சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Today at 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Today at 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

விளையாட்டில் ஏற்படும் காயங்கள் விபரீதமாகாமல் இருக்க Khan11

விளையாட்டில் ஏற்படும் காயங்கள் விபரீதமாகாமல் இருக்க

3 posters

Go down

விளையாட்டில் ஏற்படும் காயங்கள் விபரீதமாகாமல் இருக்க Empty விளையாட்டில் ஏற்படும் காயங்கள் விபரீதமாகாமல் இருக்க

Post by *சம்ஸ் Wed 25 Sep 2013 - 20:42

விளையாட்டில் ஏற்படும் காயங்கள் விபரீதமாகாமல் இருக்க Cab03eee-8ea2-4448-a1e8-091a4d05c71d_S_secvpf



ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் விளையாடுவது முக்கியமானது. அவர்கள், காயம் ஏற்படாத அளவுக்கு விளையாடுவது மிக முக்கியமானது. காயம் ஏற்பட்டாலும் அதை கவனித்து உடனடியாக சரியான சிகிச்சை பெறுவது அதைவிட முக்கியமானது. 

தற்போது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு பெற்றோர் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். தினமும் குறிப்பிட்ட நேரம் அவர்களை விளையாடவைக்கிறார்கள். குறிப்பிட்ட சதவீதத்தினர், தங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் சிறந்த விளையாட்டு வீரராக வேண்டும் என்று விரும்பி அதற்குரிய முறையான பயிற்சிகளுக்கும் அனுப்புகிறார்கள். 

ஒருவர் பொழுதுபோக்குக் காக விளையாடுவதற்கும், போட்டிக்காக விளையாடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. பொழுதுபோக்குக்காகவோ, உடற்பயிற்சிக்காகவோ விளையாடும்போது பெருமளவு வலுவைக்காட்டி போராடவேண்டிய தில்லை. ஆனால் போட்டிக்கு தயாராகி விளையாடும்போது வலுவைக்காட்டி போராடி வெல்லவேண்டியதிருக்கிறது. 

அதற்கு தகுந்தபடி தங்கள் உடல் வலு இருக்கவேண்டும் என்பதை பெரும்பாலானவர்கள் உணருவதில்லை. உடல் வலுவை ஆராயாமல் மேலோட்டமாக பார்த்துவிட்டு ‘ஆள் பார்க்க நன்றாகத்தானே இருக்கிறார். நன்றாக விளையாடுவார்’ என்று முடிவு செய்துவிடுகிறார்கள். 

அதனால் ஏற்படும் விபரீதங்களை நாம் அவ்வப்போது கேள்விப்படுகிறோம். சிறுவன் ஒருவன் விளையாட்டுப்போட்டியில் பங்குபெற்று ஓடிக்கொண்டே இருப்பான். இலக்கை நெருங்கும்போது வேகத்தை அதிகரிக்கும் அவன், திடீரென்று இதயத்தை பிடித்துக்கொண்டு சுருண்டு விழுந்துவிடுகிறான். ‘எல்லோரும் தங்கள் குழந்தைகளை நீச்சல் பயிற்சிக்கு அனுப்புகிறார்கள். 

நாமும் அனுப்புவோம்’ என்று சில பெற்றோர் அனுப்புகிறார்கள். நீச்சல் பயிற்சியிலேயே ஒருசில குழந்தைகள் இறந்துவிடுகின்றன. 

- ஓடிக்கொண்டே இருந்த சிறுவன், திடீரென்று இதயத்தை பிடித்துக்கொண்டு சுருண்டு விழுவதற்கும்.. 

- நீச்சல் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த சிறுமி, நீச்சல் குளத்திலே மரணமடைந்துவிடுவதற்கும்.. 

என்ன காரணம்? 

போட்டிக்கு, பயிற்சிக்கு தக்கபடி அவர்களது உடல் வலு இல்லாமல் இருந்ததுதான் காரணம்! ஒருவரது இதயம் சாதாரண நிலையில் நிமிடத்திற்கு 72 முதல் 82 முறை துடிக்கும். அவரே போட்டிக்களத்தில் நின்று ஆக்ரோஷமாக விளையாடும்போது இதயத்துடிப்பு அதிகரித்துக் கொண்டே சென்று, 200 தடவைகூட துடிக்கும். 

அதை தாங்கும் அளவுக்கு அவரது இதயம் இருக்கிறதா? என்று, அவர் போட்டியில் கலந்துகொள்வதற்கு முன்பே பரிசோதிக்கவேண்டும். நுரையீரலின் சக்தியும், கிட்னியின் செயல்திறனும் பரிசோதிக்கப்பட வேண்டும். பொதுவான உடல் ஆரோக்கியத்தையும் ஆராய வேண்டும். சிறுவர்கள் இப்போது எங்கு பார்த்தாலும் கிரிக்கெட் பேட்டும், பந்துமாக களம் இறங்கி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். 

அவர்களது இதயம், நுரையீரல், கிட்னி போன்றவை பலமாக இல்லாவிட்டால் அவர்களால் வலுவாக விளையாட முடியாது. ரத்தசோகை இருந்தால் சுறுசுறுப்பாக இயங்க முடியாது. இன்று சிறுவர்களைக்கூட சர்க்கரை நோய் தாக்குகிறது. அதுபோன்ற பாதிப்புகளை அறியாமல் உங்கள் குழந்தையை நீங்கள் விளையாட்டில் சேர்த்தால், அவன் சிறிது நேரத்திலே விளையாட்டில் துவண்டுவிடுவான். 

பயிற்சியாள ருக்கு அது புரியாமல் போகலாம். அவர், ‘உன்னைப் போன்ற மற்ற சிறுவர்கள் நன்றாக விளையாடுகிறார்கள். உன்னால் மட்டும் ஏன் முடியவில்லை. முயற்சி செய்’ என்று தெம்பூட்டுவார். உடலில் தெம்பு இல்லாமல் அவன் கடும் முயற்சி எடுத்தால், அந்த சிறுவனுக்கு ஏற்படும் விளைவு விபரீதமாகிவிடும். 

அதனால் குழந்தைகளை விளையாட்டு வீரனாக்க விரும்பும் பெற்றோர், விளையாட்டுத்துறைக் கென்றே இருக்கும் ஆஸ்பத்திரிக்கு வந்து, விளையாட்டுத்துறை மருத்துவர்கள் மூலம் அவர்களது உடல் தகுதியை முழுமையாக, விளையாட்டுத்துறை கண்ணோட்டத்தில் பரிசோதிக்க அனுமதித்து, ‘பிட்னெஸ்’சை உறுதி செய்ய வேண்டும். 

அதன் பிறகு அவன் ஈடுபடும் விளையாட்டுக்கு தகுந்த படி பரிந்துரைக்கப்படும் உணவை வழங்குங்கள். அதோடு எந்த விளையாட்டில் எப்படி காயம் ஏற் படும்? காயம் ஏற்படாமல் விளையாடுவது எப்படி? என்பதையும் அதற்குரிய நிபுணர்கள் மூலம் கற்றுக்கொடுக்கிறோம். 

அதை விட முக்கியம் விளையாட்டில் காயம் ஏற்பட்டால், உடனடியாக என்ன முதலுதவி பெறவேண்டும், எந்த துறையை சார்ந்தவர்க ளிடம் அதற்குரிய சிகிச்சையை பெறவேண்டும் என்பதையும் தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள். பொதுவாக விளையாட்டுகளை இரு வகையாகப் பிரிக்கிறோம். 

ஒன்று: ‘காண்டக்ட் ஸ்போர்ட்ஸ்‘, இரண்டு: ‘நான் காண்டக்ட் ஸ்போர்ட்ஸ்‘. களத்தில் நேரடியாக எதிர்கொண்டு மோதுவது, முதல் வகை. கபடி, ஆக்கி, கால்பந்து, கூடைப்பந்து, ரக்பி, மல்யுத்தம் போன்றவை அதில் அடங்கும். இரண்டாவது வகையில் கிரிக்கெட், டென்னிஸ், பேட்மிண்டன், கைப்பந்து போன்றவை இடம்பெறும். 

இதில் ஒவ்வொரு விளையாட்டுக்கு தகுந்தபடியும் ஏற்படும் காயங்கள் வித்தியாசப்படும். கிரிக்கெட் விளையாட்டை எடுத்துக்கொள்ளுங்கள். பந்து வீசும்போது தோள்பட்டைக்கு அதிக பளு ஏற்படுகிறது. பவுண்டரியை நோக்கிச் செல்லும் பந்தை தடுக்க ஓடும்போது பவுலரின் கால்களுக்கு அதிக பளு ஏற்படுகிறது. 

பந்தை சிக்சருக்கு தூக்கும்போது பேட்ஸ்மேனின் இரு கைகளுக்கும் அதிக பளு தோன்றுகிறது. உடலில் எந்தெந்த பகுதிக்கு அதிக பளு கொடுக்கப்படுகிறதோ அந்த பகுதிகளில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம். கிரிக்கெட் பந்து வேகமாக அடிவயிற்றில் பட் டால் தசை கிழிந்து, உயிரிழப்புகூட ஏற்படலாம். 

கண்களில் பட்டால் பார்வையிழப்பு உருவாகலாம். அதனால்தான் உடலில் பெரும்பாலான இடங்களில் ‘பாதுகாப்பு பேடு’களை பயன்படுத்து கிறார்கள். ஹெல்மெட்டையும் உபயோகிக்கிறார்கள். போட்டியின்போது அத்தனை பாதுகாப்பு முறைகளையும் கடை பிடிக்கும் வீரர்கள், பயிற்சியின்போது பாதுகாப்பில் அவ்வளவு அக்கறை கொள்வதில்லை. 

ஆனால் அதே பந்து, அதே பேட்டை வைத்துதான் பயிற்சி பெறுகிறார்கள். அதனால் பயிற்சியின் போதும் வீரர்களுக்கு காயம் ஏற்படுகிறது. முன்னாள் கிரிக்கெட் வீரர் கும்ப்ளேவுக்கு தோள்பட்டையில் ஆபரேஷன் செய்யப்பட்டது. சச்சின் தெண்டுல்கருக்கு தோள்பட்டை மற்றும் மூட்டில் ஆபரேஷன் செய்யப்பட்டது. 

ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் விளையாட்டில் அதிக காயம் அடைகிறவர்கள் யார் என்பது பற்றி ஒரு ஆய்வு நடந்தது. அதில் ‘பாஸ்ட் பவுலர்களுக்குத்தான் அதிக காயம் ஏற்படுகிறது’ என்று கண்டுபிடித்தார்கள். இதுபோன்ற ஆய்வுகள், ஸ்போர்ட்ஸ் மெடிசினில் ஏற்பட்டிருக்கும் நவீனங்களை குறிப்பிட்டு பள்ளி- கல்லூரி மாணவர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த இருக்கிறோம். 

அதன் மூலம் எந்தெந்த விளையாட்டில் எப்படி எப்படி காயம் ஏற்படும் என்பதையும், அதை தவிர்க்கும் முறைகளையும் கற்றுக்கொடுப்போம். அதை பின்பற்றி அவர்கள் சரியாக விளையாடினாலும் காயங்கள் ஏற்படலாம். அப்படி காயங்கள் ஏற்பட்டால் அதற்கான முதலுதவி பற்றியும் அடுத்த கட்டமாக பெறவேண்டிய சிகிச்சைகள் பற்றியும் அவர்களிடம் விழிப்புணர்வை உருவாக்க விரும்புகிறோம். 

விளையாட்டு வீரர்களின் மன நலனும் முக்கியம். அதுபற்றியும், அவர்களது உடல் நலம் பேணும் உணவுகள் பற்றியும் விளக்குகிறோம். நவீன சிகிச்சைகளை பொறுத்தவரையில் முதலுதவியில் கிரை யோதெரபி என்பது முக்கியமானது. பொதுவாக தசைப்பிடிப்பு, உள் ரத்த கசிவுக்கு ஐஸ் கியூப்களால் ஒத்தடம் கொடுப்போம்.

கிரையோதெரபி மூலம் உடலில் எந்த பகுதியில் காயம் ஏற்பட் டாலும் அந்த பகுதிக்கு குளிர்காற்றை தேவைக்கு தக்கபடி செலுத்தி, காயப்பகுதியை சீர் செய்யலாம். ஆபரேஷனை எடுத்துக்கொண்டால் நவீன கருவிகள் மூலம் ஆர்த்ரோஸ்கோபி செய்யலாம். இது தோள்பட்டை, கால் மூட்டு போன்ற பகுதிகளில் எளிதாக செய்யப்படும் ஆபரேஷனாகும். 

மூட்டில் காயம் என்றால், அங்கு ஒரு சிறிய துவாரத்தை உருவாக்கி, அதன் வழியாக பென்சில் வடிவமுள்ள ஆர்த் ரோஸ்கோப் கருவியை செலுத்தவேண்டும். அதில் லென்ஸ் மற்றும் வெளிச்சம் தரும் கட்டமைப்பு உண்டு. ஆர்த்ரோஸ் கோப்பை, டெலிவிஷன் கேமிராவுடன் இணைக்கும்போது மூட்டின் உள்பாகத்தை தெள்ளத்தெளிவாக பார்க்க முடியும். 

அதன் மூலம் பாதிப்பை வெகு நுட்பமாக கண்டறிந்துவிடலாம். பின்பு சிறிய துவாரத்தின் வழியாக உப கரணங்களை செலுத்தி ஆபரேஷன் செய்துவிடலாம். இந்தியா போன்ற வளரும் நாடுகளில் விளையாட்டுத்துறை வேகமாக வளர ஸ்போர்ட்ஸ் மெடிசின் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் அவசியம் தேவை. 

சமூகம் இதில் விழிப்படைந்தால் இந்தியா ஆரோக்கியமாக மாறும். விளையாட்டிலும் உயர்ந்த இடத்தை பிடிக்கும்! 

விளையாட்டு மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணர், 

கட்டுரை: டாக்டர் ஏ. சுபேர்கான், M.S..,M.Ch (Ortho),F.I.A.A. 
சென்னை - 14 


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விளையாட்டில் ஏற்படும் காயங்கள் விபரீதமாகாமல் இருக்க Empty Re: விளையாட்டில் ஏற்படும் காயங்கள் விபரீதமாகாமல் இருக்க

Post by ராகவா Wed 25 Sep 2013 - 20:43

அருமையான தகவல் தல............
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

விளையாட்டில் ஏற்படும் காயங்கள் விபரீதமாகாமல் இருக்க Empty Re: விளையாட்டில் ஏற்படும் காயங்கள் விபரீதமாகாமல் இருக்க

Post by Muthumohamed Wed 25 Sep 2013 - 20:45

பயனுள்ள பதிவு :”@: :”@: :”@:
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

விளையாட்டில் ஏற்படும் காயங்கள் விபரீதமாகாமல் இருக்க Empty Re: விளையாட்டில் ஏற்படும் காயங்கள் விபரீதமாகாமல் இருக்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum