சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» முடிவுகளை நீயே எடுக்கப் பழுகு!
by rammalar Today at 17:20

» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்
by rammalar Today at 15:10

» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04

» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

குமாரும் திருடனும் Khan11

குமாரும் திருடனும்

2 posters

Go down

குமாரும் திருடனும் Empty குமாரும் திருடனும்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 11 Jun 2011 - 11:41

குமார் தனது வீட்டின் ஒரே மகன். அவன் ஒரு தைரியசாலியும் கூட, கிராமபுரத்தில் வசித்து வரும் அவர்களது குடும்பம் ஓரளவு வருமானத்தில் வாழ்கிறது.

ஒருநாள் குமாரின் பெற்றோர்களுக்கு, தங்களின் நெருங்கிய உறவினரின் இறுதிச் சடங்கிக்கிற்கு கட்டாயம் செல்ல நேரிட்டது. அத்தோடு குமாருக்கு அடுத்த நாள் பள்ளியில் முக்கிய பரீட்சை உள்ளதால் அவனை வீட்டில் விட்டுச் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது. ஆகவே பக்கத்து வீட்டுக்காரரான சிவா அங்கிளின் பொறுப்பில் குமாரை விட்டுவிட்டு முதல்நாள் காலையிலே அங்கு புறப்பட்டுச் சென்றனர்.

குமார் அன்று பள்ளியிலிருந்து வீடு திரும்பினான், சிவா அங்கிள் தந்த அன்றைய மதிய உணவை சாப்பிட்டு விட்டு தனது வீட்டில் பரீட்சைக்கு படிக்கத் தொடங்கினான். மாலை இருட்டத் தொடங்கியது. குமாரின் பெற்றோர் அடுத்த நாளே வந்து விடுவதாக சொல்லி இருந்தனர். அவர்களையே நினைத்தபடி குமார் பாடங்களை படித்துக் கொண்டிருந்தான். மாலை 7 மணியளவில் சிவா அங்கிள் குமாரின் வீட்டுக் வந்தார். "வாங்க அங்கிள்" என்றான். "குமார் படிக்கிறியா? நல்லாப் படிப்பா, இந்தா இது டினருக்கு சாப்பிட்டுரு" என்று அன்றைய இரவு உணவை கொடுத்து விட்டு, கவனமாக கதவுகளை மூடிவிட்டு உறங்குமாறும், ஏதும் பிரச்சனை என்றாள் தன்னை கூப்பிடுமாறும் சொல்லிவிட்டுச் சென்றார்.

குமாரும் உணவை சாப்பிட்டு விட்டு, நாளை பரீட்ச்சைக்கு ஏற்ப தன்னைத் தயார்படுத்திக் கொண்டான். பின் உறக்கம் கண்களை தழுவ, கதவுகளை சரியயாக மூடிவிட்டு மேல் மாடியில் இருக்கும் தன் அறைக்குச் சென்று கட்டிலில் படுத்துக் கொண்டான். எப்போதும் தன் பெற்றோரிடம் சொல்லிவிட்டுதான் படுப்பான், அன்று மற்றும் ஒரு மாதிரியாய் இருந்தது. நன்றாக உறங்கிக் கொண்டிருந்த குமாருக்கு ஏதோ ஒரு சத்தம் அவன் காதுக்கு எட்டியது, திடுக்கிட்டு விழித்தான். அது பிரம்மையாய் இருக்கும் என்று மனதை சாமாதானம் செய்துக் கொண்டான். மறுபுறம் சாய்ந்து கண்களை மூடிக்கொண்ட குமாருக்கு உறக்கம் வரவில்லை. மீண்டும் அதே சத்தம் கேட்க கொஞ்சம் பயந்தான். ஆனால் சற்று கூர்ந்து கேட்டான், தன் வீட்டுச் சமயலறையில் பாத்திரங்கள் உருளும் சத்தம், ஆக யாரோ திருடன் உள்ளே புகுந்திருக்கக் கூடும் என்று உகித்தான். இருப்பினம் அது பூனையாகவும் இருக்குமோ என்று யோசித்த குமாருக்கு உடனே பதில் கிடைத்தது. வேறு சில சத்தங்களும் கேட்க அது திருடனாகத்தான் இருப்பான் என்று முடிவு செய்தான்.

குமாருக்கு நாம் ஏதும் சத்தம் போட்டால் திருடன் நிச்சயம் தப்பித்து விடுவான், ஆக ஏதாவது செய்து திருடனை பிடிக்க வேண்டும் என்ற துணிச்சல் ஏற்பட்டது. குமாரின் தந்தை அவனுக்கு ஒரு கைப்பேசி தந்து விட்டுச் சென்றது நினைவு வர, உடனே அதைத் தேடினான். நல்லவேளை குமாரின் கட்டிலின் அருகே உள்ள மேசையில் இருந்ததால் சற்றேன்று எடுத்துக் கொண்டான். முன் எச்சரிக்கைக்காக கைப்பேசியில் சிவா அங்கிளின் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டான். "ஹலோ அங்கிள், நான் குமார்தான் பேசுறன், எங்க வீட்ட திருடன் புகுந்து இருக்கிறான், என்று நினைக்கிறேன், நீங்க உடனே காவல் நிலையத்துக்கு அறிவித்து, சத்தமில்லாம வாங்க" என்று மிக மெதுவாகவும் விரைவாகவும் சொல்லிவிட்டு கைப்பேசியை வைத்தான்.

மேலும் சில சத்தங்கள் மெதுவாக குமாருக்கு கேட்டது. திருடன் இன்னும் ஏதோ எடுத்துக் கொண்டுதான் இருக்கிறான் என்று உறுதிப் படுத்திக் கொண்டான். ஆனால் தானும் எச்சரிக்கையாக இருக்கவேண்டுமே என்று யோசித்தான், மெல்ல கட்டிலிருந்து எழுந்தான். அறை சிறிது வெளிச்சமாகவே இருந்தது, தனது பேட்டை தேடி கையில் எடுத்து வைத்துக் கொண்டான். தன் அறைக் கதவின் அருகே போய் நின்று திருடன் எங்கே என்று சத்தத்தின் மூலம் உணர்ந்தான். திருடன் இன்னும் மேலே ஏறவில்லை என்று தனக்குள் கூறினான். பின் தன் அறைக்கதவை இலேசாக திறந்து வெளியே வந்தான். தன் காலடிகளை மெதுவாக எடுத்து வைத்து நடந்தான். திருடனைத் தேடி கவனமாக மாடிப்படியில் கீழே இறங்கி வந்தான்.

திருடன் தன் வேலையை சமையலறையில் முடித்து விட்டு அங்கிருந்து வெளியேறிக் கொண்டிருந்தான். அவ் இருட்டிலும் திருடனின் நிழல் குமாரின் கண்களுக்கு தெரிந்தது. அத் திருடன் தன் கையில் கத்தி போன்ற ஆயுதம் வைத்திருப்பதை கவனித்தான். குமார் சற்று பதட்டப்பட்டாலும் மாடிப்படியின் பின்பக்கமாக ஒழிந்துக்கொண்டான், எப்படியும் இன்னும் சிறிது நேரத்தில் ராஜு அங்கிளும் காவல் அதிகாரிகாரிகளும் வந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் திருடனின் நடவடிக்கைகளை கவனிக்கத் தொடங்கினான். திருடன் மாடிப்படியில் ஏறிக்கொண்டிருந்தான். குமார் கடவுளையும் வேண்டிக் கொண்டிருந்தான்.

திருடன் தன் அறைக்குள் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தான், சிறிது நேரத்தில் இலேசாக முன் கதவு தட்டும் சத்தம். புரிந்து கொண்ட குமார் கதவின் அருகே சென்று மெல்ல திறந்தான். அப்போதுதான் குமாருக்கு உயிர் வந்தது போல உணர்வு. ஆம் அங்கே சிவா அங்கிளும் காவல் அதிகாரிகள் மூன்று பேரும் நின்று கொண்டிருந்தனர். குமார் உடனே மேல் மாடியில்தான் திருடன் உள்ளான் என்பது போல கையால் சைகை காட்டினான். காவல் அதிகாரிகளும் சப்தம் இன்றி மேல் மாடிக்கு விரைந்து, லாவகமாக திருடனை பிடித்தனர். அவன் திருடிய பொருட்களை மீட்டனர்.

காவால் அதிகாரி அவனை காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லுமாறு கூறிவிட்டு குமாரிடம் வந்து "நல்ல காரியம் செய்திருக்க குமார், இவன் இந்தப் பகுதியில் பல திருட்டுக்களை செய்துவிட்டு எங்களிடமிருந்து தப்பித்து வந்தான், இன்று வசமாக மாட்டிக் கொண்டான், உனக்கு ஒன்றும் ஆக வில்லையே?" என்று கேட்டார். குமாரும் இல்லை என்று கூறியதுடன் தான் தற்காப்புக்காக தனது பேட்டை கையில் வைத்திருந்ததாகவும் கூறினான். "நல்லது, அப்படிதான் தைரியமாகவும் எச்சரிக்கையாவும் இருக்கனும்" என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். சிவா அங்கிளும் "நல்ல வேலை சீக்கிரமா எனக்கு தகவல் சொன்ன இல்லாட்டி அவ்வளவுதான்" என்றார். அத்தோடு குமாரின் பெற்றோர் வரும் வரை அவனை தன் வீட்டிலேயே தங்கச் செய்தார். குமாரும் சிவா அங்கிளுக்கு தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டான்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

குமாரும் திருடனும் Empty Re: குமாரும் திருடனும்

Post by *சம்ஸ் Sat 11 Jun 2011 - 13:57

முக்கியமான நேரத்தில் நாம் சிந்திக்க மரப்பது உண்டு அவசரப்படுவோம் அப்படி இல்லாமல் நிதானமாக சிந்திதால் அனைத்தும் நன்றாக நடக்கும் சிறந்த ஒரு கதை நன்றி பாஸ் பகிர்விற்க்கு


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

குமாரும் திருடனும் Empty Re: குமாரும் திருடனும்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 11 Jun 2011 - 14:32

:];: :];: :];:


குமாரும் திருடனும் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

குமாரும் திருடனும் Empty Re: குமாரும் திருடனும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum