Latest topics
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!by rammalar Today at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
பரத்தமைக் குற்றம்: பெண்களுக்கு மட்டும் உரித்தான ஒன்றா?
Page 1 of 1
பரத்தமைக் குற்றம்: பெண்களுக்கு மட்டும் உரித்தான ஒன்றா?
(இந்தக் கட்டுரை கொழும்பு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட மாணவர்கள் வருடாந்தம் நடாத்தும் கலை நிகழ்ச்சியான ”வஸ்ஸானய” எனும் நிகழ்ச்சியில் வெயியிடப்பட்ட மலரில் பிரசுரிப்பதெற்கென கேட்டுக் கொண்டதற்கிணங்க எழுதப்பட்டது. 1995 ”வஸ்ஸானய” எனும் சிறப்பு மலரில் இது வெளியானது. இக்கட்டுரை பின்னர் ”தினத்தந்தி” (1995-1996இல் சில காலம் மட்டுமே வெளிவந்த திணமணி பத்திரிகையில் மீள் பிரசுரம் செய்யப்பட்டிருந்தது)
”கற்பு நிலையென்று சொல்ல வந்தார்
இரு கட்சிக்கும் அதை பொதுவில் வைப்போம்”...
இது பாரதி கூறிய கூற்று.
”கற்பு” எனும் அம்சம் உண்மையில் பெண்ணிடம் மட்டுமே இருக்கின்ற, இருக்க வேண்டிய ஒன்றாகவே சமூகம் கொள்கிறது. ”கற்பு” நெறியானது இன்றைய சமூகத்தில் உடற் புணர்வையே சுட்டும் ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது. என்ற போதும் இந்த ”கற்பு” நெறியானது பெண் மட்டுமே ஒழுக வேண்டிய ஒன்றாகவும் ஆண் உடற்புணர்வுக்குள்ளானால் ”கற்பு” நெறிக்குள் அடங்காது என்ற கருத்துமே சமூக கருத்தியலாக இருக்கிறது.
இந்த நோக்கிலிருந்து தான் ”பரத்தமை” (விபச்சாரம்) பற்றிய மதிப்பீட்டை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. முதலில் ”பரத்தமை” என்ற பதமே ஆண்ணிலைப்பட்ட கருத்தாகவே தொன்று தொட்டு இருந்து வந்துள்ளது கவனிக்கத்கது.
பரத்தமையில் ஒரு பெண் ஈடுபடுவதற்கான காரணமாக அவளது பாலியல் மேலுணர்வை (அல்லது இச்சையோ) கொள்ள முடியாது அதற்கான சமூக பொருளாதார அரசியற் காரணிகளே பெண்ணானவள் பரத்தமை நிலையினை அடைய காரணமாக இருக்கிறது.
எனவே, நாம் வெறுமனே ஒரு பெண் தனது பாலியற் தேவைக்காகவே பரத்தமையில் ஈடுபடுகிறாள் என்பது போன்ற முடிவுக்கு வருவதானது சமூக கருத்தியல் இருப்பை விளங்கிக் கொள்ளாத முடிவாகும். எனவே மேற்படி விடயத்தை எடுகோலாகக் கொண்டால்: பெண்ணானவள் பரத்தமைக்கு தள்ளப்படுவதற்கு காரணமான குற்றவாளியாக சமூக, பொருளாதார, அரசியல் சூழ்நிலைகளையே கொள்ள வேண்டியுள்ளது. எனவே அவை மாற்றியமைக்கப்படாத வரை இவற்றிற்கான தீர்வும் இல்லை எனும் முடிவுக்குக் கூட வரலாம். அம் ”மாற்றியமைத்தல்” என்பது இயல்பாக ஆகிவிடக் கூடியதல்ல. நிர்ப்பந்தமாகவே தாக்கியெறியப்பட வேண்டியவை. இன்றுள்ள முதன்மைக் கடமையாகக் கூட இதனைக் கொள்ளலாம்.
”பரத்தமை” பற்றிய பெண்களது நியாயப்படுகளில் ஒன்றாக மேற்படி ஒரு காரணத்துடன் இன்னும் இரு காரணங்களையும் குறிப்பிடலாம்.
(1) பரத்தமை என்பது பெண்ணினது சுயநிh;ணய உரிமைக்கு உரித்தான ஒன்று அவளது தொழிலாக அதனைக் மேற்கொள்ள விரும்புகிறாள் என்றாள் அது அவளது தொழிற் சுதந்திரம். பெண்- பரத்தமையை தொழிலாகக் கொண்டு விரும்பிப் போவதில்லை என்பதையும் சமூக நிர்ப்பந்தத்தின் விளைவே அந்நிலையை ஒரு பெண் அடைந்து அதன் பின் தொழிலாக மேற்கொள்ள வேண்டிய சூழலுக்குள்ளாகிறாள் என்பதையும் நினைவிற் கொள்ளல் அவசியம்.
(2) பரத்தமை தொடர்பான சட்ட அமுலாக்க விடயத்தை எடுத்துக் கொண்டால். அங்கு பரத்தமை புhpந்ததற்கான குற்றத்திற்காக பெண்ணே தண்டிக்கப்படுகிறாள்.
”பணம் கொடுத்து பாலியல் புணர்ச்சிக்கு அழைப்பதற்கு ஆண்கள் தயாராக இருக்கும் போது பெண் மட்டும் ஏன் தண்டிக்கப்படுகிறாள்?”
”கற்பு நிலையென்று சொல்ல வந்தார்
இரு கட்சிக்கும் அதை பொதுவில் வைப்போம்”...
இது பாரதி கூறிய கூற்று.
”கற்பு” எனும் அம்சம் உண்மையில் பெண்ணிடம் மட்டுமே இருக்கின்ற, இருக்க வேண்டிய ஒன்றாகவே சமூகம் கொள்கிறது. ”கற்பு” நெறியானது இன்றைய சமூகத்தில் உடற் புணர்வையே சுட்டும் ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது. என்ற போதும் இந்த ”கற்பு” நெறியானது பெண் மட்டுமே ஒழுக வேண்டிய ஒன்றாகவும் ஆண் உடற்புணர்வுக்குள்ளானால் ”கற்பு” நெறிக்குள் அடங்காது என்ற கருத்துமே சமூக கருத்தியலாக இருக்கிறது.
இந்த நோக்கிலிருந்து தான் ”பரத்தமை” (விபச்சாரம்) பற்றிய மதிப்பீட்டை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. முதலில் ”பரத்தமை” என்ற பதமே ஆண்ணிலைப்பட்ட கருத்தாகவே தொன்று தொட்டு இருந்து வந்துள்ளது கவனிக்கத்கது.
பரத்தமையில் ஒரு பெண் ஈடுபடுவதற்கான காரணமாக அவளது பாலியல் மேலுணர்வை (அல்லது இச்சையோ) கொள்ள முடியாது அதற்கான சமூக பொருளாதார அரசியற் காரணிகளே பெண்ணானவள் பரத்தமை நிலையினை அடைய காரணமாக இருக்கிறது.
எனவே, நாம் வெறுமனே ஒரு பெண் தனது பாலியற் தேவைக்காகவே பரத்தமையில் ஈடுபடுகிறாள் என்பது போன்ற முடிவுக்கு வருவதானது சமூக கருத்தியல் இருப்பை விளங்கிக் கொள்ளாத முடிவாகும். எனவே மேற்படி விடயத்தை எடுகோலாகக் கொண்டால்: பெண்ணானவள் பரத்தமைக்கு தள்ளப்படுவதற்கு காரணமான குற்றவாளியாக சமூக, பொருளாதார, அரசியல் சூழ்நிலைகளையே கொள்ள வேண்டியுள்ளது. எனவே அவை மாற்றியமைக்கப்படாத வரை இவற்றிற்கான தீர்வும் இல்லை எனும் முடிவுக்குக் கூட வரலாம். அம் ”மாற்றியமைத்தல்” என்பது இயல்பாக ஆகிவிடக் கூடியதல்ல. நிர்ப்பந்தமாகவே தாக்கியெறியப்பட வேண்டியவை. இன்றுள்ள முதன்மைக் கடமையாகக் கூட இதனைக் கொள்ளலாம்.
”பரத்தமை” பற்றிய பெண்களது நியாயப்படுகளில் ஒன்றாக மேற்படி ஒரு காரணத்துடன் இன்னும் இரு காரணங்களையும் குறிப்பிடலாம்.
(1) பரத்தமை என்பது பெண்ணினது சுயநிh;ணய உரிமைக்கு உரித்தான ஒன்று அவளது தொழிலாக அதனைக் மேற்கொள்ள விரும்புகிறாள் என்றாள் அது அவளது தொழிற் சுதந்திரம். பெண்- பரத்தமையை தொழிலாகக் கொண்டு விரும்பிப் போவதில்லை என்பதையும் சமூக நிர்ப்பந்தத்தின் விளைவே அந்நிலையை ஒரு பெண் அடைந்து அதன் பின் தொழிலாக மேற்கொள்ள வேண்டிய சூழலுக்குள்ளாகிறாள் என்பதையும் நினைவிற் கொள்ளல் அவசியம்.
(2) பரத்தமை தொடர்பான சட்ட அமுலாக்க விடயத்தை எடுத்துக் கொண்டால். அங்கு பரத்தமை புhpந்ததற்கான குற்றத்திற்காக பெண்ணே தண்டிக்கப்படுகிறாள்.
”பணம் கொடுத்து பாலியல் புணர்ச்சிக்கு அழைப்பதற்கு ஆண்கள் தயாராக இருக்கும் போது பெண் மட்டும் ஏன் தண்டிக்கப்படுகிறாள்?”
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பரத்தமைக் குற்றம்: பெண்களுக்கு மட்டும் உரித்தான ஒன்றா?
என்கிறார் பெண்ணிலைவாதிகளில் ஒருவரான சுனிலா அபேசேகர.
உண்மை தான் இக்கேள்வி நியாயமானதே லஞ்சக் குற்றச் சாட்டின் போதெல்லாம் லஞ்சம் வாங்கியவரை மட்டுமல்லாது லஞ்சம் வழங்கியவரையும் சேர்த்து தண்டிக்கும் இந்த சட்டங்கள், பரத்தமை விடயத்தில் மாத்திரம் பரத்தமையை தூண்டும் ஆண்களை பிழையற்றவனாகவே கொள்வதுடன் தப்பிக்கும் உரிமையை ஆணுக்கு மாத்திரம் வழங்கியிருப்பது வேடிக்கையானது. இது எத்தனை கொடூரகரமான நடைமுறை நிகழ்ச்சி என்பதை பெண்கள் தான் உணர்வு பூர்வமாக அறிவர் பொதுவாகவே ஆளும் அரசாங்கங்களிலும் சரி அரசாங்கத்தினது நிர்வாகத்துக்கான சட்டங்களை இயற்றுவதிலுதம் சரி ஆண்களே ஈடுபடுகிறார்கள் என்பதாலேயே எந்தவொரு விடயம் தொடர்பான சட்டமியற்றுதலின் போதும் ஆண்ணிலைப்பட்ட ஆண்சார்பு கருத்தியலிலிருந்தே மேற்கொள்ளப்படுவதுடன் பெண்ணிகளின் பிறப்புரிமையை பறிக்கும் விதத்திலான சட்டங்கள் இயற்றப்படுகின்றன. இதனை எவரும் சுலபமாக மறுதலித்துவிட முடியாது.
உண்மை தான் இக்கேள்வி நியாயமானதே லஞ்சக் குற்றச் சாட்டின் போதெல்லாம் லஞ்சம் வாங்கியவரை மட்டுமல்லாது லஞ்சம் வழங்கியவரையும் சேர்த்து தண்டிக்கும் இந்த சட்டங்கள், பரத்தமை விடயத்தில் மாத்திரம் பரத்தமையை தூண்டும் ஆண்களை பிழையற்றவனாகவே கொள்வதுடன் தப்பிக்கும் உரிமையை ஆணுக்கு மாத்திரம் வழங்கியிருப்பது வேடிக்கையானது. இது எத்தனை கொடூரகரமான நடைமுறை நிகழ்ச்சி என்பதை பெண்கள் தான் உணர்வு பூர்வமாக அறிவர் பொதுவாகவே ஆளும் அரசாங்கங்களிலும் சரி அரசாங்கத்தினது நிர்வாகத்துக்கான சட்டங்களை இயற்றுவதிலுதம் சரி ஆண்களே ஈடுபடுகிறார்கள் என்பதாலேயே எந்தவொரு விடயம் தொடர்பான சட்டமியற்றுதலின் போதும் ஆண்ணிலைப்பட்ட ஆண்சார்பு கருத்தியலிலிருந்தே மேற்கொள்ளப்படுவதுடன் பெண்ணிகளின் பிறப்புரிமையை பறிக்கும் விதத்திலான சட்டங்கள் இயற்றப்படுகின்றன. இதனை எவரும் சுலபமாக மறுதலித்துவிட முடியாது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பரத்தமைக் குற்றம்: பெண்களுக்கு மட்டும் உரித்தான ஒன்றா?
இதுபற்றி லெனின் இப்படிக் கூறுகிறார்.
”இரக்க சிந்தை துறையில் கலைக்கூத்தாடிகளும், வறுமை, இல்லமை குறித்த இந்தப் போலித்தனத்தினை போலிஸ் ஆதரவாளர்களும் ”விபச்சாரத்திற்கு எதிராகப் போராடுவதற்கு”க் கூடுகிறார்கள். இதைக் குறிப்பாகப் பிரபுக்களும், புர்ஷ்வாக்களும் ஆதரிக்கிறார்கள்”......
பெண் தரப்பு நியாயப்பாடுகள் இவ்வாறிருக்க சமூகம் கொண்டிருக்கிற பொதுவான கருத்தியல் நிலைப்பாடுகளையும் அவைபற்றிய பெண்ணிய நியாயங்களையும் பார்ப்போம்.
ஏங்கல்ஸின் கருத்துப்படி தாய்வழிச் பெண்களுக்கே வற்புறுத்துகின்ற கற்பு நெறியை ஏற்கவில்லை. தந்தைவழிச் சமூக கட்டமைப்பினோடு பின்னர் வழிவந்த சமூக கட்டமைப்பானது ”கற்பு” என்பது மரபுசார் வாழ்க்கை நெறியாகவும் ஒழுக்கமாகவும் வரையறுக்கப்பட்டதுடன் பெண்களுக்கு மட்டுமே அது திணிக்கப்பட்டது. இன்று ஒரு தார மணமே கற்புநெறியாக கொள்ளப்பட்டாலும் ”ஒரு தார மணம்” ஆணுக்கு வரையறுக்கப்படாதிருக்கின்றது.
”இரக்க சிந்தை துறையில் கலைக்கூத்தாடிகளும், வறுமை, இல்லமை குறித்த இந்தப் போலித்தனத்தினை போலிஸ் ஆதரவாளர்களும் ”விபச்சாரத்திற்கு எதிராகப் போராடுவதற்கு”க் கூடுகிறார்கள். இதைக் குறிப்பாகப் பிரபுக்களும், புர்ஷ்வாக்களும் ஆதரிக்கிறார்கள்”......
பெண் தரப்பு நியாயப்பாடுகள் இவ்வாறிருக்க சமூகம் கொண்டிருக்கிற பொதுவான கருத்தியல் நிலைப்பாடுகளையும் அவைபற்றிய பெண்ணிய நியாயங்களையும் பார்ப்போம்.
ஏங்கல்ஸின் கருத்துப்படி தாய்வழிச் பெண்களுக்கே வற்புறுத்துகின்ற கற்பு நெறியை ஏற்கவில்லை. தந்தைவழிச் சமூக கட்டமைப்பினோடு பின்னர் வழிவந்த சமூக கட்டமைப்பானது ”கற்பு” என்பது மரபுசார் வாழ்க்கை நெறியாகவும் ஒழுக்கமாகவும் வரையறுக்கப்பட்டதுடன் பெண்களுக்கு மட்டுமே அது திணிக்கப்பட்டது. இன்று ஒரு தார மணமே கற்புநெறியாக கொள்ளப்பட்டாலும் ”ஒரு தார மணம்” ஆணுக்கு வரையறுக்கப்படாதிருக்கின்றது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பரத்தமைக் குற்றம்: பெண்களுக்கு மட்டும் உரித்தான ஒன்றா?
பாலியல் புணர்வு
பாலியல் புணர்வு என்பது ஆணுக்கே சொந்தமான ஒன்றல்ல அது இரு பாலாருக்குமே உரித்தானது. பெண் எவருடன் புணர விரும்புகின்றாலோ அது அவளது சுதந்திரத்திற்குரிய விடயமாக கருதும் பக்குவம் ஆண்ணிலைப்பட்ட கருத்தியலை கொண்டிருக்கின்ற எமது சமுகத்திற்கு இன்னமும் ஏற்படவில்லை.
இங்கு தான் ”பரத்தமை” பற்றிக்கொண்டிருக்கின்ற நிலையான கருத்தியலை நோக்க வேண்டியுள்ளது. ”விபச்சாரம்” அல்லது ”விபச்சாரி” அல்லது ”வேசை” என்ற பதமும் கூட பெண்ணொருத்தி தன் மீதான புணர்வை பணத்திற்காகவோ அல்லது பணத்திற்காக அல்லாமலோ மேற்கொள்ளும் போது தான் சமூகம் பிரயோகிக்கின்றது.
இன்று ஆண் பல பெண்களுடன் புணர்வதை சமூகம் அவனது ஆண்மையின் பண்புக் குணமாகவும், ஆண்மையின் பெருமிதமாகவும், ஏற்கிறது. அத்துடன் அவனது ஆண்மையை வெளிக்காட்டுவதாகவும் கொள்ளப்படுகிறது. ஆணுக்கு ஒரு காலமும் ”வேசை” என்ற பதம் பாவிக்கப்படுவதில்லை. ”ஆண் பரத்தன்” என சமூகம் அழைப்பதில்லை. பெண்ணே சமுதாய ஏசலுக்கு ஆட்படுகின்றாள். சங்க காலத்தில் பரத்தையர் ஒழுக்கம் கண்டிக்கப்படப்படவில்லை மாறாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. ஆண்களுக்கு அளிக்கப்பட்ட மகத்தான உரிமையாகவும் கருதப்பட்டது.
எவ்வாறிருப்பினும் இந்த ஆணாதிக்க சமூக கருத்தியல் சார்ந்த சமூக அமைப்பு முறை நிலைப்பெற்றிருக்கும் காலம் வரைக்கும் ஆண் - பெண் சமத்துவமற்ற இந்த சூழலும் பெண் மீதான ஒடுக்கு முறைகளும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். எனவே பெண்களது பிரச்சினைகளை முன்னெடுக்க பெண்களே களத்தில் இறங்க வேண்டும். இதில் கூறப்பட்ட கருத்துக்கள் சில வேளை அவசரப்பட்டு சொல்வதாகவும் தீவிரத் தன்மையுள்ளதாகவும் தெரியலாம். ஆனால் இது தவிர்க்க முடியாதது. இது ஒரு அவசியம் கருதிய அவசரம்.
என்.சரவணன்
பாலியல் புணர்வு என்பது ஆணுக்கே சொந்தமான ஒன்றல்ல அது இரு பாலாருக்குமே உரித்தானது. பெண் எவருடன் புணர விரும்புகின்றாலோ அது அவளது சுதந்திரத்திற்குரிய விடயமாக கருதும் பக்குவம் ஆண்ணிலைப்பட்ட கருத்தியலை கொண்டிருக்கின்ற எமது சமுகத்திற்கு இன்னமும் ஏற்படவில்லை.
இங்கு தான் ”பரத்தமை” பற்றிக்கொண்டிருக்கின்ற நிலையான கருத்தியலை நோக்க வேண்டியுள்ளது. ”விபச்சாரம்” அல்லது ”விபச்சாரி” அல்லது ”வேசை” என்ற பதமும் கூட பெண்ணொருத்தி தன் மீதான புணர்வை பணத்திற்காகவோ அல்லது பணத்திற்காக அல்லாமலோ மேற்கொள்ளும் போது தான் சமூகம் பிரயோகிக்கின்றது.
இன்று ஆண் பல பெண்களுடன் புணர்வதை சமூகம் அவனது ஆண்மையின் பண்புக் குணமாகவும், ஆண்மையின் பெருமிதமாகவும், ஏற்கிறது. அத்துடன் அவனது ஆண்மையை வெளிக்காட்டுவதாகவும் கொள்ளப்படுகிறது. ஆணுக்கு ஒரு காலமும் ”வேசை” என்ற பதம் பாவிக்கப்படுவதில்லை. ”ஆண் பரத்தன்” என சமூகம் அழைப்பதில்லை. பெண்ணே சமுதாய ஏசலுக்கு ஆட்படுகின்றாள். சங்க காலத்தில் பரத்தையர் ஒழுக்கம் கண்டிக்கப்படப்படவில்லை மாறாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. ஆண்களுக்கு அளிக்கப்பட்ட மகத்தான உரிமையாகவும் கருதப்பட்டது.
எவ்வாறிருப்பினும் இந்த ஆணாதிக்க சமூக கருத்தியல் சார்ந்த சமூக அமைப்பு முறை நிலைப்பெற்றிருக்கும் காலம் வரைக்கும் ஆண் - பெண் சமத்துவமற்ற இந்த சூழலும் பெண் மீதான ஒடுக்கு முறைகளும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். எனவே பெண்களது பிரச்சினைகளை முன்னெடுக்க பெண்களே களத்தில் இறங்க வேண்டும். இதில் கூறப்பட்ட கருத்துக்கள் சில வேளை அவசரப்பட்டு சொல்வதாகவும் தீவிரத் தன்மையுள்ளதாகவும் தெரியலாம். ஆனால் இது தவிர்க்க முடியாதது. இது ஒரு அவசியம் கருதிய அவசரம்.
என்.சரவணன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» கணவனைக் கௌத்திடடும் (பெண்களுக்கு மட்டும்) அழகு
» பெண்களுக்கு மட்டும் ஆண்களைவிட அதிக அளவு எலும்பு தேய்மானம் ஏற்படுவது ஏன்?
» அழகு மட்டும் போதாது, உடலும் அம்சமாக இருக்க வேண்டும் என விரும்பும் பெண்களுக்கு ?
» சமர்ப்பணம், தியாகம் இரண்டும் ஒன்றா..?
» இது படிப்பினைக்கும் சிந்தனைக்கும் உரித்தான அற்புதம்
» பெண்களுக்கு மட்டும் ஆண்களைவிட அதிக அளவு எலும்பு தேய்மானம் ஏற்படுவது ஏன்?
» அழகு மட்டும் போதாது, உடலும் அம்சமாக இருக்க வேண்டும் என விரும்பும் பெண்களுக்கு ?
» சமர்ப்பணம், தியாகம் இரண்டும் ஒன்றா..?
» இது படிப்பினைக்கும் சிந்தனைக்கும் உரித்தான அற்புதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|