Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்by rammalar Today at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
உலகிலேயே மிகவும் பழமைவாய்ந்த பல்கலைக்கழகம் -நாளந்தா பல்கலைக்கழகம்
3 posters
Page 1 of 1
உலகிலேயே மிகவும் பழமைவாய்ந்த பல்கலைக்கழகம் -நாளந்தா பல்கலைக்கழகம்
உலகிலேயே மிகவும் பழமைவாய்ந்த பல்கலைக்கழகம் எது? இந்தக் கேள்விக்கு பதிலைத் தேடும்போது உடனே ஒருவரின் மனம் கி.பி. 1088-ல் உருவான போலோக்னா பல்கலைக்கழகம், கி.பி. 1091- ல் உருவான பாரீஸ், 1167- ல் துவங்கப்பட்ட ஆக்ஸ்போர்டு, கி.பி. 1209-ல் துவங்கப்பட்ட கேம்பிரிட்ஜ் மற்றும் பல கல்வி நிறுவனங்களைப் பற்றிய யோசனை வரும். இதற்குள் நாளந்தா எங்கே வருகிறது? தொடர்ந்து இயங்கும் பல்கலைக்கழகம் என்று பார்த்தால், எங்குமில்லை என்பதுதான் நமது உடனடி பதிலாக இருக்கும்.
கி.பி.1193-இல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் துவங்கப் பட்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த தருணத்திலே நாளந்தா பல் கலைக் கழகமானது ஓர் ஆப்கான் தாக்குதலில் பக்தியார் கில்ஜி என்ற கொடூர வெற்றி வீரனால் அழிக்கப்பட்டது.
இந்தியாவில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற உயர் கல்வி நிலையமாக ஐந்தாம் நூற்றாண்டில் துவக்கப்பட்ட நாளந்தா பல்கலைக்கழகம் தனது 700 ஆண்டு இருப்பினை முடித்துக் கொண்டது. ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களோடு ஒப்பிடும்போது 700 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகவும், ஐரோப்பாவின் பழமை வாய்ந்த பலோக்னா பல்கலைக்கழகத்தோடு ஒப்பிடும் போது 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்கலைக் கழகமாகவும் நாளந்தா விளங்குகிறது. அன்று அழிக்கப் படாமல், இன்று வரை நிலைத்திருந்தால் உலகிலேயே தொன்மையான பல்கலைக்கழகமாக நாளந்தா விளங்கி யிருக்கும் என்பதில் ஐயமில்லை.
நாளந்தாவோடு ஒப்பிடப்படும் மற்றொரு பல்கலைக்கழகம் கெய்ரோவில் உள்ள அல்- அசார் பல்கலைக்கழகம். இதுவும் தொடர்ந்து நிலைக்க வில்லை. இது கி.பி. 970- இல் தோற்றுவிக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட சமயத்திலே நாளந்தா 500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக அமைந்திருந்தது.
இது உண்மையிலேயே நாம் பெருமை பாராட்ட வேண்டிய பழமைத்துவமே! தற்போது இந்தப் பல்கலைக் கழகம் மறுபடியும் துவங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலும், இப்பணியின் இடைக்கால நிர்வாகக்குழுவின் தலைவராக நான் இருப்பது மிகவும் கடினமான ஒன்றாகவும், 800 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் சீரமைப்பதும் மிகவும் கஷ்டமாக கருது கிறேன். நாளந்தா ஒரு பழமை வாய்ந்த கல்வி நிலையம். உலகின் பல நாடுகளிலிருந்து, குறிப்பாக சீனா, திபெத், கொரியா, ஜப்பான் மேலும் ஒருசில ஆசிய நாடுகள் மற்றும் துருக்கி போன்ற நாடுகளின் மாணாக்கரும் கவர்ந்திழுக்கப்பட்டனர். தங்கிப் படிக்கும் வசதி கொண்ட நாளந்தா பல்கலைக்கழகத்தில் 10,000 மாணவர்கள் வெவ்வேறு பாடங்களைப் படித்தனர். சீன மாணவர்கள் குறிப்பாக யுவான் சுவாங் மற்றும் இட்சிங் போன்ற ஏழாம் நூற்றாண்டு மாணவர்கள் நாளந்தாவில் அவர்கள் கற்றதையும், பார்த்ததையும், கல்விமுறைகளையும் பற்றி விரிவாக எழுதியுள்ளனர்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: உலகிலேயே மிகவும் பழமைவாய்ந்த பல்கலைக்கழகம் -நாளந்தா பல்கலைக்கழகம்
தற்செயலாக, பழைய சீன வரலாற்றைப் படிக்கும்போது நாளந்தாவில் மட்டும்தான் சீன அறிஞர்கள் பயின்றார்கள் என தெரிய வந்தது.
நாளந்தாவோடு, விக்ரமஷீலா மற்றும் ஓடந்தபூரி போன்ற ஏனைய பல்கலைக்கழகங்களும் அருகாமையில் இருந்தன. யுவான் சுவாங் நாளந்தாவில் படித்தாலும், இந்த கல்வி நிறுவனங் களைப் பற்றியும் எழுதியுள்ளார். நாளந்தாவின் பாரம்பரியத்தைப் பற்றி நினைக்கும் தருவாயில், நாளந்தாவின் சமூக கலாச்சாரத்தைப் பற்றி அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகிறது.
விக்ரம்ஷீலா மற்றும் ஓடந்தபூரி போல நாளந்தாவும் ஒரு புத்த மத கல்வி மையம், மேலும் இந்த கல்வி மையங்களின் முக்கிய நோக்கம் புத்தமத தத்துவத்தைப் பற்றியும், பயிற்சியைப் பற்றியும்தான். மருத்துவம், சுகாதார நலம் போன்ற ஒரு சில துறைகள் புத்த கருத்துகளுடன் நேரடி தொடர்பு கொண்டிருந்தன. மற்ற துறைகளான கட்டடக் கலை, சிற்பக்கலை ஆகியவை புத்த கலாச்சாரத்தின் தன்மையுடன் இருந்தன. ஏனைய பிற புத்தமத அறிவுசார் கேள்விகளை, பகுத்தாராய்வதில் ஆர்வத்தோடு ஒப்பிட்டு தொடர்புபடுத்தின.
நாளந்தா பல்கலைக்கழக மாணவரான இட்சிங் சமஸ்கிருதத்தி லிருந்து சீன மொழிக்கு தாந்திரீக புத்தகங்களை மொழி பெயர்த்தவர்களுள் ஒருவர். ஏழு மற்றும் எட்டாம் நூற்றாண்டு களில் தாந்திரீகத்தை பலரும் பின்பற்றினர். தாந்திரீக பண்டிதர்கள் கணிதத்தில் தீராத ஆர்வம் கொண்டிருந்ததால், தாந்திரீக கணித மேதைகள் சீன கணிதத்தின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தினர்.
ஜோசப் நீதம் கூறுவதுபோல, “”மிகவும் சிறப்பு வாய்ந்த தாந்திரீகர் இஜிங் ஆவார். இவர் சிறந்த சீன வானியல் வல்லுநரும், கணித மேதையும் ஆவார். இட்சிங் நாளந்தாவின் மாணவர் அல்ல. ஆனால் சமஸ்கிருதத்தில் சரளமாக பேசும் திறமையோடு இருந்தார். ஒரு புத்த மத சன்னியாசியாக இட்சிங் இந்திய மத சார் இலக்கியங்களை நன்கு அறிந்திருந்தார். மேலும் அவர் கணிதம் மற்றும் வானியலைப் பற்றிய இந்திய எழுத்துகளை நன்கு அறிந்திருந்தார். அவருடைய சொந்த மத தொடர்பைக் கடந்து, இட்சிங் அவர்களின் கணித மற்றும் அறிவியல் சம்பந்தமான வேலைகள் மத அடிப்படையில் இருக்கின்றன என்பது தவறாகி விடும். இட்சிங் குறிப்பாக பஞ்சாங்கம் கணக்கிடுவதிலும் கவனம் செலுத்தினார். மேலும் அரசின் ஆணைப்படி, சீன நாட்டுக்கு ஒரு புதிய காலண்டரையும் உருவாக்கினார்.
நாளந்தாவோடு, விக்ரமஷீலா மற்றும் ஓடந்தபூரி போன்ற ஏனைய பல்கலைக்கழகங்களும் அருகாமையில் இருந்தன. யுவான் சுவாங் நாளந்தாவில் படித்தாலும், இந்த கல்வி நிறுவனங் களைப் பற்றியும் எழுதியுள்ளார். நாளந்தாவின் பாரம்பரியத்தைப் பற்றி நினைக்கும் தருவாயில், நாளந்தாவின் சமூக கலாச்சாரத்தைப் பற்றி அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகிறது.
விக்ரம்ஷீலா மற்றும் ஓடந்தபூரி போல நாளந்தாவும் ஒரு புத்த மத கல்வி மையம், மேலும் இந்த கல்வி மையங்களின் முக்கிய நோக்கம் புத்தமத தத்துவத்தைப் பற்றியும், பயிற்சியைப் பற்றியும்தான். மருத்துவம், சுகாதார நலம் போன்ற ஒரு சில துறைகள் புத்த கருத்துகளுடன் நேரடி தொடர்பு கொண்டிருந்தன. மற்ற துறைகளான கட்டடக் கலை, சிற்பக்கலை ஆகியவை புத்த கலாச்சாரத்தின் தன்மையுடன் இருந்தன. ஏனைய பிற புத்தமத அறிவுசார் கேள்விகளை, பகுத்தாராய்வதில் ஆர்வத்தோடு ஒப்பிட்டு தொடர்புபடுத்தின.
நாளந்தா பல்கலைக்கழக மாணவரான இட்சிங் சமஸ்கிருதத்தி லிருந்து சீன மொழிக்கு தாந்திரீக புத்தகங்களை மொழி பெயர்த்தவர்களுள் ஒருவர். ஏழு மற்றும் எட்டாம் நூற்றாண்டு களில் தாந்திரீகத்தை பலரும் பின்பற்றினர். தாந்திரீக பண்டிதர்கள் கணிதத்தில் தீராத ஆர்வம் கொண்டிருந்ததால், தாந்திரீக கணித மேதைகள் சீன கணிதத்தின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தினர்.
ஜோசப் நீதம் கூறுவதுபோல, “”மிகவும் சிறப்பு வாய்ந்த தாந்திரீகர் இஜிங் ஆவார். இவர் சிறந்த சீன வானியல் வல்லுநரும், கணித மேதையும் ஆவார். இட்சிங் நாளந்தாவின் மாணவர் அல்ல. ஆனால் சமஸ்கிருதத்தில் சரளமாக பேசும் திறமையோடு இருந்தார். ஒரு புத்த மத சன்னியாசியாக இட்சிங் இந்திய மத சார் இலக்கியங்களை நன்கு அறிந்திருந்தார். மேலும் அவர் கணிதம் மற்றும் வானியலைப் பற்றிய இந்திய எழுத்துகளை நன்கு அறிந்திருந்தார். அவருடைய சொந்த மத தொடர்பைக் கடந்து, இட்சிங் அவர்களின் கணித மற்றும் அறிவியல் சம்பந்தமான வேலைகள் மத அடிப்படையில் இருக்கின்றன என்பது தவறாகி விடும். இட்சிங் குறிப்பாக பஞ்சாங்கம் கணக்கிடுவதிலும் கவனம் செலுத்தினார். மேலும் அரசின் ஆணைப்படி, சீன நாட்டுக்கு ஒரு புதிய காலண்டரையும் உருவாக்கினார்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: உலகிலேயே மிகவும் பழமைவாய்ந்த பல்கலைக்கழகம் -நாளந்தா பல்கலைக்கழகம்
எட்டாம் நூற்றாண்டில் சீனாவில் இருந்த இந்திய வானியலாளர்கள் பஞ்சாங்கத்தைப் படிப்பதில் முக்கோணவியலை சிறப்பாக பயன் படுத்திக் கொண்டனர். இந்த இயல்பானது உலகளாவிய கருத்துப் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக அமைந்திருந்தது. அந்த நேரத்தில் மேற்கு நாடுகளிலும் இது சிறப்பாய் பரவியது. இந்த காலத்தில் தான் இந்திய முக்கோணவியல் அரேபிய நாடுகளில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இதுவே எதிர்காலத்தில் ஐரோப்பாவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்தப் பொதுவான அறிவு உத்வேகம், குறிப்பாய் ஆராயும் மற்றும் அறிவியல் கேள்விகளின் மேல் உள்ள ஆர்வம்தான் பழைய நாளந்தாவில் இருந்த பாராட்டப்படக்கூடிய விஷயம். ஒரு மதசார் அமைப்பாக இருந்தது நாளந்தாவுக்கு தனிச் சிறப்பு அல்ல என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன். மாறாக நாளந்தா மதத்தையும் தாண்டி பொதுவான அறிவுசார், அறிவியல் படிப்புகளை வளர்த்தெடுத் தது. இது பலருக்கும் பேரார்வத்தை ஏற்படுத்தியது.
சர் ஐசக் நியூட்டன் மதம் சார்ந்தவர். ஆனால் கடவுளை அறிய முற்படாதவர். இவர் இயற்பியல் மற்றும் கணிதத் துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்திய வர். ஆனால் அவருடைய கல்லூரியோடு எந்த பிரச்சினையும் கொள்ளவில்லை. இன்னொரு உதாரணம் கொடுக்க வேண்டுமெனில், பதுவாவில் இருந்த கிறிஸ்தவ கல்லூரியில்தான் கலிலியோ கலிலி படித்தார்.
நாளந்தா பல்கலைக்கழகத்தில் எத்தகைய பிரச்சினை எழுந்தது என்பது எனக்குத் தெரியாது. ஆனால் பல ஆவணங்கள் வெளிவந்த பிறகு, நாளந்தாவில் அறிவியலுக்கும் மதத்திற்கும் இடையேயான உறவில் குழப்பங்கள் இருந்ததா என்பதை நாம் அறிந்து கொள்வோம். மிகத் தெளிவாக தெரிவது என்னவென்றால், இந்த புத்தமத அமைப்பானது, நாளந்தா பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே பகுத்தாய்வு மற்றும் அறிவியல் பாடங்களை கற்பதற்கு பல வாய்ப்பு களைத் தந்தது.
நாளந்தாவில் இருந்த ஆவணங்கள் அனைத்தும் பக்தியார் கீல்ஜி மற்றும் அவரது படை வீரர்களால் தீக்கிரையாகின. ஆகவே, அங்கு படித்த மாணவர்கள் பார்த்தவற்றைப் பதிவு செய்தவற்றைத்தான் நம்பியாக வேண்டும்.
மேலும் யுவான் சுவாங் மற்றும் இட்சிங் போன்றவர்கள் எழுதியதைத்தான் நாம் அதிகம் நம்பிட வேண்டும். அதன் அடிப்படையில் பார்க் கும்போது அங்கு நடத்தப்பட்ட பாடங்களும், ஆய்வு மேற்கொள்ளப்பட்ட துறைகளானவை, மருத்து வம், பொதுச் சுகாதாரம், கட்டடக்கலை, சிற்பக் கலை, மதம், வரலாறு, சட்டம், மொழியியல் என்பதும் தெளிவாகிறது.
இட்சிங் மற்றும் யுவான் சுவாங் போன்றோர் கணிதப் படிப்பிலே பங்கேற்கவில்லை. இந்தியக் கணிதத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட இட்சிங் போன்றோர் நாளந்தாவில் படிக்கவில்லை. இந்தியா, சீனா அல்லது உலகின் மற்ற பகுதிகளிலிருந்து மற்றவர்கள் இருந்திருக் கலாம். ஆனால் அவர்களின் ஆவணங்கள் அனைத்தும் தொலைந்து விட்டன. இதைப் பற்றிய ஒரு சாட்சி கண்டிப்பாக வரும் என்பதுதான் எனது நம்பிக்கை.
இந்தப் பொதுவான அறிவு உத்வேகம், குறிப்பாய் ஆராயும் மற்றும் அறிவியல் கேள்விகளின் மேல் உள்ள ஆர்வம்தான் பழைய நாளந்தாவில் இருந்த பாராட்டப்படக்கூடிய விஷயம். ஒரு மதசார் அமைப்பாக இருந்தது நாளந்தாவுக்கு தனிச் சிறப்பு அல்ல என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன். மாறாக நாளந்தா மதத்தையும் தாண்டி பொதுவான அறிவுசார், அறிவியல் படிப்புகளை வளர்த்தெடுத் தது. இது பலருக்கும் பேரார்வத்தை ஏற்படுத்தியது.
சர் ஐசக் நியூட்டன் மதம் சார்ந்தவர். ஆனால் கடவுளை அறிய முற்படாதவர். இவர் இயற்பியல் மற்றும் கணிதத் துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்திய வர். ஆனால் அவருடைய கல்லூரியோடு எந்த பிரச்சினையும் கொள்ளவில்லை. இன்னொரு உதாரணம் கொடுக்க வேண்டுமெனில், பதுவாவில் இருந்த கிறிஸ்தவ கல்லூரியில்தான் கலிலியோ கலிலி படித்தார்.
நாளந்தா பல்கலைக்கழகத்தில் எத்தகைய பிரச்சினை எழுந்தது என்பது எனக்குத் தெரியாது. ஆனால் பல ஆவணங்கள் வெளிவந்த பிறகு, நாளந்தாவில் அறிவியலுக்கும் மதத்திற்கும் இடையேயான உறவில் குழப்பங்கள் இருந்ததா என்பதை நாம் அறிந்து கொள்வோம். மிகத் தெளிவாக தெரிவது என்னவென்றால், இந்த புத்தமத அமைப்பானது, நாளந்தா பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே பகுத்தாய்வு மற்றும் அறிவியல் பாடங்களை கற்பதற்கு பல வாய்ப்பு களைத் தந்தது.
நாளந்தாவில் இருந்த ஆவணங்கள் அனைத்தும் பக்தியார் கீல்ஜி மற்றும் அவரது படை வீரர்களால் தீக்கிரையாகின. ஆகவே, அங்கு படித்த மாணவர்கள் பார்த்தவற்றைப் பதிவு செய்தவற்றைத்தான் நம்பியாக வேண்டும்.
மேலும் யுவான் சுவாங் மற்றும் இட்சிங் போன்றவர்கள் எழுதியதைத்தான் நாம் அதிகம் நம்பிட வேண்டும். அதன் அடிப்படையில் பார்க் கும்போது அங்கு நடத்தப்பட்ட பாடங்களும், ஆய்வு மேற்கொள்ளப்பட்ட துறைகளானவை, மருத்து வம், பொதுச் சுகாதாரம், கட்டடக்கலை, சிற்பக் கலை, மதம், வரலாறு, சட்டம், மொழியியல் என்பதும் தெளிவாகிறது.
இட்சிங் மற்றும் யுவான் சுவாங் போன்றோர் கணிதப் படிப்பிலே பங்கேற்கவில்லை. இந்தியக் கணிதத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட இட்சிங் போன்றோர் நாளந்தாவில் படிக்கவில்லை. இந்தியா, சீனா அல்லது உலகின் மற்ற பகுதிகளிலிருந்து மற்றவர்கள் இருந்திருக் கலாம். ஆனால் அவர்களின் ஆவணங்கள் அனைத்தும் தொலைந்து விட்டன. இதைப் பற்றிய ஒரு சாட்சி கண்டிப்பாக வரும் என்பதுதான் எனது நம்பிக்கை.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: உலகிலேயே மிகவும் பழமைவாய்ந்த பல்கலைக்கழகம் -நாளந்தா பல்கலைக்கழகம்
அரிய அறியாத்தகவலைத்தந்தமைக்கு மிக்க நன்றிங்க
ராஜா- புதுமுகம்
- பதிவுகள்:- : 358
மதிப்பீடுகள் : 0
Re: உலகிலேயே மிகவும் பழமைவாய்ந்த பல்கலைக்கழகம் -நாளந்தா பல்கலைக்கழகம்
ராஜா wrote:அரிய அறியாத்தகவலைத்தந்தமைக்கு மிக்க நன்றிங்க
:];: :];:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: உலகிலேயே மிகவும் பழமைவாய்ந்த பல்கலைக்கழகம் -நாளந்தா பல்கலைக்கழகம்
அறிய பொது அறிவை பகிர்ந்தமைக்கு நன்றி தொடரட்டும் :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உலகிலேயே மிகவும் பழமைவாய்ந்த பல்கலைக்கழகம் -நாளந்தா பல்கலைக்கழகம்
*ரசிகன் wrote:அறிய பொது அறிவை பகிர்ந்தமைக்கு நன்றி தொடரட்டும் :];:
:];: :];:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» 350,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கற்கோடாரிகள்
» உலகிலேயே மிகவும் குளிர்ச்சியான கப்பல்..
» உலகிலேயே மிகவும் குளிர்ச்சியான கப்பல்
» உலகிலேயே மிகவும் நீளமான சுருண்ட ஆணின் தலைமுடி.
» உலகிலேயே மிகவும் ஸ்டைலான பெண்ணாக கத்தார் மன்னரின் மனைவி தேர்வு
» உலகிலேயே மிகவும் குளிர்ச்சியான கப்பல்..
» உலகிலேயே மிகவும் குளிர்ச்சியான கப்பல்
» உலகிலேயே மிகவும் நீளமான சுருண்ட ஆணின் தலைமுடி.
» உலகிலேயே மிகவும் ஸ்டைலான பெண்ணாக கத்தார் மன்னரின் மனைவி தேர்வு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|