சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

கைபேசியால் வரும் தொல்லைகள்  Khan11

கைபேசியால் வரும் தொல்லைகள்

2 posters

Go down

கைபேசியால் வரும் தொல்லைகள்  Empty கைபேசியால் வரும் தொல்லைகள்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 4 Jun 2011 - 9:11

இந்த 21-ம் நூற்றாண்டில் நம் நாட்டில் மற்ற துறைகளைக் காட்டிலும் தகவல் தொடர்புத் துறையில் மிகப் பெரிய புரட்சி நடந்திருக்கிறது. குறிப்பாக, கைபேசி (செல்போன்) வருகையால் வணிகர்கள், அலுவலர்கள், மாணவர்கள் எனப் பல்வேறு தரப்பட்ட மக்களுக்கும் பயனுள்ள தகவல் தொடர்பு சாதனமாக மாறி, தற்போது, அது அத்தியாவசியப் பொருளாகவும் நிலைபெற்றுவிட்டது.

கைபேசியால் பல்வேறு பயன்களை நாம் அனுபவித்து வந்தாலும், மறுபுறம் சில வேதனைகளையும் சந்திக்க நேரிடுகிறது. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செய்யும் சில விரும்பத்தகாத செயல்களே இதற்குக் காரணம். இதில், தேவையற்ற அழைப்புகள் உபயோகிப்பாளர்களுக்கு பெரும் பிரச்னையாக உருவாகியுள்ளன. இந்தத் தேவையற்ற அழைப்புகளால் முக்கிய அலுவல்களில் இருக்கும் உபயோகிப்பாளர்களின் கவனம் திசை திரும்புவதுடன், பணியிடையே தொந்தரவும் அளிக்கிறது என்பதுதான் உண்மை.

கைபேசி என்பது முக்கியத் தகவல்களை மட்டும் பரிமாறிக் கொள்ளும் சாதனமாக இருக்க வேண்டுமே தவிர, அது உபயோகிப்பாளர்களுக்கு வேதனை தரும் வகையில் இருக்கக்கூடாது. புதிதாக கைபேசி வாங்கும் ஒருவர் தனக்குப் பிடித்தமான தனியார் தொலைபேசி நிறுவனத்தில் தொகுப்பி அட்டை (சிம்கார்டு) வாங்கி தனக்கான தொடர்பு எண்ணைப் பதிவு செய்கிறார் என்றால், அந்த எண்ணை யார், யாருக்கு அளிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதில் அந்த நபருக்கு மட்டுமே உரிமை உண்டு. ஆனால், தற்போது இதற்கு மாறாக குறிப்பிட்ட அந்தத் தனியார் தொலைபேசி நிறுவனத்துடன் தொடர்பு கொண்டுள்ள சில டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்கள் கைபேசி வைத்திருப்பவர்களின் எண்களை வாங்கி தங்களது வருமானத்துக்காக தனிநபர் கடன், துணி, நகைக் கடைகளில் தள்ளுபடி போன்ற தேவையற்ற குறுந்தகவல்களை அனுப்பி வருகின்றன. இதனால் வரும் சில தகவல்கள் சிலருக்கு உபயோகமாக இருந்தாலும், பெரும்பாலானோரைப் பாதிக்கிறது என்பதே உண்மை.

இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது வரும் அழைப்புகளை எடுத்துப் பேசினால் நாங்கள் குறிப்பிட்ட வங்கியிலிருந்து பேசுகிறோம்;

வீடு கட்டக் கடன் தருகிறோம் என்றதும் நம்முடைய கவனம் திசை திரும்புகிறது. அச்சமயம், நாம் வாகனத்தை நிறுத்திவிட்டுப் பேசினால் விபத்தின்றி தப்பிக்கலாம். இந்த அவசர யுகத்தில் பெரும்பாலானவர்கள் கைபேசியில் பேசிக் கொண்டே செல்கின்றனர். இதனால், விபத்தில் சிக்க நேரிடுகிறது. இதுபோல, நின்று பேசுவதால், நேரம் விரயமாவதுடன், பல்வேறு பிரச்னைகளுக்கும் ஆளாகும் சூழல் உருவாகிறது. மேலும், வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இதுபோன்ற தேவையற்ற அழைப்புகளில் உங்களுக்கு வீடு கட்டக் கடன் தருகிறோம்; தனிநபர் கடன் குறைந்த வட்டியில் தருகிறோம்; இது தொடர்பாக பேசுவதற்குச் சிறிது நேரம் ஒதுக்க முடியுமா? எனக் கூறுகின்றனர். இதனால், விவரம் தெரியாத பல பெண்கள் தேவையற்ற குழப்பத்துக்கு ஆளாகின்றனர். சில வீடுகளில் தேவையற்ற சர்ச்சைகள் உருவாவதற்கும் இந்த அழைப்புகள் காரணமாக அமைகின்றன.

அண்மையில், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தனது சக அமைச்சர்களுடன் முக்கிய அலுவலில் ஈடுபட்டபோது, சிணுங்கிய கைபேசியை எடுத்துப் பேசியுள்ளார். அப்போது, அவரது முகம் இறுகிய முகமாக மாறியதாகத் தெரிகிறது. காரணம், அவருக்கு வந்த அழைப்பில் உங்களுக்கு வீடு கட்டக் கடன் தருகிறோம் என்ற அழைப்புதான். இதையடுத்து, மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா உடனடியாகத் தனது துறை அலுவலர்களைத் தொடர்பு கொண்டு, தேவையற்ற அழைப்புகளை இனி அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட்டிருக்கிறார். இதேபோல, உலகப் பணக்காரர்கள் தரவரிசையில் இருக்கும் அம்பானிக்கே வீடு கட்ட அழைப்பு விடுத்த சம்பவம் அண்மையில் நடந்ததாகவும் ஊடகங்களில் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று தேவையற்ற அழைப்பைப் தவிர்ப்பது குறித்து குறிப்பிட்ட தனியார் தொலைபேசி நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவையைத் தொடர்பு கொண்டால், உங்களுக்கு வரும் தேவையற்ற அழைப்பை ரத்து செய்ய குறிப்பிட்ட குறியீட்டை "டைப்' செய்து அவர்கள் குறிப்பிடும் எண்ணுக்குக் குறுந்தகவல் அனுப்பினால், தங்களுக்கு வரும் தேவையற்ற அழைப்புகள், குறுந்தகவல்கள் ரத்து செய்யப்படும் எனத் தனியார் நிறுவனங்கள் கூறுகின்றன. ஆனால், டெலி மார்க்கெட்டிங் நிறுவனத்துக்கு நமது அனுமதியில்லாமல் கைபேசி தொடர்பு எண்ணைக் கொடுத்துள்ள தொலைபேசி நிறுவனங்கள் அதனை ரத்து செய்வதற்கு நமது கைபேசியிலிருந்தே குறுந்தகவல் அனுப்பக் கூறுவது வேடிக்கையாகவும், வேதனையாகவும் உள்ளது. அதற்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மேலும், தனியார் தொலைபேசி நிறுவனத்திடமிருந்து வரும் அழைப்புகளைத் தொடர்புகொண்டால், "நீங்கள் எங்களுடன் ஜாலியாக அரட்டை அடிக்க வேண்டுமா?' உடனே குறிப்பிட்ட எண்ணை அழுத்துமாறு கூறுகின்றனர். இதனை அழுத்தாமல் விட்டுவிட்டால் நாம் தப்பினோம், வயோதிகர்கள் அறியாமை காரணமாக கை தவறி ஏதோ ஒரு பட்டனை அழுத்துவதற்குப் பதிலாக அவர்கள் குறிப்பிட்ட எண்ணை அழுத்திவிட்டால் அவ்வளவுதான். நமது கைபேசிக்கான தொகை இருப்பு குறைந்துவிடும். இது தொலைபேசி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தரும் மற்றொரு வேதனை. எனவே, தனியார் தொலைபேசி நிறுவனங்களிடம் இருந்து கைபேசி உபயோகிப்பாளர்களின் எண்களைப் பெறும் டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு உள்ள கட்டுப்பாடுகளை முறைப்படுத்த வேண்டும். இந்தப் பிரச்னையில் அரசு விதிகளைக் கடுமையாக அமல்படுத்தினால் மட்டுமே தேவையற்ற வேதனைகளிலிருந்து விடுபட முடியும்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கைபேசியால் வரும் தொல்லைகள்  Empty Re: கைபேசியால் வரும் தொல்லைகள்

Post by ஜிப்ரியா Sat 4 Jun 2011 - 9:44

இதனால தான் நான் கைபேசி பயன் படுத்துவதே இல்லை.. :”:
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

கைபேசியால் வரும் தொல்லைகள்  Empty Re: கைபேசியால் வரும் தொல்லைகள்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 4 Jun 2011 - 9:53

அதற்காக அவசியத்தேவைகளுக்கு பயன்படுத்தால் இருக்க முடியாதே


கைபேசியால் வரும் தொல்லைகள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கைபேசியால் வரும் தொல்லைகள்  Empty Re: கைபேசியால் வரும் தொல்லைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum