
பெரியது. பளிங்குக் கற்கள் கொண்டு எழிலுடன் அமைக்கப்பட்டிருக்கும்
இந்த ஆலயத்தில் 10 ஆயிரம் சிலைகள் உள்ளன.
இந்த வளாகத்தில் மொத்தம் 13 கோயில்கள் உள்ளன.
இதன் கட்டுமானத்துக்காக உலகெங்கிலும் இருந்து 2 மில்லியன் கன அடி
உயர் ரகப் பளிங்குக் கற்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்தியச் சிற்பிகள்
அவற்றைக் கலைநயத்துடன் சிற்பங்களாக தூண்களாக உருவாக்கி
இருக்கிறார்கள்.
இவற்றில் பிரதான கோயில் ஒன்றின் கோபுரம் 191 அடி உயரத்தில் கற்கள்
கொண்டே அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கோயில் உருவாக்கத்தில் சுமார் 13 ஆயிரம் பணியாளர்கள் கடந்த
12 ஆண்டுகளாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் கடின உழைப்பில்
உருவான இந்த ஆலயம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் - 8) அன்று
தொடக்க விழா கண்டது.
இதையொட்டிப் பல சர்வதேசப் பிரமுகர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்தக் கோயில் வளாகத்தில் இந்துக்களின் சடங்குகள் மற்றும்
சம்பிரதாயங்கள் குறித்த ஆன்மிக அருங்காட்சியம் ஒன்றும் அமைக்கப்
பட்டுள்ளது. இளம் தலைமுறையினர் ஆன்மிகம் குறித்து அறிந்துகொள்ள
உதவும் பல அரங்குகள் இந்த வளாகத்தில் உள்ளன.
இது அமெரிக்க வாழும் இந்துக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம்
என்கிறார்கள்.
இதுகுறித்துக் கோயில் நிர்வாகம் சார்பில் பேசும்போது, "இது சமகாலத்தில்
கட்டப்பட்ட இந்துக்கோயில்களில் மிகப்பெரியது. அமெரிக்க வாழ்
இந்துக்களுக்குப் பெருமை சேர்க்கும் மிக பிரமாண்டமான கட்டுமானம் இது"
என்கிறார்கள்.
சர்ச்சை
இந்த ஆலயத்தின் கட்டுமானப் பணிகளின் போது 2021-ம் ஆண்டு சில
பணியாளர்கள் அமெரிக்க நீதிமன்றத்தை நாடினர். கோயில் நிர்வாகம்
ஒரு நாளைக்கு 12 மணி நேரத்துக்கு மேல் வேலை வாங்குவதாகவும்
குறைந்தபட்ச சம்பள விதியைப் பின்பற்றாமலும் செயல்படுவதாகவும் புகார்
தெரிவித்தனர். இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் வளாகத்தில் சோதனை
நடத்தி வழக்குத் தொடர்ந்தனர்.
அந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ள நிலையில் கோயில் வளாகம்
பக்தர்கள் பார்வைக்காக வரும் அக்டோபர் 18-ம் தேதி முதல் திறக்கப்பட
உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
நன்றி: இல.சைலபதி (விகடன்)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24060
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» உலகின் பிரமாண்ட கட்டடம்..!
» உலகின் இரண்டாவது மிக உயர்ந்த கட்டடம்!
» உலகின் இரண்டாவது அழகி பிரியங்கா சோப்ரா
» உலகின் இரண்டாவது பெரிய பணக்கார மனிதரான "வாரன் பப்பட்" (Warren Buffet )
» உலகின் இரண்டாவது சிறந்த விமான நிலையமாக டெல்லி விமான நிலையம் தேர்வு!…
» உலகின் இரண்டாவது மிக உயர்ந்த கட்டடம்!
» உலகின் இரண்டாவது அழகி பிரியங்கா சோப்ரா
» உலகின் இரண்டாவது பெரிய பணக்கார மனிதரான "வாரன் பப்பட்" (Warren Buffet )
» உலகின் இரண்டாவது சிறந்த விமான நிலையமாக டெல்லி விமான நிலையம் தேர்வு!…
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|