சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Today at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

சிறுகதை - அன்புள்ள மான்விழியே Khan11

சிறுகதை - அன்புள்ள மான்விழியே

Go down

சிறுகதை - அன்புள்ள மான்விழியே Empty சிறுகதை - அன்புள்ள மான்விழியே

Post by rammalar Fri 22 Mar 2024 - 16:45

சிறுகதை - அன்புள்ள மான்விழியே XXWDR1w

--

அந்தக் கடிதம் இப்படித் துவங்கியிருந்தது. கடிதம் என்றால் 
மின்னஞ்சல்தான். பொடிசான ஃபான்ட்களில் மிக மரியாதையாகத் 
துவங்கியிருந்தது.


‘ஐயன்மீர்!


வணக்கம். வந்தனம். நமஸ்தே என்றெல்லாம் சொல்ல முடியாமல் 
நானொரு திடீர் சிக்கலில் சிக்கியிருக்கிறேன். நீங்கள் மனது வைத்தால் 
என்னை குணப்படுத்தி விடலாம்.


எமோஷனல் டிரைனிங் பற்றி நீங்கள் எழுதிய ஆய்வுக்கட்டுரைகளை 
வாசித்திருக்கிறேன். நானொரு ஐடி புரொஃபஷனல். என்னை எனக்கே 
பிடிக்காத நிலைக்கு வந்திருக்கிறேன்.


ஒவ்வொரு நாளும் லாப்டாப்பை திறந்து பார்க்கும்போது என் கைகள் 
நடுங்குவதில்லை. ஆனால், என் மனம் நடுங்குவதை நான் உணர்கிறேன். 
எப்போதாவது மீட்டிங்குகளில் யாராவது இந்த டெக் உலகிலிருந்து எனக்கு 
ஒரு உடனடி விடுதலை தரமாட்டார்களா என்றெல்லாம் ஏங்கிப்போய் 
ஒவ்வொரு முகமாக பார்த்துக் கொண்டிருந்திருக்கிறேன்.


நான் ஆசையாக வாங்கி வைத்திருக்கும் கிடாரில் விரல்களை வைக்கும்
போது மறுபடியூம் மனம் நடுங்குவதை நான் உணர்கிறேன். என்னை 
நீங்கள்தான் காப்பாற்ற முடியும். உங்களது பதிலுக்காக நான்
காத்திருக்கிறேன்.


இப்படிக்குஅபிமன்யு’
- என்று அந்த மின்னஞ்சல் முடிந்திருந்தது.


‘அன்புள்ள அபிமன்யு. உங்களது பெயரைப் போல டெக் உலகில் நுழைந்து 
விட்ட உங்களால் அங்கே உள்ள அழுத்தத்திலிருந்து விடுபட இயலாமல் 
தவித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது புரிகிறது. இங்கே உங்களுக்கு 
ஒரு மனோதத்துவ நிபுணனாக வழக்கமாக தரப்போகிற எவ்வித 
அறிவுரையையும் ஆலோசனையையும் நான் தரப்போவதில்லை.


நான் சொல்லப்போவது இந்த சினிமாக்களில் (சினிமா பார்ப்பீர்கள்தானே) 
வெண்ணிறஆடை மூர்த்தி என்ற நடிகர் ‘சப்ஜாடாக’ என்றொரு வார்த்தையை 
உதிர்த்து பிஹிர்ர்ர் என்று சிரிப்பாரே... அதேபோன்ற ஒரு சப்ஜாடான 
அறிவுரையைத்தான் தரப்போகிறேன்.


சிட்னி ஷெல்டன்கூட இதுபோன்ற ஒரு விஷயத்தை ஒரு நாவலில் எழுதி
இருக்கிறார். நீங்கள் ஏன் யாராவது ஒரு பெண்ணிடம் செக்ஸ் வைத்துக்
கொள்ளக் கூடாது? யாராவது என்றால் ஒரு காதலி... அல்லது உங்கள் ஆபீஸில் 
வேலை செய்யும் துடிப்பான துணிச்சலான பெண் அல்லது திண்டர் போன்ற 
சைட்டுகளில் கிடைக்கக்கூடிய யாராவது ஒரு பெண்.


அப்படி யாரும் கிடைக்கவில்லையென்றால் ஒரு கால்கேர்ள்... 
ஒரு மனோதத்துவ நிபுணனாக நான் இப்படி சொல்லக்கூடாது. ஆனால், 
உங்களது பிரச்சனைக்கு வடிகால் முக்கியம். அதனால்தான் சொல்கிறேன். 
யோசித்துப் பாருங்கள். யோசித்துச் செய்யுங்கள்.’


‘அன்புள்ள டாக்டர். நீங்கள் மிகவும் பரிவானவர். என் அப்பா இருந்திருந்தால் 
கூட இப்படித்தான் சொல்லியிருப்பார் என நினைக்கிறேன். சின்ன 
வயதிலிருந்தே பெண்கள் என் வாழ்வில் வந்து போனதில்லை. நான் 
தனியாகவே இத்தனை நாளும் இருந்திருக்கிறேன். என்ன ஒரு வேஸ்ட்டான 
ஆசாமி நான். அவனவன் எப்படி எப்படியெல்லாமோ செய்து
கொண்டிருக்கையில் நான் மட்டும் கர்ம சிரத்தையாக கம்ப்யூட்டரில் வேலை 
செய்து கொண்டிருந்திருக்கிறேன்.


நானெல்லாம் வாழத் தகுதியே இல்லாதவன். அதனால் நான் தற்கொலை 
செய்து கொள்ளப் போகிறேன் என்றுதான் இந்தக் கடிதத்தை எழுதி
இருந்திருக்க வேண்டும். நான் தற்கொலை செய்துகொள்ளச் சென்றபோது 
ஒரு பெண்ணைச் சந்தித்தேன். அவளும் என்னைப் போலவே ப்ரொஃபஷனல் 
டிரைனிங் காரணமாக செத்துப் போக விரும்பி வந்திருந்தாள்.


நாங்கள் சந்தித்த இடம் ஒரு ரிசார்ட். அந்தக் கணமே நாங்கள் இருவருமே 
யோசித்தோம், ஏன் செத்துப் போவதற்குள் நீங்கள் சொன்ன மாதிரி அந்த 
கெட்ட சமாச்சாரத்தை... ச்சே.. அந்த நல்ல சமாச்சாரத்தை செய்து விட்டு 
செத்துப் போகக்கூடாது என்று. 


அதன்படியே நான் அவளையும் அவள் என்னையும் நாங்கள் எங்களையும் 
அலசி ஆராய்ந்தபோது எத்தனை இரவுகள் என்ற கணக்கே தெரியாமல் 
நாட்கள் ஓடிக் கொண்டிருந்தன. அப்புறம்தான் அது நிகழ்ந்தது. அது என்ன 
என்று அறிய விருப்பமாக இருக்கிறதா டாக்டர்?’


‘நல்லது அபிமன்யு. உனது பிரச்னை ஏறக்குறைய தீர்ந்துவிட்டிருக்கும் 
என்றே நினைக்கிறேன். கடவுளோ அல்லது வேறு யாருமோ இந்த உலகில் 
ஆண்களையும் பெண்களையும் காரணமில்லாமல் படைத்திருக்க 
மாட்டார்கள். அதனால் உனக்கு விருப்பமிருந்தால் அவளை நீ கல்யாணம் 
பண்ணிக்கொள்ளலாம். 


அல்லது லிவ் இன்னில் தொடர்ந்து கலக்கலாம். அல்லது இதமாக பிரிந்து 
விடலாம். என் வாழ்த்துக்கள்.’


‘டாக்டர். நீங்கள் இத்தனை தரம் ஆர்வமாக என்னுடைய பிரச்சனையைக் 
கேட்டு பதில் தந்தமைக்கு நன்றி. இப்போது நான் உங்களுக்கு ஒரு 
அதிர்ச்சியை தரப்போகிறேன். அபிமன்யு என்கிற நான் இப்போது உயிரோடு 
இல்லை...’


‘நீ உயிரோடு இல்லை என்பது எனக்கும் தெரியும் அபிமன்யு. இத்தனை 
நாட்களில் நான் பார்க்காத பேஷன்ட்டுகளா... இப்போது இந்த மின்னஞ்சலுக்கு 
நீ எப்படி பதில் தரப்போகிறாய் என்று பார்க்கிறேன். உன் சார்பாக உன்னை 
இத்தனை நாள் ஆட்கொண்டிருந்த அந்தப் பெண் உன் பாஸ்வேர்டைப் 
பயன்படுத்தி கடிதம் தட்டுகிறாளா?’


‘மன்னிக்கவும் டாக்டர். உங்களுக்கு மருத்துவம் தெரிந்த அளவுக்கு 
டெக்னாலஜி தெரியவில்லை. நான் யாரென்று சில வார்த்தைகளுக்குப் 
பிறகு சொல்கிறேன். அபிமன்யு எங்கள் ஆபீஸில் வேலை பார்க்கும் 
திறமையான டெக் ஆசாமி. 


ஆனால் டிப்ரஷனில் சிக்கிக் கொண்டிருக்கிறான் என்பதை அவனது சர்ச் 
வேர்டுகளை கூகுளில் பார்த்து தெரிந்து கொண்டேன். அதனால் அவன் 
எழுதுவதைப் போலவே நான் கடிதம் எழுதி புகழ்பெற்ற மருத்துவரான 
உங்களைத் தொடர்பு கொண்டேன்.


நான் மனிதனோ இயந்திரமோ இல்லை. நான் வெகு சாதாரண சாப்ட்வேர் 
துணுக்கு மட்டுமே. சாட்ஜிபிடி என்றெல்லாம் முன்பு வந்ததே... அது போன்ற 
தானாக இயங்கும் ஒரு ப்ரோக்ராம் துண்டுதான் நான். இந்த கணினியில் 
இயங்குபவர்களைக் கண்காணித்து அவர்களது உடல்நலனைப் 
பேணுவதற்காக எழுதப்பட்ட ப்ரோக்ராம். 


அதனால் உங்களைப் பற்றி தெரிந்ததும் தொடர்பு கொண்டு அபிமன்யுவின் 
பிரச்சனைகளை எழுதினேன். எனினும் ஒரு ப்ரோக்ராம் என்று தெரியாமல் 
எனக்கு பதில்களை அனுப்பியதற்கு நன்றி.’


‘அன்புள்ள ப்ரோக்ராம். இங்கேயும் அப்படித்தான். 
டாக்டரின் கணினியில் ஒரு ப்ரோக்ராம் இருக்கிறது. எத்தனை 
மனிதர்களுக்குத்தான் அவரே பதில் அளிப்பார். அதனால் வருகிற 
மின்னஞ்சல்களின் தொனியை வைத்து டாக்டரின் நாலட்ஜ்பேஸைப் 
பயன்படுத்தி நானே மருத்துவ ஆலோசனைகளை வழங்கி விடுகிறேன். 


நானும் இங்கே உள்ள ஒரு சாப்ட்வேர் ப்ரோக்ராம் துணுக்குதான். எனது 
ஆலோசனைகளைப் பெற்று நலம் பெற்றதற்கு வந்தனம்’.  
               
- விஜயநிலா
நன்றி- குங்குமம்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24031
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum