சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Today at 2:49 pm

» விடுகதைகள்
by rammalar Today at 12:57 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Today at 12:50 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Today at 12:41 pm

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 9:41 am

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 9:37 am

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 8:12 am

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 8:01 am

» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 7:43 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 7:41 pm

» மோர்க்களி
by rammalar Yesterday at 7:40 pm

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 7:30 pm

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 7:26 pm

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 7:21 pm

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 7:15 pm

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 7:07 pm

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 5:52 pm

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 4:07 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 1:32 pm

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 1:06 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 7:46 am

» பல்சுவை-3
by rammalar Yesterday at 12:24 am

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue May 28, 2024 9:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue May 28, 2024 9:09 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue May 28, 2024 9:05 pm

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue May 28, 2024 4:02 pm

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue May 28, 2024 3:19 pm

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue May 28, 2024 10:26 am

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue May 28, 2024 10:17 am

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue May 28, 2024 9:10 am

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue May 28, 2024 9:05 am

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Tue May 28, 2024 8:34 am

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Tue May 28, 2024 8:29 am

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Tue May 28, 2024 12:32 am

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon May 27, 2024 10:15 pm

 திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா? Khan11

திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?

Go down

 திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா? Empty திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?

Post by rammalar Thu Mar 21, 2024 7:40 pm

 திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா? Kalkionline%2F2022-12%2F7d612de3-09d0-4ad2-b79a-7c37eb1bc0a0%2Fttd_1

--
ஒரு சமயம் விசுவாமித்திரர் அசுரர் தொல்லையிலிருந்து தமது 
யாகத்தைக் காக்க ராம, லக்ஷ்மணர்களை தம்மோடு அழைத்து வந்தார். 
ஒரு நாள் அவர்கள் கங்கைக் கரையில் தங்களை மறந்து உறங்கிக் 
கொண்டு இருந்தார்கள். 


அவர்கள் ராஜகுமாரர்களாயிற்றே! அரண்மனையில் சுகபோகமாய் 
இருந்தவர்கள். காடு, மலைகளில் அலைந்து திரிந்ததால் வந்த களைப்பு. 
அதனால் நேரம் போவதைப் பற்றி கவலைப்படாமல் உறங்கிக் 
கொண்டிருந்தனர்.


அவர்களை அழைத்துக்கொண்டு வந்த விசுவாமித்திரர் அதிகாலைப் 
பொழுதில் எழுந்து கங்கையின் நீராடி, ஜப தபங்களை முடித்துவிட்டு 
ராம, லக்ஷ்மணர்களை எழுப்புகிறார். அதிகாலை நாலரை மணிக்கு 
எழுப்பத் தொடங்கியவர் ஆறரை மணி வரை எழுப்பிக்கொண்டே 
இருக்கிறார். 


இரண்டு பேரும் எழுந்திருக்கவே இல்லை. உடனே, 
‘கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே! உத்திஷ்ட 
நரசார்தூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்!’ என்று சொல்லிக்கொண்டே 
எழுப்பினாராம்.


இன்று ஒரு நாள் இந்த தெய்வக் குழந்தையை எழுப்பும் பேற்றினை நான் 
பெற்றேன். ஆனால், தினமும் ராமனை காலையில் எழுப்பும் பேறு பெற்ற 
கோசலை என்னும் கௌசல்யா எத்தனை அரிய பேற்றினை பெற்றவள். 
அதனால்தான் அவளைத் தொழுதவாறு ஸ்ரீராமனை இப்படி எழுப்புகிறார்.


சரி, இதற்கு என்ன பொருள் என்றால், ‘கோசலையின் தவப்புதல்வா! 
ராமா! கிழக்கில் விடியல் வருகின்றதே! எழுந்திட்டு புலிபோல் மனிதா 
செய்திடுவாய் இறை கடமை!’ என்பதாகும்.


இந்த, ‘கௌசல்யா சுப்ரஜா’ என்ற வால்மீகியின் வார்த்தையினைக் 
கொண்டு, பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார்யர் என்பவரே இதை
 எழுதினார். அவர் எழுதிய அந்தப் பாடல்களே இன்றும் திருப்பதியில் 
எம்.எஸ்.சுப்புலட்சுமியின் இனிய குரலில் திருப்பள்ளியெழுச்சியாக 
ஒலிக்கிறது.


‘எல்லாம் சரி, ராமனை எழுப்பி ஆகிவிட்டது. லட்சுமணனை ஏன் 
எழுப்பவில்லை’ என்ற கேள்வி பலருக்கும் எழும். லட்சுமணன் 
ஆதிசேஷனின் அம்சம். மகாவிஷ்ணுவின் படுக்கை. படுக்கையை யாரும் 
எழுப்ப மாட்டார்கள். எழுப்பவும் முடியாது. அதனால்தான் லட்சுமணனை 
இதில் சேர்க்கவில்லை.


பகவான் ஸ்ரீ ராமபிரானை எழுப்புவதற்கு, ‘கௌசல்யா’ என ஏன் 
சொல்லிக்கொண்டே எழுப்ப வேண்டும்? என்ன அர்த்தம் இதற்கு என்றால், 
‘இப்பேர்ப்பட்ட மகிமைமிக்க ராமபிரானை பெற்றெடுத்த கௌசல்யையே 
நீ என்ன விரதம் மேற்கொண்டு இந்த வரத்தை பெற்றாயோ’ என்று 
ஸ்ரீ ராமபிரானின் புகழை மறைமுகமாக சொல்லிவிட்டு அவனுடைய 
தாயாரை வாயால் மனதாரப் புகழ்கிறார் விசுவாமித்திரர்.


நன்றி- ஆர்.ஜெயலட்சுமி - கல்கி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24325
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum