Latest topics
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?by rammalar Today at 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Today at 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Today at 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
குருதி சம்மந்தமான > உடலின் நோயெதிர்ப்புச் சக்தி உடலின் நோயெதிர்ப்புச் சக்தி..
3 posters
Page 1 of 1
குருதி சம்மந்தமான > உடலின் நோயெதிர்ப்புச் சக்தி உடலின் நோயெதிர்ப்புச் சக்தி..
உடலின் நோயெதிர்ப்புச் சக்தி பருவகால மாற்றத்தின் பொழுது தடிமனும் காய்ச்சலும் வந்துவிடுகின்றது. காலநிலை மாறும் போதெல்லாம், தலையிடி, தடிமன், காய்ச்சல் வந்துகொண்டிருந்தால் உங்கள் உடலின் நோயெதிர்ப்புச் சக்தி போதியதாக இல்லை என்பதை அறிந்துகொள்ளவேண்டும். உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரித்துக்கொள்வதற்கு பல வழிகள் உண்டு. உங்கள் உடலை தற்காத்துக்கொள்ளும் விலைமதிப்பற்ற சொத்து ‘நோயெதிர்ப்புச்சக்தி’ கட்டமைப்பை கூறமுடியும். பற்றீரியாக்கள், பங்கசு, வைரஸ், ஒட்டுண்ணி என்ற நுண்ணங்களின் இடைவிடாத தாக்குதல்களிலிருந்து இது உங்களை பாதிக்கின்றது. இந்த நோயெதிர்ப்புச்சக்திக் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் உணவும் வாழ்க்கை முறையும் முதலிடத்தைப்பெறுகின்றது. அடுத்து மனவழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் மனதை ஆறுதல்படுத்திக் கொள்வதும் முக்கியமாகின்றன. செய்யவேண்டியது என்ன? புகை பிடிக்கும் பழக்கம் இருப்பின் அதனை கைவிடவேண்டும். நல்ல நிறமான பழங்கள், காய்கறிகளை அதிகமாக உண்ண ஆரம்பியுங்கள். வேளாவேளைக்கு உண்பதோடு, ஆரோக்கியமான உடல் எடையையும் பேணி வாருங்கள். போதுமான நித்திரை, முறையான உடற்பயிற்சி என்பன உடலுக்கு மிகவும் அவசியம். மனதுக்கு ஆறுதலாகவும் மனவழுத்தங்களை குறைத்தும் பழகிவருவது தேவையானது. உயர்ந்த அளவில் நார்ச்சத்தையும் குறைவான கொழுப்பையும் கொண்ட உணவுகளை உண்டுவருவதும் முக்கியம். முறையான உணவுதான் சிறப்பான மருந்து என்பார்கள். சரியான உணவுப்பழக்கத்திக்குத்தான் முதலிடம் வழங்கப்படுகின்றது. ஆரோக்கியத்தைத் தராத உணவுகளை உண்டுவிட்டு சில விற்றமின் ‘சி’ குளிகைகளை விழுங்கிவிட்டால் ஆரோக்கியம் கிடைத்துவிடும் என எதிர்பார்க்கக் கூடாது. தினமும் நிறை உணவுடன் உணவுக் குறைநிரப்பிகளையும் மூலிகைகளையும் எடுப்பதன் மூலம் உடலின் நோயெதிர்ப்புச்சக்தியை வலுப்படுத்தி நோய்களிலிருந்து உங்களை பாதுகாக்கக்கூடும். சில முக்கியமான உயிர் சத்துக்களும், மூலிகைகளும் குறைநிரப்பிகளும் கீழே தரப்பட்டுள்ளன. உயிர்ச்சத்துக்களும் கனியுப்புக்களும்: வன் ஏ டே பிளஸ் - இந்த பல்வகை போசாக்குக் கலவை உயிர்ச்;சத்து குளிகையானது ஒரு ஆற்றல் மிக்க நோய் எதிர்ப்பாளியாகும். ‘சிங்’ உம் மக்னீசியமும் காய்ச்சலிலிருந்து பாதுகாப்பு தரவல்லன். உயிர்ச்சத்துக்கள் ‘சி’ உம் ‘ஈ’ உமுள்ளக இரசாயன தாக்கங்களினால் ஏற்படக் கூடிய மனவழுத்தத்தை எதிர்க்க வல்லன். உள்ளக ஒட்சியேற்ற இரசாயனத்தாக்க நிகழ்வானது ஆரோக்கியமான கலங்களை அழித்துவிடக்கூடிய கட்டாக்காலி அணுக்களை பெருந்தொகையில் விடுவித்து விடுகிறது. ஃபோலிக்கமிலம், களை விற்றமின் ‘பி’, என்பன நோய் எதிர்ப்புச்செயற்பாட்டுக்கு எரிபொருள் போன்று செயற்பட்டு சில புற்றுநோய்கள் ஏற்படக்கூடிய அபாயத்ததையும் குறைக்கின்றன. சிங், செலேனியம், இரும்புச்சத்து, கொப்பர், பீராகறடின் என்பவற்றுடன் இணைந்த ஃபோலிக்கமிலம் மற்றும் உயிர்ச்சத்துக்கள் ‘ஏ’, ‘சி’, மற்றும் ‘டி’ என்பன தொற்றுக்காவி எதிர்க்கவல்லன. நோய் எதிர்ப்புக்கான மூலிகைகள்: சில குறிப்பிட்ட போசாக்குப்பொருட்கள் உங்கள் நோய் எதிர்ப்புச்சக்தியை பலப்படுத்துவது போன்றே மூலிகைகளும் சிறப்பாக அதனை செய்கின்றன. மூலிகை: எக்கனேசியா: வைரஸ் நுண்ணுயிர்களை தனக்குள் மூழ்கடிக்கவும் திறம்பட அவற்றை அழித்துவிடவுமான இயலுமையை நோய் எதிர்ப்பு சக்தி கட்டமைப்புக்கு கொடுக்கிறது. மூலிகை: கற்ஸ் குளோ: நோய் எதிர்ப்புச்செயற்பாட்டை தூண்டுவதுடன் எதிர் ஒற்சியேற்றி குணத்தையும் எரிவு நீக்கிக் குணங்களையும் கொண்டது. மூலிகை: அஸ்ராலகஸ்: இது ஒரு ஊட்டச்சத்தி மூலிகை, உடலின் வீரியத்தை அதிகரிக்கச் செய்து நோய் எதிர்ப்புச்சக்தியை முன்னேற்றுவதோடு காய்ச்சல் போன்றவற்றை தடுக்கும் வல்லமையை நோய் எதிர்ப்புக்கட்டமைப்புக்குக் கொடுக்கிறது. மூலிகை: அஸ்வகாந்தா: நோய் எதிர்ப்பு சக்தி கட்டமைப்பைக் கட்டியெழுப்ப உதவும். இது பொதுவாகவே மனிதனின் வீரியத்தையும் ஆற்றலையும் அதிகரிக்கிறது. அஸ்வகாந்தா வேர் வெளிக்காட்டும் நோய் எதிர்ப்பு கட்டமைப்பை ஒழுங்குபடுத்தும் ஆற்றலானது முழு உடலினதும் நோய் எதிர்ப்பு ஆற்றலை பலப்படுத்துகிறது. மூலிகை: எல்டபிளவர்: கொட்டையற்ற பெர்ரீக்களும் பூக்களும் காய்ச்சல், தடிமன் மற்றும் சுவாசத்தொகுதி ஒழுங்கினம் தொடர்புடைய நோய்கள் செவித் தொற்றுக்கள், தொண்டை கரகரப்புக்கள் போன்றவற்றைக் குணப்படுத்துவதில் அதி தீவிரமாய் செயற்படவல்லன. விட்டமின் ‘பி’ யையும் விற்றமின் ‘ஈ’ யையும் கொண்டிருக்கும் இம்மூலிகை குறிப்பாக காய்ச்சல், தடிமன் நேரங்களில் நோய் எதிர்ப்பினை அதிகரிக்கின்றன. இவையனைத்தையும் கொண்டே எக்கினேசியா பிளஸ் தயாரிக்கப்பட்டுள்ளது. அதிக தண்ணீர் அருந்துதல்: இந்த குளிர்காலத்தில் காற்று உலர் காற்றாக இருப்பதனால் எமது உடலும் கூட அதிகம் காய்ந்து விடுகிறது. நாளொன்றுக்கு 6 முதல் 8 குவளை தண்ணீரை அருந்துவதன் மூலம் உடல் முதலாவது பாதுகாப்பு அரணை இட்டுக்கொள்ளும். எமது கலங்கள் ஈரலிப்படையவும் கழிவகற்றல் சிறப்பாக இடம்பெறவும் தண்ணீர், பற்றிரியா கொல்லிகளைக் கொண்டிராவிட்டாலும் உடல் வரட்சியடைந்து இலகுவாக காய்ச்சல் எட்டுவதை இது தடுக்கும். எனவே எப்போதும் ஒரு தண்ணீர் போத்தலை எடுத்துச்செல்வதும் அருந்துவதும் காய்ச்சல் அற்ற ஒரு குளிர்காலத்தை கொடுக்கும் அல்லவா? உங்கள் குழந்தையின் நோய் எதிர்ப்புச்சக்தியைக் கூட்டுங்கள்: குழந்தைகள் இக்காலத்தில் வழமையைவிட அதிகமாக சுகவீனங்களை அடையக்கூடும் அல்லவா? அவர்களும் நோய் எதிர்ப்பு சக்தியினை முன்னேற்றி பள்ளிக்குத் தவறாது செல்வதற்கு சில எளிய வழிகள் உள்ளன. கீழே குறிப்பிடப்படும் சில குறைநிரப்பிகளில் நீங்கள் சிறார்களுக்கு உதவும் என்று சிலவற்றை தினமும் கொடுத்து அனுப்புங்கள்: 1. எக்கினேசியா - மூலிகைக்கலவை: நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கும் இயற்றை மூலிகை. 2. விற்றமின் ‘சி’: படையெடுக்கும் கிருமிகளுக்கு எதிராகப்போரிடும் எளியதோர் உயிர்ச்சத்து. 6 வயது வரையான சிறு குழந்தைகள் நாளுக்கு 250 மி.கி. வரையில் எடுத்தால் பயன்தரும். பெரியோரும் வளர்ந்த குழந்தைகளும் 500 மி.கி. அளவு தினமும் எடுக்கலாம். பழங்கள் மற்றும் மரக்கறி குறைநிரப்பி: இயற்கையான பழங்கள், காய்கறிகள் காணப்படும் நோய் எதிர்ப்பு குணங்கள் சிறப்பானவை. உங்கள் குழந்தைகள் போதுமான பழங்களையும் மரக்கறிகளையும் உண்ணாவிட்டால் பழச்சாறு அல்லது பழங்களோடு மறக்காது குறை நிரப்பியையும் கொடுக்கலாம். கனியுப்பு – சிங்: இந்த கனியுப்பானது நோய் எதிர்ப்பினை தூண்டுவதற்கு அத்தியாவசியமான பாதுகாப்பானதும் காத்திரமானதுமான வழிமுறையாகும். 6 வயதுக்குட்பட்ட சிறார்கள் நாளொன்றுக்கு 10 தொடக்கம் முதல் 20 மி.கி. அளவு இதனை எடுக்கலாம். பெரிய குழந்தைகளும் வளர்ந்தவர்களும் 20 தொடக்கம் 40 மி.கி. வரை எடுக்கலாம். புறோ பயோரிக்ஸ்: இவை எமது பெருங்குடலில் வாழ்ந்து நோய் எதிர்ப்புக்கு துணைபுரியும் நல்ல பக்ரீரியாக்களைக் கொண்டுள்ளன. லக்டோபசிலஸ் மற்றும் பிபிடோபக்ரீரியா என்பன இவற்றின் சிறந்த இனங்களாகும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
ஷஹி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42
Re: குருதி சம்மந்தமான > உடலின் நோயெதிர்ப்புச் சக்தி உடலின் நோயெதிர்ப்புச் சக்தி..
உறவுகளின் மறுமொழிக்கு நன்றி :”@:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» குருதி சம்மந்தமான > உடலின் நோயெதிர்ப்புச் சக்தி
» வாய் என்னும் உடலின் வாசல்
» உருளைகிழங்கு உடலின் எடையை அதிகரிப்பதில்லை
» மனித உடலின் ஆதார சுருதி சிறுநீரகம்
» உண்கிற உணவுக்கும் உடலின் உறுப்புகளுக்கும் நெருங்கிய தொடர்பு
» வாய் என்னும் உடலின் வாசல்
» உருளைகிழங்கு உடலின் எடையை அதிகரிப்பதில்லை
» மனித உடலின் ஆதார சுருதி சிறுநீரகம்
» உண்கிற உணவுக்கும் உடலின் உறுப்புகளுக்கும் நெருங்கிய தொடர்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|