சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

 அதிகம் மரணத்தை ஏற்படுத்தும் நோய்கள். Khan11

அதிகம் மரணத்தை ஏற்படுத்தும் நோய்கள்.

Go down

 அதிகம் மரணத்தை ஏற்படுத்தும் நோய்கள். Empty அதிகம் மரணத்தை ஏற்படுத்தும் நோய்கள்.

Post by *சம்ஸ் Sun 7 Nov 2010 - 22:56

உலகத்திலே அதிகம் உயிரிழப்புக்ககளை ஏற்படுத்தும் முதல் பத்து நோய்களையும் இந்த இடுகையிலே பதிவிட்டிருந்தேன் . இனி அந்த நோய்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் விரிவாக எழுதலாம் என நினைக்கிறேன்.


இன்று முதலாவதாக உள்ள இதய நோய்களை பற்றிய இடுகை.

இதய வலி நோய்கள்.

நமது உடலின் அனைத்துச் செயற்பாடுகளுக்கும் ஒட்சிசன் எனப்படும் பிராண வாயுவும் குழுக்கோசு போன்ற சக்தியளிக்கும் பதார்த்தங்களும் அவசியம். அதாவது குழுக்கோசும் ஒட்சிசனும் இணைந்து நடைபெறும் ஒரு செயற்பாட்டின் மூலம் உருவாகும் சக்தியே நமது உடலின் செயற்பாட்டுக்குத் தேவையான சக்தியை வழங்குகிறது.

உதாரணத்திற்கு நாம் நடக்கும் போது எமது கால்கள் அதிகம் வேலை செய்யும் , அப்போது கால்களுக்கு சக்தியளிக்க மற்றைய பகுதிகளைவிட கால்களுக்கு அதிகம் இரத்தம் செலுத்தப்படும். ஏனென்றால் இந்த இரத்தமே ஒட்சிசன் மற்றும் குளுக்கோசை தேவையான இடத்திற்கு கொண்டு சேர்க்கும் தொழிலை செய்கின்றன.

இவ்வாறு உடலின் குறிப்பிட்ட பகுதி அதிகம் வேலை செய்யும் போது அந்தப் பகுத்திக்கு மேலதிகமாக தேவைப்படும் ஓட்சிசம் மற்றும் குளுக்கோசு இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் வழங்கப் படும்.

இவ்வாறு உடலின் எல்லாப் பகுதிக்கும் இரத்தத்தை வழங்கும் உறுப்பு இதயமாகும். இதயம் துடிப்பதன் மூலமே உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் இரத்தம் கடத்தப் படுகிறது.

இதயாமனது தொடர்ந்து துடித்துக் கொண்டேதான் இருக்கும். அதாவது நமது இதயம் தொடர்ந்து வேலை செய்து கொண்டேதான் இருக்கும். இவ்வாறு தொடர்ந்து வேலை செய்வதற்காக இதயத்திற்கும் தொடர்ந்து சக்தி தேவைப் படுகிறது. மற்றைய பகுதிகளுக்கு ரத்தம் செல்வதைப் போல தொடர்ந்து துடித்துக் கொண்டிருக்கும் இதயத்தின் தசைகளுக்கும் இரத்தம் குருதிக் குழாய்கள் மூலம் செலுத்தப்படுகிறது.

இவ்வாறு இதயத்திற்கு குருதியை எடுத்துச் செல்லும் குருதிக் குழாய்களில் அடைப்பு ஏற்படும் போது இதயத்தின் தசைகள் துடிப்பதற்குத் தேவையான சக்தியை உருவாக்குவதற்குரிய ஒட்சிசன் மற்றும் குளுக்கோசு கிடைக்காமல் போகின்ற போது வலி ஏற்படும் .அடைப்பு நிரந்தரமானது என்றால் இதயம் செயல் இழக்கும். இதுவே பொதுவாக இதய வலி நோய்கள் எனப்படுகின்றன(ischemic heart disease)

அடைப்பின் தன்மையைப் பொறுத்து இந்த நோயின் தீவிரம் பிரிக்கப்படுகிறது.

சில பேரில் இந்த அடைப்பு சிரிதலவானதாக இருக்கும். இப்படியானவர்களுக்கு ஓய்வாக இருக்கும் போது இதயத்திற்கு செல்லும் இரத்தத்தின் அளவு போதியதாக இருப்பதால் ஓய்வாக இருக்கும் வேளையில் நோ (வலி) ஏற்படாது. ஆனாலும் இவர்கள் சற்று வேலை செய்யும் போது இதயம் அதிகம் துடிப்பதால் இதயத்திற்கு அதிக இரத்தம் தேவைப்படும் போது அடைப்பு காரணமாக அதிக இரத்தம் செல்ல முடியாமல் போவதால் வலி ஏற்படும் .அவ்வாறு வலி ஏற்படும் சந்தர்ப்பத்தில் அவர்கள் வேலையை நிறுத்தி சற்று ஓய்வெடுத்துக் கொண்டால் வலி மறைந்து விடும். இது நிலையான அன்ஜைனா(Stable angina) எனப்படும்.

அடுத்ததாக ஓய்வாக இருக்கும் போதே இதயம் துடிப்பதற்குத் தேவையான இரத்தம் வழங்க முடியாத அளவு அடைப்பு ஏற்படலாம். ஆனாலும் அந்த அடைப்பு ரத்தக் குழாயை முழுவதுமாக அடைத்துவிடாத படியால் இதய தசைகள் செயழ் இழப்பதில்லை( இறப்பதில்லை). ஆனாலும் இவர்கள் ஓய்வாக இருக்கும் போதே நெஞ்சு வலியை உணர்வார்கள்.இது நிலையற்ற அன்ஜைனா (unstable angina) எனப்படும்.

அடுத்ததாக இதயத்திற்கு இரத்த ஓட்டம் முற்றாக தடை படுவதால் ஏற்படுகின்ற மாரடைப்பு . இதயத்திற்கு பல குருதி குழாய்கள்(நாடி) இரத்தம் வழங்குகிறது.இந்த இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்ட இரத்தக் குழாய் குருதி வழங்கும் இதயத்தின் பகுதி செயல் இழக்கும் அபாயம் ஏற்படுகிறது.மாரடைப்பு மருத்துவத்திலே myocardial infarction எனப்படுகிறது myocardiam என்பது இதயத்தின் தசைகளையும் infarction எனபது செயல் இழப்பதையும்குறிக்கும்.

இனி குருதிக் குழாய்களில் எப்படி இந்த அடைப்பு ஏற்படுகிறது என்று பார்ப்போம்.

குருதிக் குழாய்களின் உள்ளே கொழுப்புப் படிவுகள் மற்றும் பல பதார்த்தங்கள் மூலம் ஏற்படுகின்றது. இதிலே முக்கிய பங்கு வகிப்பது கொலஸ்ரோல் எனப்படும் கொழுப்பாகும். இந்தப் படிவுகள் (plaque) குருதிக் குழாயின்உள்ளே உள்ள போது இரத்த ஓட்டம் குறைந்து மேலே சொன்ன முதல் இரண்டு விதமான தீவிரமுடைய இதய வலி ஏற்படும்.சில பேரில் இந்த படிவுகள் வெடித்து அதைச் சுற்றி ரத்தம் உறைந்து அந்த இரத்தக் குழாயை அடைப்பதனால் மாரடைப்பு என்ற இறுதி நிலை ஏற்படும்.



யார் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்கள்
இதை தடுப்பதற்கான வழிமுறைகள்
இதற்கான மருத்துவ முறைகள் என்பவை அடுத்த இடுகையில்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum