Latest topics
» பல்சுவை- ரசித்தவை - 9by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
வெல்பவரே அனைத்தையும் அள்ளிச் செல்லும் அரசியல்
2 posters
Page 1 of 1
வெல்பவரே அனைத்தையும் அள்ளிச் செல்லும் அரசியல்
அமெரிக்கப் பொருளாதாரத்தின் இன்றைய நிலைமை – ராபர் லீபர்மான் தமிழில்: கானகன்
அமெரிக்கச் சமூகம் பற்றி அண்மையில் வெளிவந்து பெரும் பரபரப்டை உருவக்கியிருக்கும் இந்நூல் பற்றி ராபர் லீபர்மான் என்பவர் ஃபாரின் அஃப்ஃபேர்ஸ் இதழில் எழுதியுள்ள விமர்சனத்தின் தமிழாக்கம்:
அமெரிக்கப் பொருளாதாரம் நிலைகுலைந்துவருவதாகத் தோன்றுகிறது. வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழப் பத்து விழுக்காடு. இந்த எண்ணிக்கை கடந்த 30 ஆண்டுகளில் இவ்வளவு அதிகமாக இருந்ததில்லை. லட்சக்கணக்கானோர் தாம் பெற்ற வீட்டுக் கடன்களைத் திரும்பச் செலுத்த முடியாமல் அவற்றை இழந்து தெருவுக்கு வந்திருக்கிறார்கள். 1930களில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின்போது நடந்ததைப் போலவே மக்களின் வருவாய் தலைகுப்புற வீழ்ந்துகொண்டேயிருக்கிறது. பொருளாதாரத் தேக்கத்தின் காரணமாகத் தற்காலிகமாக வேலையிலிருந்து நீக்கப்பட்டிருப்பவர்களில் (லே ஆஃப் செய்யப்பட்டிருப்பவர்களில்) பலருக்கு மீண்டும் வேலை கிடைக்கும் என்னும் நம்பிக்கையே இல்லை.
இவ்வளவு அவலத்திற்கிடையேயும் அமெரிக்காவின் மிகப் பெரும் செல்வந்தர்களின் சொத்து மதிப்பு மேலும் உயர்ந்திருக்கிறது. உலகளாவிய நிதிச்சந்தைகளில் இவர்களில் பலர் புகுந்து விளையாடியதன் விளைவே இரண்டாண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பெரும் பொருளாதாரச் சரிவு. இவர்கள் ஆட்டங்களால் உலகமே விலைகுலைந்தது. பலர் வறியவர்களாக்கப்பட்டனர். ஆனால் இவர்கள் கொழிக்கிறார்கள். 2009ல் மக்கள்தொகையில் ஐந்து சதவீதமே உள்ள அமெரிக்காவில் பெரும் பணக்காரர்களின் சராசரி வருமானம் பெருகியது, மற்ற அமெரிக்கர்களின் வருமானமோ வீழ்ச்சியடைந்தது. ஆனால் இது திடீரென்று நிகழ்ந்து விடவில்லை. நாற்பது ஆண்டுகளாகத் தொடரும் கதை. மேல்தட்டு வர்க்கத்தினரின் வருவாய் அதிகரித்துக் கொண்டே போக, நடுத்தர வர்க்கம், அடித்தட்டு வர்க்கங்களைச் சேர்ந்த மக்களின் வருவாய் தேங்கிப் போய்விட்டது. நாட்டின் மொத்த வருவாயில் எட்டு விழுக்காடு மேல்தட்டு வர்க்கத்தினருக்குரியதாயிருந்தது. இப்போது 20 விழுக்காடு அவர்களுக்குச் சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையைத்தான் தங்கள் புத்தகத்தில் ஜேக்கப் ஹாக்கர் பால் பியர்சன் ஆகியோர் “வெல்பவர் அனைத்தையுமே அள்ளிச் செல்லும் பொருளாதாரம்’ என வர்ணிக்கின்றனர். சமூகத்தின் ஆரோக்கியத்துக்கு இது உகந்ததல்ல. இந்த அளவு ஏற்றத்தாழ்வை அமெரிக்கா எணூஞுச்தூ ஈஞுணீணூஞுண்ண்டிணிண எனக் கூறப்படும் 1930களின் பெரும் வீழ்ச்சிக்குப் பிறகு இப்போதுதான் சந்திக்கிறது. பொருளாதார முன்னேற்றத்தின் மொத்தப் பயன்களும் குறுகிய எண்ணிக்கையிலுள்ள மேல்தட்டு வர்க்கத்திற்குச் சென்று சேர்கிறது. இழப்புகளோ நடுத்தர வர்க்கத்தினர்மீது சுமத்தப்படுகிறது.
துருக்மேனிஸ்தான், கானா, நிகாராகுவா, கானா போன்ற நாடுகளின் மக்களிடையே காணப்படும் ஏற்றத்தாழ்வு இப்போது அமெரிக்கர்களிடையே நிலவத் தொடங்கியிருக்கிறது. வேறெந்த வளர்ந்த ஜனநாயக நாட்டிலும் இத்தகையதொரு அவலச் சூழல் இல்லை. இதன் விளைவாக முரண்பாடுகள் கூர்மையடைகின்றன. வறியோரின் ஆத்திரம் கூடுகிறது. பணத்தில் எதையும் வாங்கிவிடலாம் என்னும் எண்ணம் மேலோங்கும்போது ஜனநாயக முறையே தறிகெட்டுப் போகிறது.
அமெரிக்கச் சமூகம் பற்றி அண்மையில் வெளிவந்து பெரும் பரபரப்டை உருவக்கியிருக்கும் இந்நூல் பற்றி ராபர் லீபர்மான் என்பவர் ஃபாரின் அஃப்ஃபேர்ஸ் இதழில் எழுதியுள்ள விமர்சனத்தின் தமிழாக்கம்:
அமெரிக்கப் பொருளாதாரம் நிலைகுலைந்துவருவதாகத் தோன்றுகிறது. வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழப் பத்து விழுக்காடு. இந்த எண்ணிக்கை கடந்த 30 ஆண்டுகளில் இவ்வளவு அதிகமாக இருந்ததில்லை. லட்சக்கணக்கானோர் தாம் பெற்ற வீட்டுக் கடன்களைத் திரும்பச் செலுத்த முடியாமல் அவற்றை இழந்து தெருவுக்கு வந்திருக்கிறார்கள். 1930களில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின்போது நடந்ததைப் போலவே மக்களின் வருவாய் தலைகுப்புற வீழ்ந்துகொண்டேயிருக்கிறது. பொருளாதாரத் தேக்கத்தின் காரணமாகத் தற்காலிகமாக வேலையிலிருந்து நீக்கப்பட்டிருப்பவர்களில் (லே ஆஃப் செய்யப்பட்டிருப்பவர்களில்) பலருக்கு மீண்டும் வேலை கிடைக்கும் என்னும் நம்பிக்கையே இல்லை.
இவ்வளவு அவலத்திற்கிடையேயும் அமெரிக்காவின் மிகப் பெரும் செல்வந்தர்களின் சொத்து மதிப்பு மேலும் உயர்ந்திருக்கிறது. உலகளாவிய நிதிச்சந்தைகளில் இவர்களில் பலர் புகுந்து விளையாடியதன் விளைவே இரண்டாண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பெரும் பொருளாதாரச் சரிவு. இவர்கள் ஆட்டங்களால் உலகமே விலைகுலைந்தது. பலர் வறியவர்களாக்கப்பட்டனர். ஆனால் இவர்கள் கொழிக்கிறார்கள். 2009ல் மக்கள்தொகையில் ஐந்து சதவீதமே உள்ள அமெரிக்காவில் பெரும் பணக்காரர்களின் சராசரி வருமானம் பெருகியது, மற்ற அமெரிக்கர்களின் வருமானமோ வீழ்ச்சியடைந்தது. ஆனால் இது திடீரென்று நிகழ்ந்து விடவில்லை. நாற்பது ஆண்டுகளாகத் தொடரும் கதை. மேல்தட்டு வர்க்கத்தினரின் வருவாய் அதிகரித்துக் கொண்டே போக, நடுத்தர வர்க்கம், அடித்தட்டு வர்க்கங்களைச் சேர்ந்த மக்களின் வருவாய் தேங்கிப் போய்விட்டது. நாட்டின் மொத்த வருவாயில் எட்டு விழுக்காடு மேல்தட்டு வர்க்கத்தினருக்குரியதாயிருந்தது. இப்போது 20 விழுக்காடு அவர்களுக்குச் சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையைத்தான் தங்கள் புத்தகத்தில் ஜேக்கப் ஹாக்கர் பால் பியர்சன் ஆகியோர் “வெல்பவர் அனைத்தையுமே அள்ளிச் செல்லும் பொருளாதாரம்’ என வர்ணிக்கின்றனர். சமூகத்தின் ஆரோக்கியத்துக்கு இது உகந்ததல்ல. இந்த அளவு ஏற்றத்தாழ்வை அமெரிக்கா எணூஞுச்தூ ஈஞுணீணூஞுண்ண்டிணிண எனக் கூறப்படும் 1930களின் பெரும் வீழ்ச்சிக்குப் பிறகு இப்போதுதான் சந்திக்கிறது. பொருளாதார முன்னேற்றத்தின் மொத்தப் பயன்களும் குறுகிய எண்ணிக்கையிலுள்ள மேல்தட்டு வர்க்கத்திற்குச் சென்று சேர்கிறது. இழப்புகளோ நடுத்தர வர்க்கத்தினர்மீது சுமத்தப்படுகிறது.
துருக்மேனிஸ்தான், கானா, நிகாராகுவா, கானா போன்ற நாடுகளின் மக்களிடையே காணப்படும் ஏற்றத்தாழ்வு இப்போது அமெரிக்கர்களிடையே நிலவத் தொடங்கியிருக்கிறது. வேறெந்த வளர்ந்த ஜனநாயக நாட்டிலும் இத்தகையதொரு அவலச் சூழல் இல்லை. இதன் விளைவாக முரண்பாடுகள் கூர்மையடைகின்றன. வறியோரின் ஆத்திரம் கூடுகிறது. பணத்தில் எதையும் வாங்கிவிடலாம் என்னும் எண்ணம் மேலோங்கும்போது ஜனநாயக முறையே தறிகெட்டுப் போகிறது.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: வெல்பவரே அனைத்தையும் அள்ளிச் செல்லும் அரசியல்
இவ்வாறு செல்வம் குவியும் பின்னணியில் பொருளாதாரக் காரணங்கள் மட்டுமே இருப்பதாக நினைப்பது தவறானது. தொழில் நுட்பரீதியிலான மாற்றங்களுக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது. குறிப்பாகக் கணினித் துறை வளர்ச்சியின் விளைவாகத் தொழிலாளர்களின் உற்பத்தித்திறன் அதிகரிக்கிறது. அதேநேரம் உடல் உழைப்பு தேவைப்படும் பணிகளுக்கான மதிப்புக் குறைகிறது. அறிவுசார்ந்த பணிகளுக்கான முக்கியத்துவம் கூடுகிறது. இதன் இன்னொரு பரிமாணம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை நோக்கியே அமெரிக்காவின் பொருளாதாரம் வேகமாக நகர்ந்து செல்கையில், உலகமயமாதலின் பின்புலத்தில் உற்பத்தித் துறையில் செங்கோலோச்சிய அந்நாட்டுக்கு இப்போது விழிபிதுங்குகிறது. சேவைகள் எங்கெங்கோ செல்கின்றன. உள்நாட்டிலுங்கூடச் சேவைத் துறை அதில் தேர்ந்தவர்களைத்தான் ஆதரிக்கிறது. அவர்களுக்குக் கொட்டிக்கொடுக்கவும் செய்கிறது. அதே துறையில் கீழ்மட்டங்களில் பணிபுரிவோருக்கோ மிகக் குறைந்த ஊதியமே வழங்கப்படுகிறது. அவர்கள் எப்போது வேண்டுமானாலும் வீட்டுக்கு அனுப்பப்படலாம். கேட்பாரில்லை. அவர்களது தொழிற்சங்கங்கள் மிகப் பலவீனமானவை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
ஆனால் உலகமயமாதலைத் தீவிரமாக ஆதரிப்பவர்கள், சந்தைப் பொருளாதாரத்தில் இத்தகைய நிகழ்வுகள் இயல்பானவை எனவும் இறுதியில் நன்மை பயக்குமெனவும் எப்படியும் இவற்றைத் தடுத்து நிறுத்த முடியாது எனவும் சொல்கிறார்கள்.
உலகமயமாதல் மக்கள் நலன்களுக்கு எதிரானது எனக் கருதுபவர்களோ வருவாய் சரிவரப் பங்கிடப்படாமல் ஏற்றத்தாழ்வு பெருகுவதை, குறிப்பாக மிக அதிகம் படித்த, தேர்ச்சிபெற்ற பிரிவினருக்கான வருவாய் அதிகரிப்பதையும் சாதாரணத் தொழிலாளர்கள் போதிய வருவாயின்றிப் பரிதவிப்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஆனால் இருதரப்பினருமே ஏற்றத்தாழ்வு தொடர்ந்து அதிகரிப்பதில் அரசின், அரசியல்வாதிகளின் பங்கென்ன என்பதை விவாதிப்பதில்லை.
ஹாக்கர், பியர்சன் தங்கள் புத்தகத்தில் அதைத்தான் செய்திருக்கிறார்கள். 1970களின் பிற்பகுதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட கொள்கை முடிவுகள் அனைத்துமே பணக்காரர்களின் நலனுக்கானவை என்பது அவர்களது வாதம். அமெரிக்கக் காங்கரஸ் உயர்வருவாய்ப் பிரிவினர்மீதான வரியைத் தொடர்ந்து குறைத்துவந்திருக்கிறது. முதலீடுகள், பங்கு மார்க்கெட்டின் விளைவாய்க் கிடைக்கும் லாபத்தின் மீது விதிக்கப்படும் வரியும் தளர்த்தப்பட்டிருக்கிறது. இவை மிகப் பெரும் பணக்காரர்கள் கொழிக்கவே வழிசெய்தன.
இன்னொருபுறம் கடுமையான தொழிலாளர் துறைச் சட்டங்களின் விளைவாகத் தொழிற்சங்கங்கள் அமைப்பதும் பெரும் சிக்கலானதாகியிருக்கிறது. பெருமுதலாளிகளின் அதிகாரத்தை எதிர்கொள்வதற்கான அமைப்புகள் அருகிவருகின்றன. நிதிச்சந்தைமீதான அனைத்துக் கட்டுப்பாடுகளும் முற்றுமுழுவதாக நீக்கப்பட்டுவிட்ட நிலையில், நிர்வாகத் துறையினர், வசதிபடைத்த முதலீட்டாளர்கள் போன்றோர் தங்குதடையற்ற அளவில் லாபமடைகின்றனர். பாவப்பட்ட நடுத்தர வர்க்கத்தினரும் வீட்டுக் கடன் பெறுவோரும் ஓய்வூதியர்களும்தாம் நிர்க்கதியாய் நிற்கின்றனர். நிறுவனங்கள் திவாலானாலும் தலைமை நிர்வாகிகள் வருவாயில் தங்கள் பங்காக எடுக்ககொள்ளும் தொகை நமக்கு மலைப்பூட்டுகிறது.
ஆனால் உலகமயமாதலைத் தீவிரமாக ஆதரிப்பவர்கள், சந்தைப் பொருளாதாரத்தில் இத்தகைய நிகழ்வுகள் இயல்பானவை எனவும் இறுதியில் நன்மை பயக்குமெனவும் எப்படியும் இவற்றைத் தடுத்து நிறுத்த முடியாது எனவும் சொல்கிறார்கள்.
உலகமயமாதல் மக்கள் நலன்களுக்கு எதிரானது எனக் கருதுபவர்களோ வருவாய் சரிவரப் பங்கிடப்படாமல் ஏற்றத்தாழ்வு பெருகுவதை, குறிப்பாக மிக அதிகம் படித்த, தேர்ச்சிபெற்ற பிரிவினருக்கான வருவாய் அதிகரிப்பதையும் சாதாரணத் தொழிலாளர்கள் போதிய வருவாயின்றிப் பரிதவிப்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஆனால் இருதரப்பினருமே ஏற்றத்தாழ்வு தொடர்ந்து அதிகரிப்பதில் அரசின், அரசியல்வாதிகளின் பங்கென்ன என்பதை விவாதிப்பதில்லை.
ஹாக்கர், பியர்சன் தங்கள் புத்தகத்தில் அதைத்தான் செய்திருக்கிறார்கள். 1970களின் பிற்பகுதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட கொள்கை முடிவுகள் அனைத்துமே பணக்காரர்களின் நலனுக்கானவை என்பது அவர்களது வாதம். அமெரிக்கக் காங்கரஸ் உயர்வருவாய்ப் பிரிவினர்மீதான வரியைத் தொடர்ந்து குறைத்துவந்திருக்கிறது. முதலீடுகள், பங்கு மார்க்கெட்டின் விளைவாய்க் கிடைக்கும் லாபத்தின் மீது விதிக்கப்படும் வரியும் தளர்த்தப்பட்டிருக்கிறது. இவை மிகப் பெரும் பணக்காரர்கள் கொழிக்கவே வழிசெய்தன.
இன்னொருபுறம் கடுமையான தொழிலாளர் துறைச் சட்டங்களின் விளைவாகத் தொழிற்சங்கங்கள் அமைப்பதும் பெரும் சிக்கலானதாகியிருக்கிறது. பெருமுதலாளிகளின் அதிகாரத்தை எதிர்கொள்வதற்கான அமைப்புகள் அருகிவருகின்றன. நிதிச்சந்தைமீதான அனைத்துக் கட்டுப்பாடுகளும் முற்றுமுழுவதாக நீக்கப்பட்டுவிட்ட நிலையில், நிர்வாகத் துறையினர், வசதிபடைத்த முதலீட்டாளர்கள் போன்றோர் தங்குதடையற்ற அளவில் லாபமடைகின்றனர். பாவப்பட்ட நடுத்தர வர்க்கத்தினரும் வீட்டுக் கடன் பெறுவோரும் ஓய்வூதியர்களும்தாம் நிர்க்கதியாய் நிற்கின்றனர். நிறுவனங்கள் திவாலானாலும் தலைமை நிர்வாகிகள் வருவாயில் தங்கள் பங்காக எடுக்ககொள்ளும் தொகை நமக்கு மலைப்பூட்டுகிறது.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: வெல்பவரே அனைத்தையும் அள்ளிச் செல்லும் அரசியல்
இந்தப் போக்கு பல தினசரிகளிலிருந்தும் ஊக்குவிக்கப்பட்டிருக்கிறது. சிலநேரங்களில் காங்கிரசும் செனட்டும் அமைந்திருக்கும் கேபிட்டால் ஹில்லிலிருந்து ரீகன், ஜார்ஜ் புஷ் ஆகியோர் குடியரசுத் தலைவர்களாக இருந்தபோது ஏகப்பட்ட வரிச்சலுகைகள், கிளாள்-ஸ்டீகால் சட்டம் 1999இல் விலக்கிக்கொள்ளப்பட்டது ஆகியவற்றின் விளைவாக வங்கிகளும், நிதிநிறுவனங்களும் தனித்தனியே, தத்தம் துறைகளில் செயல்பட வேண்டும் என்ற அணுகுமுறை மாறி வங்கிகளும் நிதிநிறுவனங்களை நடத்தலாம் என்னும் நிலை ஏற்பட்டதால் சிட்டி குரூப் போன்ற பிரம்மாண்டக் குழுமங்கள் உருவாயின. இத்தகைய முயற்சிகளுக்கு ஜனநாயகக் கட்சியினர், குடியரசுக் கட்சியினர் ஆகிய இருதரப்பினரும் ஆதரவளித்தனர்.
அமெரிக்கக் காங்கிரசில் வீட்டோ எனப்படும் நிராகரிக்கும் அதிகாரம், மணிக்கனக்கில் பேசியே ஒரு சட்டவரைவைக் கொன்றுவிடக்கூடிய ஃபிலிபஸ்டர் முறை ஆகியவற்றைக் கொண்டு பல்வேறு முயற்சிகளுக்கு முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன, தோற்கடிக்கப்படுகின்றன. சீராக முறைப்படுத்தப்பட்ட மற்ற நாடாளுமன்ற அமைப்புகளில் இதைப் போன்ற அமைப்புகளில் இதைப் போன்ற உள்ளடி வேலைகளைச் செய்ய முடியாது.
ஓர் இலக்கை நோக்கிக் கொள்கை வகுப்பார்கள். மாறிவரும் சூழலில் அக்கொள்கை அந்த இலக்கை எட்ட முடியாமல் போய்விடும் விலை உருவாகும். ஒரு கட்டத்தில் எந்த நோக்கத்திற்காக வகுக்கப்பட்டதோ அந்த நோக்கத்தையே முறியடிப்பதாகக்கூட அக்கொள்கை அமைந்துவிடக் கூடும். இப்படியெல்லாம் நடப்பதை எவரும் உணர்வதில்லை.
எடுத்துக்காட்டாக 1981 வரை பணவீக்கத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளும் அட்டவணை உருவாக்கப்படவில்லை. அப்படிப்பட்ட சூழலில் சம்பள உயர்வு காரணமாக அதிகமாக வரிகட்டும் நிலை ஏற்பட்டது. பணவீக்கம் சம்பள உயர்வைப் பொருளற்ற தாக்கிவிடுகிறது என்னும் புரிதல் இல்லாமல் இருந்தது.
இன்னொருபுறம் ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கக்கூடிய வழிகளைப் புறக்கணித்துவிட்டுக் காங்கிரஸ் உறுப்பினர்கள் மேல்தட்டு வகுப்பினருக்கு, பெரும் நிறுவன நிர்வாகிகளுக்கு வசதியாகவும் சட்டங்கள் கொண்டுவருவார்கள். ஸ்டாக் ஆப்ஷன் எனப்படும் முறையின் விளைவாக, நிறுவனம் நொடித்துப் போனாலும் நிர்வாகிகள் முடிந்தவரை சுருட்டிக்கொள்ள முடிகிறது. கீழ்மட்ட ஊழியர்கள்தாம் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக வேலையை இழந்து நிர்க்கதியாய் இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல நிறுவனத்தில் விழும்போது, அவர்களது ஓய்வூதிய முதலீடுகளும் செல்லாதவையாகிவிடுகின்றன.
1990களில் நிதிக்கணக்கு முறைகளை நெறிப்படுத்தும் வாரியம் இத்தகைய ஆபத்துகள் எழக்கூடும் என அஞ்சி அவற்றைத் தடுக்கப் புதிய விதிகளை வகுக்க முற்பட்டது. ஆனால் பெரும் நிறுவனங்கள் அரசியல்வாதிகளைக் கைக்குள் போட்டுக்கொண்டு அத்தகைய முயற்சிகளை வெற்றிகரமாக முறியடித்தன.
அதேபோன்று தொழிலாளர் நலச் சட்டங்களும் மாறிவரும் காலச்சூழலுக்கு ஏற்றாற்போல் மாற்றியமைக்கப்படவில்லை. தொழிலாளர்களுக்கு ஆதரவாக, அவர்கள் தொழிற்சங்கம் அமைக்க, முதலாளிகளை எதிர்கொள்ள வகைசெய்யும் வகைசெய்யும் எவ்விதச் சட்டமும் இயற்றப்படவில்லை. சரியாகச் சொல்ல வேண்டுமானால் 21ஆம் நூற்றாண்டுப் பொருளாதாரத்தை நிர்வகிக்க இன்னமும் 1940களில் உருவாக்கப்பட்ட விதிகளையே அமெரிக்கா நம்பியிருக்கிறது. நிறுவனங்களை கொழிக்கவைத்து நடுத்தர வர்க்கத்தினருக்கு இருக்கும் பாதுகாப்பை ஒட்டுமொத்தமாக அழித்துவிடும் பணியைத்தான் இன்று குடியரசுக் கட்சியினர் செய்துவருகின்றனர்.
ஆக, சந்தைப் பொருளாதாரத்தில் இயல்பான நிகழ்வாக அல்ல, தொடர்ந்து 40 ஆண்டுகளாக அரசியல்ரீதியாக எடுக்கப்பட்ட முடிவுகளின் காரணமாகவே இவ்வாறு ஏற்றத்தாழ்வுகள் கூர்மைப்படுத்தப்படுகின்றன என்பது தெளிவாகின்றது. சந்தைப் பொருளாதாரம் மட்டுமல்ல ஒட்டுமொத்த அமெரிக்க அரசியல் அமைப்பே வெல்பவர் அனைத்தையும் அள்ளிச் செல்வதற்கு வழிசெய்கிறது என்பதை நூலாசிரியர்கள் பல்வேறு புள்ளிவிவரங்களுடன் நிரூபிக்கிறார்கள்.
அமெரிக்கக் காங்கிரசில் வீட்டோ எனப்படும் நிராகரிக்கும் அதிகாரம், மணிக்கனக்கில் பேசியே ஒரு சட்டவரைவைக் கொன்றுவிடக்கூடிய ஃபிலிபஸ்டர் முறை ஆகியவற்றைக் கொண்டு பல்வேறு முயற்சிகளுக்கு முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன, தோற்கடிக்கப்படுகின்றன. சீராக முறைப்படுத்தப்பட்ட மற்ற நாடாளுமன்ற அமைப்புகளில் இதைப் போன்ற அமைப்புகளில் இதைப் போன்ற உள்ளடி வேலைகளைச் செய்ய முடியாது.
ஓர் இலக்கை நோக்கிக் கொள்கை வகுப்பார்கள். மாறிவரும் சூழலில் அக்கொள்கை அந்த இலக்கை எட்ட முடியாமல் போய்விடும் விலை உருவாகும். ஒரு கட்டத்தில் எந்த நோக்கத்திற்காக வகுக்கப்பட்டதோ அந்த நோக்கத்தையே முறியடிப்பதாகக்கூட அக்கொள்கை அமைந்துவிடக் கூடும். இப்படியெல்லாம் நடப்பதை எவரும் உணர்வதில்லை.
எடுத்துக்காட்டாக 1981 வரை பணவீக்கத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளும் அட்டவணை உருவாக்கப்படவில்லை. அப்படிப்பட்ட சூழலில் சம்பள உயர்வு காரணமாக அதிகமாக வரிகட்டும் நிலை ஏற்பட்டது. பணவீக்கம் சம்பள உயர்வைப் பொருளற்ற தாக்கிவிடுகிறது என்னும் புரிதல் இல்லாமல் இருந்தது.
இன்னொருபுறம் ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கக்கூடிய வழிகளைப் புறக்கணித்துவிட்டுக் காங்கிரஸ் உறுப்பினர்கள் மேல்தட்டு வகுப்பினருக்கு, பெரும் நிறுவன நிர்வாகிகளுக்கு வசதியாகவும் சட்டங்கள் கொண்டுவருவார்கள். ஸ்டாக் ஆப்ஷன் எனப்படும் முறையின் விளைவாக, நிறுவனம் நொடித்துப் போனாலும் நிர்வாகிகள் முடிந்தவரை சுருட்டிக்கொள்ள முடிகிறது. கீழ்மட்ட ஊழியர்கள்தாம் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக வேலையை இழந்து நிர்க்கதியாய் இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல நிறுவனத்தில் விழும்போது, அவர்களது ஓய்வூதிய முதலீடுகளும் செல்லாதவையாகிவிடுகின்றன.
1990களில் நிதிக்கணக்கு முறைகளை நெறிப்படுத்தும் வாரியம் இத்தகைய ஆபத்துகள் எழக்கூடும் என அஞ்சி அவற்றைத் தடுக்கப் புதிய விதிகளை வகுக்க முற்பட்டது. ஆனால் பெரும் நிறுவனங்கள் அரசியல்வாதிகளைக் கைக்குள் போட்டுக்கொண்டு அத்தகைய முயற்சிகளை வெற்றிகரமாக முறியடித்தன.
அதேபோன்று தொழிலாளர் நலச் சட்டங்களும் மாறிவரும் காலச்சூழலுக்கு ஏற்றாற்போல் மாற்றியமைக்கப்படவில்லை. தொழிலாளர்களுக்கு ஆதரவாக, அவர்கள் தொழிற்சங்கம் அமைக்க, முதலாளிகளை எதிர்கொள்ள வகைசெய்யும் வகைசெய்யும் எவ்விதச் சட்டமும் இயற்றப்படவில்லை. சரியாகச் சொல்ல வேண்டுமானால் 21ஆம் நூற்றாண்டுப் பொருளாதாரத்தை நிர்வகிக்க இன்னமும் 1940களில் உருவாக்கப்பட்ட விதிகளையே அமெரிக்கா நம்பியிருக்கிறது. நிறுவனங்களை கொழிக்கவைத்து நடுத்தர வர்க்கத்தினருக்கு இருக்கும் பாதுகாப்பை ஒட்டுமொத்தமாக அழித்துவிடும் பணியைத்தான் இன்று குடியரசுக் கட்சியினர் செய்துவருகின்றனர்.
ஆக, சந்தைப் பொருளாதாரத்தில் இயல்பான நிகழ்வாக அல்ல, தொடர்ந்து 40 ஆண்டுகளாக அரசியல்ரீதியாக எடுக்கப்பட்ட முடிவுகளின் காரணமாகவே இவ்வாறு ஏற்றத்தாழ்வுகள் கூர்மைப்படுத்தப்படுகின்றன என்பது தெளிவாகின்றது. சந்தைப் பொருளாதாரம் மட்டுமல்ல ஒட்டுமொத்த அமெரிக்க அரசியல் அமைப்பே வெல்பவர் அனைத்தையும் அள்ளிச் செல்வதற்கு வழிசெய்கிறது என்பதை நூலாசிரியர்கள் பல்வேறு புள்ளிவிவரங்களுடன் நிரூபிக்கிறார்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: வெல்பவரே அனைத்தையும் அள்ளிச் செல்லும் அரசியல்
பெரும்பான்மையினர் ஆதரவு பெற்ற ஆட்சி என்னும் பிரமை இருந்தாலும் அரசின் கொள்கைகளைத் தங்களுக்குச் சாதகமாக உருவாக்குவதில் பல்வேறு குழுக்கள் தமக்குள் மோதிக்கொள்கின்றன. அவற்றில் வெற்றிபெறுவோரே அரசின் கொள்கைகளைத் தீர்மானிக்கிறார்கள். இப்போட்டியில் நடுத்தர வர்க்கத்தினர் முற்றிலுமாக நசுக்கப்படுகின்றனர்.
இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு கம்யூனிசம், பாசிசம் ஆகிய இரு பெரும் ஜனநாயக விரோத அமைப்புகளுக்கு மாற்றாக அமெரிக்க ஜனநாயகம் பார்க்கப்பட்டது. ஏறத்தாழ சமபலம் படைத்த பல்வேறு தரப்பினருக்கிடையே நடக்கும் போட்டி, பிறகு அவர்களுக்கிடையே உருவாகும் ஒப்பந்தம், இதுவே அந்த ஜனநாயகத்தின் சிறப்பு அம்சமாகக் கருதப்பட்டது. முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையேயான போராட்டத்திற்கு மாற்றாக ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செயலாற்றுவதன் விளைவாக மெல்ல மெல்ல மக்களின் வளம் பெருகும். பாதுகாப்பும் கூடும் எனக் கூறப்பட்டது.
ஆனால் வியட்நாம் போருக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள், கறுப்பினத்தவரின் உரிமைகளுக்கான போராட்டங்கள் தவிர பண்பாட்டுத்தளத்தில் எழுந்த பல்வேறு கலகக் குரல்கள் ஆகியன பலதரப்பினரும் இணக்கமாக வாழக்கூடிய நாடு அமெரிக்கா என்பது மிகையான மதிப்பீடே என்பதற்கான சான்றுகளாக இருந்தன.
குழுக்களாக இணைந்த செயல்பட்டுச் சாதித்துவிட முடியும் என்பதெல்லாமே பகற்கனவாக முடிந்தது. மாறாகத் தனிநபர்கள் தத்தம் நலன்களுக்காகப் போராடிக் கொள்ள வேண்டியதுதான் என்று சொல்ல ஆரம்பித்தனர். அவ்வாறு ஒவ்வொருவரும் தனித்தனியே குரல்கொடுத்தலும்கூட அக்குரல்களைப் பொறுத்தே நாட்டின் கொள்கைகள் அமைகின்றன என்றும் கூறப்பட்டது. தேர்தல்களின் மூலம் பெருமான்மையினரின் வாக்குகளைப் பெறும் கட்சியே அரசமைக்கிறது என்பது உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஏன் பெரும்பாலான மக்களின் நலன் புறக்கணிக்கப்பட்டுப் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகும் வகையில் கொள்கைகள் வகுக்கப்படுகின்றன?
அமெரிக்காவின் பன்முகத் தன்மை குறித்துப் புளகாங்கிதம் அடைவோர் அதன் அரசியல் கட்சிகளெல்லாம் எப்படி ஒரு குறுகிய வட்டத்தின் நலனை மேம்படுத்துவதாக அமைகின்றன என்பதைக் கருத்தில் கொள்வதில்லை. 1960இல் ஸ்காட்ஷ்னெய்டர் கூறியதுபோல் பலதரப்பினரும் இணைந்து எழுப்பும் ஓசைகளில் மேல்தட்டு வர்க்கத்தினரின் குரலே ஓங்கி ஒலிக்கிறது.
1960களில்தாம் தொழிலாளர்களின் உரிமைகள் உறுதிசெய்யப்பட்டன, சிறுபான்மையினரின் உரிமைகளும் குடிமக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட்டன, நல வாழ்வுக் காப்பீட்டுத் திட்டங்களும் கொண்டுவரப்பட்டன. (அத்தகைய சூழலிலும் ஷ்னெய்டர் அப்படிக் குறிப்பிடுகிறார் என்பதை இங்கே நோக்க வேண்டும்.)
அந்தப் போக்கை, தங்கள் செல்வாக்கு மெல்ல மெல்லச் சரிந்து போவதை முதலாளிகளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கடுமையாக எதிர்த்துப் போராடினர். பழமைவாதிகளின் எதிர்ப்புரட்சி தொடங்கியது. கருத்தியல், அரசியல், அமைப்பு ஆகியவற்றின் வழியாக முதலாளிகள் தங்கள் பிரச்சாரத்தை நடத்தினர். பல தரப்பினரின் தேவைகளை உணர்ந்து பொதுநீதி உருவாக்குவதை முதலாளிகளின் அரவணைப்பில் இருந்த அரசியல்வாதிகள் தீவீரமாக எதிர்த்தனர். அனைவருமே முன்னேறுவதற்கு வழிசெய்யும் திட்டங்களைத் தகர்ப்பதற்கான முயற்சிகளில் பழமைவாதிகள் இறங்கினர்.
1970களில் உலக அரங்கில் அமெரிக்கப் பொருளாதாரத்தின் வீச்சு குறையத் தொடங்கியது. ஃப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட் உருவாக்கிய புதிய திட்டமான “நியூடீல்’ ஓரளவுக்குமேல் பயன் தராது என்பது புலப்படத் தொடங்கிய நேரம் அது.
ஓய்வூதியமோ அல்லது நலவாழ்வுக் காப்பீடோ தனியார் துறைவசமே இருந்தது. பொருளாதாரம் செழித்து, முன்னேற்றத்தின் பயனைப் பலரும் அனுபவித்துக் கொண்டிருந்த நிலையில், அமெரிக்கா உலகையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்தபோது அத்தகைய சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் தனியார் வசம் இருந்ததில் தவறேதும் இல்லை.
ஆனால் உலகமயமாக்கத்தின் பின்னணியில், அமெரிக்காவில் பல்வேறு தொழிற்சாலைகள் மூடப்படத் தொட்ங்கிய வேளையிலும் பாதுகாப்புத் திட்டங்கள் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்த தனியார் வசம் இருந்ததால் தொழிலாளர்களுக்குச் சமூகப் பொருளாதாரப் பாதுகாப்பு கிடைக்கவில்லை. அவர்கள் பெரும் அவதிக்குள்ளாயினர். அப்படிப்பட்ட நேரத்தில் அவர்களுக்குக் கைகொடுக்க அரசும் முன்வரவில்லை. பெரும் சீர்குலைவு தொடங்கியதை எவருமே கருத்தில் கொள்ளவில்லை. இதைத்தான் ஹாக்கரும் பியர்சனும் எவரும் உணராமலே அரசுக் கொள்கை மக்களுக்கெதிராகத் திரும்பும் முறை என்கிறார்கள்.
மக்கள் பரிதவித்த நேரத்தில் பழமைவாதிகள் ரூஸ்வெல்ட்டின் “நியூடீல்’ கைவிடப்பட வேண்டும், நிதிச்சந்தைமீதான கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட வேண்டும், மேல்தட்டு வர்க்கத்தினர்மீதான அதிக வரிகள் நீக்கப்பட வேண்டும், குடிமக்கள் உரிமைகள் அகற்றப்படவேண்டும் என்றெல்லாம் வலியுறுத்தத் தொடங்கினர். அதில் வெற்றிபெறவும் தொடங்கினர்.
இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு கம்யூனிசம், பாசிசம் ஆகிய இரு பெரும் ஜனநாயக விரோத அமைப்புகளுக்கு மாற்றாக அமெரிக்க ஜனநாயகம் பார்க்கப்பட்டது. ஏறத்தாழ சமபலம் படைத்த பல்வேறு தரப்பினருக்கிடையே நடக்கும் போட்டி, பிறகு அவர்களுக்கிடையே உருவாகும் ஒப்பந்தம், இதுவே அந்த ஜனநாயகத்தின் சிறப்பு அம்சமாகக் கருதப்பட்டது. முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையேயான போராட்டத்திற்கு மாற்றாக ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செயலாற்றுவதன் விளைவாக மெல்ல மெல்ல மக்களின் வளம் பெருகும். பாதுகாப்பும் கூடும் எனக் கூறப்பட்டது.
ஆனால் வியட்நாம் போருக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள், கறுப்பினத்தவரின் உரிமைகளுக்கான போராட்டங்கள் தவிர பண்பாட்டுத்தளத்தில் எழுந்த பல்வேறு கலகக் குரல்கள் ஆகியன பலதரப்பினரும் இணக்கமாக வாழக்கூடிய நாடு அமெரிக்கா என்பது மிகையான மதிப்பீடே என்பதற்கான சான்றுகளாக இருந்தன.
குழுக்களாக இணைந்த செயல்பட்டுச் சாதித்துவிட முடியும் என்பதெல்லாமே பகற்கனவாக முடிந்தது. மாறாகத் தனிநபர்கள் தத்தம் நலன்களுக்காகப் போராடிக் கொள்ள வேண்டியதுதான் என்று சொல்ல ஆரம்பித்தனர். அவ்வாறு ஒவ்வொருவரும் தனித்தனியே குரல்கொடுத்தலும்கூட அக்குரல்களைப் பொறுத்தே நாட்டின் கொள்கைகள் அமைகின்றன என்றும் கூறப்பட்டது. தேர்தல்களின் மூலம் பெருமான்மையினரின் வாக்குகளைப் பெறும் கட்சியே அரசமைக்கிறது என்பது உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஏன் பெரும்பாலான மக்களின் நலன் புறக்கணிக்கப்பட்டுப் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகும் வகையில் கொள்கைகள் வகுக்கப்படுகின்றன?
அமெரிக்காவின் பன்முகத் தன்மை குறித்துப் புளகாங்கிதம் அடைவோர் அதன் அரசியல் கட்சிகளெல்லாம் எப்படி ஒரு குறுகிய வட்டத்தின் நலனை மேம்படுத்துவதாக அமைகின்றன என்பதைக் கருத்தில் கொள்வதில்லை. 1960இல் ஸ்காட்ஷ்னெய்டர் கூறியதுபோல் பலதரப்பினரும் இணைந்து எழுப்பும் ஓசைகளில் மேல்தட்டு வர்க்கத்தினரின் குரலே ஓங்கி ஒலிக்கிறது.
1960களில்தாம் தொழிலாளர்களின் உரிமைகள் உறுதிசெய்யப்பட்டன, சிறுபான்மையினரின் உரிமைகளும் குடிமக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட்டன, நல வாழ்வுக் காப்பீட்டுத் திட்டங்களும் கொண்டுவரப்பட்டன. (அத்தகைய சூழலிலும் ஷ்னெய்டர் அப்படிக் குறிப்பிடுகிறார் என்பதை இங்கே நோக்க வேண்டும்.)
அந்தப் போக்கை, தங்கள் செல்வாக்கு மெல்ல மெல்லச் சரிந்து போவதை முதலாளிகளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கடுமையாக எதிர்த்துப் போராடினர். பழமைவாதிகளின் எதிர்ப்புரட்சி தொடங்கியது. கருத்தியல், அரசியல், அமைப்பு ஆகியவற்றின் வழியாக முதலாளிகள் தங்கள் பிரச்சாரத்தை நடத்தினர். பல தரப்பினரின் தேவைகளை உணர்ந்து பொதுநீதி உருவாக்குவதை முதலாளிகளின் அரவணைப்பில் இருந்த அரசியல்வாதிகள் தீவீரமாக எதிர்த்தனர். அனைவருமே முன்னேறுவதற்கு வழிசெய்யும் திட்டங்களைத் தகர்ப்பதற்கான முயற்சிகளில் பழமைவாதிகள் இறங்கினர்.
1970களில் உலக அரங்கில் அமெரிக்கப் பொருளாதாரத்தின் வீச்சு குறையத் தொடங்கியது. ஃப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட் உருவாக்கிய புதிய திட்டமான “நியூடீல்’ ஓரளவுக்குமேல் பயன் தராது என்பது புலப்படத் தொடங்கிய நேரம் அது.
ஓய்வூதியமோ அல்லது நலவாழ்வுக் காப்பீடோ தனியார் துறைவசமே இருந்தது. பொருளாதாரம் செழித்து, முன்னேற்றத்தின் பயனைப் பலரும் அனுபவித்துக் கொண்டிருந்த நிலையில், அமெரிக்கா உலகையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்தபோது அத்தகைய சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் தனியார் வசம் இருந்ததில் தவறேதும் இல்லை.
ஆனால் உலகமயமாக்கத்தின் பின்னணியில், அமெரிக்காவில் பல்வேறு தொழிற்சாலைகள் மூடப்படத் தொட்ங்கிய வேளையிலும் பாதுகாப்புத் திட்டங்கள் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்த தனியார் வசம் இருந்ததால் தொழிலாளர்களுக்குச் சமூகப் பொருளாதாரப் பாதுகாப்பு கிடைக்கவில்லை. அவர்கள் பெரும் அவதிக்குள்ளாயினர். அப்படிப்பட்ட நேரத்தில் அவர்களுக்குக் கைகொடுக்க அரசும் முன்வரவில்லை. பெரும் சீர்குலைவு தொடங்கியதை எவருமே கருத்தில் கொள்ளவில்லை. இதைத்தான் ஹாக்கரும் பியர்சனும் எவரும் உணராமலே அரசுக் கொள்கை மக்களுக்கெதிராகத் திரும்பும் முறை என்கிறார்கள்.
மக்கள் பரிதவித்த நேரத்தில் பழமைவாதிகள் ரூஸ்வெல்ட்டின் “நியூடீல்’ கைவிடப்பட வேண்டும், நிதிச்சந்தைமீதான கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட வேண்டும், மேல்தட்டு வர்க்கத்தினர்மீதான அதிக வரிகள் நீக்கப்பட வேண்டும், குடிமக்கள் உரிமைகள் அகற்றப்படவேண்டும் என்றெல்லாம் வலியுறுத்தத் தொடங்கினர். அதில் வெற்றிபெறவும் தொடங்கினர்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: வெல்பவரே அனைத்தையும் அள்ளிச் செல்லும் அரசியல்
ஜிம்மி கார்ட்டர் குடியரசுத் தலைவராக இருந்த காலம் தொட்டு முதலாளிகளின் நலனைப் பாதிக்கும் கொள்கைகள் தொடர்ந்து முறியடிக்கப்பட்டு வந்திருக்கின்றன.
பழமைவாதிகளின், பெருநிறுவனங்களின் வெற்றிகளையும் நடுத்தர வர்க்கத்தினரின் வீழ்ச்சியையும் விவரிக்கும் இந்நூல் அரசு நிர்வாகம் குறித்துப் பரந்துபட்ட மக்களிடையே நிலவிவரும் அதிருப்தியைக் குறைத்து மதிப்பிடுகின்றது எனலாம்.
1960களிலும் 70களிலும் வியட்நாம் யுத்தம், நிக்சனின் வாட்டர்கேட் ஊழல், கறுப்பர்களின் கலகம் எனப் பல்வேறு நிகழ்வுகளின் பின்னணியில் அமெரிக்கர்கள் அரசின் மீது நம்பிக்கையை இழக்கத் தொடங்கினர். வெள்ளை இனத்தவருக்கும் கறுப்பினத்தவருக்கும் இடையே பிளவுகள் மேலும் ஆழமாயின.
இதன் ஒரு பரிமாணமாகக் குடியரசுக் கட்சியினர் வசதிபடைத்தவர்கள், வெள்ளையர் ஆகிய இரு சாராரின் பிரசிநிதிகளாகத் தங்களை வளர்த்தெடுத்துக்கொண்டனர். லிண்டன் ஜான்சனுக்குப் பிறகு குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் எவரும் வெள்ளை இனத்தவர் மத்தியில் பெரும்பான்மை வாக்குகளைப் பெறவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இன்று ஒபாமா குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் இனங்களுக்கிடையேயான ஏற்றத்தாழ்வுகள் அதிகமாகவே இருக்கின்றன; முரண்பாடுகள் கூர்மையடைந்திருக்கின்றன; கசப்புணர்வு கூடியிருக்கிறது. இன்னொருபுறம் நடுத்தர வர்க்கத்தினரைக் கைகழுவிவிட்ட அரசின் மீதும் ஆத்திரம் பெருகியிருக்கிறது. இத்தகைய உணர்வுகளைத்தான் “டீபார்ட்டி’ இயக்கத்தினர் வெளிப்படுத்துகின்றனர்.
அத்தகைய நிலையைப் பயன்படுத்திப் பழமைவாதிகள் தங்களுக்குச் சாதகமான கொள்கைகளுக்காகப் பிரச்சாரம் செய்கிறார்கள், அவற்றில் பெறுகிறார்கள். ஆனால் நடுத்தர வர்க்கத்தினரும் முற்போக்குக் கருத்துடையவர்களும் பின்தங்கிவிட்டனர். விளைவு வெல்பவர் எல்லாவற்றையும் அள்ளிச் செல்லும் இன்றைய நிலை.
மற்ற பல விமர்சகர்களைப் போன்றே ஹாக்கரும் பாட்டர்சனும் பிரச்சனை என்ன என்பதை மிகத் தெளிவாக ஆராய்கிறார்கள். ஆனால் என்ன தீர்வு என்று கூறவில்லை. நடுத்தர வர்க்கத்தினரும் தொழிலாளர்களும் அரசியல் கட்டமைப்பைச் சீரமைக்க முயல வேண்டும் என்கிறார்கள். எப்படிச் சீரமைப்பது என்பது குறித்து அவர்கள் ஏதும் சொல்லவில்லை. அது அவ்வளவு எளிதில் நடக்கப் போவதாகவும் தெரியவில்லை.
சாத்தியமா இல்லையா என்பதற்கெல்லாம் அப்பால், வெல்பவரே அனைத்தையும் சுருட்டிக்கொள்ளும் நிலைமை மாறினால்தான் அமெரிக்கச் சமூகம் தற்போது தன்னைப் பீடித்திருக்கும் கொடுமையான நோயிலிருந்து மீண்டு ஆரோக்கியமான நிலைக்குத் திரும்ப முடியும்.
நன்றி- உங்களுக்காக.
பழமைவாதிகளின், பெருநிறுவனங்களின் வெற்றிகளையும் நடுத்தர வர்க்கத்தினரின் வீழ்ச்சியையும் விவரிக்கும் இந்நூல் அரசு நிர்வாகம் குறித்துப் பரந்துபட்ட மக்களிடையே நிலவிவரும் அதிருப்தியைக் குறைத்து மதிப்பிடுகின்றது எனலாம்.
1960களிலும் 70களிலும் வியட்நாம் யுத்தம், நிக்சனின் வாட்டர்கேட் ஊழல், கறுப்பர்களின் கலகம் எனப் பல்வேறு நிகழ்வுகளின் பின்னணியில் அமெரிக்கர்கள் அரசின் மீது நம்பிக்கையை இழக்கத் தொடங்கினர். வெள்ளை இனத்தவருக்கும் கறுப்பினத்தவருக்கும் இடையே பிளவுகள் மேலும் ஆழமாயின.
இதன் ஒரு பரிமாணமாகக் குடியரசுக் கட்சியினர் வசதிபடைத்தவர்கள், வெள்ளையர் ஆகிய இரு சாராரின் பிரசிநிதிகளாகத் தங்களை வளர்த்தெடுத்துக்கொண்டனர். லிண்டன் ஜான்சனுக்குப் பிறகு குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் எவரும் வெள்ளை இனத்தவர் மத்தியில் பெரும்பான்மை வாக்குகளைப் பெறவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இன்று ஒபாமா குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் இனங்களுக்கிடையேயான ஏற்றத்தாழ்வுகள் அதிகமாகவே இருக்கின்றன; முரண்பாடுகள் கூர்மையடைந்திருக்கின்றன; கசப்புணர்வு கூடியிருக்கிறது. இன்னொருபுறம் நடுத்தர வர்க்கத்தினரைக் கைகழுவிவிட்ட அரசின் மீதும் ஆத்திரம் பெருகியிருக்கிறது. இத்தகைய உணர்வுகளைத்தான் “டீபார்ட்டி’ இயக்கத்தினர் வெளிப்படுத்துகின்றனர்.
அத்தகைய நிலையைப் பயன்படுத்திப் பழமைவாதிகள் தங்களுக்குச் சாதகமான கொள்கைகளுக்காகப் பிரச்சாரம் செய்கிறார்கள், அவற்றில் பெறுகிறார்கள். ஆனால் நடுத்தர வர்க்கத்தினரும் முற்போக்குக் கருத்துடையவர்களும் பின்தங்கிவிட்டனர். விளைவு வெல்பவர் எல்லாவற்றையும் அள்ளிச் செல்லும் இன்றைய நிலை.
மற்ற பல விமர்சகர்களைப் போன்றே ஹாக்கரும் பாட்டர்சனும் பிரச்சனை என்ன என்பதை மிகத் தெளிவாக ஆராய்கிறார்கள். ஆனால் என்ன தீர்வு என்று கூறவில்லை. நடுத்தர வர்க்கத்தினரும் தொழிலாளர்களும் அரசியல் கட்டமைப்பைச் சீரமைக்க முயல வேண்டும் என்கிறார்கள். எப்படிச் சீரமைப்பது என்பது குறித்து அவர்கள் ஏதும் சொல்லவில்லை. அது அவ்வளவு எளிதில் நடக்கப் போவதாகவும் தெரியவில்லை.
சாத்தியமா இல்லையா என்பதற்கெல்லாம் அப்பால், வெல்பவரே அனைத்தையும் சுருட்டிக்கொள்ளும் நிலைமை மாறினால்தான் அமெரிக்கச் சமூகம் தற்போது தன்னைப் பீடித்திருக்கும் கொடுமையான நோயிலிருந்து மீண்டு ஆரோக்கியமான நிலைக்குத் திரும்ப முடியும்.
நன்றி- உங்களுக்காக.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» உயிரினங்கள் அனைத்தையும் நாம் சிநேகிப்போம் !!
» அனைத்தையும் ஒரு கடவுளால் எப்படி கண்காணிக்க முடியும்?
» கணணி பற்றிய தகவல்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் பெற
» கணணி பற்றிய தகவல்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் பெற
» நம் டிவிட்டர் செய்திகள் அனைத்தையும் சேமித்து வைக்க
» அனைத்தையும் ஒரு கடவுளால் எப்படி கண்காணிக்க முடியும்?
» கணணி பற்றிய தகவல்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் பெற
» கணணி பற்றிய தகவல்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் பெற
» நம் டிவிட்டர் செய்திகள் அனைத்தையும் சேமித்து வைக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|