சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

எப்போதும் மகிழ்ச்சியாக வாழ…  Khan11

எப்போதும் மகிழ்ச்சியாக வாழ…

Go down

எப்போதும் மகிழ்ச்சியாக வாழ…  Empty எப்போதும் மகிழ்ச்சியாக வாழ…

Post by ஹம்னா Thu 7 Apr 2011 - 19:25

உலகில் எங்கேயும், எப்போதும் சந்தோஷமாக இருக்கும் மனிதர்கள் யாராவது உண்டா? என்றால் இல்லை என்று தான் பதில் வரும். ஏனென்றால் கவலையே இல்லாத மனிதர்கள் இல்லை. ஆனாலும் கவலைகளை மறந்து, மகிழ்ச்சியை அனுபவித்து வரும் பலரும் இங்கே வாழ்ந்து வருகின்றனர்.


சைக்காலஜிஸ்ட் லிஷா சைபர்ஸ் கேமன் மற்றும் அவரது மகள் கேரன் ஆகிய இருவரும் இணைந்து பல டாக்குமெண்டரி படங்கள் தயாரித்தார்கள். அதோடு பல்வேறு மனிதர்களை ஆய்வு செய்ததில், இந்தியாவில் உள்ள மக்களின் உணவு மற்றும் பழக்க வழக்கங்கள் சந்தோஷத்தை உண்டாக்குகின்றன என்பதை அறிந்து கொண்டனர். இங்கே தோன்றிய மகான்களின் கருத்துகளும் மகிழ்ச்சியை அறியும் நோக்கில் இருப்பதாக சர்வதேச அறிஞர்கள் பலரும் கூறுகின்றனர். உளவியலார்கள் இணைந்து வாழ்க்கையில் மகிழ்ச்சியை உருவாக்கும் வழிமுறைகளை வகுத்துள்ளனர். அவற்றை தெரிந்து கொண்டு அதன்படி நடந்தால் கண்டிப்பாக உங்களுக்கும் மகிழ்ச்சி அதிகரிக்கும். அவற்றை இங்கே பார்ப்போம்,


சிரிப்பு



சிரிப்பு… எதிரே இருக்கும் யாரையும் எளிதில் கவர்ந்து விடும். பன்சால் என்ற இளம்பெண்ணின் மகிழ்ச்சி ததும்பிய நாட்களில் இவளுடைய முகத்தில் சிரிப்புக்கு பஞ்சமில்லை. ஆனால் திருமணத்திற்கு பின்னர் இவளுடைய முகத்தில் கவலை மட்டுமே குடியிருந்தது. இவளுடைய கணவர் ஆர்மியில் பணியாற்றுபவர் என்பதால், முகத்தில் சிரிப்பு என்பதே இல்லை. இதனால் இவளுக்கும் சிரிப்பு மிஸ் ஆனது. இதன் தாக்கம் இவளுடைய உடம்பும் மெலிந்து ஆரோக்கியம் கெட்டுப் போனது. இதை அறிந்த அவளுடைய தோழிகள் அவளுக்கு நன்றாக சிரிக்குமாறு அறிவுரை கூறினர். சிரிப்பு என்பது நம்முடைய உடம்பு, மனதில் ஏற்படும் வலிகளைப் போக்கும் வலி நிவாரணி. இதுவொரு முகத் தசைகளை அழகாக்கும் அழகியல் காரணி என்பதை பன்சாலுக்கு புரியவைத்தனர். சிரிப்பதால் இளமை மெருகேறும். தற்போது பன்சால் நன்றாக சிரிக்கிறாள்.

சிரிப்பு என்பது நமக்கு மட்டுமின்றி, நம்மை சுற்றி இருப்பவர்களையும் சந்தோஷப்படுத்தும் என்பதை மறந்து விடாதீர்கள்.


எப்போதும் மகிழ்ச்சியாக வாழ…  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

எப்போதும் மகிழ்ச்சியாக வாழ…  Empty Re: எப்போதும் மகிழ்ச்சியாக வாழ…

Post by ஹம்னா Thu 7 Apr 2011 - 19:28

மன்னிப்பு

சிலரது இயல்பே அவர்கள் எத்தனை உயர்நிலையில் இருந்தாலும் அவர்களை எளிதில் அணுகும் விதத்தில் இருக்கும். அதேநேரம் இந்த மனநிலை எல்லாருக்கும் வராது. மேலும் இதே மனநிலையில் தொடர்ந்து வாழ்வதும் மிகவும் கஷ்டமானது. அப்படியொரு மனநிலை உங்களுக்கும் வரும்போது கண்டிப்பாக இந்த வாழ்க்கையை மகிழ்ச்சி நிறைந்ததாக மாற்றமுடியும். தீயவற்றை மறப்பதும், அதனால் ஏற்பட்ட தவறுகளை மன்னிப்பதும் நம் வாழ்க்கையின் சந்தோஷத்திற்கான அடிப்படை காரணிகள்.

உள்வாங்குதல்

நமக்கு எதில் விருப்பம் அதிகம் என்பதை அறிந்து கொண்டு, அதற்கேற்ப விஷயங்களை தேடிச் செல்வது, அதற்கான கருத்துக்களை உள்வாங்கி காதில் போட்டுக் கொள்வது, அது தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபடுவது என நம்மை நாம் அறிந்து கொண்டால் மகிழ்ச்சியை அதிகரித்துக் கொள்ளலாம்.

நாம் அடிக்கடி கேட்கும் மனதுக்கு பிடித்த ஒலியின் மூலம் நம்முடைய உடலும், மனதும் உற்சாகமாகும் என்பதை ஒப்புக் கொள்கிறார் பிரபல சைக்யாட்ரிஸ்ட். ஹாரன் சப்தம் எரிச்சலை உண்டு பண்ணும். மென்மையான ஒலிகள் நம்மை தாலாட்டும்.

சுவாசத்தின் வாசம்!






எப்போதும் மகிழ்ச்சியாக வாழ…  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

எப்போதும் மகிழ்ச்சியாக வாழ…  Empty Re: எப்போதும் மகிழ்ச்சியாக வாழ…

Post by ஹம்னா Thu 7 Apr 2011 - 19:30

சுவாசத்தின் வாசம்!



நம்முடைய சுவாசம் மிகச் சரியாக இருக்கும்பட்சத்தில் நம்முடைய உடலும், மனமும் புத்துணர்ச்சியை பெறும் என்பது அனைவரும் அறிந்ததே. இதன் அடிப்படையில் உருவானதுதான் யோகா மற்றும் மூச்சுப் பயிற்சி.

ஒவ்வொரு மனிதனும் சுவாசத்தை மிகச் சரியாக செய்யாதபோது, செயல்பாடுகளில் சிறந்த முறையில் கவனம் செலுத்த முடியாது. மூச்சுப்பயிற்சியை மிகச் சரியாக செய்ததால்தான் யோகிகள் தாங்கள் நினைத்த இலக்கை அடைந் தனர். தியானமும் இதன் அடிப்படையில் உருவானதே. ஆனால் இதில் மூச்சுப் பயிற்சியை முறையாக கையாண்டால் மட்டுமே சிறந்த பலன்களை பெற முடியும்.

பல ஆண்டுகளுக்கு முன்பு, மூச்சு விடுதல் ஒரு கலையாக இருந்ததாகவும், அதை கற்றதால் உடலில் மட்டுமின்றி வாழ்க்கையில் பல மாற்றங்களை சாதிக்க முடிந்ததாகவும் கூறுகிறார் பிரபல மருத்துவர். உடலில் ஏதேனும் பாதிப்புகள் இருந்தால், சீரான மூச்சு விடுதல் மூலம் அதை குணப்படுத்த முடியும். மூச்சு விடுதலை நாம் முறையாக செய்யும்போது மனதை அமைதியாக்கி, நமது குறிக்கோளை கண்டிப்பாக அடைய முடியும்.

ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை மூச்சு விடுகிறான். அதையே பத்துமுறையாக்கும்போது கண்டிப்பாக வித்தியாசமான அனுபவத்தை பெறமுடியும். புத்துணர்ச்சி, அதிக எனர்ஜி, சூழலை எளிதாக கையாளும் திறன் ஆகிய மூன்றும் கிடைக்கும். இதைத் தான் தியானம் மூலம் நாம் பெறுகிறோம்.

தினமும் எட்டு நிமிடம் ஒதுக்கி மூச்சுப் பயிற்சி செய்தால் போதும், பலன் கிடைக்கும். முதுகை நேராக வைத்தபடி, அமர்ந்து, கண்களை மூடி நிதானமாக மூச்சு விட்டுப் பாருங்கள்… புது அனுபவத்தை உணர்வீர்கள்!


கனிவு… அன்பு!


மற்றவர்கள் மீது அன்பு செலுத்தினால், நமது ஆயுள் நீடிக்கும் என்கிறார்கள் உளவியல் ஆய்வாளர்கள். மற்றவர்கள் மீது நாம் அளவுக்கு அதிகமான அன்பை செலுத்தும்போது நமது உடலில் உள்ள ஹார்மோன் நமக்கு நல்ல உணர்வுகளை கொடுக்கிறது. ஒவ்வொரு முறையும் நாம் அன்பை வெளிப்படுத்தும்போது ஹார்மோன் பிரச்சினைகள், ரத்த அழுத்தம், மன அழுத்தம் குறைகிறது. ஆரோக்கியமும், மன அமைதியும் அதிகரிக்கிறது.

ஒருவர் மீது அன்பு வைத்தால் போதும், தொடர்ந்து நமக்கு அது சந்தோஷத்தை கொடுக்கும். குறிப்பாக தம்பதிகள் திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து அன்பை செலுத்தும்போது அதற்கேற்ப குடும்பத்தில் இல்லறம் இனிக்கும் என்று கூறுகிறார் பிரபல செக்ஸ் மருத்துவர்.

அன்புக்கு எல்லையே இல்லை. நீங்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகள் மீது அன்பை செலுத்தும்போது, அந்த பிராணியும் உங்கள் மீது அன்பை வெளிப்படுத்தும். இதனால் நம்முடைய மனது அமைதியாகி, உடல் ஆரோக்கியமாகும்.

***


எப்போதும் மகிழ்ச்சியாக வாழ…  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

எப்போதும் மகிழ்ச்சியாக வாழ…  Empty Re: எப்போதும் மகிழ்ச்சியாக வாழ…

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum