Latest topics
» கோபத்தை அடக்க சிறந்த வழி!by rammalar Yesterday at 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Yesterday at 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
சென்னை மாநகராட்சி மன்ற முதல் கூட்டம் அடிதடியில் இனிதே துவங்கியது
3 posters
Page 1 of 1
சென்னை மாநகராட்சி மன்ற முதல் கூட்டம் அடிதடியில் இனிதே துவங்கியது
சென்னை மாநகராட்சி மன்ற முதல் கூட்டம் அடிதடியில் துவங்கியது. திமுக கவுன்சிலர்கள் மீது அதிமுக கவுன்சிலர்கள் செருப்பு, தண்ணீர் பாட்டில் வீசி ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மாநகராட்சி 200 வார்டுகளாக விரிவாக்கம் செய்யப்பட்டு தேர்தல் நடந்தது.
இதில் 168 வார்டுகளில் அதிமுக வெற்றி பெற்றது. 2 சுயேட்சைகளும் அதிமுகவில் இணைந்தனர். இதனால் அதிமுகவின் பலம் 170 ஆனது. திமுக 24, காங்கிரஸ் 2, பாமக, தேமுதிக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் தலா ஒரு இடங்களை கைப்பற்றியது.
கடந்த சனி, ஞாயிற்றுகிழமைகளில் மண்டல குழு தலைவர், நிலைக்குழு தலைவர், நிலைக்குழு உறுப்பினர், நியமன குழு உறுப்பினர் தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 15 மண்டலங்களில் 14 மண்டல குழு தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியது. அம்பத்தூர் மண்டலத்தை திமுக கைப்பற்றியது. இது தவிர அனைத்து மாநகராட்சி பதவிகளையும் அதிமுகவே கைப்பற்றியது.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சியின் முதல் கூட்டம் நேற்று காலை 10.30 மணிக்கு ரிப்பன் மாளிகையில் நடந்தது. மேயர் சைதை துரைசாமி தலைமை வகித்தார். துணை மேயர் பெஞ்சமின், ஆணையாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும், மேயர் சைதை துரைசாமி திருக்குறள் வாசித்து பொருள் கூறினார். அதைத் தொடர்ந்து தீண்டாமை உறுதி மொழியை வாசித்தார். கூட்டம் தொடங்கியதும் எதிர்க்கட்சி தலைவர் சுபாஷ் சந்திரபோஸ் (திமுக) எழுந்து பேச முயன்றார். அவரை பேச விடாமல் அதிமுக உறுப்பினர்கள் தடுத்து கடும் ரகளையில் ஈடுபட்டனர்.
இதற்கு திமுக கவுன்சிலர்கள் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர். அப¢போது திடீரென சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் திமுக கவுன்சிலர்கள் மீது தண்ணீர் பாட்டில் மற்றும் செருப்புகளை தூக்கி வீசி அதிமுகவினர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், 159&வது வார்டு திமுக கவுன்சிலர் ஜெயந்திக்கு முதுகில் குத்து விழுந்தது. அவர் நிலை தடுமாறினார். திமுக 7வது மண்டல குழு தலைவர் ஜோசப் சாமுவேலுக்கும் அடி விழுந்தது. இதையடுத்து, திமுக கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்தனர். இதை தொடர்ந்து கூட்டம் மதியம் 2 மணி வரை நடந்தது.
பேச விடவில்லை: மன்ற கூடத்திற்கு வெளியே வந்த சுபாஷ் சந்திரபோஸ்,‘சென்னையில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கப்படாதது குறித்தும் பேச இருந்தோம். ஆனால் எங்களை பேச விடாமல் தண்ணீர் பாட்டில், செருப்புகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்’ என்றார். மேயர் விளக்கம்: மேயர் சைதை துரைசாமி கூறுகையில், Ôஇன்றைய கூட்டத்தில் திமுகவினர் அரசியல் நோக்கோடு நடந்து கொண்டனர். மன்ற கூட்டத்தில் பேச முதலில் மேயரிடம் பேச அனுமதி பெற வேண்டும். ஆனால், திமுகவினர் பேச அனுமதி பெறவில்லைÕ என்றார்.
தாமதமாக தொடங்கியது முதல் கூட்டம்
ச் மன்ற கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், முதல் கூட்டம் தாமதமாக 10.30 மணிக்கு தொடங்கியது.
ச் மன்ற கூடத்தில் எதிர்கட்சி தலைவர்களுக்கு முதல் வரிசையில் இருக்கைகள் ஒதுக்கப்படும். ஆனால், நேற்றைய கூட்டத்தில் இந்த முறை கடைப்பிடிக்கப்படவில்லை. வார்டு வரிசைப்படி உறுப்பினர்கள் அமரவைக்கப்பட்டிருந்தனர்.
ச் இடநெருக்கடியால் கவுன்சிலர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். கட்சியினர் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதனால், நுழைவு வாயிலில் அவர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ச் மாநகராட்சியின் முதல் கூட்டத்திலேயே 61 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ச் விரிவாக்கப்பட்ட மாநகராட்சியில் 21 எம்எல்ஏக்கள் உள்ளனர். இவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள முறையாக அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. ஆனால், எம்எல்ஏ ஜே.சி.டி.பிரபாகரன் மட்டுமே சிறப்பு விருந்தினராக கூட்டத்தில் பங்கேற்றார்.
யு‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்...’ என்ற திருக்குறளுடன் கூட்டம் ஆரம்பித்தது.
யு அடுத்த சில நிமிடத்தில் கூச்சல் குழப்பம்..ரகளை.
யு பெண் கவுன்சிலர் உட்பட 3 பேருக்கு விழுந்தது அடி.
இதில் 168 வார்டுகளில் அதிமுக வெற்றி பெற்றது. 2 சுயேட்சைகளும் அதிமுகவில் இணைந்தனர். இதனால் அதிமுகவின் பலம் 170 ஆனது. திமுக 24, காங்கிரஸ் 2, பாமக, தேமுதிக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் தலா ஒரு இடங்களை கைப்பற்றியது.
கடந்த சனி, ஞாயிற்றுகிழமைகளில் மண்டல குழு தலைவர், நிலைக்குழு தலைவர், நிலைக்குழு உறுப்பினர், நியமன குழு உறுப்பினர் தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 15 மண்டலங்களில் 14 மண்டல குழு தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியது. அம்பத்தூர் மண்டலத்தை திமுக கைப்பற்றியது. இது தவிர அனைத்து மாநகராட்சி பதவிகளையும் அதிமுகவே கைப்பற்றியது.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சியின் முதல் கூட்டம் நேற்று காலை 10.30 மணிக்கு ரிப்பன் மாளிகையில் நடந்தது. மேயர் சைதை துரைசாமி தலைமை வகித்தார். துணை மேயர் பெஞ்சமின், ஆணையாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும், மேயர் சைதை துரைசாமி திருக்குறள் வாசித்து பொருள் கூறினார். அதைத் தொடர்ந்து தீண்டாமை உறுதி மொழியை வாசித்தார். கூட்டம் தொடங்கியதும் எதிர்க்கட்சி தலைவர் சுபாஷ் சந்திரபோஸ் (திமுக) எழுந்து பேச முயன்றார். அவரை பேச விடாமல் அதிமுக உறுப்பினர்கள் தடுத்து கடும் ரகளையில் ஈடுபட்டனர்.
இதற்கு திமுக கவுன்சிலர்கள் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர். அப¢போது திடீரென சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் திமுக கவுன்சிலர்கள் மீது தண்ணீர் பாட்டில் மற்றும் செருப்புகளை தூக்கி வீசி அதிமுகவினர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், 159&வது வார்டு திமுக கவுன்சிலர் ஜெயந்திக்கு முதுகில் குத்து விழுந்தது. அவர் நிலை தடுமாறினார். திமுக 7வது மண்டல குழு தலைவர் ஜோசப் சாமுவேலுக்கும் அடி விழுந்தது. இதையடுத்து, திமுக கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்தனர். இதை தொடர்ந்து கூட்டம் மதியம் 2 மணி வரை நடந்தது.
பேச விடவில்லை: மன்ற கூடத்திற்கு வெளியே வந்த சுபாஷ் சந்திரபோஸ்,‘சென்னையில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கப்படாதது குறித்தும் பேச இருந்தோம். ஆனால் எங்களை பேச விடாமல் தண்ணீர் பாட்டில், செருப்புகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்’ என்றார். மேயர் விளக்கம்: மேயர் சைதை துரைசாமி கூறுகையில், Ôஇன்றைய கூட்டத்தில் திமுகவினர் அரசியல் நோக்கோடு நடந்து கொண்டனர். மன்ற கூட்டத்தில் பேச முதலில் மேயரிடம் பேச அனுமதி பெற வேண்டும். ஆனால், திமுகவினர் பேச அனுமதி பெறவில்லைÕ என்றார்.
தாமதமாக தொடங்கியது முதல் கூட்டம்
ச் மன்ற கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், முதல் கூட்டம் தாமதமாக 10.30 மணிக்கு தொடங்கியது.
ச் மன்ற கூடத்தில் எதிர்கட்சி தலைவர்களுக்கு முதல் வரிசையில் இருக்கைகள் ஒதுக்கப்படும். ஆனால், நேற்றைய கூட்டத்தில் இந்த முறை கடைப்பிடிக்கப்படவில்லை. வார்டு வரிசைப்படி உறுப்பினர்கள் அமரவைக்கப்பட்டிருந்தனர்.
ச் இடநெருக்கடியால் கவுன்சிலர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். கட்சியினர் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதனால், நுழைவு வாயிலில் அவர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ச் மாநகராட்சியின் முதல் கூட்டத்திலேயே 61 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ச் விரிவாக்கப்பட்ட மாநகராட்சியில் 21 எம்எல்ஏக்கள் உள்ளனர். இவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள முறையாக அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. ஆனால், எம்எல்ஏ ஜே.சி.டி.பிரபாகரன் மட்டுமே சிறப்பு விருந்தினராக கூட்டத்தில் பங்கேற்றார்.
யு‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்...’ என்ற திருக்குறளுடன் கூட்டம் ஆரம்பித்தது.
யு அடுத்த சில நிமிடத்தில் கூச்சல் குழப்பம்..ரகளை.
யு பெண் கவுன்சிலர் உட்பட 3 பேருக்கு விழுந்தது அடி.
Re: சென்னை மாநகராட்சி மன்ற முதல் கூட்டம் அடிதடியில் இனிதே துவங்கியது
பொளப்பு சிரிப்பா சிரிக்குது செருப்படி சோடா பாட்டிலடி கல்லடி பொல்லடி :!.: :!.:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சென்னை மாநகராட்சி மன்ற முதல் கூட்டம் அடிதடியில் இனிதே துவங்கியது
உங்களுக்கு எல்லாத்திற்கும் பயம் பயமயம் {)) {))பானுகமால் wrote:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» சென்னையில் நவம்பர் 21, 22, டிச 12, 13ம் தேதிகளில் வாக்காளர் சிறப்பு முகாம்: சென்னை மாநகராட்சி தகவல்
» லிபியாவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணி துவங்கியது: முதல் விமானம் டில்லி வந்தது
» சென்னை,மார்ச்27-6-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 3-ந்தேதி முதல் மே 26-ந்தேதி வரை
» சென்னை கலங்கரை விளக்கம் இன்று முதல் மக்கள் பார்வைக்கு
» இன்று முதல் இந்தியாவில் ஐபிஎல்: சென்னை-கொல்கத்தா அணிகள் மோதல்
» லிபியாவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணி துவங்கியது: முதல் விமானம் டில்லி வந்தது
» சென்னை,மார்ச்27-6-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 3-ந்தேதி முதல் மே 26-ந்தேதி வரை
» சென்னை கலங்கரை விளக்கம் இன்று முதல் மக்கள் பார்வைக்கு
» இன்று முதல் இந்தியாவில் ஐபிஎல்: சென்னை-கொல்கத்தா அணிகள் மோதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|