Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
பேரூந்தில் அழும் பயணி
+2
ஜிப்ரியா
செய்தாலி
6 posters
Page 1 of 1
பேரூந்தில் அழும் பயணி
நான் இந்த ஊருக்குசெல்பவன்
நெற்றியில் முகவரி அடையாளம்
பயணிகளை களவாடும் பேரூந்து
ஒவ்வொரு மனிதர்களுக்கும்
ஒவ்வொரு பயணக் காரணங்கள்
முடிவின்றி தொடரும் பயணங்கள
எங்கிருந்தோ வந்த மனிதர்கள்
ஏறி அமர்ந்தனர் எங்கோபோவதற்கு
முனங்கலுடன் புறப்பட்ட பேரூந்து
எங்க போறீங்க எழும்வினாக்கள்
ஒரேஇருக்கையில் தெரிந்தவர் தெரியாதவர்
புன்னகையில் பரிமாறப்பட்டது அறிமுகங்கள்
பின்னோக்கி ஓடும் மரம்செடிகள்
வேகத்தில் தொலையும் சிற்றூர்கள்
தூரங்களை விழுங்கியபடி பேரூந்து
ஜன்னலோரங்களில் வெளி ரசிப்பவர்கள்
ஊர் உறவுக்கதைகள் பேசுபவர்கள்
சொல்லின் நர்மத்திற்கு புன்னகைப்பவர்கள்
பீரிட்ட வேகத்தில் பேரூந்து
ஜன்னலுடன் சண்டையிடும் காற்று
சப்தங்கள்தொலைந்து மௌனத்தில் பயணிகள்
கடைசி இருக்கையில் இருந்து
பயணிகளின் காதை நிரப்பியது
ஒசைத்யற்ற ஓர் அழுகைக்குரல்
விழிகளில் வடியும் கண்ணீர்
சோகம் சுமந்த முகம்
சலனங்கள் போர்த்திய உருவம்
இருக்கையில் உறைக்காத இருப்பு
கைகடிகாரத்தை அடிக்கடி உற்றுப்பார்த்தால்
தன்ஊரை எதிர்பார்த்து அவர்
எதற்கோ அந்தமனிதர் அழுகிறார்
காரணம் புலப்படாத சகபயணிகள்
விழிகளால் வீசினார்கள் அனுதாபங்களை
துக்கத்தில் மனமிழகிய சகபயணி
மென்குரலில் அழுகையில் காரணம்கேட்க
விதும்பலுடன் இதழ் திறந்தார்
வீட்டு முற்றத்தில் காத்துகிடக்குது
குளிக்கையில் ஆற்றில் மூழ்கியிறந்த
பெற்ற ஒத்தமகனின் சடலம்
சொல்லின் முடிவில் அழுகை
தாரைதாரையாக கண்ணீர் துளிகள்
கேட்டு நின்ற விழிகளில்
அனுதாப சங்கடத்துடன் பேரூந்துபயணிகள்
ஆறுதல் சொல்லியபடி சகபயணி
ஊர்வரை அழுதுகொண்டு அவர்
Last edited by செய்தாலி on Mon 6 Jun 2011 - 10:34; edited 3 times in total
Re: பேரூந்தில் அழும் பயணி
வீட்டு
முற்றத்தில் காத்துகிடக்குது
குளிக்கையில் ஆற்றில் மூழ்கியிறந்த
பெற்ற ஒத்தமகனின் சடலம்
இந்த விடயத்தை மையமாகக் கொண்ட உங்கள் கவிதை வரிகளை என்னவென்று சொல்வது..கண் முன்னே ஓர் பேரூந்துப் பயணத்தை காட்டிவிட்டீர்கள் இக் கவிதையில்..அபாரம் அருமை.. :!@!:
Re: பேரூந்தில் அழும் பயணி
jiffriya wrote:வீட்டு
முற்றத்தில் காத்துகிடக்குது
குளிக்கையில் ஆற்றில் மூழ்கியிறந்த
பெற்ற ஒத்தமகனின் சடலம்
இந்த விடயத்தை மையமாகக் கொண்ட உங்கள் கவிதை வரிகளை என்னவென்று சொல்வது..கண் முன்னே ஓர் பேரூந்துப் பயணத்தை காட்டிவிட்டீர்கள் இக் கவிதையில்..அபாரம் அருமை.. :!@!:
இதே கருத்தை நானும் வழி மொழிகிறேன் ஜிப்ரியா
கண் முன்னே காண்பது போன்றுள்ளது
நன்றி கவியே
#heart
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பேரூந்தில் அழும் பயணி
jiffriya wrote:வீட்டு
முற்றத்தில் காத்துகிடக்குது
குளிக்கையில் ஆற்றில் மூழ்கியிறந்த
பெற்ற ஒத்தமகனின் சடலம்
இந்த விடயத்தை மையமாகக் கொண்ட உங்கள் கவிதை வரிகளை என்னவென்று சொல்வது..கண் முன்னே ஓர் பேரூந்துப் பயணத்தை காட்டிவிட்டீர்கள் இக் கவிதையில்..அபாரம் அருமை..
நாம் சொல்லப்போகும் நிகழ்வு இரண்டு அல்லது மூன்று வரிகளுக்குள் அடங்கும்
அதை வெறுமனே சொன்னால் சுவராசியமாக இருக்காது தோழி
ஒரு நிகழ்வு அந்த நிகழ்வை சுற்றி சில நிகழ்வுகள்
அவைகளை பதிவு செய்கையில் சொல்லும் நிகழ்வு முளுமையாகுகிறது
உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி தோழி
Re: பேரூந்தில் அழும் பயணி
மீனு wrote:jiffriya wrote:வீட்டு
முற்றத்தில் காத்துகிடக்குது
குளிக்கையில் ஆற்றில் மூழ்கியிறந்த
பெற்ற ஒத்தமகனின் சடலம்
இந்த விடயத்தை மையமாகக் கொண்ட உங்கள் கவிதை வரிகளை என்னவென்று சொல்வது..கண் முன்னே ஓர் பேரூந்துப் பயணத்தை காட்டிவிட்டீர்கள் இக் கவிதையில்..அபாரம் அருமை..
இதே கருத்தை நானும் வழி மொழிகிறேன் ஜிப்ரியா
கண் முன்னே காண்பது போன்றுள்ளது
நன்றி கவியே
மிக்க நன்றி மீனு
Re: பேரூந்தில் அழும் பயணி
சோகமான சம்பவம் ஒன்று கவிதையாக உங்கள் தயவில் காணமுடிந்தது சகோ
உண்மையில் இக்கவிதையினை பார்த்த போது இன்று எனது பயணத்தில் ஒரு காட்சி ஞாபகம் வந்தது
அதாவது நாம் நாட்டிலும் சரி எங்கும் சரி முதியவரைக்கண்டால் அவருக்கு இருக்கை கொடுத்து நாம் எழுந்து நிற்பது வழமை ஆனால் இன்று ஒரு முதியவர் இருக்கையின்றி அவஸ்தைப்பட்டார் இருக்கையில் அமர்நதிருந்தவர்கள் அனைவரும் வாலிபர்கள் மனதுக்கு மிகவும் வேதனையாக இருந்தது
என்ன மனிதர்கள் இவர்கள் ஒருத்தரின் மனம் இறங்கவில்லையே என்று அதை நினைக்கச்சொய்தது உங்கள் கவிதை
இவைகள்தான் மாற வேண்டும் சமூகத்தில் நன்றி
உண்மையில் இக்கவிதையினை பார்த்த போது இன்று எனது பயணத்தில் ஒரு காட்சி ஞாபகம் வந்தது
அதாவது நாம் நாட்டிலும் சரி எங்கும் சரி முதியவரைக்கண்டால் அவருக்கு இருக்கை கொடுத்து நாம் எழுந்து நிற்பது வழமை ஆனால் இன்று ஒரு முதியவர் இருக்கையின்றி அவஸ்தைப்பட்டார் இருக்கையில் அமர்நதிருந்தவர்கள் அனைவரும் வாலிபர்கள் மனதுக்கு மிகவும் வேதனையாக இருந்தது
என்ன மனிதர்கள் இவர்கள் ஒருத்தரின் மனம் இறங்கவில்லையே என்று அதை நினைக்கச்சொய்தது உங்கள் கவிதை
இவைகள்தான் மாற வேண்டும் சமூகத்தில் நன்றி
Last edited by சாதிக் on Mon 6 Jun 2011 - 11:17; edited 1 time in total
Re: பேரூந்தில் அழும் பயணி
இரண்டாவது முறை படிக்கையில் எனக்கு கண்ணீரும் வந்து விட்டது :!#: :!#:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பேரூந்தில் அழும் பயணி
சாதிக் wrote:சோகமான சம்பவம் ஒன்று கவிதையாக உங்கள் தயவில் காணமுடிந்தது சகோ
உண்மையில் இக்கவிதையினை பார்த்த போது இன்று எனது பயணத்தில் ஒரு காட்சி ஞாபகம் வந்தது
அதாவது நாம் நாட்டிரும் சரி எங்கும் சரி முதியவரைக்கண்டால் அவருக்கு இருக்கை கொடுத்து நாம் எழுந்து நிற்பது வழமை ஆனால் இன்று ஒரு முதியவர் இருக்கையின்றி அவஸ்தைப்பட்டார் இருக்கையில் அமர்நதிருந்தவர்கள் அனைவரும் வாலிபர்கள் மனதுக்கு மிகவும் வேதனையாக இருந்தது
என்ன மனிதர்கள் இவர்கள் ஒருத்தரின் மனம் இறங்கவில்லையே என்று அதை நினைக்கச்சொய்தது உங்கள் கவிதை
இவைகள்தான் மாற வேண்டும் சமூகத்தில் நன்றி
மனித நேயம் சில மனிதர்களில் மறித்து போய் இருக்கிறது
அதற்கு காரணங்களாக அமைகிறது இன்றைய சமூக சூழல்
என்ன செய்ய உறவே சில மனிதர்கள் அப்படித்தான்
மிக்க நன்றி உறவே
Re: பேரூந்தில் அழும் பயணி
மீனு wrote:இரண்டாவது முறை படிக்கையில் எனக்கு கண்ணீரும் வந்து விட்டது
பிறர் துக்கங்களில் ஒருவர் அழுகையில்
அவருக்கு நெருக்கமானவனாகிறான் இறைவன்
உங்கள் இளகிய மனதிற்கு நன்றி மீனு
Re: பேரூந்தில் அழும் பயணி
:”@: :”@: :!@!:செய்தாலி wrote:மீனு wrote:இரண்டாவது முறை படிக்கையில் எனக்கு கண்ணீரும் வந்து விட்டது
பிறர் துக்கங்களில் ஒருவர் அழுகையில்
அவருக்கு நெருக்கமானவனாகிறான் இறைவன்
உங்கள் இளகிய மனதிற்கு நன்றி மீனு
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பேரூந்தில் அழும் பயணி
மீனு wrote:செய்தாலி wrote:மீனு wrote:இரண்டாவது முறை படிக்கையில் எனக்கு கண்ணீரும் வந்து விட்டது
பிறர் துக்கங்களில் ஒருவர் அழுகையில்
அவருக்கு நெருக்கமானவனாகிறான் இறைவன்
உங்கள் இளகிய மனதிற்கு நன்றி மீனு
Re: பேரூந்தில் அழும் பயணி
உங்கள் கவிதை படிக்கும் போது அந்த அழும் நபர் என் கண்களில் தோண்றுகிறார் இந்த கவிதை என் கண்ணை கலங்க செய்து விட்டது நன்றி செய்தாலி
கவிதை பொதுநலம்
அருமை அருமை.
கவிதை பொதுநலம்
அருமை அருமை.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பேரூந்தில் அழும் பயணி
நண்பன் wrote:உங்கள் கவிதை படிக்கும் போது அந்த அழும் நபர் என் கண்களில் தோண்றுகிறார் இந்த கவிதை என் கண்ணை கலங்க செய்து விட்டது நன்றி செய்தாலி
கவிதை பொதுநலம்
அருமை அருமை.
உறவே என் பெருந்தொகையே மிக்க நன்றி
Re: பேரூந்தில் அழும் பயணி
உண்மையின் எண்ணம் பேருந்தில் கவிதையாக ,அருமை நண்பரே .இன்னும் தொடருங்கள் ...
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: பேரூந்தில் அழும் பயணி
kalainilaa wrote:உண்மையின் எண்ணம் பேருந்தில் கவிதையாக ,அருமை நண்பரே .இன்னும் தொடருங்கள் ...
மிக்க நன்றி தோழரே
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|