Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்துக் கொண்டிருக்கிறது: ஜெயலலிதா
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்துக் கொண்டிருக்கிறது: ஜெயலலிதா
தமிழக மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமையும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா உறுதியளித்துள்ளார்.
இந்த வெற்றி குறித்து ஜெயலலிதா அளித்த பேட்டியில் கூறியதாவது: அ.தி.மு.க கூட்டணிக்கு அமோக வெற்றியை கொடுத்த தமிழக மக்களுக்கு நன்றி. இது எங்களுக்கு கிடைத்த வெற்றி அல்ல. தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி. ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி. இந்தத் தேர்தலில் பண பலம் தோற்றுப் போய்விட்டது.
கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகத்தின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும், மக்கள் தி.மு.க அரசு மீது கடும் அதிருப்தியில் இருந்ததை உணர முடிந்தது. தி.மு.க அரசின் மீதான கோபத்தை வெளிப்படுத்துவதற்கான நேரத்தை எதிர்பார்த்து மக்கள் காத்திருந்தனர். இறுதியாக அவர்கள் அந்த வாய்ப்பை பெற்றுவிட்டனர்.
இப்போது ஆட்சியை அமைத்து தமிழகத்தை மறு சீரமைக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டு கால தி.மு.க ஆட்சியில், தமிழகம் முழுவதுமாக சீரழிக்கப்பட்டு விட்டது. மாநிலத்தின் பொருளாதாரமும் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதை மீட்டெடுப்பது என்பது எளிதான காரியமல்ல.
கடந்த 1989 முதல் 1991 வரை தி.மு.க தலைமையிலான அரசு ஆட்சி செய்த போது தமிழகத்தின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்திருந்தது. இதனால் 1991ல் ஆட்சியைப் பிடித்த எங்களுக்கு பொருளாதார நிலையை உயர்த்த வேண்டிய மிகப் பெரிய சவால் காத்திருந்தது. அந்த சவாலையும் எதிர்கொண்டு பொருளாதாரத்தை மேம்படுத்தினோம்.
1996ல் மீண்டும் ஆட்சி மாறியது. இதனால் மாநிலத்தின் பொருளாதார நிலை மீண்டும் பாதிப்புக்கு உள்ளானது. அந்த இக்கட்டான சூழ்நிலையின் போது அ.தி.மு.க 2001ல் ஆட்சியை பிடித்தது.
உலக வங்கி, ஆசிய மேம்பாட்டு வங்கி மற்றும் மத்திய திட்டக் கமிஷன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும், தமிழக பொருளாதார நிலை குறித்து கவலை தெரிவித்தன. முதல்வராக பொறுப்பேற்ற என் மீதும் அந்த அமைப்புகள் பரிதாபப்பட்டன. இந்த நிலையில் மீண்டும் பொருளாதாரத்தை அ.தி.மு.க சீர்செய்தது.
ஆனால் இந்த முறை வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு பொருளாதார பாதிப்பு தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. 2001 நிலைமையுடன் ஒப்பிடும் போது தமிழகத்தின் பிரச்னை இம்முறை 10 ஆயிரம் மடங்காக உயர்ந்துள்ளது. இதை சீர் செய்வது கடுமையான இலக்கு என்ற போதும் தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இதையும் சவாலாக எடுத்துக் கொள்வோம்.
இலங்கைத் தமிழர்கள் சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள். அவர்களின் துயரத்துக்குக் காரணம் இலங்கை அரசு தான். தமிழர்கள் என்ற முறையில் இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துத் தர வேண்டியது நம் அனைவரின் கடமை. அதற்கு நம்மால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டும்.
தமிழக முதல்வர் என்ற முறையில் இதில் ஓரளவுக்குத்தான் செய்ய முடியும். ஏனென்றால் இது சர்வதேசப் பிரச்னை இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னை. மத்திய அரசுதான் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு என்ன நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று ஏற்கெனவே ஆலோசனைகள் வழங்கியிருக்கிறேன். முதல் அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு நான் மத்திய அரசை வலியுறுத்துவேன். இதில் இந்தியா இரண்டு வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
ஒன்று போர்க்குற்றங்களுக்காக ராஜபக்க்ஷேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த இந்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். இலங்கை வாழ் தமிழர்களுக்குக் கௌரவமான, கண்ணியமான வாழ்க்கையை அமைத்துத் தர அந்த நாட்டு அரசை வற்புறுத்த வேண்டும். இலங்கை அரசு பணியவில்லை என்றால் அந்த நாட்டுக்கு எதிராக பிற நாடுகளுடன் இணைந்து பொருளாதாரத் தடை விதிக்க மத்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். இதற்கு இலங்கை அரசும், இலங்கை அதிபரும் பணிந்தாக வேண்டும்.
2-ஜி அலைக்கற்றை விவகாரத்தில் கண்காணிப்பு தொடருமா? என்ற கேள்விக்கு பதில் கூறுகையில்,"இப்போது இந்த வழக்கை உச்ச நீதிமன்றமே தனது நேரடிப் பார்வையில் எடுத்துக்கொண்டு நடத்துகிறது. எனவே அதைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை" என்றே நான் கருதுகிறேன்.
எங்கள் தேர்தல் அறிக்கையில் என்னவெல்லாம் செய்வோம் என்று உறுதியளித்திருக்கோமோ அந்த வாக்குறுதிகளை தோராயமாக ஒன்றரை ஆண்டுகளுக்குள் செய்து முடிக்க எண்ணியிருக்கிறோம்.
தமிழக மக்களுக்கு நான் சொல்ல விரும்புவதெல்லாம் கடந்த 5 ஆண்டுகளாக எவ்வளவோ அல்லல்பட்டுவிட்டீர்கள், துன்பப்பட்டு விட்டீர்கள். அதையெல்லாம் மறந்துவிடுங்கள். கண்ணீர்விட்டீர்கள். உங்கள் கண்ணீரைத் துடைத்துக்கொள்ளுங்கள். இனி சிரித்துக்கொண்டேயிருங்கள். தமிழக மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமையும் என்று உறுதி கூறுகிறேன்.
சட்டப் பேரவைத் தேர்தலை நேர்மையான, நியாயமான முறையில் நடத்திய தேர்தல் ஆணையத்துக்கு என்னுடைய பாராட்டுக்கள். வாக்காளர்களுக்கும், தேர்தலில் கடுமையாக உழைத்த கூட்டணிக் கட்சி நண்பர்களுக்கும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார் ஜெயலலிதா.
இந்த வெற்றி குறித்து ஜெயலலிதா அளித்த பேட்டியில் கூறியதாவது: அ.தி.மு.க கூட்டணிக்கு அமோக வெற்றியை கொடுத்த தமிழக மக்களுக்கு நன்றி. இது எங்களுக்கு கிடைத்த வெற்றி அல்ல. தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி. ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி. இந்தத் தேர்தலில் பண பலம் தோற்றுப் போய்விட்டது.
கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகத்தின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும், மக்கள் தி.மு.க அரசு மீது கடும் அதிருப்தியில் இருந்ததை உணர முடிந்தது. தி.மு.க அரசின் மீதான கோபத்தை வெளிப்படுத்துவதற்கான நேரத்தை எதிர்பார்த்து மக்கள் காத்திருந்தனர். இறுதியாக அவர்கள் அந்த வாய்ப்பை பெற்றுவிட்டனர்.
இப்போது ஆட்சியை அமைத்து தமிழகத்தை மறு சீரமைக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டு கால தி.மு.க ஆட்சியில், தமிழகம் முழுவதுமாக சீரழிக்கப்பட்டு விட்டது. மாநிலத்தின் பொருளாதாரமும் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதை மீட்டெடுப்பது என்பது எளிதான காரியமல்ல.
கடந்த 1989 முதல் 1991 வரை தி.மு.க தலைமையிலான அரசு ஆட்சி செய்த போது தமிழகத்தின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்திருந்தது. இதனால் 1991ல் ஆட்சியைப் பிடித்த எங்களுக்கு பொருளாதார நிலையை உயர்த்த வேண்டிய மிகப் பெரிய சவால் காத்திருந்தது. அந்த சவாலையும் எதிர்கொண்டு பொருளாதாரத்தை மேம்படுத்தினோம்.
1996ல் மீண்டும் ஆட்சி மாறியது. இதனால் மாநிலத்தின் பொருளாதார நிலை மீண்டும் பாதிப்புக்கு உள்ளானது. அந்த இக்கட்டான சூழ்நிலையின் போது அ.தி.மு.க 2001ல் ஆட்சியை பிடித்தது.
உலக வங்கி, ஆசிய மேம்பாட்டு வங்கி மற்றும் மத்திய திட்டக் கமிஷன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும், தமிழக பொருளாதார நிலை குறித்து கவலை தெரிவித்தன. முதல்வராக பொறுப்பேற்ற என் மீதும் அந்த அமைப்புகள் பரிதாபப்பட்டன. இந்த நிலையில் மீண்டும் பொருளாதாரத்தை அ.தி.மு.க சீர்செய்தது.
ஆனால் இந்த முறை வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு பொருளாதார பாதிப்பு தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. 2001 நிலைமையுடன் ஒப்பிடும் போது தமிழகத்தின் பிரச்னை இம்முறை 10 ஆயிரம் மடங்காக உயர்ந்துள்ளது. இதை சீர் செய்வது கடுமையான இலக்கு என்ற போதும் தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இதையும் சவாலாக எடுத்துக் கொள்வோம்.
இலங்கைத் தமிழர்கள் சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள். அவர்களின் துயரத்துக்குக் காரணம் இலங்கை அரசு தான். தமிழர்கள் என்ற முறையில் இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துத் தர வேண்டியது நம் அனைவரின் கடமை. அதற்கு நம்மால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டும்.
தமிழக முதல்வர் என்ற முறையில் இதில் ஓரளவுக்குத்தான் செய்ய முடியும். ஏனென்றால் இது சர்வதேசப் பிரச்னை இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னை. மத்திய அரசுதான் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு என்ன நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று ஏற்கெனவே ஆலோசனைகள் வழங்கியிருக்கிறேன். முதல் அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு நான் மத்திய அரசை வலியுறுத்துவேன். இதில் இந்தியா இரண்டு வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
ஒன்று போர்க்குற்றங்களுக்காக ராஜபக்க்ஷேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த இந்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். இலங்கை வாழ் தமிழர்களுக்குக் கௌரவமான, கண்ணியமான வாழ்க்கையை அமைத்துத் தர அந்த நாட்டு அரசை வற்புறுத்த வேண்டும். இலங்கை அரசு பணியவில்லை என்றால் அந்த நாட்டுக்கு எதிராக பிற நாடுகளுடன் இணைந்து பொருளாதாரத் தடை விதிக்க மத்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். இதற்கு இலங்கை அரசும், இலங்கை அதிபரும் பணிந்தாக வேண்டும்.
2-ஜி அலைக்கற்றை விவகாரத்தில் கண்காணிப்பு தொடருமா? என்ற கேள்விக்கு பதில் கூறுகையில்,"இப்போது இந்த வழக்கை உச்ச நீதிமன்றமே தனது நேரடிப் பார்வையில் எடுத்துக்கொண்டு நடத்துகிறது. எனவே அதைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை" என்றே நான் கருதுகிறேன்.
எங்கள் தேர்தல் அறிக்கையில் என்னவெல்லாம் செய்வோம் என்று உறுதியளித்திருக்கோமோ அந்த வாக்குறுதிகளை தோராயமாக ஒன்றரை ஆண்டுகளுக்குள் செய்து முடிக்க எண்ணியிருக்கிறோம்.
தமிழக மக்களுக்கு நான் சொல்ல விரும்புவதெல்லாம் கடந்த 5 ஆண்டுகளாக எவ்வளவோ அல்லல்பட்டுவிட்டீர்கள், துன்பப்பட்டு விட்டீர்கள். அதையெல்லாம் மறந்துவிடுங்கள். கண்ணீர்விட்டீர்கள். உங்கள் கண்ணீரைத் துடைத்துக்கொள்ளுங்கள். இனி சிரித்துக்கொண்டேயிருங்கள். தமிழக மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமையும் என்று உறுதி கூறுகிறேன்.
சட்டப் பேரவைத் தேர்தலை நேர்மையான, நியாயமான முறையில் நடத்திய தேர்தல் ஆணையத்துக்கு என்னுடைய பாராட்டுக்கள். வாக்காளர்களுக்கும், தேர்தலில் கடுமையாக உழைத்த கூட்டணிக் கட்சி நண்பர்களுக்கும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார் ஜெயலலிதா.
Similar topics
» ஒளிமயமான எதிர்காலம்!
» ஒளிமயமான எதிர்காலம்
» இந்த சுதந்திர நாளிலிருந்தாவது ஒளிமயமான எதிர்காலம் உருவாகட்டும்-விஜயகாந்த்
» உணர்ச்சிவசப்பட வேண்டாம்: தமிழக மக்களுக்கு ஜெயலலிதா வேண்டுகோள்
» காத்துக் கொண்டிருக்கிறேன்.
» ஒளிமயமான எதிர்காலம்
» இந்த சுதந்திர நாளிலிருந்தாவது ஒளிமயமான எதிர்காலம் உருவாகட்டும்-விஜயகாந்த்
» உணர்ச்சிவசப்பட வேண்டாம்: தமிழக மக்களுக்கு ஜெயலலிதா வேண்டுகோள்
» காத்துக் கொண்டிருக்கிறேன்.
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|