சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Today at 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Today at 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

தமிழ்மொழி அழிந்தால் தமிழினம் அழிந்துவிடும்: பழ கருப்பையா பேச்சு Khan11

தமிழ்மொழி அழிந்தால் தமிழினம் அழிந்துவிடும்: பழ கருப்பையா பேச்சு

3 posters

Go down

தமிழ்மொழி அழிந்தால் தமிழினம் அழிந்துவிடும்: பழ கருப்பையா பேச்சு Empty தமிழ்மொழி அழிந்தால் தமிழினம் அழிந்துவிடும்: பழ கருப்பையா பேச்சு

Post by ராகவா Mon 23 Jun 2014 - 23:42

தமிழ்மொழி அழிந்தால், தமிழ் இனம் அழிந்து விடும்,'' என, அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பழ.கருப்பையா பேசினார்.

சென்னை பல்கலை நுாற்றாண்டு மண்டபத்தில், தினமணி நாளிதழ் சார்பில், இரண்டாம் நாள் இலக்கியத் திருவிழா நடந்தது. இதில், சமயமும் தமிழும் என்ற தலைப்பில் நடந்த அமர்விற்கு, சுதா சேஷய்யன் தலைமை வகித்தார்.

இனத்தின் அடையாளம்:அப்போது, என்னை செதுக்கிய இலக்கியம் என்ற தலைப்பில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பழ.கருப்பையா பேசியதாவது:தமிழ்மொழி தனித்து நிற்கிறது. அது தான், தமிழின் வளர்ச்சிக்கு காரணம். தமிழகத்தில், பக்தி இலக்கியங்களால், மிகப் பெரிய தாக்கம் ஏற்பட்டது. பிரிந்து இருந்த சமுதாயங்களை ஒன்றிணைத்தது பக்தி இலக்கியங்களே.

தமிழ் சமுதாயத்தை ஒருங்கிணைத்ததில், ஞானசம்பந்தர், உ.வே.சாமிநாத அய்யர், பரிதிமாற்கலைஞரின் பங்கு முக்கியம்; மற்றவர்கள் வேதாந்தத்தை தோற்றுவித்த காலத்தில், ராமலிங்க அடிகளார் தமிழின் தனித்தன்மையை பாதுகாக்க போராடினார்.

மொழி என்பது ஒலி வடிவம் அல்ல. அது ஒரு இனத்தின் முகம், இனத்தின் அடையாளம். தமிழின் உயிர்ப்பு எழுத்தில் இல்லை. தமிழ் வரி வடிவங்களுக்கு பலர் மாற்றம் தந்துள்ளனர். எத்தனை முறை வரி வடிவத்தை மாற்றினாலும், தமிழின் சிறப்பு மங்கவில்லை.தமிழின் உயிர்ப்பு ஒலி வடிவங்களில் தான் உள்ளது. அயல் மொழியின் ஒலியை உள்வாங்கினால், தமிழ் மொழியின் ஒலி அழிந்து, தமிழ்மொழி வளர்ச்சி பாதிக்கப்படும். தமிழ்மொழி அழிந்தால், தமிழ் இனம் அழிந்து விடும்.இவ்வாறு, பழ.கருப்பையா பேசினார்.

வாசிப்பும், பழக்கம் என்ற அமர்விற்கு, ராஜேந்திரன் தலைமை வகித்தார். அதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது:மனித நேயத்தை நிலைநாட்டும் ஆற்றல் இலக்கியத்திற்கு உள்ளது. எல்லாம் மாறிக் கொண்டிருக்கும்; என்பது மட்டும் மாறாது என்ற வரிகள் என்னை செதுக்கியது. இந்தியை திணிக்கும் முடிவிலும் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு, திருமாவளவன் பேசினார்.

மிகவும் கவர்ந்ததுஅடுத்த அமர்வில், என்னை கவர்ந்த காப்பியம், சிலப்பதிகாரமே என்ற தலைப்பில், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேசியதாவது:தமிழில் வெளியான ஏராளமான நுால்களில், சிலப்பதிகாரம் தான் என்னை மிகவும் கவர்ந்தது. உலகில் எந்த ஒரு மொழியிலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், தன் மண்ணில் வாழும் சாதாரண குடிமக்களை பற்றி யாரும் காப்பியங்கள் படைக்கவில்லை.

எல்லோரும் சட்டத்தின் முன் சமம் என்று, சில நுாறு ஆண்டுகளுக்கு முன், பிற நாடுகள் சட்டத்தை இயற்றி இருக்கலாம். ஆனால், சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இந்த நீதியை கொண்டு வந்தது தமிழ் சமுதாயம்.சிலப்பதிகாரத்தில், சில தவறுகள் இருக்கலாம். ஆனால், சமுதாயத்திற்கு எது தேவையோ, எது நன்மை தருமோ அதை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். சிலப்பதிகாரத்தில் வஞ்சி காண்டத்தில் உள்ளது போல், மான உணர்ச்சிமிக்க இளைஞர்கள் தமிழகத்தில் உருவாக வேண்டும். உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் பெண்கள் உருவாக வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

விழாவில்,வேர்களைத் தேடி கலைகள் என்ற தலைப்பில், தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர் நாகசாமி பேசும்போது, இயல், இசை, நாடகம் மூன்றையும் அறிந்தோரே தமிழை முழுயைாக அறிந்தவர்கள் என, சிலப்பதிகாரம் கூறுகிறது. பண்டைய மரபுப்படி இயல், இசை, நாடகம் ஆகிய மூன்றையும், படிக்கும் சான்றோர் உருவாக வேண்டும், என்றார்.

நிறைவு விழாவில், கவர்னர் ரோசய்யா, நீதிபதி ராமசுப்ரமணியம், நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமங்களின் தலைவர் மனோஜ்குமார் சொந்தாலியா, தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், சென்னை பல்கலை துணைவேந்தர் தாண்டவன் ஆகியோர் பங்கேற்றனர்.

-தினமலர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

தமிழ்மொழி அழிந்தால் தமிழினம் அழிந்துவிடும்: பழ கருப்பையா பேச்சு Empty Re: தமிழ்மொழி அழிந்தால் தமிழினம் அழிந்துவிடும்: பழ கருப்பையா பேச்சு

Post by jaleelge Mon 23 Jun 2014 - 23:56

தினமலருக்கும்...நாம் நேசிக்கும் ராகவனுக்கும் ...

மனமார்ந்த நன்றிகள்......

காலம் அறிந்தும்...காலத்தால் அழியாததுமான ...

தகவல் பதிவுகள்...

நன்றிகள் மீண்டுமொரு முறை.
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

தமிழ்மொழி அழிந்தால் தமிழினம் அழிந்துவிடும்: பழ கருப்பையா பேச்சு Empty Re: தமிழ்மொழி அழிந்தால் தமிழினம் அழிந்துவிடும்: பழ கருப்பையா பேச்சு

Post by rammalar Tue 24 Jun 2014 - 7:00

தமிழினம் அழியாது...!
-
காலத்திற்கேற்ப பிற மொழிச் சொற்களை
தன்மயமாக்கி தமிழ் வளரும், தமிழுனும்
வாழ்வான்..!
-
தமிழர் கலாச்சாரம் என்ற ஒன்றைப்பற்றி
பேசுபவர்கள், அக்காலத்தில் இருந்தது போல்
கணிகையர் வீதி இருக்க வேண்டும் என்கிறார்களா..?
-
அக்காலத்திலும் குடிப்பழக்கம் இருந்தது...!
இப்போது மட்டும் ஏன் மதுவிலக்கு வேண்டும்
என்கிறாரகள்..?
-
முரணான பேச்சுக்களை பேசிப் பேசியே
மக்களை மயக்கும் கூட்டம் ...
பழமை பேசியே இளைஞர்களை கெடுக்கும்
ஒரு கூட்டம்...
-
யதார்த்தம் புரியாமல் நடைமுறைக்கு ஏற்ற
கருத்துகளை சொல்வது எப்போது?
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25150
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

தமிழ்மொழி அழிந்தால் தமிழினம் அழிந்துவிடும்: பழ கருப்பையா பேச்சு Empty Re: தமிழ்மொழி அழிந்தால் தமிழினம் அழிந்துவிடும்: பழ கருப்பையா பேச்சு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum