சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம்
by rammalar Yesterday at 17:54

» தினம் ஒரு மூலிகை - கருப்புப் பூலா
by rammalar Yesterday at 17:44

» சினிமா பாடல்கள் -காணொளி
by rammalar Yesterday at 11:43

» முத்துக்கள் ஒருபோதும் கடற்கரையில் கிடைக்காது!
by rammalar Yesterday at 11:37

» என் முன்னேற்றத்துக்கு காரணம் பயம்தான்! – சமந்தா
by rammalar Yesterday at 11:33

» இலங்கையில் இருந்து காரைக்காலுக்கு பயணிகள் கப்பல்
by rammalar Yesterday at 11:32

» மனைவியிடம் எதை வாங்கலாம்…
by rammalar Yesterday at 11:31

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 0:02

» உணவு ரகசியங்கள்-AB ரத்த வகைக்கான உணவுகள்
by rammalar Sun 26 Mar 2023 - 23:52

» தெய்வத்தின் தெய்வம்…!
by rammalar Sun 26 Mar 2023 - 23:38

» தவறான வழியில் வந்தது…! – மைக்ரோ கதை
by rammalar Sun 26 Mar 2023 - 23:38

» பேல்பூரி – கண்டது!
by rammalar Sun 26 Mar 2023 - 23:37

» விஞ்ஞானத்திருடன்
by rammalar Sun 26 Mar 2023 - 23:36

» ஆன்மீக சிந்தனை
by rammalar Sun 26 Mar 2023 - 11:57

» கணவனுடன் சண்டை போடாத இல்லத்தரசிகளுக்கு மட்டும்...!
by rammalar Sun 26 Mar 2023 - 11:54

» தாம்பரம்-செங்கோட்டை ரயில் ஏப்ரல் 8 முதல் இயக்கப்படும்
by rammalar Sun 26 Mar 2023 - 9:34

» புன்னகை பக்கம்
by rammalar Sat 25 Mar 2023 - 18:32

» இருக்குறவன்…இல்லாதவன்!
by rammalar Sat 25 Mar 2023 - 17:20

» அவமானத்தின் வகைகள்…!
by rammalar Sat 25 Mar 2023 - 17:19

» நமக்கு நாமே தர்ற தண்டனை..!
by rammalar Sat 25 Mar 2023 - 17:18

» பாவம், நீதிபதி –
by rammalar Sat 25 Mar 2023 - 17:17

» இதை நான் சொல்லல யாரோ சொன்னாங்க..சார்
by rammalar Sat 25 Mar 2023 - 17:16

» குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000...
by rammalar Sat 25 Mar 2023 - 17:13

» இணையத்தில் சுட்டவை!
by rammalar Sat 25 Mar 2023 - 17:12

» பலாப்பழ கொட்டைகள் - மருத்துவ பயன்கள்
by rammalar Sat 25 Mar 2023 - 15:08

» பாடகி பாம்பே ஜெயஸ்ரீ தலையில் பலத்த அடி-சிகிச்சைக்காக லண்டன் மருத்துவ மனையில் அனுமதி
by rammalar Fri 24 Mar 2023 - 13:29

» தினம் ஒரு மூலிகை - குருந்து (அ) காட்டு எலுமிச்சை
by rammalar Fri 24 Mar 2023 - 13:20

» சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் 5 நிலையங்களில் நின்று செல்ல வாய்ப்பு
by rammalar Fri 24 Mar 2023 - 13:16

» ’கேடி-தி டெவில்’ படத்தில் இணைந்த பாலிவுட் நடிகை!
by rammalar Fri 24 Mar 2023 - 13:09

» ஜெயம் ரவியின் 32 வது படம்
by rammalar Fri 24 Mar 2023 - 13:06

» அனுஷ்காவுக்கா மானஸி பாடியி ’நோ நோ’ பாடல்
by rammalar Fri 24 Mar 2023 - 13:03

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 23 Mar 2023 - 20:00

» கொசுவைப்பற்றிய தகவல்கள்
by rammalar Thu 23 Mar 2023 - 19:43

» தினம் ஒரு மூலிகை - காவட்டம் புல்
by rammalar Wed 22 Mar 2023 - 17:17

» படித்ததில் ரசித்தவை
by rammalar Wed 22 Mar 2023 - 17:14

முன்னோர் வழங்கிய மூலிகை இண்டு Khan11

முன்னோர் வழங்கிய மூலிகை இண்டு

Go down

Sticky முன்னோர் வழங்கிய மூலிகை இண்டு

Post by ahmad78 Thu 19 Mar 2015 - 13:55

முன்னோர் வழங்கிய மூலிகை இண்டு Ht3375

இண்டு என்று பெயரை பார்த்ததும் சற்று புருவத்தை உயர்த்தி, என்ன செடி அது? என கேட்க தோன்றும். ஆனால் அது நம் கண் முன்னே படர்ந்து கிடந்து மனிதயினத்தை வாழ்விக்க வந்தது, என்பதை நம்மில் பலருக்கும் தெரியாமலேயே உள்ளது.

முத்திக்கு வித்து முதல்வன் தன் ஞானமே
பத்திக்கு வித்துப் பணிந்துற்றுப் பற்றலே
சித்திக்கு வித்துச் சிவபரம்தான் ஆதல்
சத்திக்கு வித்துத் தனது உபசாந்தமே’’

தமிழகம் மற்றும் புதுவையில் சிறுகாட்டுப்பகுதிகளிலும், வேலிகளிலும் தானாகவே வளரும் ஏறுகொடியினம். இதன் இலைகள் கூட்டமைப்பில் சிறகு போன்று இருக்கும். செடி முழுவதும் வளைந்த கூர்மையான முட்கள் நிறைந்து இருக்கும். காலையில் பூக்கும் இதன் பூக்கள் சிறிய அளவில் வேப்பம்பூவைப்போல் வெண்மையான நிறத்தில் பூக்கும். வெள்ளை நிற தண்டுப்பகுதியில் பட்டையான காய்கள் காய்த்திருக்கும்.

கோழையகற்றி நாடி நடை மற்றும் உடலின் வெப்பத்தையும் அதிகரிக்கும் குணம் கொண்டது. இண்டின் தண்டினை துண்டாக நறுக்கி ஒரு பகுதியில் வாயால் ஊத மறுபக்கத்தில் வரும் ரசத்தை பிடித்து 15மிலி அளவில் 3 நாள் ஈளை இருமல் உள்ளவர்களுக்கு கொடுக்க குணம் ஏற்படும். சிறு குழந்தைகளுக்கு ஒரு தேக்கரண்டி வீதம் கொடுத்தால் சளி மாந்தம் தீரும். இண்டு செடியின் சமூலத்தை எடுத்து அதனுடன் தூதுவேளை, கண்டங்கத்தரி வகைக்கு ஒரு பிடி அளவில் எடுத்துக்கொண்டு அதனுடன் திப்பிலி, பூண்டு வகைக்கு 5 கிராம் எடுத்து நசுக்கி 2 லிட்டர் தண்ணீரில் போட்டு அது கால் லிட்டராக சுண்டிய பிறகு இறக்கி ஆறவைத்து கொள்ள வேண்டும்.

இதில் காலை மாலை 100 மிலி வீதம் குடித்து வந்தால் இரைப்புடன் வரும் இருமல் தீரும். குழந்தைகளுக்கு அவர்களின் உடல் தன்மை அறிந்து 25 மிலி வீதம் கொடுக்கவேண்டும்.ஈயக்கொழுந்து, தூதுவளை, சங்கன் இலை, திப்பிலி, கண்டங்கத்தரி, இவற்றை சம அளவாக எடுத்துக்கொண்டு சிறிதளவு சுக்குசேர்த்து சரக்கின் அளவிற்கு எட்டுபங்கு தண்ணீரில் அதை போட்டு காய்ச்சி 1லிட்டராக சுண்டிய பிறகு எடுத்து வைத்து கொண்டு அதை காலை மாலை 50 மிலி வீதம் குடித்து வந்தால் எந்த வகையான இருமல் நோயும் 3 நாளில் முற்றிலும் நீங்கும். சிலருக்கு நடந்தாலோ அல்லது பேசினாலே மூச்சுவாங்கும். இவர்கள் இண்டம்வேர், தூதுவேளை வேர் இரண்டும் தலா 2கிராம் எடுத்து நசுக்கி 2 லிட்டர் தண்ணீரில் போட்டு கால் லிட்டராகக்காய்ச்சி அதில் 100 மிலி வீதம் காலை மாலை குடித்துவர இரைப்பு தீரும்.

நசத்தை போக்கும் பெருகியதோர் நீரேற்றம்
தானசிக்கச் செய்யுமிது சத்தியங்காண்- வானசைக்கும்
மண்டைக் குடைச்சல் மருவுமுக சன்னியும் போம்
பண்டையுற்ற இண்டினுக்குப் பார்’’-

ஈயக்கொழுந்து, தூதுவளை, சங்கன் இலை, திப்பிலி, கண்டங்கத்தரி, இவற்றை சம அளவாக எடுத்துக்கொண்டு சிறிதளவு சுக்குசேர்த்து சரக்கின் அளவிற்கு எட்டுபங்கு தண்ணீரில் அதை போட்டு காய்ச்சி 1லிட்டராக சுண்டிய பிறகு எடுத்து வைத்து கொண்டு அதை காலை மாலை 50 மிலி வீதம் குடித்து வந்தால் எந்த வகையான இருமல் நோயும் 3 நாளில் முற்றிலும் நீங்கும். சிலருக்கு நடந்தாலோ அல்லது பேசினாலே மூச்சுவாங்கும். இவர்கள் இண்டம்வேர், தூதுவேளை வேர் இரண்டும் தலா 2கிராம் எடுத்து நசுக்கி 2 லிட்டர் தண்ணீரில் போட்டு கால் லிட்டராகக்காய்ச்சி அதில் 100 மிலி வீதம் காலை மாலை குடித்துவர இரைப்பு தீரும்.

முக்கு நீரேற்றம், மண்டைக்குடைச்சல், முகத்தில் எற்படும் வலி, சூதக வாயு, ஈளை, சூலை, முதலியவை ஏற்பட்டால் இண்டம் கொடியை துண்டித்தால் வரும் ரசத்தை 2 துளி அளவில் மூக்கில் விட குணம் ஏற்படும். இந்த ரசத்தை தீப்புண் மீது தடவிவந்தால் அவை விரைவில் குணமாகும்.இண்டம் இலை, சங்கிலை, தூதுவேளையிலை, திப்பிலி, சுக்கு தலா 20 கிராம் எடுத்து 1 லிட்டர் தண்ணீரில்போட்டு கால்லிட்டராக காய்ச்சி எடுத்துக்கொள்ளவேண்டும். அதில் 100 மிலி வீதம் எடுத்து காலை மாலை குடித்து வந்தால் பல்வேறு காரணங்களால் ஏற்படும் அனைத்து இருமலும் நீங்கும்.என்கின்றார் அகத்தியர்.

இண்டிலை துதுளை யிசங்கு திப்பிலி
கண்டரி சுக்குடன் கலந்து வெந்த நீர்
உண்டி டலொருதர மிரும லுந்றிடில்
தெண்டமுற் தருவன்யான் தேரணு மல்லனே’’-

என்கின்றார் தேரையர். சாலையின் ஓரத்தில், வயல்வெளியில் என்னவென்றே தெரியாத நிலையில் வேலியில் படர்ந்து கிடக்கும் முட்கள் நிரம்பிய ஒரு கொடியினம்.
மனிதர்களுக்கு கபத்தால் ஏற்படுக்கூடிய கொடிய நோயை தீர்த்து நம்மை வாழ வைக்கும் என்பதை அறிந்து, நமக்கு அளித்த முன்னோர்கள் வழியில், பெரியவர்களின் துணைக்கொண்டு, அளவோடு பயன்படுத்தி வளமோடு வாழ்வோம்.


http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3385


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum