சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Today at 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு Khan11

பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Go down

பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு Empty பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Post by rammalar Sat 27 Apr 2024 - 11:05

பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு Sup10



டெல்லி: 
மனைவிக்கு அவரது குடும்பத்தினர் கொடுக்கும் நகை, பணம் 
உள்ளிட்ட சீதனங்களில் கணவர் எவ்வித உரிமையும் கோர 
முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


பொதுவாக நமது நாட்டில் திருமணத்தின் போது பெண்களுக்கு 
அவர்களின் குடும்பத்தில் இருந்து சீதனம் வழங்குவார்கள். 
பெண்களுக்கு இந்த சீதனம் வழங்கப்பட்டாலும் பெரும்பாலான 
சூழல்களில் இதை கணவன்மார்களே வைத்திருப்பார்கள்.


உரிமை இல்லை: இதற்கிடையே இது தொடர்பான வழக்கில் உச்ச 
நீதிமன்றம் இப்போது முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. 
அதாவது மனைவிக்குச் சீதனமாகத் தரப்படும் பொருட்களின் மீது 
கணவர்களுக்கு எந்தவொரு உரிமையும் இல்லை என்று உச்ச 
நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 


குடும்பத்திற்குக் கஷ்டம் ஏற்படும் போது கூட பெண்களுக்குச் 
சீதனமாகத் தரப்படும் பொருட்களில் கணவரால் உரிமை கோர 
முடியாது என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.


தனது தங்கத்தைக் கணவர் முறைகேடாக பயன்படுத்தி
விட்டதாகப் பெண் அளித்த புகாரில் சுப்ரீம் கோர்ட் இந்த 
உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மேலும், அந்த பெண்ணிடம் எடுத்த
 தங்கத்திற்கு ஈடாக ₹25 லட்சத்தை அவருக்கு இழப்பீடாக 
வழங்கவும் அந்த நபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. 


மனைவிக்கு வரும் சீதனத்தை அவர்களிடமே தருவது 
கணவன்மார்களின் தார்மீகக் கடமை என்றும் நீதிமன்றம் 
குறிப்பிட்டது.


என்ன வழக்கு: 
திருமணத்தின் போது தனது குடும்பத்தினர் தனக்கு 89 சவரன் 
தங்க நகைகளையும், ரூ. 2 லட்சத்துக்கான காசோலையையும் 
சீதனமாக வழங்கியதாக அந்த பெண் குறிப்பிட்டுள்ளார். 


திருமணமான முதல் இரவிலேயே தங்க நகைகளைப் பத்திரமாக 
வைப்பதாகக் கூறி அந்த பெண்ணிடம் இருந்து நகைகளை எ
ல்லாம் வாங்கியுள்ளார். மேலும், நகைகளை அவர் தனது தாயிடம் 
கொடுத்துள்ளார். இது குறித்து அந்த பெண் கேட்டதற்கு அப்போது 
தான் நகைகள் பாதுகாப்பாக இருக்கும் என்று சொல்லி சமாதானம் 
செய்துள்ளார்.


இருப்பினும், தனது கணவரும் மாமியாரும் தனக்குச் சீதனமாக 
வந்த நகைகளை விற்று அவர்களின் கடன் உள்ளிட்ட பொருளாதார 
சிக்கல்களைத் தீர்க்க பயன்படுத்திக் கொண்டனர் என்பதே அந்த 
பெண் தொடர்ந்து வழக்கு.


நீதிமன்றங்கள்: கடந்த 2011ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த 
குடும்பநல நீதிமன்றம், பெண்ணின் தங்க நகைகளைக் கணவரும் 
அவரது தாயாரும் முறைகேடாக அபகரித்தது நிரூபிக்கப்பட்டதாகத் 
தீர்ப்பளித்தது. 


இருப்பினும், கணவர் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 
அதில் தங்க நகைகளை முறைகேடாகப் பயன்படுத்தியதை அந்த 
பெண் நிரூபிக்கவில்லை என்று கூறி கீழமை நீதிமன்றத்தின் 
தீர்ப்பை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


சுப்ரீம் கோர்ட்: 
இருப்பினும், அந்த பெண் கேரள ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் 
கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அதை விசாரித்த போது தான் 
சுப்ரீம் கோர்ட் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. பெண்ணுக்கு அவரது 
குடும்பத்தினர் வழங்கும் சீதனம் என்பது அந்த பெண்ணின் 
சொத்தாகவே கருதப்படும் என்றும் அதில் கணவனுக்கு எந்தவொரு 
உரிமையும் இல்லை என்பதை உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தி 
இருக்கிறது.


மேலும், கேரள ஐகோர்ட் தீர்ப்பையும் உச்ச நீதிமன்றம் விமர்சித்தது. 
திருமணத்தில் நம்பிக்கையும், பரஸ்பர புரிதலும் அவசியம் என்றும், 
ஒரு பெண் தன் கணவனை ஆரம்பத்திலிருந்தே நம்பவில்லை என்று 
கருதுவது சாத்தியமில்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. 


இதைப் புரிந்து கொள்ளாமல் ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளதாகவும் 
உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


25 லட்சம்: அந்த பெண் திருமணமாகி கணவன் வீட்டிற்குச் சென்ற 
போது நகைகளை எடுத்துச் சென்றது புகைப்படங்கள் மூலம் 
நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 


இந்தச் சம்பவம் நடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதாலும் 
பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டும் இந்திய அரசியலமைப்புச் 
சட்டத்தின் 142வது பிரிவின் கீழ் 89 சவரன் தங்கத்திற்கு நிகராக 
ரூ.25 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் 
உத்தரவிட்டுள்ளது.


-விக்னேஷ்குமார்- தமிழ் ஒன் இந்தியா & Dailyhunt
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24188
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» சிபிஐக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்: நாகேஸ்வர ராவ் ஆஜராக உத்தரவு
» வரதட்சணை புகார் கொடுத்தால் கைது செய்ய கூடாது: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
» பாராளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் நோட்டா வாக்குக்கு அனுமதி இல்லை - சுப்ரீம் கோர்ட்
» கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை
» எது தேச விரோத செயல்?; சுப்ரீம் கோர்ட் விளக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum