Latest topics
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!by rammalar Today at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:21
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54
» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48
» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42
» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37
» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31
» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54
ஆஸ்துமா நோய்க்கான காரணங்கள் என்ன?
Page 1 of 1
ஆஸ்துமா நோய்க்கான காரணங்கள் என்ன?
நோய்க்கான காரணத்தைப் பொருத்து ஆஸ்துமாவை இரண்டாகப் பிக்கிறார்கள்.
Allergic Asthma எனும் முதல் வகையினருக்குக் காரணம் ஒவ்வாமை. பாரம்பயமாக நோய் வருதல், மூக்கடைப்பு, தோல் அலர்ஜி நோய்கள் போன்ற குறிகுணங்களை இப் பிவினர் பெற்றிருப்பர். ரத்தத்தில் நோய் எதிர்ப்புத் தன்மை கொண்ட அணுக்களுக்கு Ig என்று பெயர். நோய் எதிர்ப்புத் தன்மையைக் கொடுக்க டி, ஏ, எம், ஜி, ஈ என ஐந்து வகையான வெள்ளை அணுக்கள் உள்ளன. இவற்றில் சுவாச மண்டல நோய்களை எதிர்க்கவும் உடலுக்கு ஒத்துக்கொள்ளாத பொருள்களை எதிர்க்கவும் IgE என்ற வகை வெள்ளை அணுக்கள் உள்ளன. ஒவ்வாமைத் தன்மையைக் கொண்ட முதல் வகை ஆஸ்துமா நோயாளிகளுக்கு ரத்தப் பசோதனை செய்யும் நிலையில் IgE வகை ரத்த வெள்ளை அணுக்கள் அதிகமாக இருக்கும்.
இந்த காரணங்கள் எதுவுமே இல்லாமல் IgE -ம் அளவுடன் இருந்து மேல்சுவாச மண்டல அழற்சியைத் தொடர்ந்து இரைப்பு வருவது Idiosyncratic asthma எனும் இரண்டாவது வகை.
முதல் வகை ஆஸ்துமா பெரும்பாலும் இள வயதிலேயே வந்துவிடும். இரண்டாம் வகை ஆஸ்துமா வாலிப வயதையொட்டி துவங்குகிறது.
ஆஸ்துமாவின் முக்கிய அறிகுறி என்ன?
மூக்கடைப்பு, தும்மல் ஆகியவற்றுடன் இருமல் ஆரம்பிக்கும். இருமல் தொடங்கியவுடன் நெஞ்சில் உள்ள சளியைத் துப்புவதற்காக நோயாளி எழுந்திருப்பார். ஆனால் சளி எளிதில் வராது. கொஞ்சம் கஷ்டப்பட்டு சளியைத் துப்பும்போது சளியின் தன்மை ஜவ்வசி கஞ்சி போன்று இருக்கும்; ஒரு சிலருக்கு சேமியா போன்று சிறிதளவு சளி வெளியேறும். கொஞ்சம் தூரம் நடந்தால்கூட இரைப்பு ஏற்படும். இளங்காலைப் பொழுது, இரவில் அதிகம் இரைப்பு இருக்கும். இவை ஆஸ்துமாவின் முக்கிய அறிகுறிகள்.
Allergic Asthma எனும் முதல் வகையினருக்குக் காரணம் ஒவ்வாமை. பாரம்பயமாக நோய் வருதல், மூக்கடைப்பு, தோல் அலர்ஜி நோய்கள் போன்ற குறிகுணங்களை இப் பிவினர் பெற்றிருப்பர். ரத்தத்தில் நோய் எதிர்ப்புத் தன்மை கொண்ட அணுக்களுக்கு Ig என்று பெயர். நோய் எதிர்ப்புத் தன்மையைக் கொடுக்க டி, ஏ, எம், ஜி, ஈ என ஐந்து வகையான வெள்ளை அணுக்கள் உள்ளன. இவற்றில் சுவாச மண்டல நோய்களை எதிர்க்கவும் உடலுக்கு ஒத்துக்கொள்ளாத பொருள்களை எதிர்க்கவும் IgE என்ற வகை வெள்ளை அணுக்கள் உள்ளன. ஒவ்வாமைத் தன்மையைக் கொண்ட முதல் வகை ஆஸ்துமா நோயாளிகளுக்கு ரத்தப் பசோதனை செய்யும் நிலையில் IgE வகை ரத்த வெள்ளை அணுக்கள் அதிகமாக இருக்கும்.
இந்த காரணங்கள் எதுவுமே இல்லாமல் IgE -ம் அளவுடன் இருந்து மேல்சுவாச மண்டல அழற்சியைத் தொடர்ந்து இரைப்பு வருவது Idiosyncratic asthma எனும் இரண்டாவது வகை.
முதல் வகை ஆஸ்துமா பெரும்பாலும் இள வயதிலேயே வந்துவிடும். இரண்டாம் வகை ஆஸ்துமா வாலிப வயதையொட்டி துவங்குகிறது.
ஆஸ்துமாவின் முக்கிய அறிகுறி என்ன?
மூக்கடைப்பு, தும்மல் ஆகியவற்றுடன் இருமல் ஆரம்பிக்கும். இருமல் தொடங்கியவுடன் நெஞ்சில் உள்ள சளியைத் துப்புவதற்காக நோயாளி எழுந்திருப்பார். ஆனால் சளி எளிதில் வராது. கொஞ்சம் கஷ்டப்பட்டு சளியைத் துப்பும்போது சளியின் தன்மை ஜவ்வசி கஞ்சி போன்று இருக்கும்; ஒரு சிலருக்கு சேமியா போன்று சிறிதளவு சளி வெளியேறும். கொஞ்சம் தூரம் நடந்தால்கூட இரைப்பு ஏற்படும். இளங்காலைப் பொழுது, இரவில் அதிகம் இரைப்பு இருக்கும். இவை ஆஸ்துமாவின் முக்கிய அறிகுறிகள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆஸ்துமா நோய்க்கான காரணங்கள் என்ன?
ஆஸ்துமாவில் மூன்று வகையான சிறப்புப் பிரிவுகள் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனி குணங்களைக் கொண்டவை.
அவை"-
1. உடற்பயிற்சியால் தூண்டப்படும் ஆஸ்துமா
2. மறைந்திருந்து தாக்கும் ஆஸ்துமா
3. ஆஸ்பிரினால் தூண்டப்படும் ஆஸ்துமா
கி.பி. இருநூறாம் ஆண்டிலேயே அரிடேயஸ் என்பவர் பின்வருமாறு எழுதினார்.
"ஓடினாலோ ஜிம்னாஸ்டிக் போன்ற பயிற்சிகள் செய்தாலோ மூச்சு விடுவது மிக சிரமமாக உள்ளது. இதுதான் ஆஸ்துமா."
இவருக்குப் பல நூற்றாண்டுகள் கழித்து சர்ஜான் ப்ளோயர் என்ற இங்கிலாந்து நாட்டினர், "உடற்பயிற்சி அவ்வப்போது ஆஸ்துமாவை தூண்டுகிறது" என குறிப்பிட்டார்.
1864-ல் டாக்டர் எச்.ஏ.சால்டர் என்பவர், "குளிர் காற்று" ஆஸ்துமாவை தூண்டுவதாக கண்டறிந்தார். சுவாசக்குழாயினுள் சளிச்சவ்வின் மீது குளிர்காற்று படும்போது ஆஸ்துமா தூண்டப்படுவதை அவர் தெளிவு படுத்தினார். இவ்வாறே உடற்பயிற்சியின் போதும் ஆஸ்துமா தூண்டப்படுகிறது. இதை உடற்பயிற்சியால் தூண்டப்படும் ஆஸ்துமா என குறிப்பிடுகிறார்கள்.
ஒருவருடைய நோய் தாங்கும் திறன் மற்றும் உடல் நிலையைப் பொறுத்தே அவர் உடற்பயிற்சி செய்யும் நேரமும் அளவும் தீர்மானிக்கப்படுகிறது. இயல்பான உடற்பயிற்சியின்போது சுவாசக்குழல் திறந்து அல்லது ஆக்சிஜன் கார்பன்டை ஆக்சைடு பரிமாற்றத்தை சீராக வைக்கிறது.
இத்திறப்பானது அட்ரீனல் சுரப்பியிலிருந்து அட்ரீனலின் சுரப்பதால் ஏற்படு வதாக இருக்கலாம். அதிகளவு உடற்பயிற்சி செய்யும்போது இதற்கு நேர் மாறான விளைவுகள் உண்டாகின்றன.
குழல்கள் இறுக ஆரம்பிப்பதால் உடற்பயிற்சி மேற்கொண்ட ஐந்து முதல் பத்து நிமிடங்களிலேயே இருமலும், ஆஸ்துமா இழுப்பும் வந்துவிடுகிறது. சாதாரண அளவில் உடற்பயிற்சி செய்பவர்கள் பாதிப்பு அதிகமின்றி தொடர்ந்து பயிற்சி செய்யும் திறனுடன் உள்ளார்கள். மற்றவர்கள் உடற்பயிற்சியை ஒரேயடியாக நிறுத்த வேண்டியிருக்கும்.
உடற்பயிற்சியால் ஆஸ்துமா தூண்டப்படும் பலருக்கு உடற்பயிற்சியை நிறுத்திய பல மணி நேரங்களுக்குப் பிறகுகூட இருமலோ, வீசிங்கோ வருவதில்லை.
தாமதமாகத் தூண்டப்படும் இந்த ஆஸ்துமாவுக்கு சிகிச்சையளித்தாலும் அளிக்காவிட்டாலும் தோன்றிய அரை மணி நேரத்திற்குள் சரியாகிவிடும்.
உடற்பயிற்சியின் வகை உட்பட பல்வேறு காரணிகள் உடற்பயிற்சியால் தூண்டப்படும் ஆஸ்துமாவின் அளவில் தாக்கத்தை உண்டாக்குகின்றது.
மிதமான ஈரப்பதமுள்ள காற்றில் உடற்பயிற்சி செய்யும் போது ஆஸ்துமா அதிகளவில் தூண்டப்படுகிறது. நீச்சல் அல்லது சைக்கிள் ஓட்டுவதைவிட ஓடும்போது ஆஸ்துமா அதிகரிக்கிறது.
உடற்பயிற்சி செய்யும் கால அளவும் ஆஸ்துமா தூண்டுதலில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நீண்டநேரம் உடற்பயிற்சியை நீட்டிப்பது மிகையான ஆஸ்துமா தூண்டலை உண்டாக்குகிறது. பெரும்பாலான உடற்பயிற்சியால் தூண்டப்படும் ஆஸ்துமா கோளாறுள்ளவர்கள் காற்று தூசுக்கள் அதிகமாகக் காணப்படும் கால நிலைகளிலும், ஒவ்வாமைப் பொருட்கள் காற்றிலுள்ள கால நிலைகளிலுமான மிகை வெப்ப அல்லது ஈரப்பதமான காற்றோட்ட பருவநிலைகளில் காணப்படுகிறது.
இதைக் கண்டறிவது மிக சுலபம். குளிரான அல்லது வறண்ட பருவ நிலையில் உடற்பயிற்சி செய்யும் போது இருமலோ, இழுப்புச்சத்தமோ வருகிறதா? ஆம் என்றால் உடற்பயிற்சியால் ஆஸ்துமா தூண்டப்படுவதை நிச்சயமாக அறிந்து கொள்ளலாம். சில உடலியல் வல்லுநர்கள் மூச்சு வேகமாக வாங்குவதை தவறுதலாக உடற்பயிற்சியால் தூண்டப்படும் ஆஸ்துமா என குழம்பிவிடுவதுண்டு. இந்த நிலையில் உடற்பயிற்சி திறன் அறிதல் முக்கியம்.
நோயாளிகளை ட்ரெட்மில்லில் நிற்கவைத்து நான்கு அல்லது ஐந்து நிமிடங்களுக்கு சோதனை மேற்கொள்ள வைப்பார்கள். இதை வைத்து அவர் களுக்கு ஏற்படுவது உடற்பயிற்சியால் தூண்டப்படும் ஆஸ்துமாவா அல்லது மூச்சிரைப்பா எனக்கண்டறிவார்கள். இதைப்போலவே ஏர்கூலர், ஏர் டிரையர் போன்ற இடங்களில் நோயாளிகளை நிற்கவைத்து பரிசோதிப்பதும் உண்டு. இத்தகைய நோயாளிகளை வீடு அல்லது விளையாட்டுத் திடலிலேயே நிற்கவைத்து நோயறிதல் செய்யலாம்.
நடுத்தர வயதினர், முதியோர், இதய ரத்தநாள நோயிருப்பதாக சந்தேகிக்கப் படுவோர் ஆகியோரை வீட்டில் வைத்தே பரிசோதிக்க வேண்டும்.
உலகின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் இருந்து உடற் பயிற்சியால் ஆஸ்துமா தூண்டப்படுவது மிகச்சிறிய தாக்குதல் எனலாம்.
ஆஸ்துமா நோயாளிகளுக்கு மட்டும் உடற்பயிற்சியால் தூண்டப்படும் ஆஸ்துமா பரவ லாக வருகிறது எனலாம். உடற்பயிற்சி செய்யாத பெரும்பாலான ஆஸ்துமா நோயாளிகளுக்கு உடற்பயிற்சியால் தூண்டப்படும் ஆஸ்துமா பற்றி எதுவும் தெரிவதில்லை.
கடின வேலை செய்த பிறகோ உடற்பயிற்சி செய்த பிறகோ மூச்சிழுப்பு வராவிட்டால் வேறு என்ன காரணத்திற்காக இவ்வாறு ஏற்பட்டது என்பதை நாம் ஆராய்ந்து அவற்றிற்காக சிறப்புச்சிகிச்சை அளிக்கவேண்டும்.
அவை"-
1. உடற்பயிற்சியால் தூண்டப்படும் ஆஸ்துமா
2. மறைந்திருந்து தாக்கும் ஆஸ்துமா
3. ஆஸ்பிரினால் தூண்டப்படும் ஆஸ்துமா
கி.பி. இருநூறாம் ஆண்டிலேயே அரிடேயஸ் என்பவர் பின்வருமாறு எழுதினார்.
"ஓடினாலோ ஜிம்னாஸ்டிக் போன்ற பயிற்சிகள் செய்தாலோ மூச்சு விடுவது மிக சிரமமாக உள்ளது. இதுதான் ஆஸ்துமா."
இவருக்குப் பல நூற்றாண்டுகள் கழித்து சர்ஜான் ப்ளோயர் என்ற இங்கிலாந்து நாட்டினர், "உடற்பயிற்சி அவ்வப்போது ஆஸ்துமாவை தூண்டுகிறது" என குறிப்பிட்டார்.
1864-ல் டாக்டர் எச்.ஏ.சால்டர் என்பவர், "குளிர் காற்று" ஆஸ்துமாவை தூண்டுவதாக கண்டறிந்தார். சுவாசக்குழாயினுள் சளிச்சவ்வின் மீது குளிர்காற்று படும்போது ஆஸ்துமா தூண்டப்படுவதை அவர் தெளிவு படுத்தினார். இவ்வாறே உடற்பயிற்சியின் போதும் ஆஸ்துமா தூண்டப்படுகிறது. இதை உடற்பயிற்சியால் தூண்டப்படும் ஆஸ்துமா என குறிப்பிடுகிறார்கள்.
ஒருவருடைய நோய் தாங்கும் திறன் மற்றும் உடல் நிலையைப் பொறுத்தே அவர் உடற்பயிற்சி செய்யும் நேரமும் அளவும் தீர்மானிக்கப்படுகிறது. இயல்பான உடற்பயிற்சியின்போது சுவாசக்குழல் திறந்து அல்லது ஆக்சிஜன் கார்பன்டை ஆக்சைடு பரிமாற்றத்தை சீராக வைக்கிறது.
இத்திறப்பானது அட்ரீனல் சுரப்பியிலிருந்து அட்ரீனலின் சுரப்பதால் ஏற்படு வதாக இருக்கலாம். அதிகளவு உடற்பயிற்சி செய்யும்போது இதற்கு நேர் மாறான விளைவுகள் உண்டாகின்றன.
குழல்கள் இறுக ஆரம்பிப்பதால் உடற்பயிற்சி மேற்கொண்ட ஐந்து முதல் பத்து நிமிடங்களிலேயே இருமலும், ஆஸ்துமா இழுப்பும் வந்துவிடுகிறது. சாதாரண அளவில் உடற்பயிற்சி செய்பவர்கள் பாதிப்பு அதிகமின்றி தொடர்ந்து பயிற்சி செய்யும் திறனுடன் உள்ளார்கள். மற்றவர்கள் உடற்பயிற்சியை ஒரேயடியாக நிறுத்த வேண்டியிருக்கும்.
உடற்பயிற்சியால் ஆஸ்துமா தூண்டப்படும் பலருக்கு உடற்பயிற்சியை நிறுத்திய பல மணி நேரங்களுக்குப் பிறகுகூட இருமலோ, வீசிங்கோ வருவதில்லை.
தாமதமாகத் தூண்டப்படும் இந்த ஆஸ்துமாவுக்கு சிகிச்சையளித்தாலும் அளிக்காவிட்டாலும் தோன்றிய அரை மணி நேரத்திற்குள் சரியாகிவிடும்.
உடற்பயிற்சியின் வகை உட்பட பல்வேறு காரணிகள் உடற்பயிற்சியால் தூண்டப்படும் ஆஸ்துமாவின் அளவில் தாக்கத்தை உண்டாக்குகின்றது.
மிதமான ஈரப்பதமுள்ள காற்றில் உடற்பயிற்சி செய்யும் போது ஆஸ்துமா அதிகளவில் தூண்டப்படுகிறது. நீச்சல் அல்லது சைக்கிள் ஓட்டுவதைவிட ஓடும்போது ஆஸ்துமா அதிகரிக்கிறது.
உடற்பயிற்சி செய்யும் கால அளவும் ஆஸ்துமா தூண்டுதலில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நீண்டநேரம் உடற்பயிற்சியை நீட்டிப்பது மிகையான ஆஸ்துமா தூண்டலை உண்டாக்குகிறது. பெரும்பாலான உடற்பயிற்சியால் தூண்டப்படும் ஆஸ்துமா கோளாறுள்ளவர்கள் காற்று தூசுக்கள் அதிகமாகக் காணப்படும் கால நிலைகளிலும், ஒவ்வாமைப் பொருட்கள் காற்றிலுள்ள கால நிலைகளிலுமான மிகை வெப்ப அல்லது ஈரப்பதமான காற்றோட்ட பருவநிலைகளில் காணப்படுகிறது.
இதைக் கண்டறிவது மிக சுலபம். குளிரான அல்லது வறண்ட பருவ நிலையில் உடற்பயிற்சி செய்யும் போது இருமலோ, இழுப்புச்சத்தமோ வருகிறதா? ஆம் என்றால் உடற்பயிற்சியால் ஆஸ்துமா தூண்டப்படுவதை நிச்சயமாக அறிந்து கொள்ளலாம். சில உடலியல் வல்லுநர்கள் மூச்சு வேகமாக வாங்குவதை தவறுதலாக உடற்பயிற்சியால் தூண்டப்படும் ஆஸ்துமா என குழம்பிவிடுவதுண்டு. இந்த நிலையில் உடற்பயிற்சி திறன் அறிதல் முக்கியம்.
நோயாளிகளை ட்ரெட்மில்லில் நிற்கவைத்து நான்கு அல்லது ஐந்து நிமிடங்களுக்கு சோதனை மேற்கொள்ள வைப்பார்கள். இதை வைத்து அவர் களுக்கு ஏற்படுவது உடற்பயிற்சியால் தூண்டப்படும் ஆஸ்துமாவா அல்லது மூச்சிரைப்பா எனக்கண்டறிவார்கள். இதைப்போலவே ஏர்கூலர், ஏர் டிரையர் போன்ற இடங்களில் நோயாளிகளை நிற்கவைத்து பரிசோதிப்பதும் உண்டு. இத்தகைய நோயாளிகளை வீடு அல்லது விளையாட்டுத் திடலிலேயே நிற்கவைத்து நோயறிதல் செய்யலாம்.
நடுத்தர வயதினர், முதியோர், இதய ரத்தநாள நோயிருப்பதாக சந்தேகிக்கப் படுவோர் ஆகியோரை வீட்டில் வைத்தே பரிசோதிக்க வேண்டும்.
உலகின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் இருந்து உடற் பயிற்சியால் ஆஸ்துமா தூண்டப்படுவது மிகச்சிறிய தாக்குதல் எனலாம்.
ஆஸ்துமா நோயாளிகளுக்கு மட்டும் உடற்பயிற்சியால் தூண்டப்படும் ஆஸ்துமா பரவ லாக வருகிறது எனலாம். உடற்பயிற்சி செய்யாத பெரும்பாலான ஆஸ்துமா நோயாளிகளுக்கு உடற்பயிற்சியால் தூண்டப்படும் ஆஸ்துமா பற்றி எதுவும் தெரிவதில்லை.
கடின வேலை செய்த பிறகோ உடற்பயிற்சி செய்த பிறகோ மூச்சிழுப்பு வராவிட்டால் வேறு என்ன காரணத்திற்காக இவ்வாறு ஏற்பட்டது என்பதை நாம் ஆராய்ந்து அவற்றிற்காக சிறப்புச்சிகிச்சை அளிக்கவேண்டும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆஸ்துமா நோய்க்கான காரணங்கள் என்ன?
ஆஸ்துமா என்றால் என்ன?
மிகவும் சிரமப்பட்டு மூச்சு விடுதல் அல்லது மூச்சுத் திணறலைத்தான் ஆஸ்துமா என்றழைக்கின்றோம். இது ஒரு கிரேக்க வார்த்தை, ஈளை, திகைப்பு, திகறடி, மாந்தம், அள்ளுமாந்தம், உப்புச நோய், கணச்சூடு, இசிவு நோய், இரைப்பு நோய், இளைப்பு நோய், மந்தார காசம், சுவாச காசம், சுவாசத் தொய்வு, ஈரம் எனத் தமிழில் பல பெயர்களில், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இந்நோய் குறிக்கப்படுகிறது. ஆஸ்துமா நோய்த் தாக்கத்திற்கு பரம்பரைத் தன்மை, ஒவ்வாமை இயல்பு, பலவகை அலர்ஜிகள் காரணமாகின்றன!
ஆஸ்துமா பற்றிய தவறான எண்ணங்கள் :
« ஆஸ்துமா நோய் அச்சத்துடன் வெட்கப்படவேண்டிய, ஏளனமாகப் பேசப்படும், தலை குனிவை உண்டாக்கி அவமானம் தரும் நோய்.
«ஆஸ்துமா ஒரு தொற்று நோய்.
« ஆஸ்துமா வந்தாலே போகாது.
« ஆஸ்துமா இருந்தால் கண்டிப்பாகக் காச நோயும் இருக்கும்.
« இந்நோய்க்காரர்கள் திருமணம் செய்து கொள்ளக் கூடாது.
« ஆஸ்துமா நோயுள்ளவர்களின் குழந்தைகளுக்கும் இந்நோய் கண்டிப்பாக வரும்.
« இந்நோய் கண்டவர் அனைவரும் எப்போதும் கடற்கரை ஓரங்களில், மலை வாசஸ்தலங்களில் குளிர்ப் பிரதேசங்களில், ஏசி அறைகளில் வசிக்கவும் கூடாது. அங்குப் போகவும் கூடாது.
« இந்நோய் வந்தால் மற்றவர்கள் போல் சராசரி வாழ்க்கை வாழ முடியாது.
« இதய நோய், சர்க்கரை நோய் போலவே ஆஸ்துமா நோய்க்கும் உணவுக் கட்டுப்பாடு மிக முக்கியம்.
அறிவியல் உண்மைகள்
« உயர் இரத்த அழுத்தம், இதயநோய், நீரிழிவு போன்று இதுவும் சாதாரணமாகக் காணப்படும் ஒரு நோய். எய்ட்ஸ் போல் நாமாக வரவழைத்துக் கொள்ளும் நோயும் அல்ல. அச்சமும், அவமானமும் தேவையில்லாதது.
« ‘‘சார்ஸ்’’ போல் அதிநுண் கிருமிகளால் பரவுவதே தொற்று நோய்கள். ஆஸ்துமா, கிருமிகளால் பரவும் தொற்று நோயல்ல.
« அல்லோபதி மருத்துவத்தால் நன்கு கட்டுப்படுத்தவும், அல்லோபங்சர் அணுகுமுறையில் முழுவதும் சிகிச்சை அளித்துப் போக்கக் கூடிய பல நோய்களில் இதுவும் ஒன்று.
« அப்படி ஒன்றும் கட்டாயம் இல்லை. ஆஸ்துமா நோய்க்காரர்களும் காசநோய் உள்ளதா என்றும், காசநோய்க்காரர்களுக்கு ஆஸ்துமா நோயும் உள்ளதா என்றுதான் பரிசோதிக்க வேண்டும்.
« திருமணம் இந்நோய்க்குத் தடை அல்ல. எல்லோரும்போல் தாராளமாகத் திருமணம் செய்து கொள்ளலாம். மனைவி வழி ஆஸ்துமா, ஒவ்வாமை நோய்கள் இல்லாமலிருப்பது நல்லது.
« பெற்றோர் இருவருக்கும் ஆஸ்துமா இருந்தால், வாய்ப்புகள் அதிகமே தவிர, கட்டாயம் ஒன்றும் இல்லை.
« இவைகளால் குறிப்பிட்ட சில வகையினருக்கு மட்டும் ஆஸ்துமா தாக்கம் அதிகமாகிறது என்று மருத்துவர்கள் உறுதியுடன் சொன்னாலொழிய, அச்சம் கொள்ளத் தேவையில்லை.
« இந்நோய் கண்ட பலர், பல வெற்றிகளைக் குவித்துள்ளனர். புகழ்பெற்ற அரசியல்வாதிகளாகவும், நாட்டுத்தலைவர்களாகவும், நடிகர்களாகவும், பின்னணிப் பாடகர்களாகவும், விளையாட்டு வீரர்கள், வழக்கறிஞர், பொறியியல், மருத்துவ வல்லுநர்களாகவும் உலா வருகிறார்கள்.
« தீவிரமான உணவுக் கட்டுப்பாடு தேவையில்லை. பின் இரவிலும், எப்போதும் வயிறு முட்டவும் சாப்பிட வேண்டாம். உணவு உண்டு 2_3 மணி கழித்துப் படுப்பது நல்லது.
மிகவும் சிரமப்பட்டு மூச்சு விடுதல் அல்லது மூச்சுத் திணறலைத்தான் ஆஸ்துமா என்றழைக்கின்றோம். இது ஒரு கிரேக்க வார்த்தை, ஈளை, திகைப்பு, திகறடி, மாந்தம், அள்ளுமாந்தம், உப்புச நோய், கணச்சூடு, இசிவு நோய், இரைப்பு நோய், இளைப்பு நோய், மந்தார காசம், சுவாச காசம், சுவாசத் தொய்வு, ஈரம் எனத் தமிழில் பல பெயர்களில், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இந்நோய் குறிக்கப்படுகிறது. ஆஸ்துமா நோய்த் தாக்கத்திற்கு பரம்பரைத் தன்மை, ஒவ்வாமை இயல்பு, பலவகை அலர்ஜிகள் காரணமாகின்றன!
ஆஸ்துமா பற்றிய தவறான எண்ணங்கள் :
« ஆஸ்துமா நோய் அச்சத்துடன் வெட்கப்படவேண்டிய, ஏளனமாகப் பேசப்படும், தலை குனிவை உண்டாக்கி அவமானம் தரும் நோய்.
«ஆஸ்துமா ஒரு தொற்று நோய்.
« ஆஸ்துமா வந்தாலே போகாது.
« ஆஸ்துமா இருந்தால் கண்டிப்பாகக் காச நோயும் இருக்கும்.
« இந்நோய்க்காரர்கள் திருமணம் செய்து கொள்ளக் கூடாது.
« ஆஸ்துமா நோயுள்ளவர்களின் குழந்தைகளுக்கும் இந்நோய் கண்டிப்பாக வரும்.
« இந்நோய் கண்டவர் அனைவரும் எப்போதும் கடற்கரை ஓரங்களில், மலை வாசஸ்தலங்களில் குளிர்ப் பிரதேசங்களில், ஏசி அறைகளில் வசிக்கவும் கூடாது. அங்குப் போகவும் கூடாது.
« இந்நோய் வந்தால் மற்றவர்கள் போல் சராசரி வாழ்க்கை வாழ முடியாது.
« இதய நோய், சர்க்கரை நோய் போலவே ஆஸ்துமா நோய்க்கும் உணவுக் கட்டுப்பாடு மிக முக்கியம்.
அறிவியல் உண்மைகள்
« உயர் இரத்த அழுத்தம், இதயநோய், நீரிழிவு போன்று இதுவும் சாதாரணமாகக் காணப்படும் ஒரு நோய். எய்ட்ஸ் போல் நாமாக வரவழைத்துக் கொள்ளும் நோயும் அல்ல. அச்சமும், அவமானமும் தேவையில்லாதது.
« ‘‘சார்ஸ்’’ போல் அதிநுண் கிருமிகளால் பரவுவதே தொற்று நோய்கள். ஆஸ்துமா, கிருமிகளால் பரவும் தொற்று நோயல்ல.
« அல்லோபதி மருத்துவத்தால் நன்கு கட்டுப்படுத்தவும், அல்லோபங்சர் அணுகுமுறையில் முழுவதும் சிகிச்சை அளித்துப் போக்கக் கூடிய பல நோய்களில் இதுவும் ஒன்று.
« அப்படி ஒன்றும் கட்டாயம் இல்லை. ஆஸ்துமா நோய்க்காரர்களும் காசநோய் உள்ளதா என்றும், காசநோய்க்காரர்களுக்கு ஆஸ்துமா நோயும் உள்ளதா என்றுதான் பரிசோதிக்க வேண்டும்.
« திருமணம் இந்நோய்க்குத் தடை அல்ல. எல்லோரும்போல் தாராளமாகத் திருமணம் செய்து கொள்ளலாம். மனைவி வழி ஆஸ்துமா, ஒவ்வாமை நோய்கள் இல்லாமலிருப்பது நல்லது.
« பெற்றோர் இருவருக்கும் ஆஸ்துமா இருந்தால், வாய்ப்புகள் அதிகமே தவிர, கட்டாயம் ஒன்றும் இல்லை.
« இவைகளால் குறிப்பிட்ட சில வகையினருக்கு மட்டும் ஆஸ்துமா தாக்கம் அதிகமாகிறது என்று மருத்துவர்கள் உறுதியுடன் சொன்னாலொழிய, அச்சம் கொள்ளத் தேவையில்லை.
« இந்நோய் கண்ட பலர், பல வெற்றிகளைக் குவித்துள்ளனர். புகழ்பெற்ற அரசியல்வாதிகளாகவும், நாட்டுத்தலைவர்களாகவும், நடிகர்களாகவும், பின்னணிப் பாடகர்களாகவும், விளையாட்டு வீரர்கள், வழக்கறிஞர், பொறியியல், மருத்துவ வல்லுநர்களாகவும் உலா வருகிறார்கள்.
« தீவிரமான உணவுக் கட்டுப்பாடு தேவையில்லை. பின் இரவிலும், எப்போதும் வயிறு முட்டவும் சாப்பிட வேண்டாம். உணவு உண்டு 2_3 மணி கழித்துப் படுப்பது நல்லது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|